கலியனின் இகழ்ச்சி மொழி*****
பொல்லாத நீசா பொருள் அறிய மாட்டாமல்
எல்லோரைப் போலே ஏசாதே ஈசுரரை
லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண்
ஏகம் நிறைந்தவர்காண் இறவாது இருப்பவர்காண்
பட்சி பறவை பலசீவ செந்துகட்கும்
நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமும் அளிப்பவர்காண்
மாயவனும் நான்முகனும் மறையும் மிகக்காணாத
தேயசு ஆனவர் காண் திருட்டிக்க வல்லவர்காண்
இத்தனையும் நீசனுக்கு இயம்பு அமரர்களும்
புத்திக்கு நட்புப் போகாமல் பின்சொல்வான்
பொல்லாத நீசா பொருள் அறிய மாட்டாமல்
எல்லோரைப் போலே ஏசாதே ஈசுரரை
லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண்
ஏகம் நிறைந்தவர்காண் இறவாது இருப்பவர்காண்
பட்சி பறவை பலசீவ செந்துகட்கும்
நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமும் அளிப்பவர்காண்
மாயவனும் நான்முகனும் மறையும் மிகக்காணாத
தேயசு ஆனவர் காண் திருட்டிக்க வல்லவர்காண்
இத்தனையும் நீசனுக்கு இயம்பு அமரர்களும்
புத்திக்கு நட்புப் போகாமல் பின்சொல்வான்
---------
உரை
---------
"அடே, பொல்லாத நீசனே, நீ உண்மைப் பொருள் அறியாமல் எல்லாரையும் போன்று நினைத்து ஈசரைப் பார்த்துக் கீழான மொழி பேசாதே; நீசனே அங்கே அமர்திருக்கும் ஈசர் இவ்வுலகத்தை எல்லாம் படைத்தவர்; என்றும் இறப்பில்லாதவர்; இதை அறிவாயாக அவர் பட்சி, பறவை இன்னும் சகல சீவராசிகளுக்கும் நாள்தோறும் உண்ணும் உணவைக் கொடுப்பவர்; திருமாலும், பிரம்மனும், நான்கு வேதங்களும் காண முடியாதவரும், இவ்வுலக மக்கள் யாராலும் காண முடியாதவரும் ஆகிய அவர் ஒளிமயமானவர். அவர் எல்லாவற்றையும் படைக்கும் வல்லவர் ஆவார். நீசனே, நீ அறிந்து கொள்வாயாக" என்றனர். இத்தனை விளக்கங்களையும் வானோர்கள் நீசனுக்குச் சொன்ன பிறகும், அவனுடைய தாழ்வான புத்திக்கு நல்லவர்களின் நட்பான வார்த்தைகள் புரியாமல் நீசன் தொடர்ந்து கூறலானான்.
---------------------
அய்யா உண்டு
---------------------
---------
"அடே, பொல்லாத நீசனே, நீ உண்மைப் பொருள் அறியாமல் எல்லாரையும் போன்று நினைத்து ஈசரைப் பார்த்துக் கீழான மொழி பேசாதே; நீசனே அங்கே அமர்திருக்கும் ஈசர் இவ்வுலகத்தை எல்லாம் படைத்தவர்; என்றும் இறப்பில்லாதவர்; இதை அறிவாயாக அவர் பட்சி, பறவை இன்னும் சகல சீவராசிகளுக்கும் நாள்தோறும் உண்ணும் உணவைக் கொடுப்பவர்; திருமாலும், பிரம்மனும், நான்கு வேதங்களும் காண முடியாதவரும், இவ்வுலக மக்கள் யாராலும் காண முடியாதவரும் ஆகிய அவர் ஒளிமயமானவர். அவர் எல்லாவற்றையும் படைக்கும் வல்லவர் ஆவார். நீசனே, நீ அறிந்து கொள்வாயாக" என்றனர். இத்தனை விளக்கங்களையும் வானோர்கள் நீசனுக்குச் சொன்ன பிறகும், அவனுடைய தாழ்வான புத்திக்கு நல்லவர்களின் நட்பான வார்த்தைகள் புரியாமல் நீசன் தொடர்ந்து கூறலானான்.
---------------------
அய்யா உண்டு
---------------------
கலியனின் இகழ்ச்சி மொழி*****
கண்டு அந்த ஈசர் கனமாய் விசேசமுற்று
உன்றனுக்கு வேணும் என்று உகந்தது எல்லாம் இப்போது
என்றனிடம் கேள் என்று ஈசுரனார் தாம் உரைக்க
உடனே அவனும் உள்ளம் மிகக்க்களித்து
விடமேதான் பூண்டு விரிகந்தைதான் உடுத்து
மேலிலே குப்பை மிகப்பூசி யானையுட
தோலில் இருப்பவனோ சொன்னது எல்லாம் தாறதுதான்
என்று களிப்பாய் ஈசுரரை அந்நீசன்
அன்று மொழிய அமரர் அதை அறிந்து
கண்டு அந்த ஈசர் கனமாய் விசேசமுற்று
உன்றனுக்கு வேணும் என்று உகந்தது எல்லாம் இப்போது
என்றனிடம் கேள் என்று ஈசுரனார் தாம் உரைக்க
உடனே அவனும் உள்ளம் மிகக்க்களித்து
விடமேதான் பூண்டு விரிகந்தைதான் உடுத்து
மேலிலே குப்பை மிகப்பூசி யானையுட
தோலில் இருப்பவனோ சொன்னது எல்லாம் தாறதுதான்
என்று களிப்பாய் ஈசுரரை அந்நீசன்
அன்று மொழிய அமரர் அதை அறிந்து
---------
உரை
---------
அந்த நீசனைக் கண்ட ஈசர் அதிக ஆச்சரியமுற்று "நீசனே, உனக்கு வேண்டுமென்று விருப்பப்பட்ட எல்லாவற்றையும் இப்பொழுது என்னிடம் கேள்" என்று அமைதியுடன் உரைத்தார், உடனே, நீசன் மிகுந்த இகழ்ச்சியுடன், "விஷத்தையுடைய பாம்பை அணிந்து, அதிகமான கந்தைத் துணியை உடுத்து, உடம்பு முழுவதும் குப்பைப்பூசி, யானையின் தோலின் மேல் இருக்கக்கூடிய நீயா நான் கேட்பவை எல்லாம் தரக்கூடியவன்?" என்று ஏளனமாக ஈசுரரைப் பார்த்து நகைத்தான், இதைக் கேட்ட வானோர்கள் எல்லாரும் பதறி நீசனை நோக்கி ...
---------------------
அய்யா உண்டு
---------
அந்த நீசனைக் கண்ட ஈசர் அதிக ஆச்சரியமுற்று "நீசனே, உனக்கு வேண்டுமென்று விருப்பப்பட்ட எல்லாவற்றையும் இப்பொழுது என்னிடம் கேள்" என்று அமைதியுடன் உரைத்தார், உடனே, நீசன் மிகுந்த இகழ்ச்சியுடன், "விஷத்தையுடைய பாம்பை அணிந்து, அதிகமான கந்தைத் துணியை உடுத்து, உடம்பு முழுவதும் குப்பைப்பூசி, யானையின் தோலின் மேல் இருக்கக்கூடிய நீயா நான் கேட்பவை எல்லாம் தரக்கூடியவன்?" என்று ஏளனமாக ஈசுரரைப் பார்த்து நகைத்தான், இதைக் கேட்ட வானோர்கள் எல்லாரும் பதறி நீசனை நோக்கி ...
---------------------
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக