ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யாவிற்கு ஏன் சுருள் செய்கிறோம்

  வெற்றிலை , பாக்கு , பழம் வைத்து அய்யாவை வணங்குவது மரபு.

        வெற்றிலை , நோயில்லமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

      பாக்கு செல்வம் கிடைக்க வழிவகுக்கிறது. பாக்கு வைத்து இறைவனை வணங்கினால் நமக்கு குறைவற்ற செல்வம் கிடைக்கும்.

      வாழைப்பழம் பாவ புண்ணிய விடுதலையை குறிக்கும். எனது இறைவா , மீண்டும் பிறவாத நிலையைக் கொடு என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.

     அது மட்டுமல்ல தேங்காய் , வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

     மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு , கொட்டையைப் போட்டால். அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால் , தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது . முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முனைக்கும்.

      அதுபோல , வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.

         அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக , நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினை பின் பற்றி வருகிறோம்.

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக