திங்கள், 24 நவம்பர், 2014

அய்யாவுக்கு சிலை இல்லாதது ஏன் ?

அய்யாவுக்கு சிலை இல்லாதது ஏன் ?

அய்யா வைகுண்டர் கடவுளின் அவதாரம். கடவுளை எப்படி படமாக வரைய முடியும்?
எப்படி சிலையாக உருவகபடுத்த முடியும்?

அய்யா வைகுண்டர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் அவரது உருவத்தை பல தடவை வரைய முயன்றனர் .
ஒவ்வொரு தடவையும் அவர் ஒவ்வொரு மாதிரியாக தோன்றினார்.
கடைசி வரை அவர் உருவத்தை வரைய முடியவில்லை. கலி யுகத்தில் அவர் நிகழ்த்தி காட்டிய மிகப்பெரிய அற்புதங்களில் இதுவும் ஒன்று.
மேலும்
அய்யாவழி தாங்கல்களில் கண்ணாடி வைத்து இருபக்கமும் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருக்கப்படும்.
அய்யாவழி அன்புக்கொடி மக்கள் அனைவரும் அந்த கண்ணாடியை பார்த்து தான் வேண்டுவர்.

இதன் மூலம் “ மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது ” என்ற உயரிய கோட்பாட்டை கண்ணாடி முன் நின்று வணங்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே காண அய்யா வழிவகை செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக