உருவம் அற்றவராக வழிபடும் இடத்தில் அவருக்கு பின்னால் கண்ணாடி இருக்கும், அதன் தத்துவம் அய்யாவை வணங்கும்போது நமது உருவம் அதில் தெரியும்.
• நீ தான் நான், நான் தான் நீ என்று இறைவன் சொன்ன தத்துவத்தை குறிக்கின்றது.
• உன்னுள்ளே நான் (இறைவன்) இருக்கிறேன் என்ற த்ததுவத்தை குறிக்கின்றது.
• கலி என்னும் மாயை நம்மை பற்றிக் கொள்ளாமல் உள்ளத்தை கண்ணாடி போல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை குறிக்கின்றது.
• உன்னிடத்தில் இருந்து பிரதிபலிக்கும் எண்ணமும் செயலும் மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக அமைய வேண்டும் என்பதை குறிக்கின்ற்து.
• அய்யா வைகுண்ட பரம்பொருளை நாடிவரும் பக்தர்கள் எல்லோரும் ஜாதி மதத்தை மறந்து உயர்ந்தோர் தாழ் தோர் என்ற வேறுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சமத்துவத்தை குறிக்கின்றது.
அய்யாவினை வழிபடும் ஸ்தலங்கள் பதிகள் என அழைக்கப்படுகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக