ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கர்ணனுக்கு மோட்சமும் வியாசர் சந்தேகமும்*****
முறை செய்து கர்ணனுக்கு முத்தி மோட்சம் கொடுக்க
மறை தேர்ந்த மாயன் வந்தார் அவன் அருகே 
அப்போது வேதவியாசர் அவர் அங்குவந்து
செப்போடு ஒத்த திருமாலோடு ஏதுரைப்பார்
பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட
ஆவிக்கு மோட்சம் அருளுவதோ மாயவரே
என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பார் எம்பெருமாள்
---------
உரை
---------
இவ்வாறு எல்லாவிதமான விதிமுறைகளையும் செய்யக் கூறி விட்டுக் கர்ணனுக்கு மோட்சம் கொடுக்க வேண்டுமென்று வேத நாயகனாகிய கிருஷ்ணன், கர்ணனின் அருகே வந்தார். அப்போது வேதவியாசர் அங்கு வந்து, கருஞ்சிவப்பு நிறத்தையொத்த கிருஷ்ணனைப் பார்த்து, "பாவிகளுடன் கூடிப் போர் செய்த கர்ணனுடைய உயிருக்கு மோட்சபதவி அருளுவது ஏன்? தயவு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன், மாயவரே" என்று சந்தேகம் கேட்டார்.
---------------------
அய்யா உண்டு 




முறை செய்து கர்ணனுக்கு முத்தி மோட்சம் கொடுக்க
மறை தேர்ந்த மாயன் வந்தார் அவன் அருகே 
அப்போது வேதவியாசர் அவர் அங்குவந்து
செப்போடு ஒத்த திருமாலோடு ஏதுரைப்பார்
பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட
ஆவிக்கு மோட்சம் அருளுவதோ மாயவரே
என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பார் எம்பெருமாள்
---------
உரை
---------
இவ்வாறு எல்லாவிதமான விதிமுறைகளையும் செய்யக் கூறி விட்டுக் கர்ணனுக்கு மோட்சம் கொடுக்க வேண்டுமென்று வேத நாயகனாகிய கிருஷ்ணன், கர்ணனின் அருகே வந்தார். அப்போது வேதவியாசர் அங்கு வந்து, கருஞ்சிவப்பு நிறத்தையொத்த கிருஷ்ணனைப் பார்த்து, "பாவிகளுடன் கூடிப் போர் செய்த கர்ணனுடைய உயிருக்கு மோட்சபதவி அருளுவது ஏன்? தயவு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன், மாயவரே" என்று சந்தேகம் கேட்டார்.
---------------------
அய்யா உண்டு 



துரியோதனனுக்கு நடுத்தீர்ப்பு*****
முன்னே உனக்கு உற்ற பிறப்பு ஆறதிலும்
என்னை நினைப்பு எள்ளளவும் நம்பவில்லை 
ஏழாம் பிறப்பதிலும் என்னை நினையாது இருந்தால்
பாழாவாய் மேலும் பகை இல்லை என்றனக்கு
என்று திருமால் இயம்பித் துரியோதனனை
அன்று அவர் கொன்று ஐவரையும் தாம் வருத்திக்
கர்மச் சடங்கு கழிக்க விடைகொடுத்தார்
தர்மமுள்ள கர்ணனுக்குச் சாத்திரத்தில் உள்ளமுறை
எல்லாச் சடங்கும் இருவருக்கும் நூற்றுவர்க்கும்
உல்லாசமுள்ள தர்மர் ஓக்க முறை செய்தாராம்
---------
உரை
---------
(கிருஷ்ணர் துரியோதனனிடம்...)உனது முன் பிறப்பு ஆறிலும் என்னைப் பற்றிய மெய்யறிவு உண்டாகியும் உன் ஆணவத்தால் என்னைச் சிறிதளவுகூட நம்பவில்லை. இனி வரும் ஏழாவது பிறப்பிலும் என்னை ஒரு நினைவின்கண் நினையாது இருந்தால் நீ நரகக் குழிக்கே செல்லுவாய். அதன் பிறகு, எனக்குப் பகை இருக்காது" என்றார்.
இவ்வாறாகத் திருமால் கூறித் துரியோதனனைக் கொன்று விட்டு, பஞ்ச பாண்டவர்களை வரவழைத்துச் செய்ய வேண்டிய கர்மச் சடங்கு முறைகளைச் செய்யச் சொல்லி விடை கொடுத்தார். அதன்படி, அறச்செயல்கள் செய்து வந்த கர்ணன், தீய துரியோதனன் ஆகிய இருவருக்கும், கௌரவர்களுக்கும், சாத்திரத்திலுள்ள முறைப்படி சகலவிதமான இறுதிச் சடங்கு முறைகளை, மகிழ்வு பொருந்திய தருமரும் ஏனையோரும் சேர்ந்து செய்ய ஆரம்பித்தனர்.
---------------------
அய்யா உண்டு 


துரியோதனனுக்கு நடுத்தீர்ப்பு*****
தண்டு கொண்டே அடித்த தமிழ் வீமன் அல்லாது
இன்றும் உன்னால் ஏலாது இடையா போ என்றனனே 
அப்போது மாலும் அதிக கோபம் வெகுண்டு
துப்புரவுகள் கெட்ட தீயனுக்கு அங்கே எதுரைப்பார்
உன்னை இன்னும் இந்த உலகில் ஒரு பிறவி
சின்னப் பின்னமாகச் சிரசு ஒன்றாய்த்தான் படைத்து
அறிவு புத்தியோடும் ஆணுவங்கள் தம்மோடும்
செறியும் கலையோடும் சிறப்போடும் தான்படைத்து
என்பேரில் அன்பு இருக்க வெகுசாத்திரமும்
தன்போதம் அறியத்தான் படைப்பேன் கண்டாயே
---------
உரை
---------
உடனே, துரியோதனன் "தண்டாயுதம் கொண்டு அடித்த பீமன்தான் என்னைக் கொன்றது; இன்றுகூட உன்னால் என்னைக் கொல்ல முடியாது. இடையனே, தூரப் போ" என்று இகழ்வாகக் கூறினான். அத்தருணத்தில் கிருஷ்ணன் அதிகமான கோபம் கொண்டு, ஒழுக்கம் கெட்ட தீயவனான துரியோதனனிடம், "துரியோதனா, உன்னை இன்னும் இந்த உலகத்தில் சிறிய அளவுள்ள தலையை உடையவனாகவும் அறிவு புத்தி உள்ளவனாகவும், பலவித இன்பத்துக்குரிய பொருளோடும். அதிகமான பல கலைகளை அறிந்தவனாயும், இன்னும் பல சிறப்போடும், என்னை அறிந்து கொள்வதற்காகப் பல சாத்திரங்களும், அதன்மூலம் உன் மெய்யறிவை அறியும் வழிவகைகளையும் ஏற்படுத்தி நான் உன்னை இவ்வுலகில் படைப்பேன், அறிந்து கொள்வாயாக.
---------------------
அய்யா உண்டு
---------------------




துரியோதனனுக்கு நடுத்தீர்ப்பு*****
அப்போது மாயன் அரவக் கொடியோன் இடத்தில்
தப்பாமல் வார்த்தை ஒன்றுதான் கேட்கப் போயினாரே 
முன்னே பிறப்பில் முடி இலங்கை ஆண்டிருந்தாய்
தென்னன் இராவணனாய்ச் சிரசு பத்தாய் நீ இருந்தாய்
அப்போது நீதான் அநியாயம் செய்ததனால்
செப்போடு ஒத்த ஸ்ரீராமனாய் நான் தோன்றிப்
பத்துச் சிரசு அறுத்துப் பார் மீதிலே கிடத்தி
உற்று ஒருவசனம் உரைத்தேன் நான் உன்னிடத்தில்
தம்பியால் என்னைச் சரம் அறுத்தாய் அல்லாது
எம் பிராணன் வதைக்க ஏலாது என்றனையே
தம்பி ஒரு நூறோடே தான் படைத்து உன்னையுந்தான்
கொம்பில் ஓர்ஆளை விட்டுக் கொன்றேனே உன்னையுந்தான்
என்றுரைக்கப் பாவி இகழ்த்துவான் அப்போது
---------
உரை
---------
அப்பொழுது கிருஷ்ணன், பாம்புக் கொடியையுடைய துரியோதனன் முன் பிறவியில் சொன்ன பிழையான சில மொழிகளை மறந்து விடாமல் அவன் அருகில் சென்று "துரியோதனா, நீ முன் பிறப்பில் பத்துத் தலைகளுடைய இராவணனாய், அரசனாக முடிதரித்துத் தெற்கே காணும் இலங்கையை அரசாண்டு கொண்டிருந்தாய், அச்சமயம் நீ பல அநியாயங்களைச் செய்த காரணத்தால் கருஞ்சிவப்பு நிறத்தையுடைய ஸ்ரீ இராமனாய் நான் தோன்றினேன். உன் பத்துத் தலைகளை அறுத்து உன்னைப் பூமியின் மேல் கிடத்தி உன்னிடம் 'உன் ஆணவத்தால் நான் உன்னைக் கொன்றேன்' என்று சொன்னேன். அதற்கு நீ உன்னுடைய தம்பியின் உதவியால் உன் மூச்சை நிற்கச் செய்தேன் என்றும், இல்லாவிட்டால் என்னால் உன்னைக் கொல்ல முடியாது என்றும் கூறினாய். எனவே இப்போது நூறு சகோதரர்களில் உன்னையும் ஒருவனாகப் படைத்துத் தண்டாயுதம் வைத்திருந்த பீமன் என்னும் ஓர் ஆளைவிட்டு உன்னைக் கொன்று விட்டேன்" என்றார்.
---------------------



வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
திலதமுள்ள மாயன் செயவீமனை நோக்கி
வலது தொடைதனிலே மாயன் கண்காட்டிடவே 
அடித்தானே வீமன் அதுதான் குறி எனவே
துடித்தான் கடாபோல் துரியோதனன் விழுந்து
மூடற்ற மாமரம்போல் முறிந்து கீழ்தான் விழுந்து
கூடற்ற உயிர்போல் குலைந்து கீழ் வீழ்ந்தனனே
---------
உரை
---------
நெற்றித் திலகம் அணிந்த கிருஷ்ணர் வெற்றி சூடும் வீமனை நோக்கித் துரியோதனன் வலது தொடையில் அவன் உயிர்நிலையுள்ளது என்பதைப் புரியும்படி கண்களால் சைகை காட்டினார்.
உடனே, வீமன் தனது தண்டாயுதத்தால் பலமாகத் துரியோதனன் வலது தொடையைக் குறி பார்த்து அடித்தான். அடிபட்ட துரியோதனன் வெட்டுப்பட்ட கடாபோன்று துடித்து, மூடற்ற மாமரம் முறிந்து கீழே விழுவதுபோலும், உயிரற்ற உடம்புபோலும் நிலை குலைந்து கீழே விழுந்தான்.
---------------------
அய்யா உண்டு
---------------------




வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
கள்ளன் கௌசலமாய்க் கபடு உரைத்த ஞாயம் எல்லாம்
எள்ளளவு போலே இசையாத வீமனுக்கு 
மெய் உரைத்தான் என்று மேலான போர்வீமன்
கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே
அடிக்கவே வீமன் அலங்காமல் மற்றோனும்
திடுக்கமுடனே சென்று அவன் வீமன்பேரில்
மாறி அவன் அடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன்
தேறியே மாயவரைச் சிந்தைதனிலே நினைக்க
---------
உரை
---------
கள்ளனான துரியோதனன் சூழ்ச்சியுடன் பொய்யாகக் கூறிய சத்திய மொழி முழுவதிலும் எள்ளளவுகூட உண்மையை வீமனுக்குக் கூறவில்லை என்பதை அறியாத வீமன் துரியோதனன் உண்மைதான் உரைத்தானென்று எண்ணி அவன் இடது புறத்தில் தனது தண்டாயுதத்தால் ஓங்கிப் பலமாக அடித்தான். அவ்வாறு வீமன் அடித்தும் துரியோதனன் சிறிதுகூட வேதனையினால் அசையவில்லை.
இவ்வாறு திடமுடன் இருந்த துரியோதனன் சென்று வீமன் உயிர் நிலைகளில் அடித்தான். இவ்வாறு அடித்தவுடன் வீமன் கலக்கமுற்றுச் சோர்வுற்றான். பிறகு ஒருவாறு தேறி, கிருஷ்ணனை மனதில் நிறுத்தித் தியானித்தான்.
---------------------
அய்யா உண்டு 


வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
வாயால் சபதமிட்டு வகுத்தே பொருவோம் என்று
கட்டான கள்ளன் கசடன் வெகுகெடும்பன் 
துட்டாளன் ஆன துரியோதனன் உரைப்பான்
இத்தனை நேரம் இருபேரும் சண்டை இட்டு
புத்தி இல்லாவண்ணம் பொருதோமே வம்பதிலே
உன்பலமும் உன்னுடைய உயிர்நிலையும் நீ உரைத்தால்
என்பலமும் உன்னோடே இயம்புகிறேன் என்றுரைத்தான்
அப்போது வீமன் அவன் நிலைகள் அத்தனையும்
தப்பாமலே உரைத்தான் சகலோர் அறிந்திடவே
கேட்டுத் துரியோதனனும் கேளு நீ என்பலங்கள்
தீட்டுகிறேன் என இடது செய்ய புறம் என்றுரைத்தான்
---------
உரை
---------
எனவே, மிகவும் கள்ளத்தனமுள்ள கசடனும், மிகுந்த கெடும்பனும் துஷ்டனுமான துரியோதனன், "நாம் இருவரும் இவ்வளவு நேரமாகச் சண்டையிட்டு வம்பாகப் புத்தி இல்லாமல் போர் புரிந்தோம். இனி நாம் இருவரும் வாயால் பேசி ஒரு முடிவெடுத்துப் போர் புரிவோம். உன்னுடைய பலத்தையும், உயிர் நிலையையும் நீ கூறினால் என்னுடைய பலத்தையும், உயிர்நிலையையும், உனக்கு நான் வெளிப்படுத்துவேன்" என்று கூறினான்.
உடனே, வீமன் அதைச் சம்மதித்து எல்லாரும் அறியும்படி தன் உயிர்நிலை சக்திகளைத் தவறாமல் எடுத்துரைத்தான்.
இதைக் கேட்டுத் துரியோதனன் "வீமனே, நான் சொல்வதை நீ கவனமாகக் கேள். என்னுடைய உயிர்ப்பலங்கள் அத்தனையும் என் உடம்பின் இடது புறத்திலேதான் உள்ளது" என்று கூறினான்.
---------------------
அய்யா உண்டு
---------------------



வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
துரியோதனன் அடிக்கத் துடி வீமன் சாயாமல்
மரியாதை வீமன் மாறி அவன் அடிக்க 
அடிக்க அவன் பிடிப்பான் அப்படியே சண்டை இட்டு
சாயா விதத்தைத்தான் அறிந்து இருபேரும்
---------
உரை
---------
துரியோதனன் அடிக்கும்போது அதைத் துடிப்பு மிக்க வீமன் தளர்வுறாது தடுத்தும், மரியாதையான வீமன் அதற்குப் பிரதிபலனாக அடிக்கும்போது அந்த அடியைத் துரியோதனன் பிடித்துத் தப்பித்தும் யுத்தம் செய்தனர். இப்படியே இருவரும் ஒருவருக்கு ஒருவர் தோல்வி அடையாத நிலையை உணர்ந்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------



*வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
துரியோதனன் அடிக்கத் துடி வீமன் சாயாமல்
மரியாதை வீமன் மாறி அவன் அடிக்க 
அடிக்க அவன் பிடிப்பான் அப்படியே சண்டை இட்டு
சாயா விதத்தைத்தான் அறிந்து இருபேரும்
---------
உரை
---------
துரியோதனன் அடிக்கும்போது அதைத் துடிப்பு மிக்க வீமன் தளர்வுறாது தடுத்தும், மரியாதையான வீமன் அதற்குப் பிரதிபலனாக அடிக்கும்போது அந்த அடியைத் துரியோதனன் பிடித்துத் தப்பித்தும் யுத்தம் செய்தனர். இப்படியே இருவரும் ஒருவருக்கு ஒருவர் தோல்வி அடையாத நிலையை உணர்ந்தனர்.
---------------------
அய்யா உண்டு 


*வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
வேதா சிவமும் வெம்மருண்டு தாம்பதற
நாதாந்தம் ஓதும் நன்மறையோர் தாம் பதற 
துரியோதனன் போரும் செய வீமன்தான் போரும்
எரியோடு எரிதான் எதிர்த்துப் பொருதாற் போல்
ஒண்ணுக்குள் ஒண்ணு ஒல்கிப் புறம் சாயாமல்
மண்ணும் விண்ணும் அதிர மண்டி யுத்தம் இட்டார்
---------
உரை
---------
திருமாலும் சிவமும் இந்த அதிர்ச்சி ஏன்? என்று பயந்து பதறினார்கள் நாதாந்த வேதத்தை ஓதுகின்ற பிரம்மாவும் பதறினார். துரியோதனனின் போரும், முழு வீரமுள்ள வீமன் போரும் தீப்பந்தத்தோடு தீப்பந்தம் எதிர்த்து மோதியதைப் போன்று இருந்தது.
ஒருவருக்கு ஒருவர் தளர்வுற்றுத் தோல்வியுறாமல் பூலோகமும் வானலோகமும் அதிரும் அளவில் மண்டியிட்டு யுத்தம் செய்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------


*வீமன் துரியோதனன் போரும் முடிவும்*****
மண் விண் அதிரும் வானமதுதான் அதிரும்
திண் திண் எனப் பூமி தொம் தோம் என அதிரும் 
மலைகள் அசைந்து மடமட என ஓசையிட
கலைகள் கரிகள் கதறி மிகஓட
அலைகள் சுவறி அங்கும் இங்கும் ஓடிடவே
இலைகள் உதிர்ந்து இடிந்து விழும் மாமரங்கள்
தூள் எழும்பிச் சூரியனைத் தோன்றாமலே மறைக்க
வேழ் எழும்பிக் காட்டில் விழுந்து அலறி ஓடிடவே
தவமுனிவர் நிஷ்டைதான் நெகிழ்ந்து தட்டழிந்து
திசை மாறித் திக்கில் திரிந்து அலைந்து போயினரே
---------
உரை
---------
வானலோகமும், பூலோகமும் அதிர, வானம்கூட அதிர்ந்தது. பூமி 'திண்திண்' எனவும், 'தெய்' 'தோம்' எனவும் அதிர்ந்தது. மலைகள் அசைந்து 'மடமட' என ஓசை இட்டன. இந்த அதிர்ச்சியால் கலைமான்களும் யானைகளும் கதறிக் கொண்டு விரைவாக ஓடின. கடல் அலைகள் சிதறி ஓடின. அங்குள்ள பெரிய பெரிய மரங்களின் இலைகள் உதிர்ந்து முறிந்து விழுந்தன. போர்க் களத்திலிருந்து தூள் கிளம்பிச் சூரியனைத் தோன்றாமல் மறைத்தது. யானைகள் எழும்பிக் காட்டில் அலறி விழுந்து எழுந்து ஓடின. தவத்தில் இருந்த முனிவர்கள் தவம் திடீரென நழுவி அழிந்த காரணத்தால் தாம் இருந்த இடத்தின் திசை தெரியாமல் கலங்கி அலைந்து திரிந்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------


துரியோதனனும் வீமனும் போருக்குப் புறப்படுதல்*****
விசையன் பரிநகுலன் வெற்றிச் சகாதேவனையும்
இசையொத்த தர்மரையும் இன்று அகல நில்லும் என்று 
வீமனையும் கூட்டி வெளியில் அரி வந்திடவே
காமக் கனல் மீறிக் கரியோன் எழுந்தது போல்
வந்தானே பாவி வணங்கா முடியோனும்
சந்தானமான தமிழ் வீமன்தான் அறிந்து
எதிர்த்தார் இருவர் எனக்கு எனக்கு என்றேதான்
செருத்தான வலிமை செய்வது கேள் அம்மானை
---------
உரை
---------
அருச்சுனன், சிறப்பையுடைய நகுலன், வெற்றியையுடைய சகாதேவன், இசையொத்த தருமர் ஆகியோரைப் பார்த்து, "இன்று நீங்கள் போருக்கு வராமல் தள்ளி நில்லுங்கள்" என்று கூறினார். பிறகு, கிருஷ்ணன் வீமனைக் கூட்டிக் கொண்டு வெளியே வரவும், காமவெறி பிடித்த யானை எழுந்து வந்தது போல, துரியோதனன் என்னும் பாவியாகிய வணங்கா முடியோனும் போர்க்களத்துக்கு வந்தான். நல்ல மகனான வீமனும், துரியோதனனும் ஒருவரை ஒருவர் "எனக்குதான் வெற்றி, எனக்குதான் வெற்றி" என்று கூறிப் போரிட்ட வீரத் தன்மை பற்றி இனிக் கூறுகிறேன் கேள்.
---------------------
அய்யா உண்டு 


*துரியோதனனும் வீமனும் போருக்குப் புறப்படுதல்*****
வாறான் படைக்கெனவே வாள்வீமனை அழைத்து
உன்றனக்கு நல்ல உறுவேட்டை இன்று அடவா 
என்றனக்கு இன்றுமுதல் இளைப்பாறலாம் அடவா
வண்ணமகள் தனக்கு மயிர் முடித்தல் இன்று அடவா
எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவும் இன்று அடவா
என்று அந்த வீமனுக்கு இசைந்த போர்க் கோலம் இட்டு
வண்டு சுற்றும் மார்பனுக்கு வரிசை மிகக்கொடுத்து
வீமனுட தண்டத்துக்கு விசைமால் விசை கொடுத்து
போம் எனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து
---------
உரை
---------
பிறகு ஒளி படைத்த வீமனை அழைத்து, "வீமனே, உனக்கு இன்று நல்ல பெரிய வேட்டையாகும். இன்றுமுதல் எனக்கு வேலை முடிந்து இளைப்பாறலாம். அழகு மகளான திரௌபதி இரத்தம் விட்டுத் தனது கூந்தலை முடிப்பது இன்றுதான். எல்லாவிதமான துன்ப எண்ணங்களுமற்றுத் தருமர் தெளிவாக இருப்பது இன்றுதான். எனவே, அடே வீமா, "நீ வருவாயாக" என்று வீமனுக்குப் பிடித்தமான போர்க்கோலம் இட்டு, வண்டுகள் சுற்றும் மணம் பொருந்திய மார்பையுடைய வீமனுக்குப் பல பட்டப்பெயர்கள் சூட்டி, வீமனுடைய தண்டாயுதத்துக்கு விசைசக்தி கொடுத்து, விசைமாலாகிய கிருஷ்ணர் வீமனைப் போருக்குப் போக விடை கொடுத்தார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக