கலியனுக்கு வரமருளல்*****
அப்போது சத்தி ஆதி அடிவணங்கி
எப்போதும் மறவா நல்ல கன்னி ஏதுரைப்பாள்
சாத்திரமும் வித்தைகளும் தந்திரமும் கேட்டதனால்
சூத்திரச் சித்தாதி ஒன்று திருட்டிக்க வேணும் என்றாள்
அப்போது சத்தி ஆதி அடிவணங்கி
எப்போதும் மறவா நல்ல கன்னி ஏதுரைப்பாள்
சாத்திரமும் வித்தைகளும் தந்திரமும் கேட்டதனால்
சூத்திரச் சித்தாதி ஒன்று திருட்டிக்க வேணும் என்றாள்
---------
உரை
---------
அப்போது, ஈசரை எப்போதும் மறவாத நல்ல சக்தி உமை அவர் பாதங்களை வணங்கி, "ஈசரே, நீசன் சாத்திரங்களும், வித்தைகளும், தந்திரங்களும் கற்பிக்கக் கேட்டதால் அவனுக்குக் கற்பிப்பதற்கு சாத்திரங்களை அறிந்த சித்தாதி ஒருவனை உடனே உருவாக்கும்" என்று ஒரு வழியைச் சொன்னாள்.
---------------------
அய்யா உண்டு
---------
அப்போது, ஈசரை எப்போதும் மறவாத நல்ல சக்தி உமை அவர் பாதங்களை வணங்கி, "ஈசரே, நீசன் சாத்திரங்களும், வித்தைகளும், தந்திரங்களும் கற்பிக்கக் கேட்டதால் அவனுக்குக் கற்பிப்பதற்கு சாத்திரங்களை அறிந்த சித்தாதி ஒருவனை உடனே உருவாக்கும்" என்று ஒரு வழியைச் சொன்னாள்.
---------------------
அய்யா உண்டு
கலியனுக்கு வரமருளல்*****
அப்படியே உள்ளவரம் அந்நீசனுக்கு அருள
எப்படித்தான் என்று எண்ணினார் ஈசுரரும்
எண்ணியே ஈசர் ஏந்திழையாள் சத்தியுடன்
புண்ணிய நாதன் புகலுற்றார் அம்மானை
முப்பத்திரண்டு அறமும் முகித்து இருந்த ஒண்ணுதலே
செப்புத் தனத்து அழகும் செவ்வே கருங்குயிலே
வின்னோத நீசன் விபரீதமாய்க் கேட்டதற்கு
இன்னவிதம் என்று இயம்பு நீ பெண்மயிலே
அப்படியே உள்ளவரம் அந்நீசனுக்கு அருள
எப்படித்தான் என்று எண்ணினார் ஈசுரரும்
எண்ணியே ஈசர் ஏந்திழையாள் சத்தியுடன்
புண்ணிய நாதன் புகலுற்றார் அம்மானை
முப்பத்திரண்டு அறமும் முகித்து இருந்த ஒண்ணுதலே
செப்புத் தனத்து அழகும் செவ்வே கருங்குயிலே
வின்னோத நீசன் விபரீதமாய்க் கேட்டதற்கு
இன்னவிதம் என்று இயம்பு நீ பெண்மயிலே
உரை
---------
அந்த நீசன் கேட்டபடியே ஈசர் எல்லா வரமும் கொடுத்து அருள விரும்பினார். ஆனால், அவை எப்படிச் சாத்தியமாகும் என்று எண்ணி ஈசர் சக்தி உமையை நோக்கி, "முப்பத்திரண்டு அறங்களும் செய்து முடித்திருக்கும் பெண் மயிலே, அழகான மார்பழகு கொண்டவளே, கருங்குயில் போன்று இனிய குரல் கொண்டவளே, இந்த வினோதமான நீசன் விபரீதமான வரங்களைக் கேட்டதற்கு எப்படி நான் அத்தனையும் கொடுத்து அருளுவது? அதற்கு ஒரு வழியைக் கூறு பெண் மயிலே" என்று கேட்டார்.
---------------------
அய்யா உண்டு
---------------------
---------
அந்த நீசன் கேட்டபடியே ஈசர் எல்லா வரமும் கொடுத்து அருள விரும்பினார். ஆனால், அவை எப்படிச் சாத்தியமாகும் என்று எண்ணி ஈசர் சக்தி உமையை நோக்கி, "முப்பத்திரண்டு அறங்களும் செய்து முடித்திருக்கும் பெண் மயிலே, அழகான மார்பழகு கொண்டவளே, கருங்குயில் போன்று இனிய குரல் கொண்டவளே, இந்த வினோதமான நீசன் விபரீதமான வரங்களைக் கேட்டதற்கு எப்படி நான் அத்தனையும் கொடுத்து அருளுவது? அதற்கு ஒரு வழியைக் கூறு பெண் மயிலே" என்று கேட்டார்.
---------------------
அய்யா உண்டு
---------------------
கலியனுக்கு வரமருளல்*****
விந்து சனங்கள் மிகுவாகத்தான் உதித்துக்
கிளையோடே வாழ்வு கெருவிதமாய் ஆண்டு
வளையான மாதை மறவாமல் எப்போதும்
புத்தி கருத்தும் பெண்பேரில் என்றனக்கு
சற்றும் நெகிழாமல் தாரும் வரம் என்றுரைத்தான்
விந்து சனங்கள் மிகுவாகத்தான் உதித்துக்
கிளையோடே வாழ்வு கெருவிதமாய் ஆண்டு
வளையான மாதை மறவாமல் எப்போதும்
புத்தி கருத்தும் பெண்பேரில் என்றனக்கு
சற்றும் நெகிழாமல் தாரும் வரம் என்றுரைத்தான்
---------
உரை
---------
"மேலும் என் விந்து மூலம் குழந்தைகள் அதிகமாக உருவாகி அவர்களோடு பெருமையாய் வாழ்ந்து வரவும், சங்கு போன்ற இந்தப் பெண்ணை என்னுடைய புத்தி, எண்ணம் எல்லாம் சிறிதளவுகூட மறவாது இருக்கவும் வரம் தர வேண்டும்" என்று நீசன் கேட்டான்.
---------------------
அய்யா உண்டு
---------
"மேலும் என் விந்து மூலம் குழந்தைகள் அதிகமாக உருவாகி அவர்களோடு பெருமையாய் வாழ்ந்து வரவும், சங்கு போன்ற இந்தப் பெண்ணை என்னுடைய புத்தி, எண்ணம் எல்லாம் சிறிதளவுகூட மறவாது இருக்கவும் வரம் தர வேண்டும்" என்று நீசன் கேட்டான்.
---------------------
அய்யா உண்டு
லியனுக்கு வரமருளல்*****
மருட்டும் விதமும் மாஞாலக் குண்டனியும்
உருட்டும் கொடிய உரம் பேசிய மதமும்
வாள் வெடிகள் ஆயுதங்கள் வாய்த்தது தடுக்கத் தந்திரமும்
வேழ் வருத்தி வேலை கொள்ள விசை அடக்குந் தந்திரமும்
துட்ட மிருகம் தூறுவிசம் கொண்டது எல்லாம்
கட்டுக்குள் கட்டிக் கீழ்ப்படியத் தந்திரமும்
கட்டுச் சுருக்கும் கடிய பல வித்தைகளும்
தட்டு முட்டுள்ள நவநிதிய வத்துக்களும்
தந்து இந்தப் பெண்ணுடனே சார்ந்து விளையாடி இருந்து
மருட்டும் விதமும் மாஞாலக் குண்டனியும்
உருட்டும் கொடிய உரம் பேசிய மதமும்
வாள் வெடிகள் ஆயுதங்கள் வாய்த்தது தடுக்கத் தந்திரமும்
வேழ் வருத்தி வேலை கொள்ள விசை அடக்குந் தந்திரமும்
துட்ட மிருகம் தூறுவிசம் கொண்டது எல்லாம்
கட்டுக்குள் கட்டிக் கீழ்ப்படியத் தந்திரமும்
கட்டுச் சுருக்கும் கடிய பல வித்தைகளும்
தட்டு முட்டுள்ள நவநிதிய வத்துக்களும்
தந்து இந்தப் பெண்ணுடனே சார்ந்து விளையாடி இருந்து
உரை
---------
பிறரைப் பயமுறுத்தும் வகைகளும், இவ்வுலகத்திலேயே கோளுரைக்கும் வித்தையும், உருட்டிப் பேசும் கொடுமையான சக்தியுள்ள ஆணவமும், வாள்கள், வெடிகள், ஆயுதங்கள் போன்றவற்றின் வாய்ப்பகுதி தாக்காமல் தடுக்கும் தந்திரமும், யானைகளை வருத்தி வேலை வாங்க அவற்றின் சக்தியைக் கட்டுப் படுத்தி அடக்கும் தந்திரமும், தீய மிருகங்கள், விசத்தைக் கக்கும் தீய சீவன்கள் எல்லாவற்றையும் காட்டுக்கு உள்ளேயே கீழ்ப்படியச் செய்யும் தந்திரமும், பெரிய அரண்கட்டுக்களைச் சுருங்கச் செய்யும் கடினமான பல விதைகளும், ஆங்காங்கே தேவைப்படும் நவரத்தின பொருட்களும் தந்து, இந்தப் பெண்ணுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ச்சியாய் வாழவும் வரம் வேண்டும்.
---------------------
அய்யா உண்டு
---------
பிறரைப் பயமுறுத்தும் வகைகளும், இவ்வுலகத்திலேயே கோளுரைக்கும் வித்தையும், உருட்டிப் பேசும் கொடுமையான சக்தியுள்ள ஆணவமும், வாள்கள், வெடிகள், ஆயுதங்கள் போன்றவற்றின் வாய்ப்பகுதி தாக்காமல் தடுக்கும் தந்திரமும், யானைகளை வருத்தி வேலை வாங்க அவற்றின் சக்தியைக் கட்டுப் படுத்தி அடக்கும் தந்திரமும், தீய மிருகங்கள், விசத்தைக் கக்கும் தீய சீவன்கள் எல்லாவற்றையும் காட்டுக்கு உள்ளேயே கீழ்ப்படியச் செய்யும் தந்திரமும், பெரிய அரண்கட்டுக்களைச் சுருங்கச் செய்யும் கடினமான பல விதைகளும், ஆங்காங்கே தேவைப்படும் நவரத்தின பொருட்களும் தந்து, இந்தப் பெண்ணுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ச்சியாய் வாழவும் வரம் வேண்டும்.
---------------------
அய்யா உண்டு
கலியனுக்கு வரமருளல்*****
காளிதனை வருத்திக் கைக்குள் விடும் குளிகை
கூளிக் கணத்தைக் கொண்டு வரும் நற்குளிகை
தேவரையும் வானவரைச் சென்று அழைக்கும் குளிகை
மூவரையும் அழைத்து மோடி செய்யும் குளிகை
பழி செய்தால் வெல்ல பாரத் தொழில்கள்முதல்
சுழி வரைகள்தாம் அறிய சூதானமாய்த் தாரும்
காளிதனை வருத்திக் கைக்குள் விடும் குளிகை
கூளிக் கணத்தைக் கொண்டு வரும் நற்குளிகை
தேவரையும் வானவரைச் சென்று அழைக்கும் குளிகை
மூவரையும் அழைத்து மோடி செய்யும் குளிகை
பழி செய்தால் வெல்ல பாரத் தொழில்கள்முதல்
சுழி வரைகள்தாம் அறிய சூதானமாய்த் தாரும்
உரை
---------
... ... வேதாளங்களையும், காளியையும் வருத்திக் கைக்குள் வைத்துக் கொண்டு ஏவல் செய்கின்ற குளிகை, கூளிப்பேய் கணங்களை வருத்தி அழைக்கும் நல்ல குளிகை, தேவரையும் வானவரையும் வரவழைத்து வரும் குளிகை, மூவரையும் அழைத்து வேடிக்கை காட்டும் குளிகை ஆகியவற்றைச் செய்யக் கற்றுத் தாரும், யாராவது எனக்குப் பழி செய்தால் அவர்களை வெல்ல அதிக பலமுள்ள வித்தைகள்முதல் தலைவிதி வரி எழுத்துக்களை அறியும் தந்திர வித்தைகளையும் கற்றுத் தருவீராக.
---------------------
அய்யா உண்டு
---------
... ... வேதாளங்களையும், காளியையும் வருத்திக் கைக்குள் வைத்துக் கொண்டு ஏவல் செய்கின்ற குளிகை, கூளிப்பேய் கணங்களை வருத்தி அழைக்கும் நல்ல குளிகை, தேவரையும் வானவரையும் வரவழைத்து வரும் குளிகை, மூவரையும் அழைத்து வேடிக்கை காட்டும் குளிகை ஆகியவற்றைச் செய்யக் கற்றுத் தாரும், யாராவது எனக்குப் பழி செய்தால் அவர்களை வெல்ல அதிக பலமுள்ள வித்தைகள்முதல் தலைவிதி வரி எழுத்துக்களை அறியும் தந்திர வித்தைகளையும் கற்றுத் தருவீராக.
---------------------
அய்யா உண்டு
கலியனுக்கு வரமருளல்*****
வந்தபிணி தீர்க்க வைத்திய வாகடமும்
தந்து தந்தாகப் பல சாத்திரமும் தாரும் என்றான்
மூவருட வடிவும் உதித்து வந்த முற்பிறப்பும்
தேவருட பிறப்பும் தெளிந்து எழுதித் தாரும் என்றான்
பறக்கும் குளிகை பரனை அழைக்கும் குளிகை
மறைக்கும் குளிகை மாலை வருத்தும் குளிகை
சாலக் குளிகை சத்தி வருத்தும் குளிகை
வாலைக் குளிகை மறையை வருத்தும் குளிகை
வந்தபிணி தீர்க்க வைத்திய வாகடமும்
தந்து தந்தாகப் பல சாத்திரமும் தாரும் என்றான்
மூவருட வடிவும் உதித்து வந்த முற்பிறப்பும்
தேவருட பிறப்பும் தெளிந்து எழுதித் தாரும் என்றான்
பறக்கும் குளிகை பரனை அழைக்கும் குளிகை
மறைக்கும் குளிகை மாலை வருத்தும் குளிகை
சாலக் குளிகை சத்தி வருத்தும் குளிகை
வாலைக் குளிகை மறையை வருத்தும் குளிகை
உரை
---------
வந்த நோயைத் தீர்க்க வைத்திய சாத்திரமும், தந்திரத்திற்குத் தந்திரமான சாத்திர வகைகளும் எனக்குக் கற்றுத் தாரும். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் வடிவம், என்னுடைய முன் பிறப்பும், தேவர்களின் பிறப்பும் பற்றிய இரகசியங்களைத் தெளிவாக எழுதித் தாரும். பறக்கும் குளிகை சிவனை அழைக்கும் குளிகை, எல்லாவற்றையும் கண்காணாமல் மறைக்க வைக்கும் குளிகை, திருமாலை வருத்தும் குளிகை, மாயாஜாலம் செய்யும் குளிகை, சக்தியை வரவழைக்கும் குளிகை, வாலைகுளிகை, வேதங்களை வரவழைக்கும் குளிகை;
---------------------
அய்யா உண்டு
---------
வந்த நோயைத் தீர்க்க வைத்திய சாத்திரமும், தந்திரத்திற்குத் தந்திரமான சாத்திர வகைகளும் எனக்குக் கற்றுத் தாரும். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் வடிவம், என்னுடைய முன் பிறப்பும், தேவர்களின் பிறப்பும் பற்றிய இரகசியங்களைத் தெளிவாக எழுதித் தாரும். பறக்கும் குளிகை சிவனை அழைக்கும் குளிகை, எல்லாவற்றையும் கண்காணாமல் மறைக்க வைக்கும் குளிகை, திருமாலை வருத்தும் குளிகை, மாயாஜாலம் செய்யும் குளிகை, சக்தியை வரவழைக்கும் குளிகை, வாலைகுளிகை, வேதங்களை வரவழைக்கும் குளிகை;
---------------------
அய்யா உண்டு
கலியனுக்கு வரமருளல்*****
சலம்மேல் கனல்மேல் தானிருக்கும் மோடிகளும்
கலைமேல் குடை பிடிக்கக் கருவதுவும் தாரும்
மிருகம் அதை வருத்தி வேலையது கொண்டிடவும்
இறுக்கம் உள்ள வாதை எனக்கு விட்டுத் தாரும் அய்யா
அட்டகர்மம் எட்டும் அடக்கி வரம் தாரும் அய்யா
மொட்டைக் குறளிகளையும் முன் ஏவலாய்த் தாரும்
மந்திரசாலமும் மாய்மாலத் தந்திரமும்
இந்திரசாலம் எனக்கு அருளும் என்றுரைத்தான்
நோவுக் கிரகம் நுழையாமல் என்றனுக்குத்
தாவும் கவனக்குளிகை தாரும் என்றான் மாநீசன்
சலம்மேல் கனல்மேல் தானிருக்கும் மோடிகளும்
கலைமேல் குடை பிடிக்கக் கருவதுவும் தாரும்
மிருகம் அதை வருத்தி வேலையது கொண்டிடவும்
இறுக்கம் உள்ள வாதை எனக்கு விட்டுத் தாரும் அய்யா
அட்டகர்மம் எட்டும் அடக்கி வரம் தாரும் அய்யா
மொட்டைக் குறளிகளையும் முன் ஏவலாய்த் தாரும்
மந்திரசாலமும் மாய்மாலத் தந்திரமும்
இந்திரசாலம் எனக்கு அருளும் என்றுரைத்தான்
நோவுக் கிரகம் நுழையாமல் என்றனுக்குத்
தாவும் கவனக்குளிகை தாரும் என்றான் மாநீசன்
---------
உரை
---------
அய்யாவே, நீரின் மேலும், அக்கினியின் மேலும் அமர்ந்து இருக்கும் வித்தைகளும், சந்திரன்மேல் குடை பிடிக்கும் இரகசியத்தையும், மிருகங்களை வரவழைத்து வேலை வாங்கவும், வீரமுள்ள வாதைகளை எனக்கு விட்டுத் தர வேண்டும். அட்டமா சித்திகளையும் சேர்த்து வரம் தர வேண்டும், மொட்டைக் குறளிப்பேய்கள் எனக்கு ஏவல் செய்யவும், மந்திரசாலம், தந்திரம், இந்திரசாலம் போன்றவற்றையும் எனக்கு கற்றுத் தருவீராக. "எனக்குத் தொல்லை தரும் கிரகங்கள் என் எல்லைக்குள் நுழையாமல் இருக்கக் கவனக்குளிகை(மாத்திரை)யும் தர வேண்டும்.
---------------------
அய்யா உண்டு
---------
அய்யாவே, நீரின் மேலும், அக்கினியின் மேலும் அமர்ந்து இருக்கும் வித்தைகளும், சந்திரன்மேல் குடை பிடிக்கும் இரகசியத்தையும், மிருகங்களை வரவழைத்து வேலை வாங்கவும், வீரமுள்ள வாதைகளை எனக்கு விட்டுத் தர வேண்டும். அட்டமா சித்திகளையும் சேர்த்து வரம் தர வேண்டும், மொட்டைக் குறளிப்பேய்கள் எனக்கு ஏவல் செய்யவும், மந்திரசாலம், தந்திரம், இந்திரசாலம் போன்றவற்றையும் எனக்கு கற்றுத் தருவீராக. "எனக்குத் தொல்லை தரும் கிரகங்கள் என் எல்லைக்குள் நுழையாமல் இருக்கக் கவனக்குளிகை(மாத்திரை)யும் தர வேண்டும்.
---------------------
அய்யா உண்டு
கலியனுக்கு வரமருளல்*****
கொட்டிக் கலைக்கக் கூறுகெட்ட சல்லியமும்
ஒட்டியமும் தாரும் உள்ள கருவும் தாரும்
பூசை விதிமுறையும் புவனச் சக்கரமுடனே
தீட்சை விதிமுறையும் சிவவிதியும் தாரும் அய்யா
கொட்டிக் கலைக்கக் கூறுகெட்ட சல்லியமும்
ஒட்டியமும் தாரும் உள்ள கருவும் தாரும்
பூசை விதிமுறையும் புவனச் சக்கரமுடனே
தீட்சை விதிமுறையும் சிவவிதியும் தாரும் அய்யா
உரை
---------
ஒற்றுமையாய் வாழும் மக்களைத் தூண்டிவிட்டு ஒற்றுமையைக் கலைத்திடச் செய்யும் கூறு கெட்ட மாய வித்தைகளும், மாந்திரீக வித்தைகளும், அதன் இரகசியங்களும் எனக்குக் கற்றுத்தாரும். பூசையும் அதன் விதி முறைகளையும், புவனச் சக்கரமும், தீட்சை விதி முறைகளும், சிவ விதி முறைகளும் கற்றுத் தர வேண்டும்.
---------------------
அய்யா உண்டு
---------
ஒற்றுமையாய் வாழும் மக்களைத் தூண்டிவிட்டு ஒற்றுமையைக் கலைத்திடச் செய்யும் கூறு கெட்ட மாய வித்தைகளும், மாந்திரீக வித்தைகளும், அதன் இரகசியங்களும் எனக்குக் கற்றுத்தாரும். பூசையும் அதன் விதி முறைகளையும், புவனச் சக்கரமும், தீட்சை விதி முறைகளும், சிவ விதி முறைகளும் கற்றுத் தர வேண்டும்.
---------------------
அய்யா உண்டு
கலியனுக்கு வரமருளல்*****
ஆவடக்கு மோகினியும் அழைக்க வெகு மோகினியும்
நாவடக்கு மோகினியும் நருள் அழைக்கும் மோகினியும்
ஆண்பெண் பிரிக்க அதிக வெகுமாரணமும்
கோள் பிரித்துக் கட்டிக் குடி அலைக்கும் மாரணமும்
கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும்
தொல்லை வருத்திச் சோலி செய்யும் உச்சாடனமும்
லோகமது வாழாமல் உள் அமுங்கித் தாழ்ந்திடவே
ஏகத் தம்பனமும் இதன் கருவும் தாரும்
ஆவடக்கு மோகினியும் அழைக்க வெகு மோகினியும்
நாவடக்கு மோகினியும் நருள் அழைக்கும் மோகினியும்
ஆண்பெண் பிரிக்க அதிக வெகுமாரணமும்
கோள் பிரித்துக் கட்டிக் குடி அலைக்கும் மாரணமும்
கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும்
தொல்லை வருத்திச் சோலி செய்யும் உச்சாடனமும்
லோகமது வாழாமல் உள் அமுங்கித் தாழ்ந்திடவே
ஏகத் தம்பனமும் இதன் கருவும் தாரும்
---------
உரை
---------
மீண்டும், "ஈசரே, ஆசையை அடக்கும் மோகினி இரகசியமும்; ஆசையை வருவிக்கும் மோகினி இரகசியமும்; பிறரின் நாவன்மையை இல்லாமல் அழிக்கும் மோகினி இரகசியமும்; வேண்டும் மனிதர்களை வரவழைக்கும் மோகினி இரகசியமும்; ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கவும், எல்லாருக்கும் மரணம் உருவாக்கவும், என்றும் கோள் மூட்டிவிட்டு மக்களின் குடிவாழ்வை அலைக்கச் செய்யவும் கூடிய மரண வித்தைகளையும்; தேவதைகளுக்குத் தொல்லை கொடுத்து, ஏவல் செய்ய உச்சரிக்கும் மூல மந்திரமும்; இவ்வுலகு வாழாமல் அழிந்து தாழ்வுற்றிடச் செய்யும் சக்தியும், எல்லாவற்றையும் அடக்கும் சக்தியும் அதன் இரகசியங்களையும் கற்றுத் தர வேண்டும்.
---------------------
அய்யா உண்டு
---------
மீண்டும், "ஈசரே, ஆசையை அடக்கும் மோகினி இரகசியமும்; ஆசையை வருவிக்கும் மோகினி இரகசியமும்; பிறரின் நாவன்மையை இல்லாமல் அழிக்கும் மோகினி இரகசியமும்; வேண்டும் மனிதர்களை வரவழைக்கும் மோகினி இரகசியமும்; ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கவும், எல்லாருக்கும் மரணம் உருவாக்கவும், என்றும் கோள் மூட்டிவிட்டு மக்களின் குடிவாழ்வை அலைக்கச் செய்யவும் கூடிய மரண வித்தைகளையும்; தேவதைகளுக்குத் தொல்லை கொடுத்து, ஏவல் செய்ய உச்சரிக்கும் மூல மந்திரமும்; இவ்வுலகு வாழாமல் அழிந்து தாழ்வுற்றிடச் செய்யும் சக்தியும், எல்லாவற்றையும் அடக்கும் சக்தியும் அதன் இரகசியங்களையும் கற்றுத் தர வேண்டும்.
---------------------
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக