*அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
கேட்டு ஸ்ரீகிருஷ்ணரும் கிளி மொழியோடு ஏதுரைப்பார்
ஓட்டில் இரந்துண்ண ஊர் வழியேதான் திரியும்
ஆண்டிக்கே அல்லாது அரவணையிலே துயிலும்
காண்டீபனுக்கு ஏவல் கருதோம் என உரைத்தீர்
தோகையரே கங்கை இனித் திரட்டுவதைப் பார்ப்போம்
கேட்டு ஸ்ரீகிருஷ்ணரும் கிளி மொழியோடு ஏதுரைப்பார்
ஓட்டில் இரந்துண்ண ஊர் வழியேதான் திரியும்
ஆண்டிக்கே அல்லாது அரவணையிலே துயிலும்
காண்டீபனுக்கு ஏவல் கருதோம் என உரைத்தீர்
தோகையரே கங்கை இனித் திரட்டுவதைப் பார்ப்போம்
---------
உரை
---------
இதைக் கேட்டுக் திருமால், "கிளி போன்று அழகாகப் பேசும் கன்னிகளே ஓட்டில் இரந்து உண்பதற்காக ஊர் ஊராகச் சுற்றித் திரியும் அந்த ஆண்டிக்கே அல்லாது பாம்பு மெத்தையில் துயின்று கொண்டிருக்கும் திருமாலுக்கும் ஊழியங்கள் செய்வதற்கு எண்ண மாட்டோம் என்று கூறினீர்கள். மயில் தோகை போன்ற கூந்தலுடையவரே, இனி நீங்கள் கங்கை நீரை எப்படித் திரட்டி எடுப்பீர் பார்ப்போம்" என்று கோபத்துடன் கூறி வழிவிட்டார்.
அக்கன்னிகள் தமது வழியில் சென்று கங்கையில் நீராடினர்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
இதைக் கேட்டுக் திருமால், "கிளி போன்று அழகாகப் பேசும் கன்னிகளே ஓட்டில் இரந்து உண்பதற்காக ஊர் ஊராகச் சுற்றித் திரியும் அந்த ஆண்டிக்கே அல்லாது பாம்பு மெத்தையில் துயின்று கொண்டிருக்கும் திருமாலுக்கும் ஊழியங்கள் செய்வதற்கு எண்ண மாட்டோம் என்று கூறினீர்கள். மயில் தோகை போன்ற கூந்தலுடையவரே, இனி நீங்கள் கங்கை நீரை எப்படித் திரட்டி எடுப்பீர் பார்ப்போம்" என்று கோபத்துடன் கூறி வழிவிட்டார்.
அக்கன்னிகள் தமது வழியில் சென்று கங்கையில் நீராடினர்.
---------------------
அய்யா உண்டு
அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
அப்போது கன்னி எல்லோரும் ஏதுரைப்பார்
எப்போதும் தாமாய் இருப்பவர்க்கே அல்லாது
மாயவர்க்கும் மற்றுமுள்ள மகேசுரர் தமக்கும்
வாயமுள்ள வானவர்கோன் மறைமுனிவர் தமக்கும்
எருது ஏறி நித்தம் இறவாது இருக்கின்ற
ஒருவருக்கே அல்லால் ஊழியங்கள் வேறிலையே
அப்போது கன்னி எல்லோரும் ஏதுரைப்பார்
எப்போதும் தாமாய் இருப்பவர்க்கே அல்லாது
மாயவர்க்கும் மற்றுமுள்ள மகேசுரர் தமக்கும்
வாயமுள்ள வானவர்கோன் மறைமுனிவர் தமக்கும்
எருது ஏறி நித்தம் இறவாது இருக்கின்ற
ஒருவருக்கே அல்லால் ஊழியங்கள் வேறிலையே
---------
உரை
---------
உடனே, கன்னிகள் "எப்போதும் தமக்கு நிகர் தாமேயாகி இருப்பவரும், காளை வாகனம் ஏறி என்றும் இறவாநிலை பெற்றவராகி இருப்பவரும் ஆகிய அவருக்கே நாங்கள் இக்கிரியைகளைச் செய்து வருவோமே அல்லாது, மாயவர்க்கோ, மற்றுமுள்ள மகேசுரருக்கோ, நல்ல உயர்வான வழிகளைக் கடைபிடிக்கும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கோ, பிரம்மாவுக்கோ, நாங்கள் இந்தக் கிரியை வேலைகளைச் செய்ய மாட்டோம்" என்றனர்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
உடனே, கன்னிகள் "எப்போதும் தமக்கு நிகர் தாமேயாகி இருப்பவரும், காளை வாகனம் ஏறி என்றும் இறவாநிலை பெற்றவராகி இருப்பவரும் ஆகிய அவருக்கே நாங்கள் இக்கிரியைகளைச் செய்து வருவோமே அல்லாது, மாயவர்க்கோ, மற்றுமுள்ள மகேசுரருக்கோ, நல்ல உயர்வான வழிகளைக் கடைபிடிக்கும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கோ, பிரம்மாவுக்கோ, நாங்கள் இந்தக் கிரியை வேலைகளைச் செய்ய மாட்டோம்" என்றனர்.
---------------------
அய்யா உண்டு
அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
ஏல் அறிந்து கன்னி இவரல்லர் ஈசர் என்று
சாய்ந்து விலகித் தையல் நல்லார் போகையில்
ஆய்ந்து தெளிந்து அச்சுதரும் முன் ஏகிப்
பலநாளும் ஈசருக்குப் பாவையரே நீங்களுந்தாம்
சலம் திரட்டி மேன்முடியில் செய்தீர் அனுஷ்டானம்
இனி எனக்கு நீங்கள் எல்லோரும் மிக்கவந்து
கனிநீர்தனை எந்தலையில் கவிழும் என்றார் எம்பெருமாள்
ஏல் அறிந்து கன்னி இவரல்லர் ஈசர் என்று
சாய்ந்து விலகித் தையல் நல்லார் போகையில்
ஆய்ந்து தெளிந்து அச்சுதரும் முன் ஏகிப்
பலநாளும் ஈசருக்குப் பாவையரே நீங்களுந்தாம்
சலம் திரட்டி மேன்முடியில் செய்தீர் அனுஷ்டானம்
இனி எனக்கு நீங்கள் எல்லோரும் மிக்கவந்து
கனிநீர்தனை எந்தலையில் கவிழும் என்றார் எம்பெருமாள்
---------
உரை
---------
(சப்தகன்னிகள்) ஈசருக்கும், சன்னியாசிக்கும் உள்ள ஒப்புமையை ஆராய்ந்து அறிந்து, "இவர் ஈசர் அல்லர்" என்று முடிவு செய்து, அவரை விட்டு விலகி ஒதுங்கிச் சென்றனர். இவ்வாறு கன்னியர் ஒதுங்கிச் செல்லும்போது, அவர்களின் போக்கை ஆராய்ந்து தெளிந்து ஒரு முடிவுடன் அச்சுதராகிய திருமால் அவர்கள் முன்பு சென்று வழிமறைத்து, "கன்னிகளே, இதுவரை நீங்கள் ஈசருக்குப் பல நாள்கள், கங்கை நீரைத் திரட்டி மேன்மையான அவர் முடியில் இட்டு வழிபாடு முதலிய திருச்செயல்கள் செய்து வந்தீர்கள். இனி நீங்கள் எல்லாரும் சேர்ந்து அந்தக் கனி போன்ற இனிய நீரை எமது தலையில் இட்டு வழிபடுங்கள்" என்றார்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
(சப்தகன்னிகள்) ஈசருக்கும், சன்னியாசிக்கும் உள்ள ஒப்புமையை ஆராய்ந்து அறிந்து, "இவர் ஈசர் அல்லர்" என்று முடிவு செய்து, அவரை விட்டு விலகி ஒதுங்கிச் சென்றனர். இவ்வாறு கன்னியர் ஒதுங்கிச் செல்லும்போது, அவர்களின் போக்கை ஆராய்ந்து தெளிந்து ஒரு முடிவுடன் அச்சுதராகிய திருமால் அவர்கள் முன்பு சென்று வழிமறைத்து, "கன்னிகளே, இதுவரை நீங்கள் ஈசருக்குப் பல நாள்கள், கங்கை நீரைத் திரட்டி மேன்மையான அவர் முடியில் இட்டு வழிபாடு முதலிய திருச்செயல்கள் செய்து வந்தீர்கள். இனி நீங்கள் எல்லாரும் சேர்ந்து அந்தக் கனி போன்ற இனிய நீரை எமது தலையில் இட்டு வழிபடுங்கள்" என்றார்.
---------------------
அய்யா உண்டு
அமிழ்த கங்கையில் சப்தகன்னிகளும் திருமாலும்*****
அவ்வனத்தில் உள்ள அமிழ்தகங்கை ஆனதிலே
குளித்து விளையாடிக் கூவந்தனில் இறங்கிக்
களித்து மகிழ்ந்து கையில் கங்கைதான் திரட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரம் குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கும் மடவார்
மரகதம் வல்லி வள்ளி சலிகை இன்னும்
சரகதகன்னி சரிதை அரிமடவையும்
ஏழு மடவாரும் என்றென்றும் இப்படியே
நாளும் முறையாய் நடத்திவரும் நாளையிலே
மால் அறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசி என
அவ்வனத்தில் உள்ள அமிழ்தகங்கை ஆனதிலே
குளித்து விளையாடிக் கூவந்தனில் இறங்கிக்
களித்து மகிழ்ந்து கையில் கங்கைதான் திரட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரம் குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கும் மடவார்
மரகதம் வல்லி வள்ளி சலிகை இன்னும்
சரகதகன்னி சரிதை அரிமடவையும்
ஏழு மடவாரும் என்றென்றும் இப்படியே
நாளும் முறையாய் நடத்திவரும் நாளையிலே
மால் அறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசி என
---------
உரை
---------
அந்த அயோக அமிழ்த வனத்தில் அமைந்திருக்கும் அயோக அமிழ்த கங்கையில், கயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த வாசம் பொருந்திய கன்னியர் குளித்து விளையாடி, கங்கைச் சுனையில் இறங்கி மகிழ்ச்சியுடன் கங்கை நீரைத் திரட்டி எடுத்துச் சென்று ஈசரின் முடிமேல் இட்டுக் கரங்குவித்து வழிபடுவர், தினந்தோறும் இப்படியே மரகதம், வல்லி, வள்ளி, சலிகை, சரகதகன்னி, சரிதை, அரிமடவை ஆகிய ஏழுபேரும் முறையாக வழிபாடு நடத்தி வருகின்ற சமயத்தில் வைகுண்டம் செல்லும் வழியில் அரிகோண மலைக்கு வந்த திருமால் இவர்களைப் பற்றி அறிந்து, ஒரு சிவசன்னியாசி போல வேடமெடுத்து, நீராடச் செல்லும் அக்கன்னிகள் முன்னால் தோன்றினார்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
அந்த அயோக அமிழ்த வனத்தில் அமைந்திருக்கும் அயோக அமிழ்த கங்கையில், கயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த வாசம் பொருந்திய கன்னியர் குளித்து விளையாடி, கங்கைச் சுனையில் இறங்கி மகிழ்ச்சியுடன் கங்கை நீரைத் திரட்டி எடுத்துச் சென்று ஈசரின் முடிமேல் இட்டுக் கரங்குவித்து வழிபடுவர், தினந்தோறும் இப்படியே மரகதம், வல்லி, வள்ளி, சலிகை, சரகதகன்னி, சரிதை, அரிமடவை ஆகிய ஏழுபேரும் முறையாக வழிபாடு நடத்தி வருகின்ற சமயத்தில் வைகுண்டம் செல்லும் வழியில் அரிகோண மலைக்கு வந்த திருமால் இவர்களைப் பற்றி அறிந்து, ஒரு சிவசன்னியாசி போல வேடமெடுத்து, நீராடச் செல்லும் அக்கன்னிகள் முன்னால் தோன்றினார்.
---------------------
அய்யா உண்டு
*அரிகோண மலை வளமை*****
வைகுண்டம் காண வந்த தர்மி எல்லோரும்
மெய்குண்டம் கண்டோம் என இருப்பார் அவ்வனத்தில்
அப்படியே நல்ல அயோக அமிழ்தவனம்
இப்படியே நன்றாய் இயல்பாய் இருப்பதுதான்
புட்டாபுரம் கிழக்கும் பூங்காவு நேர்மேற்கும்
வட்டமுள்ள ஸ்ரீரங்கம் வடக்கு வனம் நேர்கிழக்கு
தெற்கே திரிகோணம் செங்காவு நேர்வடக்கு
மிக்கவகை மேற்கு மிகுந்த வனம் நேர்கிழக்கு
இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமிழ்தவனம்
வைகுண்டம் காண வந்த தர்மி எல்லோரும்
மெய்குண்டம் கண்டோம் என இருப்பார் அவ்வனத்தில்
அப்படியே நல்ல அயோக அமிழ்தவனம்
இப்படியே நன்றாய் இயல்பாய் இருப்பதுதான்
புட்டாபுரம் கிழக்கும் பூங்காவு நேர்மேற்கும்
வட்டமுள்ள ஸ்ரீரங்கம் வடக்கு வனம் நேர்கிழக்கு
தெற்கே திரிகோணம் செங்காவு நேர்வடக்கு
மிக்கவகை மேற்கு மிகுந்த வனம் நேர்கிழக்கு
இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமிழ்தவனம்
---------
உரை
---------
வைகுண்டத்தைக் காணச்செல்லும் தருமிகள் இவ்வனத்தைக் கண்டு, "மெய்குண்டமாகிய வைகுண்டத்தைக் கண்டு விட்டோம்" என அங்கே அமர்ந்துவிடுவர். இச்சிறப்புடையதான இந்த நல்ல அயோக அமிழ்தவனம் நல்ல இயற்கை வளமுடையது.
அயோக அமிழ்தவனமாகிய பூங்காவிற்குக் கிழக்கே புட்டாபுரமும், அந்த வனத்திற்கு வடக்கே வட்டமுள்ள ஸ்ரீரங்கமும், அமிர்தவனமாகிய செங்காவிற்குத் தெற்கே திரிகோணமும், இயற்கை வளம் மிகுந்த அவ்வனத்திற்கு மேற்கே பல வகையான சோலை வளங்கொண்ட இடமும் அயோக அமிழ்த வனத்தின் எல்கைகளாம்.
---------------------
அய்யா உண்டு
---------------------
உரை
---------
வைகுண்டத்தைக் காணச்செல்லும் தருமிகள் இவ்வனத்தைக் கண்டு, "மெய்குண்டமாகிய வைகுண்டத்தைக் கண்டு விட்டோம்" என அங்கே அமர்ந்துவிடுவர். இச்சிறப்புடையதான இந்த நல்ல அயோக அமிழ்தவனம் நல்ல இயற்கை வளமுடையது.
அயோக அமிழ்தவனமாகிய பூங்காவிற்குக் கிழக்கே புட்டாபுரமும், அந்த வனத்திற்கு வடக்கே வட்டமுள்ள ஸ்ரீரங்கமும், அமிர்தவனமாகிய செங்காவிற்குத் தெற்கே திரிகோணமும், இயற்கை வளம் மிகுந்த அவ்வனத்திற்கு மேற்கே பல வகையான சோலை வளங்கொண்ட இடமும் அயோக அமிழ்த வனத்தின் எல்கைகளாம்.
---------------------
அய்யா உண்டு
---------------------
அரிகோண மலை வளமை*****
சோலையிலே வீற்றிருக்கும் சீர் பறவையின் பெருமை
தூலம் இன்னது என்று சொல்லத் தொலையாது
பார்வதியும் ஈசுவரனும் பாவித்து இருப்பதுபோல்
தேர்ப்பதியும் மேடைகளும் சிங்காசனம் காணும்
அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல்
நிலையில் முனிவோர் நிற்பது எண்ணக் கூடாது
கயிலை இது என்று கண்ணான மாமுனிவர்
ஒயிலாகக் கூடி உகந்திருப்பது அவ்வனத்தில்
சோலையிலே வீற்றிருக்கும் சீர் பறவையின் பெருமை
தூலம் இன்னது என்று சொல்லத் தொலையாது
பார்வதியும் ஈசுவரனும் பாவித்து இருப்பதுபோல்
தேர்ப்பதியும் மேடைகளும் சிங்காசனம் காணும்
அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல்
நிலையில் முனிவோர் நிற்பது எண்ணக் கூடாது
கயிலை இது என்று கண்ணான மாமுனிவர்
ஒயிலாகக் கூடி உகந்திருப்பது அவ்வனத்தில்
---------
உரை
---------
அச்சோலையில் அமர்ந்திருக்கும் பறவைகளின் உடல் அழகினை இத்தகையது என்று கூறுவது இயலாது. அங்கே, பார்வதியும் ஈசுரனும் அமர்ந்து இருப்பதைப்போன்ற சிறந்த தேர்ப்பதியும், ஆசன மேடைகளும், சிங்காசனங்களும் காட்சியளிக்கும். அங்கே, அலையிலே பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் நிலைபோன்று அறிதுயிலில் இருக்கின்ற முனிவர்களின் எண்ணிக்கை எண்ணித் தாங்காது. 'இதுதான் கயிலை' என்று சிறப்பு வாய்ந்த முனிவர்கள் ஒய்யாரமாகக் கூடி மகிழ்ச்சியுடன் அவ்வனத்தில் இருப்பர்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
அச்சோலையில் அமர்ந்திருக்கும் பறவைகளின் உடல் அழகினை இத்தகையது என்று கூறுவது இயலாது. அங்கே, பார்வதியும் ஈசுரனும் அமர்ந்து இருப்பதைப்போன்ற சிறந்த தேர்ப்பதியும், ஆசன மேடைகளும், சிங்காசனங்களும் காட்சியளிக்கும். அங்கே, அலையிலே பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் நிலைபோன்று அறிதுயிலில் இருக்கின்ற முனிவர்களின் எண்ணிக்கை எண்ணித் தாங்காது. 'இதுதான் கயிலை' என்று சிறப்பு வாய்ந்த முனிவர்கள் ஒய்யாரமாகக் கூடி மகிழ்ச்சியுடன் அவ்வனத்தில் இருப்பர்.
---------------------
அய்யா உண்டு
அரிகோண மலை வளமை*****
அரிகோண மாமலையில் அயோக அமிழ்தகங்கை
பரிகோண மாமலையை பகுத்து உரைக்கக் கூடாது
தேன்கமுகும் மாங்கமுகும் தென்னங் கமுகுகளும்
வான்கமுகும் வாழை வழுவிலா நற்கமுகும்
சோலைமரமும் சுக சோபனவனமும்
ஆலமரமும் அகில் தேக்கு மாமரமும்
புன்னைமரமும் புஷ்ப மலர்க்காவும்
தென்னை மரமும் செஞ்சந்தன மரமும்
மாவுமரமும் வாய்த்த பலாமரமும்
தாவும் மரத்தின் தன்மை சொல்லக் கூடாது
அரிகோண மாமலையில் அயோக அமிழ்தகங்கை
பரிகோண மாமலையை பகுத்து உரைக்கக் கூடாது
தேன்கமுகும் மாங்கமுகும் தென்னங் கமுகுகளும்
வான்கமுகும் வாழை வழுவிலா நற்கமுகும்
சோலைமரமும் சுக சோபனவனமும்
ஆலமரமும் அகில் தேக்கு மாமரமும்
புன்னைமரமும் புஷ்ப மலர்க்காவும்
தென்னை மரமும் செஞ்சந்தன மரமும்
மாவுமரமும் வாய்த்த பலாமரமும்
தாவும் மரத்தின் தன்மை சொல்லக் கூடாது
---------
உரை
---------
அதிசயமான வளைவுடன் கூடிய அரிகோண மலையில் இருக்கும் அயோக அமிழ்த கங்கையின் வளமையைப் பற்றி எடுத்துரைத்தல் முடியாது. தேன்கமுகும், மாங்கமுகும், தென்னங்கமுகும், வான்கமுகும், வாழைகளும், வழுவில்லா நற்கமுகும், சோலை மரமும், சுகசோபன மரமும், ஆழ மரமும், பெரிய அகில் தேக்கு மரங்களும், புன்னைமரமும், மலர்ச் சோலைகளும், தென்னை மரமும், செஞ்சந்தன மரமும், மாமரமும், சிறந்த பலா மரமும், இவ்வாறு எங்கும் பரந்து கிடக்கும் மரங்களின் உயர்வு பற்றி விரிவாகச் சொல்வது இயலாது.
---------------------
அய்யா உண்டு
---------------------
உரை
---------
அதிசயமான வளைவுடன் கூடிய அரிகோண மலையில் இருக்கும் அயோக அமிழ்த கங்கையின் வளமையைப் பற்றி எடுத்துரைத்தல் முடியாது. தேன்கமுகும், மாங்கமுகும், தென்னங்கமுகும், வான்கமுகும், வாழைகளும், வழுவில்லா நற்கமுகும், சோலை மரமும், சுகசோபன மரமும், ஆழ மரமும், பெரிய அகில் தேக்கு மரங்களும், புன்னைமரமும், மலர்ச் சோலைகளும், தென்னை மரமும், செஞ்சந்தன மரமும், மாமரமும், சிறந்த பலா மரமும், இவ்வாறு எங்கும் பரந்து கிடக்கும் மரங்களின் உயர்வு பற்றி விரிவாகச் சொல்வது இயலாது.
---------------------
அய்யா உண்டு
---------------------
திருமால் ஸ்ரீரங்கம் புறப்படுதல்*****
வைகுண்டம் ஏக மனதிலுற்று எம்பெருமாள்
பொய் கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பு ஏறி
ஆங்கார மோகத்து அம்புக் கணையாலே
ஓங்கார மாமுனிவன் உறுதி பெற்றுத் தான் மெலிந்து
பஞ்சவர்க்குள்ள பாரப் பெலங்களையும்
துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கும்
மேல் நடப்புள்ள விசளம் எல்லாம்தான் உரைத்து
நூல் நடந்து வாரும் என்று மோட்சத் திறவோனும்
சீரங்க மாபதியில் செல்லுகின்ற அப்போது
சாரங்கர் செய்த தன்மை கேள் அம்மானை
வைகுண்டம் ஏக மனதிலுற்று எம்பெருமாள்
பொய் கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பு ஏறி
ஆங்கார மோகத்து அம்புக் கணையாலே
ஓங்கார மாமுனிவன் உறுதி பெற்றுத் தான் மெலிந்து
பஞ்சவர்க்குள்ள பாரப் பெலங்களையும்
துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கும்
மேல் நடப்புள்ள விசளம் எல்லாம்தான் உரைத்து
நூல் நடந்து வாரும் என்று மோட்சத் திறவோனும்
சீரங்க மாபதியில் செல்லுகின்ற அப்போது
சாரங்கர் செய்த தன்மை கேள் அம்மானை
---------
உரை
---------
இவ்வாறு பஞ்சபாண்டவர்கள் நல்ல முறையில் நாட்டினை ஆண்டு வருகின்றபொழுது, எம்பெருமானாகிய கிருஷ்ணன் வைகுண்டம் அடைய மனதில் எண்ணிப் பொய்யான கிருஷ்ண அவதார உடம்போடு பர்வதாமலை மேல் ஏறி, அங்குச் சரண் என்னும் வேடனின் அம்புக் கணையால் எய்யப் பெற்றுப் பொய் உடம்பைத் துறக்க உறுதி பூண்டார்.
எனவே, கண்ணன் தாம் மெலிந்தவராகத் தோற்றமளித்து, தமக்கு உதவ வந்த பஞ்சவர்களின் மேன்மையான பலத்தை அழியும்படி பறித்து, அவர்களுக்கு இனி வரப்போகின்ற கலியுகத்தின் துன்பங்களை எல்லாம் எடுத்துரைத்து, "நீங்கள் சூட்சம உடம்போடு வைகுண்டத்திற்கு நூல் பாலம் வழியாக வந்து சேருங்கள்" என்று நல்லோருக்கு மோட்சபதவி அருளும் சக்தி படைத்த கண்ணன் கூறிவிட்டு, தம் கிருஷ்ண அவதார உடலைப் பர்வதா மலையில் கிடத்தி விட்டு, ஸ்ரீரங்கம் புறப்பட்டு, வழியில் அரிகோண மலைக்குச் சென்றபொழுது, திருமால் செய்த திருவிளையாடலை இலட்சுமிதேவியே கேட்பாயாக.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
இவ்வாறு பஞ்சபாண்டவர்கள் நல்ல முறையில் நாட்டினை ஆண்டு வருகின்றபொழுது, எம்பெருமானாகிய கிருஷ்ணன் வைகுண்டம் அடைய மனதில் எண்ணிப் பொய்யான கிருஷ்ண அவதார உடம்போடு பர்வதாமலை மேல் ஏறி, அங்குச் சரண் என்னும் வேடனின் அம்புக் கணையால் எய்யப் பெற்றுப் பொய் உடம்பைத் துறக்க உறுதி பூண்டார்.
எனவே, கண்ணன் தாம் மெலிந்தவராகத் தோற்றமளித்து, தமக்கு உதவ வந்த பஞ்சவர்களின் மேன்மையான பலத்தை அழியும்படி பறித்து, அவர்களுக்கு இனி வரப்போகின்ற கலியுகத்தின் துன்பங்களை எல்லாம் எடுத்துரைத்து, "நீங்கள் சூட்சம உடம்போடு வைகுண்டத்திற்கு நூல் பாலம் வழியாக வந்து சேருங்கள்" என்று நல்லோருக்கு மோட்சபதவி அருளும் சக்தி படைத்த கண்ணன் கூறிவிட்டு, தம் கிருஷ்ண அவதார உடலைப் பர்வதா மலையில் கிடத்தி விட்டு, ஸ்ரீரங்கம் புறப்பட்டு, வழியில் அரிகோண மலைக்குச் சென்றபொழுது, திருமால் செய்த திருவிளையாடலை இலட்சுமிதேவியே கேட்பாயாக.
---------------------
அய்யா உண்டு
கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
எல்லை வைத்த பாரதப்போர் இன்று முடிந்தது என்று
கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு
வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி
ஐபேரும் பத்தினியும் அச்சுதரையும் போற்றி
மெய் போகமான வியாசரையும் குவித்து
ஆண்டார்கள் சீமை அச்சுதனார் உண்டெனவே
பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே
எல்லை வைத்த பாரதப்போர் இன்று முடிந்தது என்று
கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு
வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி
ஐபேரும் பத்தினியும் அச்சுதரையும் போற்றி
மெய் போகமான வியாசரையும் குவித்து
ஆண்டார்கள் சீமை அச்சுதனார் உண்டெனவே
பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே
---------
உரை
---------
"பாகப் பிரிவினைக்கான பாரதப்போர் இன்று முடிவுற்றது" என்று பஞ்சவர்கள் மகிழ்வுற்றுக் கிருஷ்ணனை வணங்கினர். வண்டுகள் சுற்றும் கூந்தலையுடைய அழகு நிறமான திரௌபதி சபதம் முடித்து நீராடித் தன் கூந்தலை முடிந்து கொண்டாள். பஞ்சவர்களும் திரௌபதியும் ஸ்ரீகிருஷ்ணனைத் துதித்து, உண்மைப் பொருளில் எப்போதும் விருப்பம் வைத்திருப்பவரான வியாசரையும் கரங்குவித்து வணங்கி, ஸ்ரீகிருஷ்ணன் எப்போதும் துணை இருப்பார் என்னும் திடமான எண்ணத்துடன் அரசாண்டார்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
"பாகப் பிரிவினைக்கான பாரதப்போர் இன்று முடிவுற்றது" என்று பஞ்சவர்கள் மகிழ்வுற்றுக் கிருஷ்ணனை வணங்கினர். வண்டுகள் சுற்றும் கூந்தலையுடைய அழகு நிறமான திரௌபதி சபதம் முடித்து நீராடித் தன் கூந்தலை முடிந்து கொண்டாள். பஞ்சவர்களும் திரௌபதியும் ஸ்ரீகிருஷ்ணனைத் துதித்து, உண்மைப் பொருளில் எப்போதும் விருப்பம் வைத்திருப்பவரான வியாசரையும் கரங்குவித்து வணங்கி, ஸ்ரீகிருஷ்ணன் எப்போதும் துணை இருப்பார் என்னும் திடமான எண்ணத்துடன் அரசாண்டார்.
---------------------
அய்யா உண்டு
கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
என்று அவனை அழித்து இப்பிறவி ஐவருடன்
முந்தி உதித்து முதல்பிறவி செய்து அவனை
அரவக் கொடியோன் இடத்தில் அனுப்பி வைத்து
இரவலர்க்கும் ஈந்து என்புத்தி உள்ளிருத்தி
அன்னையுட சொல்லை அசராமல் ஐபேர்க்கும் விசையன்
தன்னே ஒரு கணைமேல் விடேன் என்ற உத்தமன்காண்
ஆனதால் முன்னே அருளி வைத்த சொற்படிக்கு
மானமாய் மோட்சம் வகுத்தேன் இவனுக்கு என்றார்
நல்லதுதான் என்று நன்முனிவன் தான் மகிழ்ந்தான்
என்று அவனை அழித்து இப்பிறவி ஐவருடன்
முந்தி உதித்து முதல்பிறவி செய்து அவனை
அரவக் கொடியோன் இடத்தில் அனுப்பி வைத்து
இரவலர்க்கும் ஈந்து என்புத்தி உள்ளிருத்தி
அன்னையுட சொல்லை அசராமல் ஐபேர்க்கும் விசையன்
தன்னே ஒரு கணைமேல் விடேன் என்ற உத்தமன்காண்
ஆனதால் முன்னே அருளி வைத்த சொற்படிக்கு
மானமாய் மோட்சம் வகுத்தேன் இவனுக்கு என்றார்
நல்லதுதான் என்று நன்முனிவன் தான் மகிழ்ந்தான்
---------
உரை
---------
இப்போது இந்த யுகத்தின் பிறவியில் பஞ்சவருடன் வாலியை, மூத்த பிள்ளை கர்ணனாகப் பிறக்கச் செய்து, அவனைத் துரியோதனனின் அரண்மனைக்கு அனுப்பி வைத்தேன். இரப்பார்க்குக் கேட்டவை கொடுக்கும் கர்ணனிடம், அவனது தாய் குந்திதேவி, நான் சொன்ன அறிவுரையை மனதில் கொண்டு, 'ஐவருக்கும் அன்பான விஜயன்மேல் நாகப்பாணத்தை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த மாட்டேன்' என்று கேட்ட வாக்குறுதிக்குச் சிறிதளவும் பிழைவராமல் காத்த உத்தமன் கர்ணன். எனவே, முன்பு அருளிய வாக்குப்படி உயர்வான மோட்சபதவி இவனுக்கு அளித்தேன்" என்றார்.
உடனே, அந்த நல்ல வியாசமுனி, "மிகவும் நல்ல காரியம்தான்" என்று கூறி, மகிழ்வுற்றான்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
இப்போது இந்த யுகத்தின் பிறவியில் பஞ்சவருடன் வாலியை, மூத்த பிள்ளை கர்ணனாகப் பிறக்கச் செய்து, அவனைத் துரியோதனனின் அரண்மனைக்கு அனுப்பி வைத்தேன். இரப்பார்க்குக் கேட்டவை கொடுக்கும் கர்ணனிடம், அவனது தாய் குந்திதேவி, நான் சொன்ன அறிவுரையை மனதில் கொண்டு, 'ஐவருக்கும் அன்பான விஜயன்மேல் நாகப்பாணத்தை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த மாட்டேன்' என்று கேட்ட வாக்குறுதிக்குச் சிறிதளவும் பிழைவராமல் காத்த உத்தமன் கர்ணன். எனவே, முன்பு அருளிய வாக்குப்படி உயர்வான மோட்சபதவி இவனுக்கு அளித்தேன்" என்றார்.
உடனே, அந்த நல்ல வியாசமுனி, "மிகவும் நல்ல காரியம்தான்" என்று கூறி, மகிழ்வுற்றான்.
---------------------
அய்யா உண்டு
*கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
அன்று வாலி தனக்கு அருளினதை நீ கேளு
எனக்கு ஏவலாக இப்பிறவி நீ பிறந்து
தனக்கேராப் பாவிதனைச் சங்காரம் செய்ததனால்
இனிமேல் அவனோடு இருந்து என்சொல் கேட்க வைத்து
கனியான மோட்ச கயிலாசமே தருவேன்
என்று அவனை அழித்து இப்பிறவி ஐவருடன்
அன்று வாலி தனக்கு அருளினதை நீ கேளு
எனக்கு ஏவலாக இப்பிறவி நீ பிறந்து
தனக்கேராப் பாவிதனைச் சங்காரம் செய்ததனால்
இனிமேல் அவனோடு இருந்து என்சொல் கேட்க வைத்து
கனியான மோட்ச கயிலாசமே தருவேன்
என்று அவனை அழித்து இப்பிறவி ஐவருடன்
---------
உரை
---------
அப்பொழுது நான் வாலிக்கு அருளியதை வியாசனே, நீ கேள் "வாலியே, இப்பிறவியில் நீ பிறந்து எனக்கு ஏவலனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாய். என் புத்திமதிகளைக் கேட்காத பாவியாகிய இராவணனை நானே கொன்றதால் இனிவரும் (துரியோதனன்) பிறவியில் நீ அவனுடன் இருந்து என் சொற்களைக் கேட்கும் நல்ல மனத்துடன் இருந்தால் இனிமை பொருந்திய மோட்சமாகிய கயிலை பதவி உனக்குத் தருவேன்" என்று கூறி அவனை மடியச் செய்தேன்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
அப்பொழுது நான் வாலிக்கு அருளியதை வியாசனே, நீ கேள் "வாலியே, இப்பிறவியில் நீ பிறந்து எனக்கு ஏவலனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாய். என் புத்திமதிகளைக் கேட்காத பாவியாகிய இராவணனை நானே கொன்றதால் இனிவரும் (துரியோதனன்) பிறவியில் நீ அவனுடன் இருந்து என் சொற்களைக் கேட்கும் நல்ல மனத்துடன் இருந்தால் இனிமை பொருந்திய மோட்சமாகிய கயிலை பதவி உனக்குத் தருவேன்" என்று கூறி அவனை மடியச் செய்தேன்.
---------------------
அய்யா உண்டு
கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
சிராமனாய் நான் இருந்து செயித்த விதம் அறிந்து
வந்து பணிந்தானே வாலி அவன் என்காலில்
நன்றியுள்ள மாலே நானுனக்கு ஏவலனாய்
முன்னே நீர் அமிழ்தம் உவரிதனில் கடைய
என்னை ஒருபுறமாய் ஏவல் கொண்ட மாயவரே
பத்துத் தலையுள்ள பாவி அந்த ராவணனைக்
கொத்திச் சிரசு அறுத்துக் கொல்லேனோ நானடியேன்
என்று அந்த வாலி இறைஞ்சித் தொழுதிடவே
சிராமனாய் நான் இருந்து செயித்த விதம் அறிந்து
வந்து பணிந்தானே வாலி அவன் என்காலில்
நன்றியுள்ள மாலே நானுனக்கு ஏவலனாய்
முன்னே நீர் அமிழ்தம் உவரிதனில் கடைய
என்னை ஒருபுறமாய் ஏவல் கொண்ட மாயவரே
பத்துத் தலையுள்ள பாவி அந்த ராவணனைக்
கொத்திச் சிரசு அறுத்துக் கொல்லேனோ நானடியேன்
என்று அந்த வாலி இறைஞ்சித் தொழுதிடவே
---------
உரை
---------
இராம அவதாரமாக நான் அவதரித்து வெற்றி கொண்ட நிலை அறிந்து என் பாதங்களை அந்த வலிமை பொருந்தியவன்(வாலி) சரணடைந்து, 'நன்றியுள்ள திருமாலே, முன்பு நீர் கடலில் அமிழ்தம் கடையும்போது நான் உமக்குக் காவலனாய் இருந்தேன். என்னைத் தாங்கள் ஊழியங்கள் செய்ய ஏவினீர். அவ்வாறு ஏவல் செய்ய ஏவிய மாயவரே, இப்போதும் என்னை ஏவி இருந்தால் பத்துத் தலைகளையுடைய இராவணனின் தலைகளை அடியேனாகிய நான் அறுத்துக் கொல்லமாட்டேனா?' என்று அந்த வாலி பணிந்து தொழுது நின்றான்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
இராம அவதாரமாக நான் அவதரித்து வெற்றி கொண்ட நிலை அறிந்து என் பாதங்களை அந்த வலிமை பொருந்தியவன்(வாலி) சரணடைந்து, 'நன்றியுள்ள திருமாலே, முன்பு நீர் கடலில் அமிழ்தம் கடையும்போது நான் உமக்குக் காவலனாய் இருந்தேன். என்னைத் தாங்கள் ஊழியங்கள் செய்ய ஏவினீர். அவ்வாறு ஏவல் செய்ய ஏவிய மாயவரே, இப்போதும் என்னை ஏவி இருந்தால் பத்துத் தலைகளையுடைய இராவணனின் தலைகளை அடியேனாகிய நான் அறுத்துக் கொல்லமாட்டேனா?' என்று அந்த வாலி பணிந்து தொழுது நின்றான்.
---------------------
அய்யா உண்டு
*கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
நன்றுநன்று மாமுனியே நான் உரைக்கக் கேட்டருள்வாய்
தொண்டு பண்ணி நின்ற துய்ய வானரங்களிலே
வல்ல பெலமுள்ள வாலி இவன் முற்பிறப்பில்
நல்லவனாய் முன்னே நாட்டில் இருக்கையிலே
இராவணனோடே கூடி இராமச் சரத்தால் இறந்தான்
நன்றுநன்று மாமுனியே நான் உரைக்கக் கேட்டருள்வாய்
தொண்டு பண்ணி நின்ற துய்ய வானரங்களிலே
வல்ல பெலமுள்ள வாலி இவன் முற்பிறப்பில்
நல்லவனாய் முன்னே நாட்டில் இருக்கையிலே
இராவணனோடே கூடி இராமச் சரத்தால் இறந்தான்
---------
உரை
---------
உடனே, கிருஷ்ணன், "நல்லது, கேட்டீர், மாமுனியே, நானுரைப்பதைக் கவனமாகக் கேட்பீராக. இவன்(கர்ணன்) முன் யுகத்தில் நல்ல தொண்டு செய்து வந்த தூய்மையான வானரங்களில் அதிக பலம் வாய்ந்த வாலியாவான். இவன் முன் பிறப்பில் நல்லவனாய்த் தன் நாட்டில் வாழ்ந்தான். அப்போது, இராவணனோடு சேர்ந்து தீமை செய்து (சுக்கிரீவன் மனைவியை அபகரித்து) என் அம்பினால் இறந்தான்.
---------------------
அய்யா உண்டு
---------------------
உரை
---------
உடனே, கிருஷ்ணன், "நல்லது, கேட்டீர், மாமுனியே, நானுரைப்பதைக் கவனமாகக் கேட்பீராக. இவன்(கர்ணன்) முன் யுகத்தில் நல்ல தொண்டு செய்து வந்த தூய்மையான வானரங்களில் அதிக பலம் வாய்ந்த வாலியாவான். இவன் முன் பிறப்பில் நல்லவனாய்த் தன் நாட்டில் வாழ்ந்தான். அப்போது, இராவணனோடு சேர்ந்து தீமை செய்து (சுக்கிரீவன் மனைவியை அபகரித்து) என் அம்பினால் இறந்தான்.
---------------------
அய்யா உண்டு
---------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக