வியாழன், 26 ஏப்ரல், 2018

சான்றோர் அணையை அடைக்க மறுத்தல்

நன்று நன்று மன்னவரே நமக்கு வழக்கல்லவே
இவ்வேலை யொன்றும் எங்களோடு ஈயாமல்
எவ்வேலை சொல்வீரோ யாம் அதற்கு உள்ளாகுது என்றார்
வி=நிங்கள் சொல்வது மிகவும் நல்லதுதான் மன்னரே
ஆனால் எங்களுக்கு இந்த வேலை செம்து பழக்கம் இல்லை
இந்த வேலையைப் பற்றி எதுவும் தெரியாது எனவே நீங்கள் எங்களிடம் இதை ஓப்படைக்க வேண்டாம்
வேறு எதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் நாங்கள் அதை மறுக்காமல் செய்கிறோம் என்றனர்
==
கேட்டந்த மன்னன் கிறுக்க முடன் இறுக்கி
திட்டினான் சான்றோரைச் சினத்தான் காணம்மானை
வி=சான்றோர்களின் மறுப்பு பதிலைக் கேட்ட மன்னன் அதை புரிந்து கொள்ள முடியாமல் கோபம் கொண்டு
பல விதமான வசை மொழிகளைக் கூறி சான்றோர்கள் மீது வெறுப்படைந்தான் பிரச்சனையும் உருவானது அம்மானை
==
அப்போது சான்றோர் அதற்கிசையாமல் நின்றார்
இப்போது சோழன் ஏது சொல்வா னம்மானை
வி=மன்னன் தரக்குறைவாக பேசுவதை எல்லாம் கேட்ட சான்றோர் அந்த வேலைக்கு ஓத்துக் கொள்ளாமல் நின்றார்கள்
சான்றோர்களின் பிடிவாத தன்மையை பார்த்த சோழ மன்னன் இவ்வாறு கூறுகின்றான் அதை சொல்கிறேன் அம்மானை
==
நான் வேலைச் சொன்னால் நகட்டுவதோ உங்களுக்கு
தான்பாரும் என்று தன்தள கர்த்தருடன்
வேலை கொள்ளு மென்று விசைக் காட்டினான் கெடுவான்
வி=மன்னனாகிய எனக்கு மரியாதை தராமல் நான் சொல்லும் வேலையைச் செய்யாமல் மறுத்துச் சமாளிக்கிறீர்களா
உங்களை நான் என்னபாடு படுத்துகிறேன் பாருங்கள் என்று ஆவேசத்துடன் தன் படைத் தளபதியிடம்
இவர்களை வேலை செய்ய வையுங்கள் என்று அவசர ஆணை பிறப்பித்தான் கேடு கெட்ட மன்னன்
==

தூல மறியாமல் துள்ளியே சேவுகர்கள்
சூழ வளைந்து துய்யச் சான்றோர்களையும்
வேழும் பலதை விட்டுப் பிடித்திடவே
வி=சான்றோர்களின் பிறப்பின் உயர்வைப் பற்றி தெரியாமல் வேகமாக ஓடி வந்த சேவகர்களெல்லாம்
எங்கும் செல்ல முடியாதபடி சுற்றி வட்டமிட்டு கொண்டார்கள் எந்த தவறும் செய்யாத சான்றோர்களை
சான்றோர்களுடைய வீரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் யாணைகளைக் கொண்டு வந்து பிடிக்க நினைத்தான்
==
சான்றோர் அடுக்கல் சார வைக இல்லாமல்
மீண்டு அகலத் தோற்று வெளியிலே நின்றிடவே
வி=சான்றோர்களை பலவிதமாக பிடிக்க முயன்றும் முடியாமல் அவர்கள் தங்களுடைய ஆற்றலை இழந்தனர்
சான்றோர்களிடம் ஈடுகொடுக்க முடியாமல் செமல் இழந்து தோல்வி அடைந்தவர்களாய் வெறுமனே நின்றனர்
==
அப்போது சோழ அவன் ஆனை கொண்டுவந்து
இப்போது சான்றோரை ஏறிப் பிடித்தனராம்
வி=அதைப் பார்த்த சோழமன்னன் மிகவும் கோபங் கொண்டு யானைப் படைகளை அங்கே வரவழைத்து
யானைகளின் உதவியோடு சான்றோர்களை சுற்றி வளைத்து மிகவும் வேகத்துடன் கட்டுப் படுத்தினார்கள்
==
சான்றோர்கள் சோழனையும் தட்டப் படாதெனவே
நன்றியுடன் நின்றார் நாடியவன் பிடித்து
வி=நேர்மையான சான்றோர்கள் சோழ மன்னனை இதற்கு மேல் எதிர்த்து போராடக் கூடாது என்று
மரியாதையின் நிமித்தமாக நின்று கொண்டார்கள் மன்னர் படைகள் சான்றோரைப் பிடித்துக் கொண்டு வந்தனர்
==
குட்டை எடு என்றிடவே கூடாதென வுரைக்க
தட்டினான் வைகையிலே தலையைச் சான்றோர் தனக்கு
ஆனைதனை விட்டு அரசனந்தச் சோழ மன்னன்
வி=சான்றோர்களைப் பார்த்து மீண்டும் குட்டையில் மண் சுமக்கும்படி சொல்ல அவர்கள் முடியாது என்று மறுத்தனர்
சோழ மன்னன் கோபத்தால் கட்டளை இட்டான் வைகை ஆற்றங்கரையில் சான்றோரின் தலையை
யாணை மூலமாக கொண்டு விடும்படி கொடிய குணம் கொண்ட மன்னன் தன்னுடைய படைத் தளபதியிடம் கூறினான்
==

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக