ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வைகுண்டர் அருளிய திருநாமம் தினமும் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

   திருநாமம் ,  சுவாமிதோப்பு பதி  அடியில் உள்ள தூய வெள்ளை நிற திருமண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது . இதையே அனைத்து அய்யா வைகுண்ட பதிகளிலும், தாங்கல்களிலும் பயன்படுத்தப்படுகிறது .


  அய்யா வழி மக்கள்  நெற்றி புருவங்களின் மத்தியில் ‌ ஜோதி வடிவில் திருநாமம்  இடுகின்றனர்.


       அய்யா வைகுண்டர்  பள்ளியறையை வணங்கிய பக்தர்கள் ,  பள்ளியறையின் இடது பக்கத்தில் நிற்கின்ற பணிவிடை  பிள்ளைகளிடம் சுருளைக் கொடுத்து "அய்யாவுக்கு அன்பாக தரப்படுகிறது'' என்று கூறுகின்றனர் .

      பின்னர் பணிவிடைப் பிள்ளைகள் பக்தர்களுக்கு திருநாமம் இட்டு இனிமம் வழங்குகின்றனர் .



முற்காலத்தில் சில கோவில்களில் திருநீற்றை பூசிவிடுவது தீண்டாமையாக கருதப்பட்டது . இதை மாற்றக் கருதிய அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு "தொட்டு திருநாமம்'' சாத்த அறிவுறுத்தினார் .


எனவே , அனைத்து அய்யா வைகுண்டரின் பதிகளிலும், தாங்கல்களிலும் பணிவிடைப் பிள்ளை பக்தர்களுக்கு "தொட்டு திருநாமம்'' சாத்துகின்றனர் . 


அய்யா வைகுண்டர் அருளிய திருநாமம் தினமும் அணிவதன் மூலம் 



 1 . நாம் வாழ்வில் மேன்மை உண்டாகும்.
2. தீராத நோய்கள் குணமாகும் 
3 . தீயசக்திகள் நம்மை விட்டு அகலும்
4 . தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீரும் .
5. நேர்மை , உண்மை , வீரம் , அன்பு முதலான குணங்கள் வளரும் .


   இத்தகைய சிறப்புகளைத் தருகின்ற திருநாமத்தை , தினமும் நம் நெற்றியில்  அணிவோம்  !

அய்யா வைகுண்டர் அருள் பெறுவோம் !

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக