திருநாமம்
அன்புக்கொடி மக்கள் வெள்ளை நிற மண்ணை எண் ஒன்றின் வடிவில் நேராக நெற்றியில் அணிந்து கொள்வதை திருநாமம் பூசுதல்அல்லது இடுதல் என்று சொல்லுவார்கள். அன்புக்கொடி மக்களின் நெற்றியைத் தொட்டு பணிவிடைக்காரர்கள் திருநாமம் இடுகின்றனர்
பிச்சைப் பாங்கு:
கிலத்திரட்டிலும் அருள்நூலிலும் பிச்சை எடுத்தலைப் பற்றியும் , பிச்சை கொடுத்தலைப் பற்றியும் அதிகமாகப் பேசப்பட்டுள்ளன. பெரும்பாலான அய்யாவழிப் பதிகள் மற்றும் நிழல்தாங்கல்கள் பிச்சை எடுத்து ஈட்டிய பொருள் கொண்டே இயங்குகின்றன. பதியில் அய்யா வைகுண்டருக்கு நேமித்த பொருட்களை பணிவிடை நிறைவுற்ற பின் தருமம் செய்வார்கள். உதாரணத்துக்கு தலைக்கு ஒரு வாழைப்பழம் வீதம் வழங்குவதாகக் கொள்வோம். இவ்வாறு பதியில் ஓரு தனி மனிதன் பெறும் தலைவீதப் பாங்கு பிச்சைப்பங்கு என்று அழைக்கப்படுகிறது. அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக