ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வழியில் ஆணும் பெண்ணும்

 உலகில் பல இறை வழிபாட்டு முறைகள் இருக்கிறது. ஆனால், உலகின் சிறந்த இறை வழிபாட்டு முறை நம், அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழி வழிபாட்டு முறை தான். இங்குதான் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்.

        அய்யா வைகுண்டர் தம் அவதார காலத்தில் நிகழ்ந்திய 6 ஆண்டுகள் தவத்தில் கடைசி 2 ஆண்டுகள் தவம் பெண் அடிமை  தீர்வதற்கு தான் செய்தார்.


      " ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆசாரம் செய்திருங்கோ "

                                              - அய்யா வைகுண்டர்


              ( ஆசாரம் - இறை வழிபாட்டு )


        ஆணும் பெண்ணும் சேர்ந்து இறை வழிபாடு செய்திருங்கோ என நம் அய்யா வைகுண்டர் நமக்கு அறிவுரை கூறியுள்ளார்.


          அய்யா வழியில் ஆண் , பெண் முதலான எவ்வித வேறுபாடும் இன்றி கோவில் பள்ளியறை வரை சென்று வழிபடலாம்.

            அய்யா வழியில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்.

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக