சான்றோர்க்கும் நாட்டிற்கும் வறுமையும் கேடும் வந்த விதம்*****
வர்மம் வந்த ஞாயம் வகுக்கக் கேள் ஒண்ணுதலே
சீரங்கம் ஆனதிலே சீரங்க நாதருந்தாம்
பாரெங்கும் மெய்க்கப் பள்ளி கொண்டிருக்கையிலே
நாட்டுக்குக் கேடு நாள் பிடித்த செய்திதனைக்
கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு
முன்னே குறோணி முடிந்த துண்டம் ஆறதிலே
அன்னே கேள் அஞ்சு துண்டம் அவனிதனிலே பிறந்து
ஆதிதனை நினைத்து ஆளாமல் அவ்வுயிர்கள்
நீதி கெட்ட மோச நீசனைப் போல் தானாகி
முற்பிறவியோடு ஆறும் முதலோனைப் போற்றாமல்
அப்பிறவி ஆறும் அழித்து அதன்பின் ஆயிழையே
வர்மம் வந்த ஞாயம் வகுக்கக் கேள் ஒண்ணுதலே
சீரங்கம் ஆனதிலே சீரங்க நாதருந்தாம்
பாரெங்கும் மெய்க்கப் பள்ளி கொண்டிருக்கையிலே
நாட்டுக்குக் கேடு நாள் பிடித்த செய்திதனைக்
கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு
முன்னே குறோணி முடிந்த துண்டம் ஆறதிலே
அன்னே கேள் அஞ்சு துண்டம் அவனிதனிலே பிறந்து
ஆதிதனை நினைத்து ஆளாமல் அவ்வுயிர்கள்
நீதி கெட்ட மோச நீசனைப் போல் தானாகி
முற்பிறவியோடு ஆறும் முதலோனைப் போற்றாமல்
அப்பிறவி ஆறும் அழித்து அதன்பின் ஆயிழையே
---------
உரை
---------
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதன் உலகெல்லாம் அதிசயிக்கத் தக்க வகையில் பள்ளி கொண்டிருந்தார்.
அப்பொழுது நாட்டு மக்கள் எல்லாருக்கும் கேடான காலம் பற்றியது எவ்வாறு? என்பதைக் கூட்டுக் கிளியே, அன்பையுடைய இலட்சுமிதேவியே, நீ கவனமாகக் கேட்பாயாக.
"முன்பு குறோணியை அழித்தபோது, உருவாகிய ஆறு துண்டங்களில் ஐந்து துண்டங்கள் பூலோகத்தில் பிறந்து ஆதியாகிய சிவனை நினைத்து அரசாளாமல் அந்த உயிர்கள் நீதி இல்லாத மோசமான நீசனைப் போன்று ஆகி, முன் தோன்றிய ஆறு பிறவிகளிலும் முதலோனாகிய சிவனைப் போற்றாத காரணத்தால் அந்த ஆறு பிறவிகளையும், மாயன் அழித்து விட்டார், பெண்மயிலே."
---------------------
அய்யா உண்டு
---------------------
உரை
---------
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதன் உலகெல்லாம் அதிசயிக்கத் தக்க வகையில் பள்ளி கொண்டிருந்தார்.
அப்பொழுது நாட்டு மக்கள் எல்லாருக்கும் கேடான காலம் பற்றியது எவ்வாறு? என்பதைக் கூட்டுக் கிளியே, அன்பையுடைய இலட்சுமிதேவியே, நீ கவனமாகக் கேட்பாயாக.
"முன்பு குறோணியை அழித்தபோது, உருவாகிய ஆறு துண்டங்களில் ஐந்து துண்டங்கள் பூலோகத்தில் பிறந்து ஆதியாகிய சிவனை நினைத்து அரசாளாமல் அந்த உயிர்கள் நீதி இல்லாத மோசமான நீசனைப் போன்று ஆகி, முன் தோன்றிய ஆறு பிறவிகளிலும் முதலோனாகிய சிவனைப் போற்றாத காரணத்தால் அந்த ஆறு பிறவிகளையும், மாயன் அழித்து விட்டார், பெண்மயிலே."
---------------------
அய்யா உண்டு
---------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக