நந்தி அதிசய பிறப்பின் பின்விளைவு பற்றிக் கூறுதல்*****
சாற்றும் மொழி கேட்டு நந்திதாம் உரைப்பார் அம்மானை
அங்கு அல்ல தானம் அழிந்தது காணும் ஈசுரரே
இங்கே நான் கண்டேன் எழுந்தருளி வந்ததனால்
தலந்தான் இளகிதான் வந்தாலேதான்
குலந்தான் அழியும் குசல் பிறக்கும் ராச்சியத்தில்
வரம்பழியும் மாரி மனுநீதி குன்றுமையா
பரம்பெரிய வேதம் பழுதுவரும் கண்டீரே
என்று அந்த மாமுனிவர் ஈசுரரையும் கூட்டிக்
குன்று பொன்னான கிரி மேவித் தவமிருந்தார்
உரை
---------
ஈசரின் மொழிகளைக் கேட்டு நந்திசுரர், "ஈசுரரே, மரபுநிலை அழிந்து மரபுக்கு எதிரான நிகழ்ச்சிகள் நடப்பது அங்கே மட்டுமல்ல என்பதை அறிவீராக. என்றைக்கும் இருந்த இடத்தில் இருந்தே ஆட்டுவிக்கும் நீவிர் எழுந்து வந்த நிகழ்ச்சி மூலம் மரபு நிலை அழியும் அபாயத்தை இங்கேயே கண்டு கொண்டேன். தாங்கள் தங்கள் இடத்தை விட்டு எழுந்து வந்த நிலை மாற்றத்தால் உலகில் குல ஒழுக்கம் அழியும்; சூது வாது உருவாகும்; கட்டுப்பாடான வாழ்வு அழிந்து மாதம் மும்மாரி பெய்த மழையும் மனு நீதிமுறையும் குறைந்து விடும்; பிரம்மத்தைப் பற்றி எடுத்துக் கூறும் உயர்வான வேதங்களைப் புரிய முடியாமல் பழுதுபடக் கூறி ஒதுக்குவர்", என்று நந்தீசுரர் ஈசுரரிடம் தெளிவுபடுத்திக் கூறவும், பொன்னாலாகிய கயிலை மலைக்கு இருவரும் சென்றனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------
சாற்றும் மொழி கேட்டு நந்திதாம் உரைப்பார் அம்மானை
அங்கு அல்ல தானம் அழிந்தது காணும் ஈசுரரே
இங்கே நான் கண்டேன் எழுந்தருளி வந்ததனால்
தலந்தான் இளகிதான் வந்தாலேதான்
குலந்தான் அழியும் குசல் பிறக்கும் ராச்சியத்தில்
வரம்பழியும் மாரி மனுநீதி குன்றுமையா
பரம்பெரிய வேதம் பழுதுவரும் கண்டீரே
என்று அந்த மாமுனிவர் ஈசுரரையும் கூட்டிக்
குன்று பொன்னான கிரி மேவித் தவமிருந்தார்
உரை
---------
ஈசரின் மொழிகளைக் கேட்டு நந்திசுரர், "ஈசுரரே, மரபுநிலை அழிந்து மரபுக்கு எதிரான நிகழ்ச்சிகள் நடப்பது அங்கே மட்டுமல்ல என்பதை அறிவீராக. என்றைக்கும் இருந்த இடத்தில் இருந்தே ஆட்டுவிக்கும் நீவிர் எழுந்து வந்த நிகழ்ச்சி மூலம் மரபு நிலை அழியும் அபாயத்தை இங்கேயே கண்டு கொண்டேன். தாங்கள் தங்கள் இடத்தை விட்டு எழுந்து வந்த நிலை மாற்றத்தால் உலகில் குல ஒழுக்கம் அழியும்; சூது வாது உருவாகும்; கட்டுப்பாடான வாழ்வு அழிந்து மாதம் மும்மாரி பெய்த மழையும் மனு நீதிமுறையும் குறைந்து விடும்; பிரம்மத்தைப் பற்றி எடுத்துக் கூறும் உயர்வான வேதங்களைப் புரிய முடியாமல் பழுதுபடக் கூறி ஒதுக்குவர்", என்று நந்தீசுரர் ஈசுரரிடம் தெளிவுபடுத்திக் கூறவும், பொன்னாலாகிய கயிலை மலைக்கு இருவரும் சென்றனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------
நந்தி அதிசய பிறப்பின் பின்விளைவு பற்றிக் கூறுதல்*****
எதிராக நின்று நந்தி ஏதுரைப்பார் அம்மானை
மூவரும் தேவர்களும் மூர்த்திகளும் காணாத
தேவரீர் எழுந்தருளித் திசைநோக்கி வந்ததென்ன
அப்போது நந்தியுடன் ஆதி மிகஉரைப்பார்
இப்போது ஓர் அற்புதமாய் இருக்குது என்றார் எல்லோரும்
வானம் நோக்கிக் காலும் மலர் நோக்கிச் சிரசும்
தானம் அது மாறித் தலைகீழாய் நிற்பதுவும்
பார்த்து வரலாம் எனவே பைய நடை கொண்டேன் என்றார்
எதிராக நின்று நந்தி ஏதுரைப்பார் அம்மானை
மூவரும் தேவர்களும் மூர்த்திகளும் காணாத
தேவரீர் எழுந்தருளித் திசைநோக்கி வந்ததென்ன
அப்போது நந்தியுடன் ஆதி மிகஉரைப்பார்
இப்போது ஓர் அற்புதமாய் இருக்குது என்றார் எல்லோரும்
வானம் நோக்கிக் காலும் மலர் நோக்கிச் சிரசும்
தானம் அது மாறித் தலைகீழாய் நிற்பதுவும்
பார்த்து வரலாம் எனவே பைய நடை கொண்டேன் என்றார்
---------
உரை
---------
அச்சமயம், நந்தீசுரர் ஈசுரரின் எதிராக வந்து நின்று "மூதறிஞர்களும், தேவர்களும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூர்த்திகளும் காணாத ஈசுரரே, நீர் இந்தத் திசை நோக்கி வந்ததன் காரணம் என்ன?" என்று வினவினார்.
நந்தியிடம் ஈசுரர், "நந்தீசுரரே, இப்பொழுது வானத்தை நோக்கிக் கால்களும், பூமியை நோக்கித் தலையும் கொண்டு ஒருவன் முன்யுக மரபுகளுக்கு நேர்மாறாகத் தலைகீழாகப் பிறந்திருக்கும் ஓர் அதிசயம் நடந்துள்ளது என்று எல்லாரும் பார்க்கப் போயுள்ளார்கள். எனவே, நானும் அவ்வதிசயத்தைப் பார்த்துவரலாம் என்று மெதுவாக நடந்து வருகின்றேன்" என்றார்.
---------------------
அய்யா உண்டு
---------
அச்சமயம், நந்தீசுரர் ஈசுரரின் எதிராக வந்து நின்று "மூதறிஞர்களும், தேவர்களும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூர்த்திகளும் காணாத ஈசுரரே, நீர் இந்தத் திசை நோக்கி வந்ததன் காரணம் என்ன?" என்று வினவினார்.
நந்தியிடம் ஈசுரர், "நந்தீசுரரே, இப்பொழுது வானத்தை நோக்கிக் கால்களும், பூமியை நோக்கித் தலையும் கொண்டு ஒருவன் முன்யுக மரபுகளுக்கு நேர்மாறாகத் தலைகீழாகப் பிறந்திருக்கும் ஓர் அதிசயம் நடந்துள்ளது என்று எல்லாரும் பார்க்கப் போயுள்ளார்கள். எனவே, நானும் அவ்வதிசயத்தைப் பார்த்துவரலாம் என்று மெதுவாக நடந்து வருகின்றேன்" என்றார்.
---------------------
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக