வியாழன், 26 ஏப்ரல், 2018

சான்றோர் இருவர் இறப்பு

சோனைத் தலைவர் சிறந்த சான்றோர்கள் தன்னில்
கொன்றான் ஓருவனையும் குளக்கரையி லம்மானை
வி=படைகளின் தளபதியானவன் சான்றோர்களில் சிறந்த வீரனாக இருந்தவனைத் திட்டமிட்டு வெறி தனத்தோடு
யானையின் உதவியோடு கொண்டு விட்டார்கள் வைகை ஆற்றங்கரையில் வைத்து நடந்தது அம்மானை
==
பின்னால் ஒருவனையும் பிடித்துக் கொண்டு வாருமென்றான்
குட்டை எடு என்று கூறினான் மாபாவி
வி=மறுபடியும் சான்றோர்களில் ஒருவரை அழைத்து வரும்படி சேவகர்களுக்கு மன்னன் கட்டளை இட்டான்
அழைத்து வந்த சான்றோரைப் பார்த்து இனியாவது குட்டையில் மண் சுமந்து போடு என்றான்
==
திட்டமுடன் நாடாண்ட தெய்வக் குலச் சான்றோர்
முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான்
வி=நேர்மையோடு சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நன்நெறியோடு நாட்டை ஆண்டு வந்த திருமாலுடைய பிள்ளைகள்
முதலில் இறந்து போன சான்றோர் குல மன்னனை விட நாங்கள் குறைந்தவர்கள் கிடையாது
==
இன்ன மிந்தக் குட்டை யாங்கள் தொடோம் என்றனராம்
வி=எங்கள் மன்னர் தகுதியை இழந்து இந்த குட்டையில் நாங்கள் மண் சுமக்க மாட்டோம் என்று உறுதியாக கூறினார்
==
பின்னுமந்தச் சோழன் பிடித்து ஒருவன் தனையும்
கொன்றான் காண் வைகை தனில் குஞ்சரத்தை விட்டியறி
வி=மிண்டும் கோபம் கொண்ட சோழ மன்னன் அவர்களின் ஒருவரை வெறித்தனமாக பிடித்துக் கொண்டு வந்து
கொண்று விட்டான் வைகை ஆற்றங்கரையில் வைத்து யானையை கால்களால் மிதிக்க வைத்து பழிவாங்கினான்
==
நன்றி மறந்து நாடாண்ட சோழ மன்னன்
கொன்றான் காண் இரண்டு தெய்வக் குலச் சான்றோரை
வி=தன்னுடைய தன்மானங்களை எல்லாம் இழந்து சான்றோர்களின் பெருந்தன்மையை மறந்து நாட்டை ஆண்டச் சொழன்
தன்னுடைய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக ஆணவம் கொண்டு இரண்டு சான்றோர்களை கொன்று விட்டான்
==

அப்போது வித்யாதர முனிவன் தானறிந்து
செப்போடு வொத்த திருமால் அருகேகி
மாயவரே உம்முடைய மதலை ஏழுபேரில்
காய மகித்தான் கரிகாலச் சோழனவன்
வி=கொடுரமாக நடத்தப்பட்ட துயரச் செய்தியை தேவர்களின் இனத்தைச் சார்ந்த வித்யாதர முனிவர் கேள்விப்பட்டு
வாக்கு மாறாத தன்மையோடு செப்பு தகட்டில் பதிக்கப்பட்ட முத்திரைப் போன்ற திருமாலிடம் சென்று
உலகத்தை பாதுகாத்து வரும் மாயப் பெருமாளே உம்முடைய பிள்ளைகள் ஏழுபேர் உண்டல்லவா அதில் இரூவருடைய
உடல்களை யாணை மூலம் காயப்படுத்திக் கொன்றுவிட்டான் சோழநாட்டு மன்னனாகிய கரிகாலன் என்றார்
==
வித்யாதர முனிவர் சொல்வதைக் கேட்ட திருமால் உடனடியாக வைகை கரைக்கு வந்தார்
வைகை கரையில் புட்டு விற்கும் பாட்டியிடம் புட்டு சாப்பிட்டு விட்டு
பாட்டியின் ஆள் போல் வேடம் கொண்டு
சோழ மன்னனின் வெறிச் செயலால் தன்னுடைய பிள்ளைகளைப் பழிவாங்கி விட்டானே என்று
தானே குட்டையில் மண் சுமந்து வைகையை அடைத்தார்
அவர்களிடம் அடிமைபோல் அடிகளையும் வாங்கிக் கொண்டார்
மனம் மிகவும் வேதனை அடைந்த திருமால் ஸ்ரீரங்கத்தில் மிகவும் கோபத்தோடு அமர்ந்தார்
நடந்து முடிந்த சம்பவங்களை எல்லாம் கேள்விப்பட்ட பத்திரகாளி என்னுடைய பிள்ளைகளை கொன்றக் காரணத்தினால்
சோழ நாட்டு மன்னனின் நாடு வறுமையால் வாடும்
பன்னிரெண்டு ஆண்டுகள் நாட்டில் மழைப் பெய்யாமல் மக்கள் கடுமையான முறையில் அவதிப் படுவார்கள்
என்று மிகுந்த வேதனையாடு மனம் குமுறி பத்திரகாளி சாபமிட்டாள்
பத்திரகாளி சாபத்தால்
சோழ நாட்டில் மழைப் பெய்யாமல் நின்றது பஞ்சத்தால் வறுமை அடைந்தது
தன்னுடைய நாட்டு மக்களுக்கு பசியை தீர்க்க முடியாமல் என்ன செய்யலாம் என்றி திகைத்து மணம் வாடினான்
மாண்டு போன இரண்டு சான்றோர்களின் எழ்மையான மணம் கொண்ட மனைவிமார்கள் மிகவும் வருத்தத்தோடு
திருமாலை நோக்கி சிறப்பு வாய்ந்த கடுமையான தவத்தை செய்ய சென்றார்கள்
அவர்கள் மேற்கொண்ட தவத்தின் அருமை பெருமைகளேப் பற்றி கூறுகிறேன் கேளுங்கள் 
தான் அணிந்திருந்த ஆடைகளை மாற்றாமல் கணவன் கட்டிய திருமாங்கல்யத்தைக் கழற்றாமல்
மரியாதை இல்லாமல் களங்கத்தை ஏற்படுத்திய ஈழ மன்னனின் உயிரை பழி வாங்கவு நினைத்தனர்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக