அய்யா வைகுண்டர் கலி அரசனின் சிறை கொடுமைகளை வென்று சாமிதோப்பு வந்த பின்னால் சான்றோர் மக்களை துவையல் தவசிற்க்கு அனுப்ப மனதில் நினைத்தார்.
உடனே அய்யாவின் விருப்ப படியே சான்றோர்கள் தங்கள் , வீடு, ஆடு, மாடு , சொத்து எல்லாவற்றையும் விற்று விட்டு அய்யாவை நாடி சென்றனர். அவர்களை கண்டவுடன் அய்யா வாகை பதிக்கு சென்று தவத்தை தொடங்க உத்தரவிட்டார்.
அந்த துவையல் தவம் என்பது என்னவென்றால் மூன்று நேரம் கடலில் உடுத்த துணியோடு குளித்து துவைத்து மதியம், மாலை இறைவனை தொழுது , கடல் நீரை மட்டுமே குடித்து, கடல் நீரில் மதியம் ஒரு நேரம் மட்டும் அன்னம் சமைத்து அதனை கடல் மணல் பரப்பிலிட்டு உண்ண வேண்டும். காலையிலும் மாலையிலும் உகபடிப்பை ஓதவேண்டும். மதியம் உச்சி பாட வேண்டும்.
இந்த தவத்திற்கு வந்தவர்கள் யார் யார் தெரியுமா? குழந்தைகள், வயோதிகர்கள் , இளைஞர்கள் , மற்றும் கருவுற்ற பெண்கள் என எந்த வித பாகு பாடுமின்றி அனைத்து தரப்பினரும் தவத்தில் கலந்து கொண்டனர்.
ஆறு மாதங்கள் வாகை பதியில் தவம் இருந்த பின்னால் அன்புக்கொடி மக்களை , அய்யா வைகுண்டர் முட்டப்பதிக்கு சென்று தவம் இருக்க பணித்தார். சொற்பனத்தின் மூலம் இந்த கட்டளை கொடுக்கப்பட்டது.
துவையல் தவத்தோர் முட்டபதி சென்று உற்சாகத்துடன் தவத்தை மேற்கொண்டனர். உலகத்தோர் மட்டுமன்றி எல்லா சாதி மக்களும் அவர்களை கண்டு பொறமை கொள்ளும் அளவிற்கும், போற்றபடும் அளவிற்கும் அவர்களின் வாழ்க்கை முறையும் , ஒழுக்கமும் , பக்தியும் , தவமும் சிறப்பாக அமைந்தது.
கடல் நீரில் துவைக்கப்பட்ட உடைகள் பட்டு துணிகளை விட பளபளப்பாக மின்னின. உடை, உடல், மட்டும் துவைக்கபடாமல், கலியென்னும் அழுக்கு நீங்கபெற்று, புத்தி மற்றும் மனம் அனைத்தும் துவைக்கபட்டன. சுத்தமாக்கப்பட்டன . எனவே தான் இது துவையல் தவசு என்ற பெயர் பெற்றது.
அய்யா உண்டு
உடனே அய்யாவின் விருப்ப படியே சான்றோர்கள் தங்கள் , வீடு, ஆடு, மாடு , சொத்து எல்லாவற்றையும் விற்று விட்டு அய்யாவை நாடி சென்றனர். அவர்களை கண்டவுடன் அய்யா வாகை பதிக்கு சென்று தவத்தை தொடங்க உத்தரவிட்டார்.
அந்த துவையல் தவம் என்பது என்னவென்றால் மூன்று நேரம் கடலில் உடுத்த துணியோடு குளித்து துவைத்து மதியம், மாலை இறைவனை தொழுது , கடல் நீரை மட்டுமே குடித்து, கடல் நீரில் மதியம் ஒரு நேரம் மட்டும் அன்னம் சமைத்து அதனை கடல் மணல் பரப்பிலிட்டு உண்ண வேண்டும். காலையிலும் மாலையிலும் உகபடிப்பை ஓதவேண்டும். மதியம் உச்சி பாட வேண்டும்.
இந்த தவத்திற்கு வந்தவர்கள் யார் யார் தெரியுமா? குழந்தைகள், வயோதிகர்கள் , இளைஞர்கள் , மற்றும் கருவுற்ற பெண்கள் என எந்த வித பாகு பாடுமின்றி அனைத்து தரப்பினரும் தவத்தில் கலந்து கொண்டனர்.
ஆறு மாதங்கள் வாகை பதியில் தவம் இருந்த பின்னால் அன்புக்கொடி மக்களை , அய்யா வைகுண்டர் முட்டப்பதிக்கு சென்று தவம் இருக்க பணித்தார். சொற்பனத்தின் மூலம் இந்த கட்டளை கொடுக்கப்பட்டது.
துவையல் தவத்தோர் முட்டபதி சென்று உற்சாகத்துடன் தவத்தை மேற்கொண்டனர். உலகத்தோர் மட்டுமன்றி எல்லா சாதி மக்களும் அவர்களை கண்டு பொறமை கொள்ளும் அளவிற்கும், போற்றபடும் அளவிற்கும் அவர்களின் வாழ்க்கை முறையும் , ஒழுக்கமும் , பக்தியும் , தவமும் சிறப்பாக அமைந்தது.
கடல் நீரில் துவைக்கப்பட்ட உடைகள் பட்டு துணிகளை விட பளபளப்பாக மின்னின. உடை, உடல், மட்டும் துவைக்கபடாமல், கலியென்னும் அழுக்கு நீங்கபெற்று, புத்தி மற்றும் மனம் அனைத்தும் துவைக்கபட்டன. சுத்தமாக்கப்பட்டன . எனவே தான் இது துவையல் தவசு என்ற பெயர் பெற்றது.
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக