திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
புத்தி இல்லா நீசன் புகலுவான் பின்னாலே
பண்டாரம் என்றும் பரதேசி ஆனவரை
தண்டரள கந்தை தலைவிரித்த ஆண்டிகளை
ஆட்டியது செய்யேன் அவரோடே சண்டையிடேன்
ஒட்டியே வம்பு ஒருநாளும் செய்வதில்லை
என்றான்காண் நீசன் எம்பெருமாள்தாம் உரைப்பார்
நன்றாக இப்படியே நட்டி செய்ய மாட்டேன் என்று
ஆணையிட்டுத் தா என்று அருளினார் எம்பெருமாள்
வீண்பட நீசன் விளம்புவான் அப்போது
ஆரார் பேரில் ஆணையிட வேணும் என்று
பேராகச் சொல்லு பிச்சை இரப்போனே என்றான்
புத்தி இல்லா நீசன் புகலுவான் பின்னாலே
பண்டாரம் என்றும் பரதேசி ஆனவரை
தண்டரள கந்தை தலைவிரித்த ஆண்டிகளை
ஆட்டியது செய்யேன் அவரோடே சண்டையிடேன்
ஒட்டியே வம்பு ஒருநாளும் செய்வதில்லை
என்றான்காண் நீசன் எம்பெருமாள்தாம் உரைப்பார்
நன்றாக இப்படியே நட்டி செய்ய மாட்டேன் என்று
ஆணையிட்டுத் தா என்று அருளினார் எம்பெருமாள்
வீண்பட நீசன் விளம்புவான் அப்போது
ஆரார் பேரில் ஆணையிட வேணும் என்று
பேராகச் சொல்லு பிச்சை இரப்போனே என்றான்
---------
உரை
---------
உடனே, புத்தியில்லாத நீசன் "பண்டாரங்களையும், பரதேசிகளையும், இனிமையான உத்திராட்ச முத்துக்களை அணிந்து கந்தை உடுத்தித் தலைவிரி கோலமாக இருக்கும் ஆண்டிகளை எச்சமயத்திலும் எந்தத் துன்பமும் செய்ய மாட்டேன். அவர்களோடு போர் புரியவும் மாட்டேன். அவர்களிடம் வலியச் சென்று எந்த வம்புகளும் எந்தக் காலத்திலும் செய்யமாட்டேன்" என்றான்.
இதைக் கேட்ட மாயன் "இந்த வகையிலே எந்தவித நஷ்டமும் அழிமதியும் அவர்களுக்குச் செய்யமாட்டேன், என்று கூறி ஆணை இட்டுத் தா" என்று கூறினார். நீசன் தான் வீணாக அழிந்து போகும் வகையில், "சரி, நான் யார் யார் பெயரில் ஆணையிட வேண்டும் என்று பெயரைச் சொல், பிச்சைக்காரப் பேயனே", என்று கேட்டான்.
---------------------
அய்யா உண்டு
---------------------
---------
உடனே, புத்தியில்லாத நீசன் "பண்டாரங்களையும், பரதேசிகளையும், இனிமையான உத்திராட்ச முத்துக்களை அணிந்து கந்தை உடுத்தித் தலைவிரி கோலமாக இருக்கும் ஆண்டிகளை எச்சமயத்திலும் எந்தத் துன்பமும் செய்ய மாட்டேன். அவர்களோடு போர் புரியவும் மாட்டேன். அவர்களிடம் வலியச் சென்று எந்த வம்புகளும் எந்தக் காலத்திலும் செய்யமாட்டேன்" என்றான்.
இதைக் கேட்ட மாயன் "இந்த வகையிலே எந்தவித நஷ்டமும் அழிமதியும் அவர்களுக்குச் செய்யமாட்டேன், என்று கூறி ஆணை இட்டுத் தா" என்று கூறினார். நீசன் தான் வீணாக அழிந்து போகும் வகையில், "சரி, நான் யார் யார் பெயரில் ஆணையிட வேண்டும் என்று பெயரைச் சொல், பிச்சைக்காரப் பேயனே", என்று கேட்டான்.
---------------------
அய்யா உண்டு
---------------------
திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
நன்றுநன்று நீசா நான் உரைக்க நீ கேளு
பண்டாரத்தோடே படை எடுத்தால் ஆண்மை இல்லை
என்றேதான் இப்போது இயம்பினையே மாநீசா
பண்டாரம் என்றும் பயித்தியக்காரன் என்றும்
ஒண்டியாய் வந்தவனோடு யுத்தமிட மாட்டேன் என்றும்
பிச்சைக்காரன் என்றும் பெரிய இரப்பன் என்றும்
கச்சை இல்லான் என்றும் கணை கம்பு இல்லாதான் என்றும்
இப்படியே பண்டாரம் என்று இருக்கும் பேர்களுக்கு
எப்படியும் வம்பு செய்வதில்லை என்று உண்மையுடன்
சத்தியமாகத்தான் உரை நீ பார்ப்போம் என்றார்
நன்றுநன்று நீசா நான் உரைக்க நீ கேளு
பண்டாரத்தோடே படை எடுத்தால் ஆண்மை இல்லை
என்றேதான் இப்போது இயம்பினையே மாநீசா
பண்டாரம் என்றும் பயித்தியக்காரன் என்றும்
ஒண்டியாய் வந்தவனோடு யுத்தமிட மாட்டேன் என்றும்
பிச்சைக்காரன் என்றும் பெரிய இரப்பன் என்றும்
கச்சை இல்லான் என்றும் கணை கம்பு இல்லாதான் என்றும்
இப்படியே பண்டாரம் என்று இருக்கும் பேர்களுக்கு
எப்படியும் வம்பு செய்வதில்லை என்று உண்மையுடன்
சத்தியமாகத்தான் உரை நீ பார்ப்போம் என்றார்
---------
உரை
---------
நீசனின் பேச்சைக் கேட்ட திருமால், "நல்லது, மிகவும் நல்லது. இனி நான் உரைப்பதைக் கவனமாக கேள். 'பண்டாரத்தோடு போர்புரிந்தால் அது வீரமில்லை' என்று இப்போது கூறினாயே? மாநீசனே. 'இனி பண்டாரமாகவும் பயித்தியக்காரன் போலவும் ஆயுதமின்றித் தனியாக வந்தவரிடம் போர் புரிய மாட்டேன்' என்றும், 'பிச்சைக்காரனாகவும், பெரிய இரப்பனாகவும், போர் கச்சை இல்லாதவனாகவும், அம்பு, கம்பு போன்ற ஆயுதங்கள் இல்லாதவனாகவும் இருக்கும் பண்டாரங்களிடம் போர் புரியமாட்டேன்' என்றும், உண்மையுடனும், சத்தியமாகவும் கூறி உறுதி செய் பார்ப்போம்" என்றார்.
---------------------
அய்யா உண்டு
---------
நீசனின் பேச்சைக் கேட்ட திருமால், "நல்லது, மிகவும் நல்லது. இனி நான் உரைப்பதைக் கவனமாக கேள். 'பண்டாரத்தோடு போர்புரிந்தால் அது வீரமில்லை' என்று இப்போது கூறினாயே? மாநீசனே. 'இனி பண்டாரமாகவும் பயித்தியக்காரன் போலவும் ஆயுதமின்றித் தனியாக வந்தவரிடம் போர் புரிய மாட்டேன்' என்றும், 'பிச்சைக்காரனாகவும், பெரிய இரப்பனாகவும், போர் கச்சை இல்லாதவனாகவும், அம்பு, கம்பு போன்ற ஆயுதங்கள் இல்லாதவனாகவும் இருக்கும் பண்டாரங்களிடம் போர் புரியமாட்டேன்' என்றும், உண்மையுடனும், சத்தியமாகவும் கூறி உறுதி செய் பார்ப்போம்" என்றார்.
---------------------
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக