வியாழன், 26 ஏப்ரல், 2018

அன்று பெண்களின் குணம்

தெய்வ நிலைமை செப்பிய பின் தேசமதில்
நெய் நீதப் பெண்கள் நிலைமை கேளம்மானை
கணவன் மொழியக் கலவு மொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவேனம்மானை
கற்கதவு போலே கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத்திறவு கோலம்மானை
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்
முன்பான சோதி முறை போல் உறவாடி
போற்றியே நித்தம் பூசித் தனுதினமும்
சாற்றிய சொல்லைத் தவறாமலே மொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டி
கரமானது தடவிக் கால்தடவி நின்றிடுவாள்
துயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒரு சாமம் மங்கை யெழுந்திருந்து
முகத்து நீரிட்டு தான் முகத்தோனையுந் தொழுது
வி=சோழ மன்னன் ஆண்ட தமிழ் நாட்டின்
நெய்போல் உருகி மணத்தோடு வாழ்ந்த பெண்களின் குணத்தைக் கூறுகின்றேன் அகிலத்திரட்டு அம்மானையில்
கணவன் சொல்கின்ற வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவித்து பின் வார்த்தைப் பேசாதவர்களாக இருந்தார்கள்
மனைவியின் குணநலன்களை பற்றித் தெளிவாகக் கூறுகிறேன்
கல்லால் ஆன கதவைப்போல பெண்கள் பத்தினியாக மணம் உருதியோடு இருந்தார்கள்
பழம் பெருமைவாய்ந்த அவர்களுடைய ஞான அறிவை கேளுங்கல்
பெண்கள் அன்பாக தன்மை பெற்று வளர்த்த தாயையும் தந்தையையும் தெய்வமாக மதித்து
முதலில் கடவுளுக்குச் செய்த பணிவிடைகள் போல் தன்னுடைய பெற்றோரிடமும் அன்பு காட்டினார்கள்
அவர்களை வணங்கி மதித்து தினமும் மரியாதையோடு அன்பு குறையாமல் வாழ்ந்தார்கள்
பெற்றோர்கள் சொன்னச் சொல்லை மீறாமல் எந்த தப்பும் செய்யாமல் அன்பு மொழி பேசுவான் மனைவி
தன்னுடைய கணவர் நிம்மதியாகத் தூங்குவதற்காக அன்பாக அரவணைத்து ஆராட்டுவாள்
கை,கால்களை தடவிக் கொடுத்து அமைதியான நிலையை உருவாக்கி தூங் வைத்திடுவாள்
தன்னுடைய கணவர் தூங்கிவிட்டார் என்று தெரிந்த பிறகுதான் அவள் தூங்கச் செல்வாள்
தூங்கிய பெண்கள் விடியற்காலையான அதிகாலையில் எழுந்திருந்து தன் கடமைகளைச் செய்வார்கள்
தலைக்குளித்து தன்னைப் பிறவி செய்த பிரம்ம தகப்பனை பணிவோடு வணங்கிய பின் மற்ற வேலைகளை செய்வார்கள்
==

அகத்துத் தெரு முத்த மலங்காரமாய்ப் பெருக்கி
பகுத்தாக நித்தம் பாரிப்பார் பெண்ணார்கள்
தவத்துக் கரிய தையல் நல்லார் தங்களுட
மனுநீதஞ் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்பு நிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்கு மந்த நாளையிலே
வழியான சாதி வளமை கேளம்மானை
வி=வீட்டை சுத்தம் செய்து விட்டு தெருவாசலுக்கு வந்து தெருவை சுத்தம் செய்து கோலம் போட்டுக்கொள்வால்
(அரிசி மாவு)
பக்குவமாக எல்லா வேலைகளையும் செய்து ஒற்றுமையாக இருப்பார்கள் பெண்களெல்லாம்
தியாக வாழ்க்கை நடத்தும் பெண்கள் ஒருவருக்கொருவர் அன்போடு இணை பிரியாமல் இருப்பார்கள்
மக்களுடைய ஒழுக்க செயல்கள் எத்தனை என்று பிரித்து சொல்ல முடியாது ஒழுங்கு முறையோடு இருந்தார்கள்
முழு மன நிறைவோடு இனிய வாழ்க்கை நடத்தும் பெண்கள் கற்பு நிலை தவறாமல்
கண்ணியத்துடன் காணப்பட்டனர்
சந்தோசமாக ஒவ்வொரு நாளையும் அனுசரித்து வந்த அந்த காலத்தில் அடக்கம் ஒடுக்கம் காணப்பட்டது
நேர்மையான வழியில் வாழ்ந்த மக்களுடைய இன ஒற்றுமையைக் கூறுகின்றேன் அகிலத்திரட்டு அம்மானையில்
==
சான்றோர் முதலாய்ச் சக்கிலியன் வரையும்
உண்டாண சாதி ஒக்கவொரு இனம் போல்
தங்கள் தங்கள் நிலைமை தப்பிமிகப் போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்தோங்கியே வாழ
செல்வம் பெருக சிவ நிலைமை மாறாமல்
அல்வல் தின்ஞ்செய்து அன்புற்றிருந்தனராம்
வி=சான்றோர் மக்கள் முதல் சக்கிலிய சாதி வரை உள்ள பதினெட்டு சாதி மக்களும் மன பக்குவத்தோடு காணப்பட்டனர்
பலசாதி மக்களை ஒரு சாதி மக்கள் போல் ஒற்றுமையாக ஒன்று சேர்த்து வேறுபாடு இல்லாமல் இருந்து
அவரவர்களுடைய கட்டுப்பாடுகளைத் தாண்டி எந்த தவறும் செய்யாமல் விட்டு கொடுக்கும் தன்மை இருந்தது
மாதம் மூன்று முறை மழை பெய்து மக்கள் வளமோடு வாழ்க்கை நடத்த உதவியது
பதினாறு செல்வங்களும் கிடைக்க எல்லாம் வல்ல சிவனுக்கு சிவத்தொண்டு மாறாமல் பணி செய்து வந்தார்கள்
அன்றாடப் பணிகளை செய்து முடித்துவிட்டு அன்போடு உதவி செய்து வாழ்ந்து வந்தார்கள்
==

தான் பெரிதென்று தப்பு மிகச் செய்யாமல்
வான் பெரிதென்று மகிழ்ந்திருந்தாரம்மானை
வி=தானே சிறந்தவன்,பெரியவன் என்று ஆணவம் கொண்டு அதிகாரம் செய்யாமல் இருந்தார்கள்
இறைவனே பெரியவன் என்று ஆனந்த மடைந்தார்கள் சொல்கிறேன் அகிலத்திரட்டு அம்மானையில்
==
ஒருவர்க் கொருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன் பேரில் கந்த்தா யிருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன்பேரி லல்லாது
வையம் லழக்கு வாராதே யிருந்தார்
ஆடிபணிய வென்று அலைச்சல் மிகச் செய்யாமல்
குடி பொருந்தி வாழ்ந்து குடியிருந்தாரம்மானை
வி=மக்கள் ஓருவருக்கொருவர் அடிமை போல் வேலை செய்யாமல் சுதந்திரமாக இருந்தார்கள்
கடமையாகக் கருதி கடவுளுக்குப் பயந்து உண்மையாய் இருந்தார்கள் பக்தி நெறி பரவி இருந்தது
தன்னைப் படைத்த பரமசிவனை நினைத்து அவர் லழங்கியதை நினைத்தார்களே தவிர பற்று குறையவில்லை
பூலோகம் சம்பந்தப்பட்ட எந்த வம்பு வழக்குகளிலும் ஈடுபடாமல் இருந்தார்கள் தன் மானம் காத்தார்கள்
மற்றவர்கள் தங்களுக்குப் பணிந்து நடக்க வேண்டுமென்று மன உளைச்சல்களை கொடுக்காமல் இருந்தார்கள்
குடும்பத்தோடு அன்போடு ஒற்றுமையாக எப்படி வாழ்ந்து வந்தார்கள் என்பதை அகிலத்திரட்டு அம்மானையில் கூறுகிறேன்
==
சேயினுட ஆட்டுச்செவி கேட்டிருப்பதல்லால்
பேயினுட ஆட்டோர் பூதரறிய திருந்தார்
இந்தப்படி மனுவோர் எல்லா மிருந்து வொரு
விந்துக் கொடி போல் வீற்றிருந்தாரம்மானை
வி=பிள்ளைகளுடைய கூத்து கும்மாளங்களைப் பற்றி காதுக்கு இனிய செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தார்களே தவிர
பேய் பிசாசுகளுடைய ஆட்டத்தைப் பற்றி பூதலத்து மக்கள் கேள்வி பட்டதே இல்லை மானமாய் வாழ்ந்தார்கள்
தர்ம நெறி தவறாத மக்களாக எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக அன்பு பொருந்தி இருந்தார்கள்
ஒரு தகப்பன் பிள்ளைகள் போல ஒரு கொடி போல் படர்ந்து வாழ்ந்தார்கள் அகிலத்திரட்டு அம்மானை

இப்படித் தெய்வ இராச்சிய நீதமும்
மற்படித் தேச மனுவுட நீதமும்
நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
கற்புடன் ஈசர் கண்டு மகிழ்ந்தனர்
வி=எல்லா விதத்திலும் நீதி நேர்மையாக மன்னன் நடத்திய தேசத்தின் நீதியும் காணப்பட்டது
மதிப்பும,மரியாதையுமாக ஒழுங்கு முறைப்படி வாழ்ந்த மக்களின் நீதியும் காணப்பட்டது
நற்பண்புகளோடு நாட்டுப் பற்று கொண்டு தெய்வீகமாக வாழ்ந்து வந்ததைக் காணலாம்
தான் கற்று கொடுத்த எல்லா ஒழுக்க நெறிகளையும் கடைபிடித்த மக்களை கண்டு பரமசிவன் மனம் மகிழ்ந்தார்
==
முத்தான சீமை மூன்று நீதத்தோடு
பத்தாசையாகப் பண்பாய்த் தழைத்திடவே
வி=முத்து போண்ற துய்மையான தெட்சணா பூமீயில் தெய்வநீதம்,தர்மநீதம்,
மனுநீதம் ஆகிய மூன்று நீதங்களோடு
இறைவனிடம் யாசிக்கும் பத்து ஆசைகளைக் கேட்டுப் பெற்று பண்புள்ளவர்களாய் தளைத்து வாழ்ந்தனர்
==
நாலான வேதம் நல்ல கலியுகமாய்
மேலாம் பரமாய் விளங்கி யிருந்திடவே
வி=நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வேத முறைப்படி நடந்து கலியுகத்தில் நல்ல முறையில் காணப்பட்டனர்
மேலோகத்திலுள்ள தேவர்களைப் போல குற்றமற்றவர்களாய் வாழும் முறை தெரிந்து வாழ்ந்தார்கள்
==
தேவருறையும் திருக்கயிலை தான் வளமை
பாவலர்கள் முன்னே பாடினாரம்மானை
வி=தேவர்கள் வாழுகின்ற திருக் கைலாயத்தின் பெருமைகளைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்காக
புலவர்கள் பலயுகமாக பாடி வைத்திருக்கின்றார்கள் அதை அகிலத்திரட்டு அம்மானையில் கூறுகின்றார்
==

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக