வியாழன், 26 ஏப்ரல், 2018

கலியை அழிக்க சிவனும் திருமாலும் ஆலோசனை

நல்ல தாராயணரும் நாடுஞ் சிவனாரே
வல்லப் பொருளே மறைக் காணாத ஒவியமே
வி=நன்மையான செயல்கள் மட்டுமே நடக்க வேண்டும் என்கிற நாராயணர் மைத்துனராகிய சிவபெருமானைப் பார்த்து
சகல வல்லமைகளும் பொருந்திய சிறப்புக்குரிய பரம்பொருளே எந்த வேத ஆகமங்களாலும் விவரிக்க முடியாத சித்திரமே
==
காளிச் சிறைதான் கவிழ்ந்திருக்க ஞாயம் வந்தால்
ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம் வாய்க்கும்
வி=சக்தியின் வடிவாகிய பத்ரமாகாளிக்கே மீளாச்சிறையில் அடைப்பட்டு இருக்கக் கூடிய நிலை வந்து விட்டது என்றால்
கடலால் சூழப்பட்ட இந்த பூலோகத்தில் வாழ்கின்ற மானிட மக்களுக்கு எப்படி நிம்மதியான வாழ்க்கை அமைய முடியும்
==
முதற்தான் கலியை முடிக்கப் பரகாளி
விதத்முள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்க
பார்த்து நாம் இங்கு இருக்கப் படுமோ காண் ஈசுரரே
வி=முதன் முதல் வேலையாக அநியாயக் கலியை அடியோடு அழிக்க அரும்பாடு பட வேண்டும் ஏனென்றால் பத்ரமாகாளி
வித்தியாசமான முறையில் மிகக் கொடுரமான சிறையில் அக்னியால் சுழப்பட்டு ஆக்ரோஷமாய் சிறையில் இருப்பது சரியல்ல
நாம் அனைவரும் பார்த்துக் கொண்டு அதற்கேற்ற பரிகாரம் எதுவும் தேடாமல் இருப்பது நல்லதல்ல ஈஸ்வர பெருமானே
==
சாற்று நீர் இன்னதென்று சத்தி கொண்ட ஈசுரரே
உடனே தான் ஈசர் உரைக்கிறார் அன்போரே
வி=என்ன செய்யலாம் என்கிற முடிவை நீர்தான் சொல்ல வேண்டும் பராசக்தியாகிய பார்வதியோடு இருக்கும் ஈஸ்வரரே என்றார்
மகாவிஷ்ணுவின் வார்த்தைகளை மறுக்காமல் மகாதேவன் மாற்றுக் கருத்து இல்லாதவராக கூறுகின்றார் அன்பர்களே
==
கடனோ காண் என்னோடு கலங்கு மொழி பேசுவது
நானோ தடுத்தேன் நாட்டுக் கலி தீட்டறுக்க
வி=திருமாலே தடக்கின்ற செயல்களுக்கு நான் ஏதாவது கடனாளி போல் கடமைப்பட்டு இருக்கின்றேனா நீங்கள் பேசுவதேப் பார்த்தால்
உலகத்தையை உலுக்கிக் கொண்டிருக்கின்ற கலி நீசனை உருகுலைய வைக்கக்கூடாது என்று நானா தடுத்துக் கொண்டிருக்கின்றேன்
==

கலியை கழிக்க சிவனும் திருமாலும் ஆலோசனை
தொடர்ச்சி.2
ஏனோ காண் மைத்துனரே என்னோடு பேசுவது
எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு
எப்போ தருவீரென்று எண்ணி மிக வாடுறோமே
வி=எதற்காக நீங்கள் என்னிடம் அனுமதி கேட்கின்றீர்கள்
மைத்துனரே என்னிடம் இதைப் பற்றி ஆலோசனை கேட்க வேண்டாம்
நீர் உம்முடைய சூடசும தந்திரத்தால் கலியை கருகவைத்து எங்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று நல்ல காலக் கட்டத்தை எதிர்பார்த்து
வழிமேல் விழி வைத்துவர்களாக உம்மை எதிர்நோக்கி அல்லவா நம்பிக்கையோடு மிகவும் நாட்டம் கொண்டவர்களாம் இருக்கிறோம்
==
தீட்டை மிகக் கழித்துச் சிவ ஞான முத்தி தந்து
கயிலை வீட்டை எப்போ நன்றாய் விளக்குவீர் என்றுமிக
வி=கலியனால் கைலாமத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை கரியமால் நாராயணரே கலியை அழித்து சிவலோகம் ஒளிமயமாக விளங்க
கைலாய மலையில் வாழும் எங்கள் அனைவரையும் எப்போது பரிசுத்தமடைய செய்வீர் என்று சொல்லும் பச்சைமால் நாராயணரே
==
தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும்
குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ
வி=உம்மை நோக்கி பரிதவித்தபடி நாங்களக் படும் பாடுகளை பற்றி நீர் அறியாமல் இருப்பது நியாயம் ஆகுமா
வேதனைகளை எல்லாம் வெளிக்குத் தெரியாமல் அடக்கிக் கொண்டு ஆனந்தமாய் இருப்பதுபோல் அவதிப்படுவதை நீர் பார்க்க வில்லையா
==
என்றே ஏகாபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள்
நன்று என்று ஆகட்டும் எனவே நாரணருங் கொண்டாடி
வி=பரமசிவன் தன்னுடைய மனதில் இருந்த சித்தனைகளை எல்லாம் மைத்துனரிடம் சொல்லி விட்டார் உடனே நாராயணப் பரம்பொருள்
சிவனை நல்லது தான் நீர் நினைக்கின்ற படியே ஆகக்கடவது என்று அரி அரி நாராயணரும் அகம் மகிழ்ந்தவராக கூறினார்
==

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக