வியாழன், 26 ஏப்ரல், 2018

அய்யா வைகுண்டர் பிறப்பும் சிறப்பும்

மயக்கி அந்த மால்மகரம் மாமோகமாய் இருக்க
தியக்கி அந்த நாரணரும் சென்றார் மகரமதுள்
வி=உலகத்தையே கண்களை மூடி உறங்க வைத்துவிட்டு மகாவிஷ்ணு மகாலெட்சுமியோடு மிகவும் அன்போடு இருக்க
மனகலக்கத்தோடு மயங்கிய நாராயணரும் மகரசிலையாய் இருந்த லெட்சுமி தேவிக்குள் ஐக்கியமானார்
==
மகரம் முன் சென்று மகனை மிக நினைக்க
உகர முனிக் கூட்டி வந்த உற்ற சடலமது
சிணமே கடலுள் சென்றது காண் அன்போரே
வி=லெட்சுமி தேவியோடு ஐக்கியமான திருமால் உடனடியாக தனக்கு மகன் பிறக்க வேண்டும் என்று நினைக்க
திருமாலுக்கு உகந்த முனிவர்கள் கூட்டிக் கொண்டு வந்த முத்துக்குட்டி சுவாமியின் நற்சடலமானது
மிகவும் வேகமாக அனைவரும் காணும் படியாக கடலுக்குள் நடந்து திருமாலிடம் சென்றது அன்பர்களே
==
குணமே குணமெனவே கூண்டு அரியோன் தான் பார்த்து
மகனை மிக எடுத்து மகரமதில் உள்ளே கொண்டு
அகரத் தெருவறையில் அலங்காரத் தட்டில் கொண்டு
வி=என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அவதாரச் சடலமே என்று அரிநாராயணர் சடலத்தைப் பார்த்து
என் அன்பு மகனே என்று அரவணைத்து கடலுக்குள் மகரசிலை போல் நின்றுக் கொண்டிருந்த லெட்சுமிக்குள் கொண்டு சென்று
பாற்கடலுக்குள் அமைக்கப்பட்டிருந்த வரிசை வரிசையாக அலங்கரிக்கப்பட்ட பந்தலில் சிம்மாசனத்தில் இருத்தி
==
காலொன்றாய் நிற்கும் கனகப் பொன் மேடையதில்
நாலொன்றாய்க் கூடும் நல்ல சிங்காசனத்தில்
வி=ஒன்றைக் கால் நாட்டி உருவாக்கப்பட்ட வைரத்தாலும் மரகதத்தாலும் பொன்னாலும் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்
நான்கு சக்கரம் மாட்டப்பட்ட தேர் போல் செய்த மிக உயர்வான தன்மை உடைய சிம்மாசனத்தில்
==
தங்க வைடூரியத்தால் தான்நிறைந்த மண்டபத்துள்
எங்கும் பிரகாசம் இலங்குகின்ற மண்டபத்துள்
வி=தங்கத்தாலும் வைடுரிய கற்களாலும் அலங்காரம் செய்யப்பட்ட மணி மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றார்
திரும்புகின்ற பக்கமெல்லாம் மிகவும் பிரகாசமாக ஜொலிக்கும் படி அமைக்கப்பட்ட மண்டபத்திற்குள்
==

பத்தும் பெரியோர்கள் பாவித்த மண்டபத்துள்
முத்துக்கள் சங்கு முழுங்குகின்ற மண்டபத்துள்
வி=பேரும் புகழும் பெற்ற பெரியோர்களால் அழகாக அலங்காரம் செய்யப்பட்டு மிகவும் தூய்மையாக இருக்கும் மண்டபத்திற்குள்
சிப்பிக்குள் இருக்கும் முத்துகளும் கடற் சங்குகளும் ஒம் என்று ஓங்காரமிடுகின்ற மண்டபத்திற்குள் வந்தனர்
==
தங்க நீராவித் தான் வளரும் மண்டபத்துள்
சங்கு முழுங்கி நிற்கும் சதுரமணி மண்டபத்தில்
வி=குளிப்பதற்கு தங்கத்தால் ஆன தெப்பக்குளம் அமைக்கப் பட்டிருந்தது மிக அழகாக மண்டபத்திற்குள் காட்சி அளித்தனர்
சங்கே முழுங்கு என்று வலம்புரி சங்குகளும் இடம்புரி சங்குகளும் மூழ்கிய நிலையில் உள்ள சதுர அமைப்பான மண்டபத்தில்
==
மூவாதி கர்த்தன் உகந்திருக்கும் மண்டபத்தில்
தேவாதி தேவர் சிறந்திருக்கும் மண்டபத்தில்
ஆயிரத்தெட்டு அண்டம் நிறைய மண்டபத்தில்
வி=மும்மூர்த்திகளில் முதல் முர்த்தியாய் உலகம் தோன்றுவதற்கு காரண கர்த்தாவாக இருக்கின்ற சிவன் அகம் மகிழ்ந்த மண்டபத்தில்
முப்பத்தி முக்கோடி தேவர்களும் மிகவும் சிறப்புப் பெற்றவர்களாக புகழடையும் படி புகழ்பாடிய மண்டபத்தில்
ஆமிரத்து எட்டு ஆண்ட சராசரங்களும் ஒன்றாக திரண்டு நிறைந்து இருக்கின்ற மண்டபத்தில்
==
தாற்பிரியமான தாமிரவர்ணி பண்டபத்தில்
எண்ணக் கூடா இயல்பு நிறை மண்டபத்தில்
மண்ணளந்தோர் மகரமதுள் மகனை மிகத் தான் இருத்தி
கண்ணான மகற்கு கனத்தத் தங்கச் சட்டையிட்டு
வி=புஷ்ப நதிகளில் ஒன்றான தாமிரபரணி ஆறு கடைசியாக வந்து சேர்கின்ற பாற்கடல் மண்டபத்தில்
எண்ணி கணக்கு எடுக்கமுடியாத இயல்புகளோடு நிறைந்து காணப்படுகின்ற செல்வ செழிப்பான மண்டபத்தில்
பூலோகத்தை ஆளந்த மாயப்பெருமாள் கடலுக்குள் லெட்சுமி இருக்கின்ற மன்டபத்திற்குள் அன்பாக இருத்தி
கண்ணின் மணி போன்ற மகிமை உடைய சொல்லக் கண்ணனுக்கு சுத்த தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை அணிந்து
==

எண்ண வொண்ணா ஆபரணம் எல்லாம் எடுத்து அணிந்து
தங்கக் குல்லாவும் தலைமேலே தூக்கி வைத்து
பங்கமில்லாத் தைலப் பதத்தில் மிக மூழ்கி
வி=எண்ணிக்கைக்கு அடங்காதபடி பலவிதமான நவரெத்ன ஆபரணங்களை எல்லாம் அடுக்கடுக்காக அணிந்து
தங்கத்தால் செய்யப்பட்ட கீரிடத்தை தலைக்குமேல் எழும்பி நிற்கும் படி தூக்கி வைத்து தலை நிமிரச் செய்து
எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத நறுமண பரிமள தைலத்தில் மூழ்கும்படி முக்கி எடுத்தார்கள்
==
வைகுண்ட வெள்ளை மான் பட்டொன்று எடுத்து
கைகொண்டு பாலனுக்குக் கண்ணர் மிகச் சூடி
மேலுகள் ஒக்க மினுமினுக்கப் பச்சையிட்டு
காலுகளுக்குத் தங்கக் கழராப் பணிகளிட்டு
வி=வைகுண்டராக அவதரித்தவருக்கு மிக உயர்ந்தவர்கள் அணியும் வெள்ளை மான் பட்டு ஒன்றை எடுத்து உடுத்தி
தன்னுடைய கைகளால் தன்னுடைய மகனுக்கு கிருஷ்ணபெருமாள் மிகவும் சந்தோசமாக உடுத்து
உச்சி முதல் உள்ளங்கால் வரை மினு மினு என்று மினிங்கும் படி தங்க ஐரிகைப் போட்ட பச்சை நிறப் பட்டு உடுத்தி
வீரக் கால்களுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட எவரும் கழற்ற முடியாமல் செய்யப்பட்ட கால் தண்டைகள் இட்டு
==
மகனை எடுத்து மடி மீதிலே இருத்தி
உகமாள வந்தவனோ உடையவனோ என்று சொல்லி
கண்ணைத் தடவி கரிய முகம் தடவி
வி=தன் செல்லமகனை செல்லமாக கைகளினால் தூக்கி தன்னுடைய மடியின் மீது உட்காரவைத்துக் கொண்டு
தர்மயுகத்தை ஆள்வதற்காக வந்தவனோ என் செல்லமே பூலோகத்திற்கு உடையவனோ என்று அன்பு வார்த்தைகள் கூறி
அன்பாக அரவணைத்து கண்களை செல்லமாகத் தடவி கருமை நிறம் கொண்ட முகத்தைத் தடவிக் கொடுத்து
==
எண்ணும் வளர்வாய் என்று இசைந்த முகத்தோடு அணைத்து
பாலனைப் போல் காட்டிப் பதினாறுடன் காட்டி
வி=சொல்ல முடியாத அளவுக்கு நீ வளர்ந்தோங்கி சிறப்போடு வாழ்வாய் என்று வாழ்த்தி மூத்தம் கொடுத்து அன்போடு
முதலில் சிறு குழந்தையைப்போல் பாலகனாகவும் அப்புறம் பதினாறு வயது இளம் வாலிபனாகவும் காட்டி
==

நாலுரண்டு காட்டி நல்ல மகவதுக்கு
நடக்கக் கருமம் நவின்றிடவே நாரணரும்
அடக்கமுடனே அருளுவார் அன்போரே
வி=அப்புறம் என்றும் வயது நாள்பத்திரெண்டாக காட்டினார் நாராயணர் தன்னுடைய மகனாகிய வைகுண்டருக்கு
பூலோகத்தில் நாற்பத்தி ரெண்டு வயது வரை வாழ்க்கை நடத்தி கலியுக வாழ்க்கை முடியும் என்று கூறினார் நாராயணர்
இவ்வாறு கட்டாயம் நடந்தே தீரவேண்டும் என்று நினைத்து பொறுமையுடன் அருள்புரிந்தார் அன்பர்களே
==
அய்யா வைகுண்டர் பிறப்பும் சிறப்பு நிறைவுபெற்றது
---- ----
திருமால் வைகுண்டருக்கு அருளிய விஞ்சைகள்
தொடர்ச்சி.1
நல்ல உபதேசம் நல் மகவுக்கே அருள
வல்லத் திருநாதன் வகுக்கிறார் அன்போரே
வி=அய்யா வைகுண்டருக்கு நல்லபடியான உபதேசத்தை தன்னுடைய மகனுக்கே கொடுத்தருளிவிட்டு
வல்லமையான சக்திகளை படைத்த திருமால் பலவிதமான சட்டத்திட்டங்களை வகுத்துக் கொடுத்தார் அன்பர்களே
==
தேடிய மறைநூல் வேதம் தேவியர்க் கமல மாது
நாடிய இறையோன் ஞானி நாச்சிமார் தேவரோடு
கூடிய ரிஷியோர் வானோர் குவலயம் அறியா விஞ்சை
வி=வேத ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது போல மக்கள் தேடிக் கொண்டிருக்கின்ற இறைவனும் தேவர்களும் லெட்சுமியின்
கணவராகிய திருமாலும் தவஞான முனிவர்களும் கன்னியர்களும் தெய்வலோகத்தில் உள்ளவர்களும் மற்றும்
பரலோகச் சங்கத்தாரைச் சார்ந்த ரிஷிகள் வானலோகத்தில் உள்ளவர்களும் உலக மக்களாலும் தெரிந்து கொள்ளமுடியாத விஞ்சை
==
தேடிய மகனார்க்கு என்று செப்பினார் ஒப்பில்லானே
மகனே உனது மனமறிய மறையோர் அறியா விஞ்சைசெய்து
வி=நாராயணர் தேடிக் கண்டு பிடித்த தன்னுடைய மகனுக்கு என்று பெருமிதத்தோடு கூறினார் ஒப்பிடமுடியாத திருமால்
என் அருமை வைகுண்டரே உம்முடைய மனமானது அறிந்து கொள்ளும் விதத்தில் வேதம் அறிந்தவரால் கூட அறிய முடியாத விஞ்சை ஆகும்
==


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக