விருத்தம்*****
தங்க மணியோ நவமணியோ சலத்தில் விளைந்த தரளமுதோ
சிங்க முடிகள் பெற்றவரோ சீமை அடக்கி ஆண்டவரோ
துங்க வரிசை பெற்றவரோ திருமால் விந்தில் உதித்தவரோ
சங்கம் மகிழ வந்தவரோ சான்றோர் வாழ ராராரோ
*****நடை*****
சந்தோசமாகச் சரசுவதி தாலாட்டி
வெந்தோசம் எல்லாம் விலகவே நீராட்டி
வைகுண்ட மூர்த்தி மாமுனிதம் கைக்கொடுக்க
மைகொண்ட வேதன் மதலைதமை வாங்கி
ஈசர் முதலாய் எல்லோரும் கூடியிருந்து
தங்க மணியோ நவமணியோ சலத்தில் விளைந்த தரளமுதோ
சிங்க முடிகள் பெற்றவரோ சீமை அடக்கி ஆண்டவரோ
துங்க வரிசை பெற்றவரோ திருமால் விந்தில் உதித்தவரோ
சங்கம் மகிழ வந்தவரோ சான்றோர் வாழ ராராரோ
*****நடை*****
சந்தோசமாகச் சரசுவதி தாலாட்டி
வெந்தோசம் எல்லாம் விலகவே நீராட்டி
வைகுண்ட மூர்த்தி மாமுனிதம் கைக்கொடுக்க
மைகொண்ட வேதன் மதலைதமை வாங்கி
ஈசர் முதலாய் எல்லோரும் கூடியிருந்து
---------
உரை
---------
தங்கத்திலான மணியோ, நவமணியோ, மழை நீரினால் விளைந்த முத்தோ, சிங்கக் கிரீடம் பெற்றவரோ, இந்நாட்டை முழுதும் அடக்கி அரசாண்டவரோ, வெற்றிக்குப் பட்டங்கள் பல பெற்றவரோ, திருமாலின் விந்திலிருந்து தோன்றியவரோ, மக்கள் சத்சங்கக் கூட்டம் மகிழ்ச்சி பெற வந்தவரோ, சான்றோரே, நீவிர் நீடூழி வாழ்க! ராராரோ, ராராரோ.
இவ்வாறாகச் சரசுவதி பாடல்கள் பாடித் தாலாட்டி, கொடுமையான தோசங்கள் எல்லாம் நீங்கும்படி நீராட்டித் திருமாலின் கையில் கொடுத்தாள்.
பிறகு, ஈசர்முதல் எல்லாரும் அமர்ந்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------
உரை
---------
தங்கத்திலான மணியோ, நவமணியோ, மழை நீரினால் விளைந்த முத்தோ, சிங்கக் கிரீடம் பெற்றவரோ, இந்நாட்டை முழுதும் அடக்கி அரசாண்டவரோ, வெற்றிக்குப் பட்டங்கள் பல பெற்றவரோ, திருமாலின் விந்திலிருந்து தோன்றியவரோ, மக்கள் சத்சங்கக் கூட்டம் மகிழ்ச்சி பெற வந்தவரோ, சான்றோரே, நீவிர் நீடூழி வாழ்க! ராராரோ, ராராரோ.
இவ்வாறாகச் சரசுவதி பாடல்கள் பாடித் தாலாட்டி, கொடுமையான தோசங்கள் எல்லாம் நீங்கும்படி நீராட்டித் திருமாலின் கையில் கொடுத்தாள்.
பிறகு, ஈசர்முதல் எல்லாரும் அமர்ந்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------
சரசுவதி சான்றோரைத் தாலாட்டுதல்*****
துட்டர் என்னும் பேரைச் சூரசங்காரம் இட்டு
கொட்டமிட்டுக் கோட்டை கொடிவிருது கெட்டிமிக
ஆண்டிருக்கும் மன்னவரோ அச்சுதரின் பாலகரோ
தாண்டி வரம்பெற்றுத் தரணி அரசாண்டவரோ
பாண்டவரோ ஆண்டவரோ பால்வண்ணர் பெற்றெடுத்த
சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ
துட்டர் என்னும் பேரைச் சூரசங்காரம் இட்டு
கொட்டமிட்டுக் கோட்டை கொடிவிருது கெட்டிமிக
ஆண்டிருக்கும் மன்னவரோ அச்சுதரின் பாலகரோ
தாண்டி வரம்பெற்றுத் தரணி அரசாண்டவரோ
பாண்டவரோ ஆண்டவரோ பால்வண்ணர் பெற்றெடுத்த
சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ
---------
உரை
---------
சாணாரைத் துஷ்டன் என்று சொன்னவரைக் கொன்று அழித்து, தேவலோகம் போன்ற கோட்டைகள் இட்டு, அக்கோட்டை மதிலில் விருதுக் கொடி கட்டிப் பெருமையோடு ஆளும் மன்னவரோ; அச்சுதரின் பிள்ளையோ;
எல்லாத் தடைகளையும் தாண்டி வரம் பெற்று நாட்டை அரசாண்டவரோ; பாண்டவரோ; இறையவரோ;
பால்வண்ணர் பெற்றெடுத்த சான்றவரோ;
இக்குழந்தை என்றும் தழைத்து வாழ ராராரோ, ராராரோ.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
சாணாரைத் துஷ்டன் என்று சொன்னவரைக் கொன்று அழித்து, தேவலோகம் போன்ற கோட்டைகள் இட்டு, அக்கோட்டை மதிலில் விருதுக் கொடி கட்டிப் பெருமையோடு ஆளும் மன்னவரோ; அச்சுதரின் பிள்ளையோ;
எல்லாத் தடைகளையும் தாண்டி வரம் பெற்று நாட்டை அரசாண்டவரோ; பாண்டவரோ; இறையவரோ;
பால்வண்ணர் பெற்றெடுத்த சான்றவரோ;
இக்குழந்தை என்றும் தழைத்து வாழ ராராரோ, ராராரோ.
---------------------
அய்யா உண்டு
சரசுவதி சான்றோரைத் தாலாட்டுதல்*****
கல்விக்கு உகந்த கருணாகரர் ஆனவரோ
செல்விக்கு உகந்த சென்னமது கொண்டவரோ
தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிகள் ஆனதற்கும்
மூவர்க்கும் உதவிசெய்ய உதித்துவந்த கற்பகமோ
சென்ற இடமெல்லாம் சிறப்பு வெகுமானமுடன்
மண்டலங்கள் மெய்க்க வாழுகின்ற சாணரோ
சாணாருக்குள்ளே சர்வதுமே அடக்கி
கோணாத மாயன் குருகொடுத்து ஈன்ற கண்ணோ
அறிவும் ஞானத்தோடும் ஆதிபிறவியோடும்
செறியும் கலையோடும் செடம் எடுத்த சாணாரோ
கல்விக்கு உகந்த கருணாகரர் ஆனவரோ
செல்விக்கு உகந்த சென்னமது கொண்டவரோ
தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிகள் ஆனதற்கும்
மூவர்க்கும் உதவிசெய்ய உதித்துவந்த கற்பகமோ
சென்ற இடமெல்லாம் சிறப்பு வெகுமானமுடன்
மண்டலங்கள் மெய்க்க வாழுகின்ற சாணரோ
சாணாருக்குள்ளே சர்வதுமே அடக்கி
கோணாத மாயன் குருகொடுத்து ஈன்ற கண்ணோ
அறிவும் ஞானத்தோடும் ஆதிபிறவியோடும்
செறியும் கலையோடும் செடம் எடுத்த சாணாரோ
---------
உரை
---------
சகல கல்விக்கும் தகுந்த கருணாகரர் ஆனவரோ; நல்ல மனைவிக்கு ஏற்ற பிறவியாக உதித்து வந்தவரோ;
தேவர்களுக்கும் வானவர்களுக்கும், இன்னும் பல செல்வம் பொருந்திய பதிகளுக்கும் மூவர்க்கும், உதவி செய்ய இப்போது உதித்து வந்த கற்பகமரம் போன்றவரோ;
சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பான பட்டங்களைப் பெற்று மண்டலங்கள் எல்லாம் அதிசயிக்கும்படி வாழுகின்ற சாணாரோ;
எல்லாவற்றையும் சாணார் இனத்துக்குள்ளே அடக்கி, நேர்மையான மாயத் திருமால் தந்தையாக நின்று விந்துவைக் கொடுத்துப் பெற்ற கண்மணியோ;
அறிவோடும், நல்ல ஞானத்தோடும், ஆதி பிறப்போடும், பிரகாசிக்கும் சகல கலைகளோடும் உருவெடுத்த சான்றவரோ;
உரை
---------
சகல கல்விக்கும் தகுந்த கருணாகரர் ஆனவரோ; நல்ல மனைவிக்கு ஏற்ற பிறவியாக உதித்து வந்தவரோ;
தேவர்களுக்கும் வானவர்களுக்கும், இன்னும் பல செல்வம் பொருந்திய பதிகளுக்கும் மூவர்க்கும், உதவி செய்ய இப்போது உதித்து வந்த கற்பகமரம் போன்றவரோ;
சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பான பட்டங்களைப் பெற்று மண்டலங்கள் எல்லாம் அதிசயிக்கும்படி வாழுகின்ற சாணாரோ;
எல்லாவற்றையும் சாணார் இனத்துக்குள்ளே அடக்கி, நேர்மையான மாயத் திருமால் தந்தையாக நின்று விந்துவைக் கொடுத்துப் பெற்ற கண்மணியோ;
அறிவோடும், நல்ல ஞானத்தோடும், ஆதி பிறப்போடும், பிரகாசிக்கும் சகல கலைகளோடும் உருவெடுத்த சான்றவரோ;
---------------------
அய்யா உண்டு
அய்யா உண்டு
சரசுவதி சான்றோரைத் தாலாட்டுதல்*****
பூதமது பந்தம் பிடித்து முன்னேதான் வரவே
நாதம் இரட்டை ஊதி நாடாளும் மன்னவரோ
எக்காளம் ஊதி இடம்டம் மானமுடன்
மிக்கான சீமை எங்கும் மேவிவரும் மன்னவரோ
வாரணங்கள் கட்டி வையகத்தைத் தானாண்டு
தோரணங்கள் நாட்டிவைத்த தெய்வத் திருச்சான்றவரோ
தர்மமுடி பெற்றவரோ சாத்திரத்துக்கு ஒத்தவரோ
கர்மமது இல்லாமல் களி கூர்ந்து இருப்பவரோ
உடற்கூறு சத்தி உயிரோடு உதித்துவந்த
சடக்கூறு மூலச் சட்டமது கொண்டவரோ
பூதமது பந்தம் பிடித்து முன்னேதான் வரவே
நாதம் இரட்டை ஊதி நாடாளும் மன்னவரோ
எக்காளம் ஊதி இடம்டம் மானமுடன்
மிக்கான சீமை எங்கும் மேவிவரும் மன்னவரோ
வாரணங்கள் கட்டி வையகத்தைத் தானாண்டு
தோரணங்கள் நாட்டிவைத்த தெய்வத் திருச்சான்றவரோ
தர்மமுடி பெற்றவரோ சாத்திரத்துக்கு ஒத்தவரோ
கர்மமது இல்லாமல் களி கூர்ந்து இருப்பவரோ
உடற்கூறு சத்தி உயிரோடு உதித்துவந்த
சடக்கூறு மூலச் சட்டமது கொண்டவரோ
---------
உரை
---------
பூதங்கள் பந்தம் பிடித்து முன்பாக வர, இரட்டை நாதம் ஊதி வெற்றி முழக்கமிட்டு நாடாளும் மன்னவரோ, எக்காளச் சத்தம் உருவாக்கி, "டம், டம்" ஆன சத்தத்துடன் பரந்த தேசம் எங்கும் சென்று வருகின்ற மன்னவரோ;
யானைகள் கட்டி நாட்டைப் பாதுகாத்து ஆண்டு, பலவகை அலங்காரங்களை உருவாக்கி வைத்த தெய்வத்தன்மை பொருந்திய சான்றோரோ;
அறச் செய்கைக்குரிய கிரீடம் பெற்றவரோ; சாத்திரங்கள்படி நடக்கும் நல்லவரோ; முன்வினைத் தோசம் இல்லாது வாழும் மகிழ்ச்சிக்குரியவரோ;
சக்தியின் உடற்கூறும், உயிரும் பெற்றுப் பிறந்து சகல சாமுத்திரிக இலட்சணங்களும் பெற்றவரோ;
---------------------
அய்யா உண்டு
உரை
---------
பூதங்கள் பந்தம் பிடித்து முன்பாக வர, இரட்டை நாதம் ஊதி வெற்றி முழக்கமிட்டு நாடாளும் மன்னவரோ, எக்காளச் சத்தம் உருவாக்கி, "டம், டம்" ஆன சத்தத்துடன் பரந்த தேசம் எங்கும் சென்று வருகின்ற மன்னவரோ;
யானைகள் கட்டி நாட்டைப் பாதுகாத்து ஆண்டு, பலவகை அலங்காரங்களை உருவாக்கி வைத்த தெய்வத்தன்மை பொருந்திய சான்றோரோ;
அறச் செய்கைக்குரிய கிரீடம் பெற்றவரோ; சாத்திரங்கள்படி நடக்கும் நல்லவரோ; முன்வினைத் தோசம் இல்லாது வாழும் மகிழ்ச்சிக்குரியவரோ;
சக்தியின் உடற்கூறும், உயிரும் பெற்றுப் பிறந்து சகல சாமுத்திரிக இலட்சணங்களும் பெற்றவரோ;
---------------------
அய்யா உண்டு
சரசுவதி சான்றோரைத் தாலாட்டுதல்*****
கொத்து முங்கை ஆபரணம் கொடி விருது பெற்றவரோ
மூலப்பொருள் கண்ட முதல்சாதி ஆனவரோ
தாலம் பால் உண்டு தாம் இருக்கும் மன்னவரோ
நடைக் காவணங்கள் இட்டு நல்ல தீவெட்டமுடன்
படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ
வெள்ளானை மேலேறி வீதி வலம் சுற்றிவந்து
துள்ளாடிச் சிங்காசனம் வீற்றிருப்பவரோ
கொத்து முங்கை ஆபரணம் கொடி விருது பெற்றவரோ
மூலப்பொருள் கண்ட முதல்சாதி ஆனவரோ
தாலம் பால் உண்டு தாம் இருக்கும் மன்னவரோ
நடைக் காவணங்கள் இட்டு நல்ல தீவெட்டமுடன்
படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ
வெள்ளானை மேலேறி வீதி வலம் சுற்றிவந்து
துள்ளாடிச் சிங்காசனம் வீற்றிருப்பவரோ
---------
உரை
---------
முன்கை ஆபரணங்கள் கொத்தாகவும் கொடிவிருதும் பெற்றவரோ;
மூலப்பொருளைக் கண்டறிந்த முதல்சாதி மனிதன் ஆனவரோ;
பனை மரத்துப் பால் உண்டு வாழும் மன்னவரோ;
நடைக் காவணங்கள் இட்டு நல்ல தீவட்டிப் பாதுகாப்புடன் சகலப் படையோடும் வீற்றிருந்து நாட்டை ஆளும் முடி பெற்ற மன்னவரோ;
வெள்ளை யானை மீது ஏறி வீதிகள் தோறும் பவனி சுற்றி வந்து துள்ளி விளையாடிச் சிங்காசனத்தில் வீற்றிருப்பவரோ;
---------------------
அய்யா உண்டு
உரை
---------
முன்கை ஆபரணங்கள் கொத்தாகவும் கொடிவிருதும் பெற்றவரோ;
மூலப்பொருளைக் கண்டறிந்த முதல்சாதி மனிதன் ஆனவரோ;
பனை மரத்துப் பால் உண்டு வாழும் மன்னவரோ;
நடைக் காவணங்கள் இட்டு நல்ல தீவட்டிப் பாதுகாப்புடன் சகலப் படையோடும் வீற்றிருந்து நாட்டை ஆளும் முடி பெற்ற மன்னவரோ;
வெள்ளை யானை மீது ஏறி வீதிகள் தோறும் பவனி சுற்றி வந்து துள்ளி விளையாடிச் சிங்காசனத்தில் வீற்றிருப்பவரோ;
---------------------
அய்யா உண்டு
சரசுவதி சான்றோரைத் தாலாட்டுதல்*****
வைகுண்ட கண்ணோ வரம் பெற்ற மாதவமோ
கைகண்ட வித்தை கருத்து அறிந்த உத்தமரோ
தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ
வங்கம் நிசம் கண்ட மங்காத சான்றவரோ
சிங்கமுகத் தண்டிகையும் சிலம்பு புனைந்த இரத்தினமும்
சிங்கக் கொடி விருதும் சங்கு இரட்டை பெற்றவரோ
முத்துச் சிலாப முதலாளி ஆனவரோ
வைகுண்ட கண்ணோ வரம் பெற்ற மாதவமோ
கைகண்ட வித்தை கருத்து அறிந்த உத்தமரோ
தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ
வங்கம் நிசம் கண்ட மங்காத சான்றவரோ
சிங்கமுகத் தண்டிகையும் சிலம்பு புனைந்த இரத்தினமும்
சிங்கக் கொடி விருதும் சங்கு இரட்டை பெற்றவரோ
முத்துச் சிலாப முதலாளி ஆனவரோ
---------
உரை
---------
வைகுண்டத்தின் கண்களோ, சகல வரமும் பெற்ற மாதவம் ஆனவரா; தாம் படித்த வித்தையின் உண்மைக் கருத்தை அறிந்த உத்தமரோ; தங்கத்தினால் ஆன முடி பெற்றவரோ; திருமாலின் சங்குக்கும் திருமுடிக்கும் வாரிசான மன்னவரோ; மெய்க் கருத்தின் உண்மையைக் கண்டு அழியாத சான்றோரோ, சிங்கமுகச் சிவிகையும், இரத்தினத்தால் புனையப்பட்ட சிலம்புகளும், சிங்கக்கொடி விருதும், இரட்டைச்சங்கு பெற்றவரா; முத்துச் சிலாப முதலாளி ஆனவரோ;
---------------------
அய்யா உண்டு
---------------------
உரை
---------
வைகுண்டத்தின் கண்களோ, சகல வரமும் பெற்ற மாதவம் ஆனவரா; தாம் படித்த வித்தையின் உண்மைக் கருத்தை அறிந்த உத்தமரோ; தங்கத்தினால் ஆன முடி பெற்றவரோ; திருமாலின் சங்குக்கும் திருமுடிக்கும் வாரிசான மன்னவரோ; மெய்க் கருத்தின் உண்மையைக் கண்டு அழியாத சான்றோரோ, சிங்கமுகச் சிவிகையும், இரத்தினத்தால் புனையப்பட்ட சிலம்புகளும், சிங்கக்கொடி விருதும், இரட்டைச்சங்கு பெற்றவரா; முத்துச் சிலாப முதலாளி ஆனவரோ;
---------------------
அய்யா உண்டு
---------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக