பேயை எரித்து புதுமை மிகச் செய்ததுவும்
ஆயர் குலத்தை ஆளாக்கி கொண்டதுவும்
சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்
நீண்டபுகழ் தர்மம் நிறுத்தி அரசாண்டதுவும்
பத்தும் பெரிய பாலருக்காக வேண்டி
சத்தழியும் பாவி தடியிரும்பிலும் இருந்து
படுத்தின பாடெல்லாம் பாலருக்காகப் பொறுத்து
உடுத்ததுணி களைந்து ஒருதுகிலைத் தான்வருந்தி
தேவ ஸ்திரிகளையுஞ் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்
பாவக் கலியுகத்தில் பாராத்தியங்கள் பட்டு
நாலு பிறவி நானிலத்திலே பிறந்து
பாலு குடித்தாண்டி பருபதத்தின் மேல்தாண்டி
மனுக்கண் காணாமல் மறைந்தொரு மூன்றுநாளாய்
தானுந் தவமதுவாய் சாயூச்சியமே புரிந்து
நல்லோரை எழுப்பி நாலுவரமுங் கொடுத்து
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வானம் இடியால் மலைகள் இளகிடவும்
கானமது நாடாய் கண்டதுஞ் சூரியனும்
தெற்கு வடக்காய்த் திசைமாறி நின்றிடவும்
ஒக்கவே நாதன் உரைக்கிறார் அன்போரே.
- அகிலம் –
விளக்கம் :-
சாமிதோப்பு வடக்கு வாசலில், அய்யா தவநிலையாக இருந்துகொண்டே
பேய்களை எரித்து. உலகில் பெரும் புரட்சி செய்ததையும், துவாபரயுகத்தில் யாதவகுலத்தோரை எல்லாம் ரட்சித்த விதத்தையும், இந்தக் கலியுகத்தில் சான்றோர்களை எல்லாம் தம்பால் அரவணைத்து பாதுகாத்துக் கொண்டு இருப்பதையும் , வானளாவிய தர்ம சிறப்புகளையெல்லாம் நிலைநிறுத்தி, இந்த நிலவுலகைப் பரிபாலனம் செய்வதையும், முதிர்ந்த நிலையுடைய உயர்வான தம் மக்களுக்காக வேண்டி, மடிந்து போவதையே தம் முடிவாக கொண்ட கலியரசனாகிய பாதகன் இட்ட மிக பெரிய இரும்பு சங்கிலிகளோடு சிறையில் இருந்து கொண்டே அந்த கலி படைகள் செய்த கோரமான கொடுமைகளை எல்லாம் தாங்கிய வண்ணம் இருந்ததையும், ஏகாபரனாகிய இறைவனின் இயல்பான சூக்கும வடிவத்தை விலக்கிவிட்டு நிலவுலக மனிதனை போன்றதொரு தோற்றத்தை வருவித்துக்கொண்டு துவாபரயுகத்தின் இறுதியில் அடுத்து வர இருக்கும் கலியுகத்தில் தேவலோகதாரையெல்லாம் பூவுலகில் பிறவி செய்யவும் அவர்கள் மூலமாக கலியுகத்தை தர்ம சாம்ராச்சியமாக மாற்றவும் எண்ணம்கொண்டு அயோக அமிர்தகங்கை அருகில் தேவலோகதாரை பூவுலகில் பிறப்பிக்க பயன்படுத்திய சப்தமாதர்களையும் கலியுகத்தில் பிறப்பித்து, பாருலக மக்கள் எல்லாம் பயன்பெறும் வகையில் அந்த சப்தமாதர்களை ஆட்கொண்டதையும், மீண்டும் இந்த பாவம் சூழ்ந்த கலியுகத்தில் பற்பல தொல்லைகளை அனுபவித்து இல்லறதோனாவும், பிரம்மசாரியாகவும், பெரும் தபோதனனாவும், துறவியாகவும் நான்கு நிலைபாடுவுடையவராக நானிலத்தில் காட்சியளித்துகொண்டே, ஆண், பெண், என்ற உணர்வுகளை தாண்டி, பிறவி நிலையை கடந்து, மனிதர்களால் உற்றுநோக்கியோ, உணர்ந்தோ கொள்ளமுடியதா நிலையில் மூன்று நாட்களாக அனைத்தும் தாமகிய தவமுமாகி, நல்லோர்களின் ஆன்மாவை விழித்தெழச் செய்து, அவர்களுக்கு அன்பு, பண்பு, ஈகை, தியாகம், ஆகிய நான்கு வரங்களையும் அருள் பாலித்து, பொல்லாத பாதகர்களையெல்லம் நரகத்தில் மூழ்கிடச்செய்வதும் , ஆகாயத்தில் இருந்து விழும் இடியால், மலைகள் இளகி போவதையும், சூரியன் தெற்கும் வடக்குமாக திசைமாறி உதிக்கப்போவதையும் இத்தகையது அத்தனையும் அய்யா இயல்பாக இதன் மூலம் சொல்லுகிறார் அன்பர்களே!!!!!
- அய்யா உண்டு -
ஆயர் குலத்தை ஆளாக்கி கொண்டதுவும்
சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்
நீண்டபுகழ் தர்மம் நிறுத்தி அரசாண்டதுவும்
பத்தும் பெரிய பாலருக்காக வேண்டி
சத்தழியும் பாவி தடியிரும்பிலும் இருந்து
படுத்தின பாடெல்லாம் பாலருக்காகப் பொறுத்து
உடுத்ததுணி களைந்து ஒருதுகிலைத் தான்வருந்தி
தேவ ஸ்திரிகளையுஞ் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்
பாவக் கலியுகத்தில் பாராத்தியங்கள் பட்டு
நாலு பிறவி நானிலத்திலே பிறந்து
பாலு குடித்தாண்டி பருபதத்தின் மேல்தாண்டி
மனுக்கண் காணாமல் மறைந்தொரு மூன்றுநாளாய்
தானுந் தவமதுவாய் சாயூச்சியமே புரிந்து
நல்லோரை எழுப்பி நாலுவரமுங் கொடுத்து
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வானம் இடியால் மலைகள் இளகிடவும்
கானமது நாடாய் கண்டதுஞ் சூரியனும்
தெற்கு வடக்காய்த் திசைமாறி நின்றிடவும்
ஒக்கவே நாதன் உரைக்கிறார் அன்போரே.
- அகிலம் –
விளக்கம் :-
சாமிதோப்பு வடக்கு வாசலில், அய்யா தவநிலையாக இருந்துகொண்டே
பேய்களை எரித்து. உலகில் பெரும் புரட்சி செய்ததையும், துவாபரயுகத்தில் யாதவகுலத்தோரை எல்லாம் ரட்சித்த விதத்தையும், இந்தக் கலியுகத்தில் சான்றோர்களை எல்லாம் தம்பால் அரவணைத்து பாதுகாத்துக் கொண்டு இருப்பதையும் , வானளாவிய தர்ம சிறப்புகளையெல்லாம் நிலைநிறுத்தி, இந்த நிலவுலகைப் பரிபாலனம் செய்வதையும், முதிர்ந்த நிலையுடைய உயர்வான தம் மக்களுக்காக வேண்டி, மடிந்து போவதையே தம் முடிவாக கொண்ட கலியரசனாகிய பாதகன் இட்ட மிக பெரிய இரும்பு சங்கிலிகளோடு சிறையில் இருந்து கொண்டே அந்த கலி படைகள் செய்த கோரமான கொடுமைகளை எல்லாம் தாங்கிய வண்ணம் இருந்ததையும், ஏகாபரனாகிய இறைவனின் இயல்பான சூக்கும வடிவத்தை விலக்கிவிட்டு நிலவுலக மனிதனை போன்றதொரு தோற்றத்தை வருவித்துக்கொண்டு துவாபரயுகத்தின் இறுதியில் அடுத்து வர இருக்கும் கலியுகத்தில் தேவலோகதாரையெல்லாம் பூவுலகில் பிறவி செய்யவும் அவர்கள் மூலமாக கலியுகத்தை தர்ம சாம்ராச்சியமாக மாற்றவும் எண்ணம்கொண்டு அயோக அமிர்தகங்கை அருகில் தேவலோகதாரை பூவுலகில் பிறப்பிக்க பயன்படுத்திய சப்தமாதர்களையும் கலியுகத்தில் பிறப்பித்து, பாருலக மக்கள் எல்லாம் பயன்பெறும் வகையில் அந்த சப்தமாதர்களை ஆட்கொண்டதையும், மீண்டும் இந்த பாவம் சூழ்ந்த கலியுகத்தில் பற்பல தொல்லைகளை அனுபவித்து இல்லறதோனாவும், பிரம்மசாரியாகவும், பெரும் தபோதனனாவும், துறவியாகவும் நான்கு நிலைபாடுவுடையவராக நானிலத்தில் காட்சியளித்துகொண்டே, ஆண், பெண், என்ற உணர்வுகளை தாண்டி, பிறவி நிலையை கடந்து, மனிதர்களால் உற்றுநோக்கியோ, உணர்ந்தோ கொள்ளமுடியதா நிலையில் மூன்று நாட்களாக அனைத்தும் தாமகிய தவமுமாகி, நல்லோர்களின் ஆன்மாவை விழித்தெழச் செய்து, அவர்களுக்கு அன்பு, பண்பு, ஈகை, தியாகம், ஆகிய நான்கு வரங்களையும் அருள் பாலித்து, பொல்லாத பாதகர்களையெல்லம் நரகத்தில் மூழ்கிடச்செய்வதும் , ஆகாயத்தில் இருந்து விழும் இடியால், மலைகள் இளகி போவதையும், சூரியன் தெற்கும் வடக்குமாக திசைமாறி உதிக்கப்போவதையும் இத்தகையது அத்தனையும் அய்யா இயல்பாக இதன் மூலம் சொல்லுகிறார் அன்பர்களே!!!!!
- அய்யா உண்டு -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக