சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கலியுகம் எனச் சிவம் கருத்திட தேவர்கள்
பொலிவுடன் சேர்த்தனர் புராணம் மீதிலே
சலிவுடன் நீசனும் தரணியில் பேர்ந்திட 
வலியுள்ள மாயன் ஸ்ரீரங்கம் மேவினார்
---------



உரை
---------
"இது கலியுகம்" எனச் சிவம் கருதி வெளியே மொழிந்திட, தேவர்கள் மகிழ்வுடன் அவர் திருமொழியைப் புராண ஆகமத்தில் சேர்த்து எழுதினர். தான் பெற்ற வரத்தில் பலவற்றை இழந்து நீசன் பூலோகம் சென்றான். வலிமையுள்ள திருமாலும் ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக