வியாழன், 26 ஏப்ரல், 2018

மாயப்பெருமாள் கடலுக்குள் செல்லுதல்

செப்படி வித்தை நாதன் செகலினுள் அகமே சென்றார்
வானவர் தேவர் போற்ற மறைமுனிமார்கள் பாட
தானவர் ரிஷிகளோடு தமிழ் மறைவாணர் போற்ற
வி=மாயவித்தைகளை தந்திரமாக செயல்படுத்தும் மாயப்பெருமாள் கடலுக்குள் நடுவில் சென்று விட்டார் அற்புதம் நடத்துவதற்காக
வானாதி வானவர்களும்
தேவாதி தேவர்களும் போற்றி போற்றி என்று துதிபாட வேத சாஸ்திர முனிவர்கள் வேதம்ஒத தேவர் இனத்தைச் சேர்ந்த தானவர்களும். ரிஷிகளும் திருமாலுடைய வேத மந்திரங்களை வானவர்கள் போற்றி நிற்க
==
ஞானமாம் வீணை தம்பூர் நால்திசை அதிர ஓசை
ஒம் நமோவென்று தெவர் ஓலம் இட்டு ஆடினாரே
வி=தத்துவ ஞானங்களை விணை,தம்பூரு போன்ற இசைக்கருவிகள் மூலம் நான்கு திசையும் நின்று இசைத்த வண்ணம்
ஒம் நமோ நாராயணா என்ற நாராயணருடைய மந்திரத்தை தேவர்கள் ஓங்கார சத்தமிட்டு தன்னை மறந்து ஆடினார்கள்
==
மத்தளத் தொனிகள் வீணை மடமட என்று எற்ற வானோர்
தத்திதெய் தித்தி எனத் தேவியர் பாடி ஆட
வி=மத்தளம் போன்றவற்றின் முரசொலியும் வீணையின் இசையும் சேர்ந்து மடமடவென்று அதிர அதற்கேற்ற படி வானோர்கள்
தித்தி தெய் தித்தி என்று பரத நாட்டியம் போன்ற அங்க அசைவோடு தேவதைகள் அனைவரும் பாடி ஆடினார்
==
தத்தியாய்ச் சங்கமெல்லாம் சதூர் மறை கூறி நிற்க
முத்திசேர் மாயன் தானும் மூழ்கினர் கடலின் உள்ளே
கடலினுள் அகமே புகுந்து கனபதி மேடை கண்டு
வி=பெருங்கூட்டமாய் வந்த சங்க கூட்டத்தை சேர்ந்த எல்லோரும் நான்கு வேதங்களையும் ஓதிக்கொண்டே நின்றார்கள்
தன்னைத் தேடி வருபவருக்கு முக்தி கொடுத்து தன்னோடு சேர்ந்து கொள்ளும் மாயப்பெருமாள் கடலில் உள்ளே சென்று மூழ்கினார்
பாற்கடலுக்கு நடுவே உள்சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடை சிம்மாசனங்களை எல்லாம் பார்த்து மகிழ்ந்தார்
==
மடவி பொன் மகரந் தன்னை வாகுடன் பூசித் தேய்த்து
வி=பெண்ணாக நின்றுக் கொண்டிருந்த பொன் மகரமாகிய லெட்சுமி தேவியை ஒளிமயமாகும்படி பரிசுத்தப்படுத்தினார்
==

நிடபதி மாயன் தானும் நிறைந்த பொன்னிறம் போல் வன்னி
வடவனல் போலே வீசி வந்தனர் மகரம் முன்னே
வந்தனர் மகரம் முன்னே மாதுபொன் மகரங் கண்டு
வி=வைகுண்ட லோகத்திற்கு அதிபதியான மாயப்பெருமாள் தானும் முழு நிலவு போல் பொன் நிறத்துடன் ஒளிமயமான உருவெடுத்து சூரிய நாராயணராக ஓளி வீசிக் கொண்டு கடலுக்குள் வளர்ந்து வந்த மகர லெட்சுமியின் முன்பாக ஒளிமயமாக
வந்து நின்றார் மகரம் முன்பாக வந்து நிற்பதைக் கண்ட லெட்சுமிதேவி சூரிய நாராயணரைக் கண்டு பிரமித்து
==
செந்தழல் எரியோ என்று சொல்லிடப் பதறி நொந்து
எந்தனின் மானவானோ எரிவடவாசம் ஏர்போ
கந்தனின் மாயமாமோ என்று அவள் கலங்கினாளே
வி=செந்தணல் போல் எரிகின்ற தீப பிழம்பா என்று சொல்லி மகரலெட்சுமி தேவியானவள் மனம் பதறி திடுக்கிட்டவளாக
என்னுடைய மானத்தைக் காக்க வந்த மணவாளனாகிய நாராயணரா வடகைலாயத்தில் எரிந்து கொண்டிருக்கின்ற அக்னி குண்டமாக
முருகனாக இருக்கின்ற கந்தப் பெருமானுடைய மாயச் செயலோ என்று மகர லெட்சுமி உள்ளம் கலங்கி காணப்பட்டாள்
==
கலங்கியே மகரந் தானும் கருத்தறிந்து ஏதோ சொல்லும்
இலங்கியே வருவோம் என்ற என் மன்னர் தானோ யாரோ
வி=மனம் சஞ்சலம் அடைந்த பொன்மகர லெட்சுமி தன்நிலை மறந்தவளாக ஏதோதோ சொல்லத் தொடங்கினாள்
உன்னை வநதடைய ஓளிமயமாக வருவோம் என்று சொன்ன என் கணவராகிய சூரிய நாராயணர் தானா அல்லது
==
சலங்கியே அதிரப்பூமி சதிரெனக் கதிரு பாய
துலங்கிய சுடரைப் பார்த்துச் சொல்லுவாள் மகரந் தானே
வி=வேறு யாராவது இருக்குமா என்று மன சஞ்சலத்தோடு நிற்க பூமி அதிரும் படியாக இடியும் மின்னலும் ஏற்பட்டு
மின்னல் ஓளியைப் போன்ற ஞானச்சுடரைப் பார்த்து பேசுகின்றாள் பொன் மகர லெட்சுமி ஆனவள்
==
சுடரே சுடரே துலங்கு மதிச்சுடரே
கடலே கடலே கடலுள்க் கனலாரே
வி=ஒளி கொடுக்கின்ற தீபமே ஒளி கொடுக்கின்ற திபமே புதுமையான முறையில் காணப்படுகின்ற சந்திரன் போன்ற தீபமே
திருமால் பள்றிக் கொண்டிருக்கும் பாற்கடலே கடலுக்குள் காட்சிக் கொடுக்கின்ற சூரியனைப் போன்றவரே
==

அக்கினிக்கே அபயம் அனலே உனக்கு அபயம்
முக்கியமாய்க் காந்தல் முனையே உனக்கு அபயம்
தீயே உனக்கு அபயம் திரிபுரமே அபயம்
நீசுட்டத் தலங்கள் எனக்கு உரைக்கக் கூடாது
வி=அக்னி பகவானே அடைக்கலம் தருவீராக அக்னி பிழம்பாக காட்சி அளிப்பவரே நீர் என்னை காப்பாற்றும் என்றாள்0
முக்கிய பொறுப்போடு இருக்கின்ற அக்னிக்கு மூல காரணமாக அதிபதியாய் இருக்கின்ற சூரிய பகவானே வாரும் என்றாள்
உலகத்தை சுட்டெரிக்கும் அக்னியே உன்னை வேண்டுகின்றேன் திரிபுரத்தை எரித்த அக்னியே உன்னை வேண்டுகின்றேன்
நீ அக்னியாக செயல்பட்டு எரித்த இடங்களைப் பற்றி பட்டியல் இட்டு நான் உன்னிடம் கூறுவது சரியாகது
==
மாசற்ற ஈசன் சங்கரனோடு உள்ளிருந்து
காண்டா வனம் எரித்தாய் கடிய வில்லி கையிலிருது
ஆண்ட இலங்கை எரித்தாய் அனுமன் கையிலே இருந்து
வி=குற்றம் குறை இல்லாத உருவ அமைப்பாகிய சிவன் பாதி திருமால் பாதி கலந்த ஆதி சங்கரருக்குள் நீ இருந்து
தூரியோதனனுடைய அரக்கு மாளிகையாகிய காண்டாவளம் எரித்தாய் அர்ச்சுனனுடைய கையில் இருந்த காண்டீப வில்லினால்
இராவணன் ஆண்டு வந்த இலங்கையை எரித்தாய் அனுமனுடையக் கையாலே அது நடந்தது
==
முப்புரத்தைச் சுட்டு எரித்தாய் முதன்மை கையிலே இருந்து
ஒப்புரவாய் நீ எரித்த உவமை சொல்லக் கூடாது
அனலே உனக்கு அபயம் ஆதி உமக்கு அபயம்
வி=வல்லரக்கனுடைய முப்புரக் கோட்டையைத் தீயால் அழித்தாய் முப்பொருளில் முதற் பொருளாகிய ஈசன் கையால் அது நடந்தது
ஓவ்வொருவரையும் சுட்டிக்காட்டி நீ அக்னியால் அழித்தவைகளை உவமைப்படுத்தி சொல்லக் கூடாது
அக்னி பகவானே உன்னைக் கெஞ்சி கேட்கின்றேன் ஆதிகாலத்தில் தோன்றியவனே உன்னைக் கெஞ்சி கேட்கின்றேன்
==
கனலே அமரும் அய்யா காந்தல் தனை மாற்றும் அய்யா
மன்னர் ஆதி நாரணர்க்காய் மாற்றுவீர் அக்கினியே
வி=அக்னி பகவானே பொறுமையோடு இங்கே அமர்ந்து இரும் என் உடலில் உள்ள வெப்பத்தை மாற்றும் அய்யா என்றாள்
என்னுடைய மன்னராகிய ஆதிநாராயணருக்காகவே நான் இங்கு நிற்கிறேன் எனவே அவருக்காக மாற்றும் அக்னியே
==

இந்த இயல்பை எல்லாம் என் மன்னர் இங்கு வந்தால்
சொல்லி உனக்குச் சொர்க்கம் வேண்டித்தருவேன்
வி=இங்கே நடந்து கொண்டிருக்கின்ற இந்த செயல்களை எல்லாம் என் கணவராகிய நாராயணர் இங்கு வந்தால்
நான் அவரிடம் உமக்கு கருணைக்காட்டி சொர்க்கலோகம் தரும்படி கேட்டு வாங்கித் தருவேன் என்றாள்
==
வில்லிக்கு வல்லவனே விலகி அமரும் அய்யா
என்னை என் மன்னவர் தான் இந்தக் கடலதிலே
பொன் அனைய நல் மகரமாகவே போக விட்டார்
வி=குந்தி தேவியானவள் உன்னுடைய சூரிய மந்திரத்தை சொல்ல அவளுக்கு கர்ணனை கொடுத்தவரே ஓதுங்கு இரும் அய்யா
பொன் மகர லெட்சுமியாகிய என்னை என்னுடைய அன்புக் கணவர் நாராயணர் தான் இந்த பாற்கடலிலே அனுப்பினர்
பொன்னால் செய்யப்பட்ட பொற்சிலை போன்று உயர்வான நிலையில் பரிசுத்தமான மகரலெட்சுமியாக என்னை வளரவிட்டார்
==
வருவோம் என்றநாள் வந்தது காண் அக்கினியே
தருவேன் உனக்கு வரம் தாட்டீகன் வந்தவுடன்
அமர்ந்து நீ போனால் அதிகப்பலன் உண்டாகும்
வி=அவர் என்னைக் காணவருவேன் என்று சொன்னநாள் மிகவும் நெருங்கி வந்துவிட்டது அக்னி பகவானே
நான் உனக்கு நற்கதி அடையும் பாக்கியத்தை வாங்கித் தருகின்றேன் திறமையுள்ள திருமால் வந்தவுடன்
திருமால் வரும்வரை நீ இங்கே இருந்து விட்டு சென்றால் உன்பாவம் தீர்க்கப்பட்டு சீக்கிரம் நற்கதி கிடைக்கும்
==
சுமந்த பறுவத்தின் சுகம் பெற்று நீவாழ்வாய்
என்று மகர மாது எரியை மிகப் கண்டு உளறி
வி=அக்னி பகவானே நீ உனக்குள் கொண்டிருக்கும் வெப்பத்தை நல்ல காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்தி நற்பேர் பெறுவாய்
இதுபோன்று பொன்மகர லெட்சுமி ஆனவள் அக்னி பகவானைப் பார்த்து நாராயணர் என்று தெரியாமல் புலம்பிளாள்
==
நின்று மயங்குவதை நெடிய திருமால் அறிந்து
அனலை மிக உள்ளடக்கி ஆதி உருக்காட்டி
வி=தன நிலை மறந்த நிலையில் மனம் தளர்வதை நெடியமால் நாராயணர் அறிந்தபடியால்
சூரியசக்தியை உள் அடக்கி சூரிய நாராயணர் தன்னுடைய ஆதி நாராயணர் திருவடிவத்தைக் காட்டினார்
==

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக