வியாழன், 26 ஏப்ரல், 2018

வைகுண்டர் கேள்விக்குத் திருமால் பதில்

ஆறு வருசம் அதிகத் தவம் புரிந்தால்
வாறு மேல் என்ன வகுப்பீர் காண் அய்யாவே
வி=வைகுண்டராகிய நான் ஆறு வருடங்கள் கடுந்தவம் செய்து முடித்து வெற்றிப் பெற்று விட்டால் அதன் பிறகு
தவ வாழ்க்கை முடிந்த பிறகு என்ன நடக்கும் என்ன நடத்துவீர் என்று சொல்லும் அய்யாவே என்றார்
==
அப்போது நாராயணர் அன்பாய் அகமகிழ்ந்து
செப்புகிறார் நல்ல திருமகற்கு அன்போரே
வி=வைகுண்டரின் நம்பிக்கையை உணர்ந்த நாராயணர் தன் மகன் மேல் அன்பு கொண்டு உள்ளம் அக மகிழ்ந்து
என்ன என்ன காரியங்கள் பூலோகத்தில் நடக்கும் என்று திருமாலின் திருவளர் செல்வனுக்கு கூறுகின்றார் அன்பர்களே
==
அதிகத்தவசு ஆண்டு ஆறு தான் கழித்தால்
இதின் மேல்நடப்பு இயம்பக்கேன் என்மகனே
வி=மகனே நடந்து கொண்டிருக்கின்ற இந்த கலியுகத்தில் நீ ஆறு ஆண்டுகள் கடுந்தவம் செய்து முடித்தால்
அதன் பிறகு என்ன நடக்கும் என்று விவரமாகக் கூறுகின்றேன் கேட்டுக் கொள்வாயாக என் மகனே என்றார்
==
இம்மூணு தவமும் இயல்பாய் நிறைவேறி
மும் மூவருக்கும் முதல்வனாய் வந்தாக்கால்
நான் ஆனாய்நீயும் தலைவனும்நீ என்மகனே
வி=நீ நான் கூறிய ஒழுங்கு முறைப்படி மூன்று தவங்களை எந்த தன்மையும் மாறாமல் நிறைவேற்றிய பிறகு
சிறப்பான முறையில் உலகத்தை இயக்கி கொண்டிருக்கின்ற முப்பொருளும் சேர்ந்து ஒரு பொருளாய் வந்தவுடன்
நீ நானாக ஆவாய் நாராயணப் பரம்பொருளும் நீயே உலகத்தை காக்கும் தலைவனும் நீயே என் மகனே என்றார்
==
சாணாரின் நாயகமே சாதித்தலைவன் நீயே
எந்தப்படிநீ எண்ணி நினைத்ததெல்லாம்
அந்தப்படி செய்து அவனிதனிலே சிலநாள்
வி=சான்றோர் குல மக்களின் நாயகனாக நீ விளங்கி சான்றோர்களை ஆட்சி செய்யும் தலைவனும் நீயே என் மகனே என்றார்
நீ எப்படி எல்லாம் நினைக்கின்றாயோ அப்படி எல்லாம் நினைக்கின்ற காரியங்கள் இயல்பாய் நடக்கும்
இயல்பான முறையில் இனிமையான காரியங்களை செய்து முடித்து விட்டு கலியுக பூமியில் கொஞ்ச நாட்கள்

சொந்த விளையாட்டு தொல்புவியில் கொண்டாடி
சிந்தாத நன்மையோடு செகத்தில்இரு என்மகனே
அதின் முன்னாக அன்னீத மாபாவி
ஏது வினை செய்தாலும் எண்ணம் வையாதே மகனே
வி=உனக்குப் பிடித்தமான திருவிளையாடல்களை பழமை வாய்ந்த இந்த பூமியில் விளையாடி சந்தோசமாக இருந்து விட்டு
அழியாத சிறப்பு மிக்க நன்மைகளைப் பெற்றபடி நீ இந்த பூமியில் கொஞ்ச நாட்கள் இருக்க வேண்டும் மகனே
உன்னுடைய தவம் நிறைவேறும் முன்பாக அநியாயம் செய்கின்ற கலிநீசப் பாவி அனவன் உன்னை
கலியுக மக்கள் எப்படிப்பட்ட துன்பங்களைத் தந்து கொடுமைச் செய்தாலும் கர்ம காரியத்தைப் பற்றி சிந்திக்காதே மகனே
==
தாழ்ந்து இரு என்மகனே சட்டைக்குள்ளே பதுங்கி
சார்ந்திரு என்மகனே தனதில்மிக நினைத்து
கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே
வி=பொறுமை என்கிற பணிவு நிலையில் இரு என் மகனே ஐம்புலன்களையும் அடக்கி அமைதியாக இரு மகனே
சாதுவான குணத்தோடு எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருமகனே தனிமையே இனிமை என்று நினைத்துக்கொள்
எந்த சூழ்நிலையிலும் நீ உன் கோபத்தை வெளிக்காட்டாதே எந்த சூழ்நிலையிலும் நீ வாய் விட்டு சிரிக்காதே
==
பாவத்தைக் காணாதே பாராக்கிரமம் காட்டாதே
ஆக்கிரமம் எல்லாம் அடக்கி இரு என்மகனே
தாக்கிரவன் ஆகிடினும் சற்றும் பகையாதே
எல்லாம் உன்னருகே இருந்து கேட்டுக் கொள்வேன் நான்
வி=கலி மன்னனால் நடத்தப்படும் பாவச் செயல்களை கண் கொண்டு பார்க்காதே கோபம் கொண்டு உன் வல்லமையைக் காட்டி விடாதே
கலியுகத்தில் நடக்கும் அநியாயத்தை பொறுமையோடு ஆக்கிரமித்துக் கொண்டு அடக்க ஒடுக்கமாக இரு என் மகனே
உனக்கு எதிரியாக இருந்து உன்னை துன்புறுத்தித் தாக்கியவனாக இருந்தாலும் கோபப்படாமல் பொறுமையாக இரு
நடுதீர்ப்பு வழங்கும் போது நான் உன்னோடு இருந்து வினையை விதைத்தவனுக்கு வினையைக் கொடுப்பேன்
==
பொல்லாதார் ஆகிடினும் போதப் பகையாதே
வி=நீதி நேர்மை இல்லாதபடி பொறுக்க முடியாத செயல்களை செய்தவராக இருந்தாலும் உடனே தண்டனைக் கொடுக்காதே
==

வாரஞ் சொல்லாதே வழக்கு ஓரம் பேசாதே
சாரம் அறிந்து தானுரைநீ சொல்லுரைகேள்
ஆய்ந்து தெளிந்து அருளிநீ என்மகனே
வி=யாராக இருந்தாலும் நடுநிலை வாதியாக இருந்து உண்மையைச் சொல் யாருக்கும் பரிந்து பேசாதே
நீ பேசுகின்ற போது அந்த இடத்தின் சாராம்சம் என்ன என்பதை தெளிவாகத் தெரிந்துக் கொண்டு அதற்கேற்றபடி பதில் சொல்
எந்த ஒரு காரியத்தையும் ஒரு தடவைக்கு பல தடவை ஆலோசனை செய்து தெளிவுடைந்த பிறகு நல்ல முடிவு எடுப்பாயாக
==
ஏந்துநீ தர்மம் இடறு நினையாதே
ஈனமில்லாததோடு எமக்காகும் சாதியின் மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே
வி=தர்மம் தழைக்க பாடுபட வேண்டுமே தவிர பொறுமை இழந்து எந்த விதமான தீங்கும் நடந்து விடக்கூடாது
எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமல் நீதி நேர்மையோடு என்னுடைய பிள்ளைகளாகிய சான்றோர் இன மக்கள் மேல்
பற்றுதல் கொண்டு அவர்கள் மானமாய் வாழ வேண்டும் என்று வலியுறுத்தி சந்தோசமாய் இரு என் மகனே
==
அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தி இரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சுது என்மகனே
வி=அன்பு வழி மக்களாகிய என்னுடைய சான்றோர் மக்களுக்காய் ஆன்மீக அறிவியல் அறிவைச் சொல்லிக் கொடுமகனே
தவம் செய்வதல்லாமல் தாண்டிப் போகலாகாது சான்றோர்கள் ஆன்மீக அறிவு பெற்றவுடன் தர்மயுகம் தோன்றும் மகனே
==
மகனே நான் உனது மனதுள் குடியிருந்து
சிவனே பொருந்தி செப்புவது உத்தரவே
துல்லிபம் காட்டேன் சூட்சமது காட்டேன்
வி=வைகுண்ட அவதாரம் எடுத்த என் மகனே நான் உன்னுடைய மனதாக இருந்து செயல்படுவேன் கவலைப்படாதே
மகனே சிவஞான சக்தியோடு உனக்குள் பொருந்தி இருந்து சொல்வதும் கட்டளை இடுவதும் நானே மகனே
நான் உனக்குள் செயல்படுவதை துல்லியமான தன்மையையும் சூழ்சுமமான தந்திரத்தையும் வேளியில் காட்டமாட்டேன்
==
நில்லு நினைவில்நீ சரித்துக் கொடுமகனே
பேயன் பைத்தியக்காரன் எனப்பேசி உன்னை
வி=நீ என் நினைவாகச் செயல்படும் போது நான் உன் நினைவாக மாற நீ மனதை சரி செய்து கொடு மகனே
கலியனுடைய புத்தி உள்ள மக்கள் உன்னைப் பார்த்து அறிவுக கேட்டவன் பைத்தியக்காரன் என்று வசை சொல்லி
==

கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே
பாவத்தைக் காணாதே பாராக்கிரமம் காட்டாதே
ஆக்கிரமம் எல்லாம் அடக்கி இரு என்மகனே
வி=எந்த சூழ்நிலையிலும் உன் கோபத்தை வெளிக்காட்டாதே எந்த சூழ்நிலையிலும் வாய் விட்டு சிரிக்காதே
கலி மன்னனால் நடத்தப்படும் பாவச் செயல்களை கண் கொண்டு பார்க்காதே கோபம் கொண்டு உன் வல்லமையைக் காட்டி விடாதே
கலியுகத்தில் நடக்கும் அநியாயத்தை எல்லாம் பொறுமையோடு ஆக்கிரமித்துக் கொண்டு அடக்க ஒடுக்கமாக இரு என் மகனே
==
தாக்கிரவன் ஆகிடினும் சற்றும் பகையாதே
எல்லாம் உன்னருகே இருந்து கேட்டுக் கொள்வேன் நான்
பொல்லாதார் ஆகிடினும் போதப் பகையாதே
வி=உனக்கு எதிரியாக இருந்து உன்னை துன்பறுத்தித் தாக்கியவனாக இருந்தாலும் கோபப்படாமல் பொறுமையாக இரு
நடுதீர்ப்பு வழங்கும் போது நான் உன்னோடு இருந்து வினையை
விதைத்தவனுக்கு வினையைக் கொடுப்பேன்
நீதி நேர்மை இல்லாதபடி பொறுக்க முடியாத செயல்களை செய்தவராக இருந்தாலும் உடனே தண்டனைக் கொடுக்காதே
==
வாரஞ் சொல்லாதே வழக்கு ஓரம் பேசாதே
சாரம் அறிந்து தானுரைநீ சொல்லுரைகேள்
ஆய்ந்து தெளிந்து அருளிநீ என்மகனே
ஏந்துநீ தர்மம் இடறு நினையாதே
வி=யாராக இருந்தாலும் நடுநிலை வாதியாக இருந்து உண்மையைச் சொல் யாருக்கும் பரிந்து பேசாதே
நீ பேசுகின்ற போது அந்த இடத்தின் சாராம்சம் என்ன என்பதை தெளிவாகத் தெரிந்துக் கொண்டு அதற்கேற்றபடி பதில் சொல்
எந்த ஒரு காரியத்தையும் ஒரு தடவைக்கு பல தடவை ஆலோசனை செய்து தெளிவுடைந்த பிறகு நல்ல முடிவு எடுப்பாயாக
தர்மம் தழைக்க பாடுபட வேண்டுமே தவரி பொறுமை இழந்து எந்த விதமான தீங்கும் நடந்து விடக்கூடாது

ஈனமில்லாததோடு எமக்காகும் சாதியின் மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே
வி=எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமல் நீதி நேர்மையோடு என்னுடைய பிள்ளைகளாகிய சான்றோர் இன மக்கள் மேல்
பற்றுதல் கொண்டு அவர்கள் மானமாய் வாழ வேண்டும் என்று வலியுறுத்தி சந்தோசமாய் இரு என் மகனே
==
அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தி இரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சுது என்மகனே
வி=அன்பு வழி மக்களாகிய என்னுடைய சான்றோர் மக்களுக்காய் ஆன்மீக அறிவியல் அறிவைச் சொல்லிக் கொடுமகனே
தவம் செய்வதல்லாமல் தாண்டிப் போகலாகாது சான்றோர்கள் ஆன்மீக அறிவு பெற்றவுடன் தர்மயுகம் தோன்றும் மகனே
==
மகனே நான் உனது மனதுள் குடியிருந்து
சிவனே பொருந்தி செப்புவதும் உத்தரவே
துல்லிபம் காட்டேன் சூட்சமது காட்டேன்
நில்லு நினைவில்நீ சரித்துக் கொடுமகனே
வி=வைகுண்ட அவதாரம் எடுத்த என் மகனே நான் உன்னுடைய மனதாக இருந்து செயல்படுவேன் கவலைப்பாடாதே
மகனே சிவஞான சக்தியோடு உனக்குள் பொருந்தி இருந்து சொல்வதும் கட்டளை இடுவதும் நானே மகனே
நான் உனக்குள் செயல்படுவதை துல்லியமான தன்மையையும்
சூட்சுமமான தந்திரத்தையும் வெளியில் காட்டமாட்டேன்
நீ என் நினைவாகச் செயல்படும் போது நான் உன் நினைவாக மாற நீ மனதை சரி செய்து கொடு மகனே
==
பேயன் பைத்தியக்காரன் எனப்பேசி உன்னை
நீசக்குலங்கள் நின்னை அடிக்க வருவார்
வி=கலியனுடைய புத்தி உள்ள மக்கள் உன்னைப் பார்த்து அறிவுக் கெட்டவன் பைத்தியக்காரன் என்று வசை சொல்லி
கலி நீசக்குலமக்கள் உன்னுடைய அருமை பெறுமை தெரியாமல் அடித்து துன்புறுத்த வருவார்கள் என்பதால்
==

சரித்துக் கொடு மகனே சற்றும் கலங்காதே
ஒருவரோடும் பிணங்கி உரையாதே என்மகனே
வி=அப்போது அதையும் நீ தாங்கிக் கொண்டு அனுசரித்து போய்விடு மகனே எதற்கும் கலங்காதே என் கண்ணு மகனே
எவரோடும் மாற்று கருந்துகள் பேசி எதிர் வார்த்தைப் பேசி விடாதே பொறுமை கடலினும் பெரிது மகனே
==
எல்லாம் நான்கேட்டு ஆட்க்கொள்ளுவேன் என்மகனே
வல்லாமை பேசாதே மாதிரி போடாதே
ஏழையாய் இருநீ என்னுடைய கண்மணியே
வி=அவரவர் செய்யும் தன்மை தீமைகளுக்கு நான் நடுத்தீர்ப்புக் கேட்டு அதற்கேற்றபடி தீர்ப்பு வழங்குவேன் என் அருமை மகனே
நானே பெரியவன் என்று ஆணவம் பேசாதே அவனைப்போல் பழிவாங்கும் நோக்கம் கொள்ளாதே என் மகனே
எளிமையான முறையில் ஏழ்மையாய் இருந்து செயல்படு நீ பொறுமையின் சின்னமாகிய என்னுடைய கண்மணி அல்லவா
==
ஆழ மனதுடைய அதிக மகனே உனது
விதங்கள் அறியாமல் வீணாவார் வம்பரெல்லாம்
மதங்கள் அடக்க வாக்கெனக்கு என் மகனே
வி=மிகவும் ஆழமாகச் சிந்திக்கக் கூடிய ஆற்றல் பெற்ற உன்னுடைய உயர்வான தன்மையைப் பற்றியும்
உன்னுடைய சூத்திர விதிமுறைகளை அறியாமலும் வீணாக அழிந்து போவார்கள் வம்பு செய்கின்றவர்கள் எல்லாம்
எல்லா மதங்களையும் அடக்கி ஒன்றுப் படுத்தி ஒரு குடைக்குள் ஆட்சி செய்யும் வாக்கு எனக்கு அருளப்பட்டுள்ளது மகனே
==
தந்தேன் நான் உனக்கு தரள மணி முத்திரியும்
கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக் கைள்ளு
வி=எனக்கு அருளப்பட்டுள்ள வரத்தை நான் உனக்கு தந்து என்னுடைய பவளமணி மாலையையும் குண்டலத்தையும்
நான் உனக்கு அடையாளமாக தந்து விட்டேன் நீ அதை உன்னுடைய கந்தை துணியில் கட்டி வைத்துக்கொள் வெளியில் காட்டாதே
==
மகனே உனது மனமறியக் காட்டினதை
அகத்திலே வைத்து அக மகிழு என் மகனே
வி=என்மகனே உனது மனமானது வலிமைப் பெற வெண்டும் என்று நான் உனக்கு காட்டிய அற்புத அடையாளத்தை மறவாதே
உன்னுடைய இதயத்திற்குள் வைத்துக் கொண்டு வெளிக்காட்டாத படி உள்ளம் உகந்தவனாய் இரு என் மகனே
==

பொறுதி தான் என் மகனே பெரியோர் ஆகுவது
உறுதி மிக உண்டாகும் உக நாதா என் மகனே
வி=பொறுத்தார் பூமி ஆள்வார் என் மகனே பொறுமை குணம் மட்டுமே பெரியவன் என்ற நிலைக்கு கொண்டு செல்லும் மகனே
பொறுமை என்கிற குணம் வந்துவிட்டால் உறுதி என்கிற மனம் உறுவாகிவிடும் கலியுக நாதனே என் மகனே
==
தர்மச் சிறப்புத் தான் கண்டாயோ மகனே
பொறுமை பெரிது புவியாள்வார் என்மகனே
வி=தர்ம காரியங்களைச் செய்து அதன் சிறப்பானத் தன்மையை கண்டு கொள்வாயாக என் அன்பு மகனே
பொறுமை கடலினும் பெரிது என்பது போல பொறுமையை பெருமையோடு கடைபிடித்தால் தர்மயுகம் ஆளலாம் என்மகனே
==
கண்டாயோ என்மகனே கரியமண்டபச் சிறப்பு
பண்டையுள்ள தேரும் பதியும் மிகக்கண்டாயோ
தேட்டமுடன் உனக்குச் செப்பும் விஞ்சை ஆனதிலே
நாட்டம் மறவாதே நாரணா என்மகனே
வி=பாற்கடலுக்குள் என்னுடைய உலகத்தை நீ கண்களால் கண்டாயே கரியமால் நாராயணரின் மண்டபம் எப்படி இருக்கிறது பார்த்தாயா
நான் கிருஷ்ணனாக இருந்த போது ஓட்டிய என்னுடைய தேரும் என்னுடைய சிம்மாசனப் பதியையும் கண்டாயே
நான் விரும்பிய என் மகனுக்கு நான் சொல்லித் தந்த விஞ்சைகள் ஆனதெல்லாம் உனக்கே தந்துவிட்டேன் மகனே
நீ ஆசை ஆசையோடு ஏற்றுக்கொண்டு தலைமைப் பொறுப்போடு இருக்கும் என்னை மறவாமல் இரு வைகுண்ட நாராயணா என் மகனே
==
அப்போது ஆதியுடன் நல்மகவு ஏதுரைக்கும்
இப்போது எந்தனக்கு இத்தனையும் சொன்னீரே
கலியுகத்தை முடித்துக் கட்டானத் தர்மபதி
வி=ஆதி நாராயணர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வைகுண்ட நாராயணர் திருபெலைப் பார்த்துக் கூறுகின்றார்
ஆதி நாராயணப் பரம் பொருளே என் அன்பு தகப்பனே என்னைப் பார்த்து இவ்வளவு காரியங்களைப் பொறுமையாகச் சொன்னீரே
கலியுகத்து யுகமதிலே கண்டிடுங்கோ இந்தயுகம் கலியுகம் எப்போது முடியும் தர்மயுகம் எப்போது தோன்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக