நான் உனக்குச் செய்யும் நன்றி மிகக்கேளு
வி=நன்றி மறவாத நான் உனக்கும் கடமைப்பட்டுள்ள காரணத்தால் நான் செய்யப் போகின்ற நன்றிக் கடனை கூறுகின்றேன் கவனமாகக் கேள்
==
இத்தனை நாளும் எனைச் சுமந்து பாடுபட்டாய்
புத்திரனாய் நீயெனக்குப் பெரியதெய்வ உயிரில்
பிறந்து புவிமீதில் பின்னுஞ் சில நாட்கழித்து
சிறந்த முகூர்த்தமதில் சேர்த்தே உனையெடுத்து
==
இத்தனை நாளும் எனைச் சுமந்து பாடுபட்டாய்
புத்திரனாய் நீயெனக்குப் பெரியதெய்வ உயிரில்
பிறந்து புவிமீதில் பின்னுஞ் சில நாட்கழித்து
சிறந்த முகூர்த்தமதில் சேர்த்தே உனையெடுத்து
வி=என் அன்புக்குரிய அவதாரச் சடலமே ஆறுயுகமாக என்னை சுமந்துக் கொண்டு அலையோ அலை என்று அலைந்து திரிந்தாய்
ஆகையால் நீ எனக்கு மகனாக என்னுடைய சான்றோர்கள் இனத்தில் தெய்வலோக சம்பூரணத்தேவனுடைய உயிரோடு
பூலோகத்தில் மனித பிறவியாக பிறந்து பூலொக வாழ்க்கை வாழ்ந்து அதன் பிறகு சற்றி நாட்கள் கழிந்த பிறகு
மிகவும் சிறப்புடைய நல்லதொரு சுபமுகூர்த்த நாளில் நான் வந்து உன்னை என்னோடு சேர்த்து எடுத்துக் கொள்வேன்
==
உந்தனக்குப் புத்தி உபதேசங்கள் உரைத்து
ஆகையால் நீ எனக்கு மகனாக என்னுடைய சான்றோர்கள் இனத்தில் தெய்வலோக சம்பூரணத்தேவனுடைய உயிரோடு
பூலோகத்தில் மனித பிறவியாக பிறந்து பூலொக வாழ்க்கை வாழ்ந்து அதன் பிறகு சற்றி நாட்கள் கழிந்த பிறகு
மிகவும் சிறப்புடைய நல்லதொரு சுபமுகூர்த்த நாளில் நான் வந்து உன்னை என்னோடு சேர்த்து எடுத்துக் கொள்வேன்
==
உந்தனக்குப் புத்தி உபதேசங்கள் உரைத்து
வி=நீ பூலோகத்தில் எப்படி வாழவேண்டும் என்கிற புத்திமதியும் ஆலோசனைகளையும் கூறி அற்புதமாக நடத்துவேன்
==
எந்தன் துயரம்மாற்ற யுகச்சோதனைக்கு அனுப்பி
உந்தன் துயர்மாற்றி யுகத்துயரமும் மாற்றி
எந்தன் துயரம் மாற்றி ஈசர் துயர் மாற்றி
==
எந்தன் துயரம்மாற்ற யுகச்சோதனைக்கு அனுப்பி
உந்தன் துயர்மாற்றி யுகத்துயரமும் மாற்றி
எந்தன் துயரம் மாற்றி ஈசர் துயர் மாற்றி
வி=எனக்கு ஏற்பட்ட எல்லா விதமான துயரச் சம்பவங்களையும்
மாற்றி அமைக்க உன்னை பூலோக சோதனைக்கு அனுப்பி
உன்னுடைய துயரமான சம்பவங்களையும் இந்த உலகத்திற்கு கலியனால் ஏற்பட்ட துயர சம்பவத்தையும் மாற்றி
என்னுடைய கவலைகளை எல்லாம் இல்லாமல் ஆக்கி கைலையில் இருக்கின்ற சிவனுடைய கவலைகளையும் மாற்றி
==
கலியை அறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து
சலிவில்லாத் தர்ம தங்க நவரத்தினபதி
மாற்றி அமைக்க உன்னை பூலோக சோதனைக்கு அனுப்பி
உன்னுடைய துயரமான சம்பவங்களையும் இந்த உலகத்திற்கு கலியனால் ஏற்பட்ட துயர சம்பவத்தையும் மாற்றி
என்னுடைய கவலைகளை எல்லாம் இல்லாமல் ஆக்கி கைலையில் இருக்கின்ற சிவனுடைய கவலைகளையும் மாற்றி
==
கலியை அறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து
சலிவில்லாத் தர்ம தங்க நவரத்தினபதி
வி=பூலோகத்தை ஆட்டிப் படைக்கின்ற கலியை அடியோடு அழித்து என்ன நடக்குமோ என்று கனவு காணும் பயங்கள் எல்லாம் தீர்த்து
எந்த விதமான சஞ்சலங்களும் இல்லாதபடி தர்மயுகமாக தங்கத்தால் அமைக்கப்பட்ட நவரெத்தின மாளிகை உனக்குத் தருவேன்
==
எந்த விதமான சஞ்சலங்களும் இல்லாதபடி தர்மயுகமாக தங்கத்தால் அமைக்கப்பட்ட நவரெத்தின மாளிகை உனக்குத் தருவேன்
==
முத்து நவரத்தின முடியுனக்கு நானருளி
வி=முத்துக்களாலும் நவரெத்தின கற்களாலும் ஜொலிக்கின்ற என் திருமுடியை நான் உனக்கு அன்பளிப்பாகத் தருவேன்
(அவதார உடலுக்கு வரம் கொடுக்கிறார்)
==
எத்திசையும் மெய்க்க ஏற்றமனு அன்போர்கள்
(அவதார உடலுக்கு வரம் கொடுக்கிறார்)
==
எத்திசையும் மெய்க்க ஏற்றமனு அன்போர்கள்
வி=எல்லா திசையில் உள்ள நேர்மையாக வாழ்ந்த மக்கள் உன்னைச் சுற்றி மெய்மறந்த நிலையில் இருப்பார்கள்
==
கட்டியங் கூறிக் காச்சிட்டு உன்தனக்கு
==
கட்டியங் கூறிக் காச்சிட்டு உன்தனக்கு
வி=உன்னைத் தகப்பனாக ஏற்றுக் கொண்டு உன்னைப் போற்றி புகழ்ந்து பாடி காட்சியாக உன்முன் நிற்பார்கள்
==
எட்டுத்திசை போற்ற ஏற்றகுடை ஒன்று தந்து
அரசாண்டு நீயும் அழியாத் திருவுளம்போல்
==
எட்டுத்திசை போற்ற ஏற்றகுடை ஒன்று தந்து
அரசாண்டு நீயும் அழியாத் திருவுளம்போல்
வி=எட்டு திசையில் உள்ள நற்கதி அடைந்த மக்களும் உன்னை புகழ்ந்து பாட உனக்கு ஒரு குடையின் கீழ் ஆட்சிப் பொறுப்பை தந்து
வைகுண்ட நாராயணராக நீ அமர்ந்து ஆட்சி செய்வாய் மரணம் இல்லை என்னைப் போல் உங்களுக்கும் மரணம் கிடையாது
==
வீரசான்றோர் சூழ வீரக் கொடிநிறுத்தி
வைகுண்ட நாராயணராக நீ அமர்ந்து ஆட்சி செய்வாய் மரணம் இல்லை என்னைப் போல் உங்களுக்கும் மரணம் கிடையாது
==
வீரசான்றோர் சூழ வீரக் கொடிநிறுத்தி
வி=மரணத்தை ஜெயித்த வெற்றி சான்றோர் மக்களோடு வெற்றி கொடி நாட்டி அன்பு கொடியை பறக்க விடுவேன்
==
செங்கோர்க்கு தர்மச் சிவசெங்கோலும் அருளி
எங்கோல் அரசும் என்நாமச் சக்கரத்தால்
==
செங்கோர்க்கு தர்மச் சிவசெங்கோலும் அருளி
எங்கோல் அரசும் என்நாமச் சக்கரத்தால்
வி=செங்கோல் ஆட்சி புரிவதற்காக தர்ம சித்தனையுள்ள சிவபெருமானுடைய செங்கோலையும் உனக்கு தந்து
நான் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த நாட்டையும் என் உரிமையையும் என்னுடைய திருநாமத்தையும் என் சங்கு சக்கரத்தால்
==
சீமை ஐம்பத்தாறும் உன்சொல் ஒன்றுக்குள் ஆக்கி
பூமுகச் சிங்காசனமும் பொன்முகச் சிங்காசனமும்
கோமுகச் சிங்காசனமும் குணமுகச் சிங்காசனமும்
நான் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த நாட்டையும் என் உரிமையையும் என்னுடைய திருநாமத்தையும் என் சங்கு சக்கரத்தால்
==
சீமை ஐம்பத்தாறும் உன்சொல் ஒன்றுக்குள் ஆக்கி
பூமுகச் சிங்காசனமும் பொன்முகச் சிங்காசனமும்
கோமுகச் சிங்காசனமும் குணமுகச் சிங்காசனமும்
வி=பூலோகத்திலுள்ள ஐம்பத்தாறு தேசத்தில் உள்ள அனைத்து மக்களையும் உன்னுடைய அரசாட்சிக்குள் ஆக்கி
தாமரைப்பூ அமைப்பில் உள்ள சிம்மாசனமும் தங்க திருமேனியான அமைப்பில் உள்ள சிம்மாசனமும்
பசுமாட்டின் உருவ அமைப்புக் கொண்ட சிம்மாசனமும் பல அவதார முகம் கொண்ட சிம்மாசனமும் உனக்குத் தருவேன்
==
தாமரைப்பூ அமைப்பில் உள்ள சிம்மாசனமும் தங்க திருமேனியான அமைப்பில் உள்ள சிம்மாசனமும்
பசுமாட்டின் உருவ அமைப்புக் கொண்ட சிம்மாசனமும் பல அவதார முகம் கொண்ட சிம்மாசனமும் உனக்குத் தருவேன்
==
மாமுகச் சிங்காசனமும் மயில்முகச் சிங்காசனமும்
அன்னமுகச் சிங்கா சனமீதோ டாகவேதான்
அன்னமுகச் சிங்கா சனமீதோ டாகவேதான்
வி=மகா விஷ்ணுவாக ஐந்து தலை நாகத்தின் மேல் பள்ளி கொள்ளும் சிம்மாசனமும் மயில் முக அமைப்பைக் கொண்ட சிம்மாசனமும்
அன்னப் பறவையின் முக அமைப்பைக் கொண்ட சிம்மாசனமும் இதுபோன்ற உயர்வான சிம்மாசனத்தை உனக்கு தந்து
==
பொன்னம்பலம் போல் பெரிய சிங்காசனந்தான்
முப்பத்திரெண்டும் முழுதும் உனக்கு அருளி
அன்னப் பறவையின் முக அமைப்பைக் கொண்ட சிம்மாசனமும் இதுபோன்ற உயர்வான சிம்மாசனத்தை உனக்கு தந்து
==
பொன்னம்பலம் போல் பெரிய சிங்காசனந்தான்
முப்பத்திரெண்டும் முழுதும் உனக்கு அருளி
வி=பொன்னுலகமாகிய கைலாய மலையில் இருப்பது போன்று மிகப்பெரிய தங்கத்தால் ஆன சிம்மாசன மணிமண்டபம் அமைத்து
மனதை மானத்தோடு கட்டிக் காக்கும் ஒழுக்க நெறிகளான முப்பத்தி இரண்டு அறங்களையும் முழுமையாக உனக்கு தந்து
==
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க உந்தனக்கு
தருவேன்நான் உன்னுடைய தாயார்பேர் ஆணையதாய்
மனதை மானத்தோடு கட்டிக் காக்கும் ஒழுக்க நெறிகளான முப்பத்தி இரண்டு அறங்களையும் முழுமையாக உனக்கு தந்து
==
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க உந்தனக்கு
தருவேன்நான் உன்னுடைய தாயார்பேர் ஆணையதாய்
வி=அழிவில்லாமல் இருப்பதற்காக செப்பேட்டில் பதிக்கப்பட்ட என்னுடைய பஞ்ச பாண்டவ சீசர்களை உனக்கு பணிவிடைச் செய்ய
என் அன்பு பரிசாக உனக்குத் தருவேன் இவை அனைத்தும் உண்மை உன் தாயாகிய லெட்சுமி மேல் ஆணையிட்டு கூறுகின்றேன்
==
என்றையா நாதன் எடுத்தவர்ககே உரைக்க
நன்றெனவே வானோர் நற்பூரணனைக் கொண்டாடி
என் அன்பு பரிசாக உனக்குத் தருவேன் இவை அனைத்தும் உண்மை உன் தாயாகிய லெட்சுமி மேல் ஆணையிட்டு கூறுகின்றேன்
==
என்றையா நாதன் எடுத்தவர்ககே உரைக்க
நன்றெனவே வானோர் நற்பூரணனைக் கொண்டாடி
வி=இவ்வாறு உறுதி மொழியாக சத்திய வாக்கு கொடுத்து தான் எடுத்த தன்னுடைய அவதார உடலுக்கு அருளுரைக் கூறினார்
நல்ல செய்திகளைக கேட்ட தேவ முனிவர்கள் எல்லோரும் நல்லது என்று சம்பூரணத்தேவனுடைய நல்ல காலத்தையும் நினைத்து
==
பேறுபெத்த சென்மம் பிராணன் இது நன்றெனவே
பூர்வத்திலுள்ள பூசாந்திரம் இவ்வளமை
நல்ல செய்திகளைக கேட்ட தேவ முனிவர்கள் எல்லோரும் நல்லது என்று சம்பூரணத்தேவனுடைய நல்ல காலத்தையும் நினைத்து
==
பேறுபெத்த சென்மம் பிராணன் இது நன்றெனவே
பூர்வத்திலுள்ள பூசாந்திரம் இவ்வளமை
வி=சம்பூரணத்தேவன் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காக பிறவியும் உயிரும் பெற்றுள்ளது மிகவும் நல்ல காரியமே ஆகும்
ஆதி காலத்தில் பூர்வீக வழக்கமாக இருந்த பூசாந்தி என்று சொல்லக் கூடிய யாகம் வளர்த்து செய்யும் புனித தன்மையின் பலனை இதுவாகும்
ஆதி காலத்தில் பூர்வீக வழக்கமாக இருந்த பூசாந்தி என்று சொல்லக் கூடிய யாகம் வளர்த்து செய்யும் புனித தன்மையின் பலனை இதுவாகும்
என்னதவம் செய்தாரோ இத்தேவன் தாய்தகப்பன்
பொன்னப்ப நாரணர்க்கு பிள்ளையென வந்துதிக்க
நாரணரைப் பெறவே நல்ல தசரதரும்
பொன்னப்ப நாரணர்க்கு பிள்ளையென வந்துதிக்க
நாரணரைப் பெறவே நல்ல தசரதரும்
வி=சம்பூரணத்தேவன் இந்த சக்திகளை பெறுவதற்கு இவருடைய தாய் தகப்பன் எப்படிப்பட்ட உயர்ந்த தவத்தை செய்தார்களோ
தங்கத் திருமேனியை உடைய நாராயண பரம் பொருளுக்கு
பிள்ளையாக அவதரிக்க வேண்டுமானால் அது முன் ஜென்ம பலனே
கிரேதா யுகத்தில் நாராயணரை
(இராமர்) பிள்ளையாக பெறுவதற்கு அயோத்தி மாமன்னராகிய தசரதர் தவம் இருந்தார்
==
பூரணமாய் நின்று தவம் புகன்றிடவே கூடாது
பன்னீராயிரம் வருசம் பாரத் தவசு பண்ணி
தங்கத் திருமேனியை உடைய நாராயண பரம் பொருளுக்கு
பிள்ளையாக அவதரிக்க வேண்டுமானால் அது முன் ஜென்ம பலனே
கிரேதா யுகத்தில் நாராயணரை
(இராமர்) பிள்ளையாக பெறுவதற்கு அயோத்தி மாமன்னராகிய தசரதர் தவம் இருந்தார்
==
பூரணமாய் நின்று தவம் புகன்றிடவே கூடாது
பன்னீராயிரம் வருசம் பாரத் தவசு பண்ணி
வி=தன்னுடைய தவம் நிறைவேறுவதற்காக எடுத்துக் கொண்ட முழுமையான முயற்சியை புகழ்வதற்கு வார்த்தைகளே கிடையாது
அயோத்தியை ஆண்ட தசரத மன்னர் பன்னிரெண்டு ஆயிரம் ஆண்டுகள் வனத்தில் கடுமையான தவம் மேற்கொண்டார்
==
முன்னுறு வாரமதாய் உலகளந்தோர் வேசமதில்
எண்ணாயிரத்தில் எடுத்தார் ஒரு ராமர் உரு
அயோத்தியை ஆண்ட தசரத மன்னர் பன்னிரெண்டு ஆயிரம் ஆண்டுகள் வனத்தில் கடுமையான தவம் மேற்கொண்டார்
==
முன்னுறு வாரமதாய் உலகளந்தோர் வேசமதில்
எண்ணாயிரத்தில் எடுத்தார் ஒரு ராமர் உரு
வி=தசரதரின் தவத்தின் காரணமாக தான் விருப்பத்தொடு ஏற்று நடந்த விஷ்ணுவின் முன்னூறு வேடங்களில் ஒன்று ராமர்
இராமர் அவதாரம் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டதாகும் தன்னுடைய எண்ணாயிரம் வேடங்களில் ஒன்றாக இராமர் உருவம் கொண்டார்
==
கண்ணாளர் தன்தனக்கு கற்பகம் போலித்தேவன்
மதலையாகப் பிறந்து வையகத்தை ஆள்வானென்று
இராமர் அவதாரம் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டதாகும் தன்னுடைய எண்ணாயிரம் வேடங்களில் ஒன்றாக இராமர் உருவம் கொண்டார்
==
கண்ணாளர் தன்தனக்கு கற்பகம் போலித்தேவன்
மதலையாகப் பிறந்து வையகத்தை ஆள்வானென்று
வி=திரேதா யுகத்தில் திருமால் கண்ணன் அவதாரம் எடுக்கும் போது சம்பூரணத்தேவன் அவருக்கு கிடைத்த கற்பக விருட்சம்
மறைந்து போகும் சம்பூரணத்தேவன் அபூர்வ குழந்தையாக பூலோகத்தில் பிறந்து அவதார உடலில் ஆட்சி செய்வான் என்ற விதிப்படி
==
கதலிவாய் நாதன் கற்பித்தார் இப்படியே
மறைந்து போகும் சம்பூரணத்தேவன் அபூர்வ குழந்தையாக பூலோகத்தில் பிறந்து அவதார உடலில் ஆட்சி செய்வான் என்ற விதிப்படி
==
கதலிவாய் நாதன் கற்பித்தார் இப்படியே
வி=பச்சை கற்பூரம் போல் இருக்கின்ற பச்சைமால் நாராயணர் விவரமாக நடக்கப் போவதைப் பற்றி கூறுனார்
==
==
ஆருபெற்ற பேறும் அல்ல இப்பேறு இப்பலந்தான்
பேறுபெற்றவர் இவர்தான் பிறந்த இனமதிலே
நாம்பிறந்தாலும் பெரிய நலங்கிட்டும் என்று சொல்லி
தாம்பிறப்போம் என்று சான்றோராய்த் தான்பிறந்தார்
பேறுபெற்றவர் இவர்தான் பிறந்த இனமதிலே
நாம்பிறந்தாலும் பெரிய நலங்கிட்டும் என்று சொல்லி
தாம்பிறப்போம் என்று சான்றோராய்த் தான்பிறந்தார்
வி=இதுவரை உள்ள எவருமே அடையாத மிக உயர்ந்த நிலை சம்பூரணத்தேவனுக்குக் கிடைத்துள்ளது
பதினான்கு உலகங்களிலும் மிகவும் பாக்கியம் பெற்றவர் இந்த சம்பூரணத்தேவன் தான் எனவே அவர் பிறக்கு இனத்தில்
தெய்வலோகத்தைச் சேர்ந்த வானவர்கள் நாம் எல்லோரும் போய் பிறந்தால் நமக்கு நல்லது நட்க்கும் என்று பேசிக் கொண்டு
நல்ல முடிவெடுத்து பூலோகப் பிறவி எடுப்போம் என்று சான்றோர் இனத்தில் மானிடப் பிறவி எடுத்தார்கள்
==<>==
பதினான்கு உலகங்களிலும் மிகவும் பாக்கியம் பெற்றவர் இந்த சம்பூரணத்தேவன் தான் எனவே அவர் பிறக்கு இனத்தில்
தெய்வலோகத்தைச் சேர்ந்த வானவர்கள் நாம் எல்லோரும் போய் பிறந்தால் நமக்கு நல்லது நட்க்கும் என்று பேசிக் கொண்டு
நல்ல முடிவெடுத்து பூலோகப் பிறவி எடுப்போம் என்று சான்றோர் இனத்தில் மானிடப் பிறவி எடுத்தார்கள்
==<>==
திருமாலின் அவதார உடலுக்கு வரம் கொடுத்தல் பகுதி நிறைவுபெற்றது
=<>=
சம்பூரணத்தேவன் பூலோக பிறப்பு
தொடர்ச்சி.1
சம்பூரணத்தேவன் பூலோக பிறப்பு
தொடர்ச்சி.1
அவர்கள் பிறக்க ஆனதெய்வப் புரணனை
திவசமது பார்த்துச் செய்தார் பிறவியது
செய்யச் சிவமும் சிவவேதனும் மகிழ்ந்து
திவசமது பார்த்துச் செய்தார் பிறவியது
செய்யச் சிவமும் சிவவேதனும் மகிழ்ந்து
வி=தெய்வலோக முனிவர்கள் எல்லோரும் சான்றோர் இனத்தில் பிறந்த பிறகு தெய்வலோக சம்பூரணத்தேவனை
(முத்துகுட்டி சுவாமியாக)
நான் நட்சத்திரங்கள் எல்லாம் பார்த்து பிறப்பதற்கான நல்ல நேரத்தை கணக்கிட்டு நல்ல சுபலக்கனத்தில் பிறவி செய்ய வேண்டும் என்று சிவனும் பிரம்மாவும் மிகவும் சந்தோசத்தோடுக் காணப்பட்டனர்
==
வையம் அளந்த மாலும் பிறவி செய்தார்
கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்க
தர்மச் சம்பூரணனைத் தரணிப் பிறவி செய்தார்
(முத்துகுட்டி சுவாமியாக)
நான் நட்சத்திரங்கள் எல்லாம் பார்த்து பிறப்பதற்கான நல்ல நேரத்தை கணக்கிட்டு நல்ல சுபலக்கனத்தில் பிறவி செய்ய வேண்டும் என்று சிவனும் பிரம்மாவும் மிகவும் சந்தோசத்தோடுக் காணப்பட்டனர்
==
வையம் அளந்த மாலும் பிறவி செய்தார்
கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்க
தர்மச் சம்பூரணனைத் தரணிப் பிறவி செய்தார்
வி=அவர்களோடு உலகத்தை அளந்த மாயப்பெருமாளும் சேர்ந்து சம்பூரணத் தேவனை பூலோகத்தில் பிறவி செய்தார்கள்
அறுயுகமாக அவதாரம் எடுத்த உடலுக்கு வீடு பேறு கொடுப்பதற்காக கலியுகத்தில் மனிதப்பிறவி எடுக்கச் செய்ய
தர்ம புண்ணியவானாகிய சம்பூரணத் தேவனுடைய உயிரை அவதார உடலில் சான்றோர் இனத்தில் பிறவி செய்தார்
அறுயுகமாக அவதாரம் எடுத்த உடலுக்கு வீடு பேறு கொடுப்பதற்காக கலியுகத்தில் மனிதப்பிறவி எடுக்கச் செய்ய
தர்ம புண்ணியவானாகிய சம்பூரணத் தேவனுடைய உயிரை அவதார உடலில் சான்றோர் இனத்தில் பிறவி செய்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக