கலியனுக்கு வரமருளல்*****
அல்லாமல் பின்னும் அந்நீசன் கேட்ட வரம்
பொல்லாத விதத்தை புகலக் கேள் ஒண்ணுதலே
கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவானதுவும்
நாடு பாழாக்கி நகரில் கொள்ளை ஆக்கிடவும்
துயில்வோர் போல் உலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு
அயர்தி மோகினிக் கருவும் அரனே நீர் தாரும் என்றான்
அல்லாமல் பின்னும் அந்நீசன் கேட்ட வரம்
பொல்லாத விதத்தை புகலக் கேள் ஒண்ணுதலே
கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவானதுவும்
நாடு பாழாக்கி நகரில் கொள்ளை ஆக்கிடவும்
துயில்வோர் போல் உலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு
அயர்தி மோகினிக் கருவும் அரனே நீர் தாரும் என்றான்
---------
உரை
---------
மேலும், அந்த நீசன் கேட்ட வரங்களையும் பொல்லாத வித்தைகளையும். நான் கூறப் போகிறேன். இலட்சுமிதேவியே நீ கேள்.
நீசன் மீண்டும் வரங்கள் கேட்கலுற்றான்; "ஈசரே, நான் கூடுவிட்டுக் கூடு பாயக் கருவாக இருக்கும் இரகசியத்தை அறியவும், நாட்டைப் பாழாக்கி நகரில் கொள்ளை நோய் உருவாக்கவும், உலக மக்களைத் தூங்கும் நிலைக்கு உள்ளாக்கிக் கொள்ளையடிக்க அயர்தி மோகினி இரகசியமும், எனக்கு அறியும்படி கற்றுத் தாரும்" என்றான் நீசன்.
---------------------
அய்யா உண்டு
---------
மேலும், அந்த நீசன் கேட்ட வரங்களையும் பொல்லாத வித்தைகளையும். நான் கூறப் போகிறேன். இலட்சுமிதேவியே நீ கேள்.
நீசன் மீண்டும் வரங்கள் கேட்கலுற்றான்; "ஈசரே, நான் கூடுவிட்டுக் கூடு பாயக் கருவாக இருக்கும் இரகசியத்தை அறியவும், நாட்டைப் பாழாக்கி நகரில் கொள்ளை நோய் உருவாக்கவும், உலக மக்களைத் தூங்கும் நிலைக்கு உள்ளாக்கிக் கொள்ளையடிக்க அயர்தி மோகினி இரகசியமும், எனக்கு அறியும்படி கற்றுத் தாரும்" என்றான் நீசன்.
---------------------
அய்யா உண்டு
கலியனுக்கு வரமருளல்*****
சிவமூலம் சத்தித் திருமூலம் ஆனதுவும்
தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும்
மாலுடைய மூலம் வாய்த்த இலட்சுமி மூலம்
மேலுடைய தெய்வவித மூலமும் தாரும்
காலனின் மூலம் காமாட்சி தன்மூலம்
வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம்
கணபதியின் மூலம் கிங்கிலியர் மூலமதும்
துணைபதியன் ஆன சுப்பிரமணியர் மூலமதும்
ஆயிரத்தெட்டு அண்ட பிண்ட மூலம் எல்லாம்
வாயிதக் கண்ணே வரமாய் அருளும் என்றான்
சிவமூலம் சத்தித் திருமூலம் ஆனதுவும்
தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும்
மாலுடைய மூலம் வாய்த்த இலட்சுமி மூலம்
மேலுடைய தெய்வவித மூலமும் தாரும்
காலனின் மூலம் காமாட்சி தன்மூலம்
வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம்
கணபதியின் மூலம் கிங்கிலியர் மூலமதும்
துணைபதியன் ஆன சுப்பிரமணியர் மூலமதும்
ஆயிரத்தெட்டு அண்ட பிண்ட மூலம் எல்லாம்
வாயிதக் கண்ணே வரமாய் அருளும் என்றான்
---------
உரை
---------
சிவ மூலமந்திரம், சக்தி மூலமந்திரம், தவ மூலமந்திரம், பிரம்ம மூலமந்திரம், நாராயண மூலமந்திரம், இலட்சுமி மூலமந்திரம், தேவ மூலமந்திரம், காலனின் மூலமந்திரம், காமாட்சி மூலமந்திரம், கன்னி சரசுவதி மூலமந்திரம், மாகாளி மூலமந்திரம், கணபதி மூலமந்திரம், அவருக்குத் துணையாகப் பிறந்த சுப்பிரமணியர் மூலமந்திரம், கிங்கிலியர், ஆயிரத்தெட்டு அண்டம் நிறைந்த மூலமந்திரம் எல்லாம் எனக்குக் கட்டுப்பட வேண்டும். எனக்கு வேண்டிய இன்பங்களை அவற்றின் மூலம் நான் உடனடியாகப் பெற வரங்களை அருள வேண்டும்" என்று பல வரங்களைக் கேட்டான்.
---------------------
அய்யா உண்டு
---------
சிவ மூலமந்திரம், சக்தி மூலமந்திரம், தவ மூலமந்திரம், பிரம்ம மூலமந்திரம், நாராயண மூலமந்திரம், இலட்சுமி மூலமந்திரம், தேவ மூலமந்திரம், காலனின் மூலமந்திரம், காமாட்சி மூலமந்திரம், கன்னி சரசுவதி மூலமந்திரம், மாகாளி மூலமந்திரம், கணபதி மூலமந்திரம், அவருக்குத் துணையாகப் பிறந்த சுப்பிரமணியர் மூலமந்திரம், கிங்கிலியர், ஆயிரத்தெட்டு அண்டம் நிறைந்த மூலமந்திரம் எல்லாம் எனக்குக் கட்டுப்பட வேண்டும். எனக்கு வேண்டிய இன்பங்களை அவற்றின் மூலம் நான் உடனடியாகப் பெற வரங்களை அருள வேண்டும்" என்று பல வரங்களைக் கேட்டான்.
---------------------
அய்யா உண்டு
கலியனுக்கு வரமருளல்*****
அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி
இப்படியே உன்றனுக்கு ஏதுவரம் வேணும் என்றார்
என்ற பொழுது இயல்பு கெட்ட மாநீசன்
தெண்டன் இட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு
கேட்பான் வரங்கள் கீழும் மேலும் நடுங்க
வீழ்ப்பாரம் கெட்ட விசை கெட்ட மாநீசன்
மாயவனார் தம்முடைய வாய்த்த முடியானதையும்
தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாரும் என்றான்
அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தம்பிறப்பும்
வரமுடைய சத்தி வலக்கூறும் தாரும் என்றான்
அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி
இப்படியே உன்றனுக்கு ஏதுவரம் வேணும் என்றார்
என்ற பொழுது இயல்பு கெட்ட மாநீசன்
தெண்டன் இட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு
கேட்பான் வரங்கள் கீழும் மேலும் நடுங்க
வீழ்ப்பாரம் கெட்ட விசை கெட்ட மாநீசன்
மாயவனார் தம்முடைய வாய்த்த முடியானதையும்
தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாரும் என்றான்
அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தம்பிறப்பும்
வரமுடைய சத்தி வலக்கூறும் தாரும் என்றான்
---------
உரை
---------
ஈசர் அவன் முகத்தை நோக்கி, "உனக்கு என்ன வரங்கள் வேண்டும், கேள், தருகிறேன்" என்றார்.
அப்போது நல்ல இயல்பு இல்லாத நீசன் ஈசரை நன்றாக வணங்கி, அவருடைய பாதங்களைக் கட்டிப்பிடித்து, தனது சக்தி எல்லாம் அழிந்து போகப் போகிற கேடு கெட்ட நீசன் பதினான்கு லோகங்களும் நடுங்கும்படியான வரங்களைக் கேட்கலானான்.
1. "ஈசரே, எனக்குத் திருமாலுடைய சிறப்பான முடியும், சக்கரமும், இரதமும் தர வேண்டும்.
2. சிவனுடைய வெண்ணீறும் அந்தணர் பிறப்பும் அதிக வரம் பெற்ற சக்திக்குரிய வலக்கூறும் தர வேண்டும். ... ...
---------------------
அய்யா உண்டு
---------------------
---------
ஈசர் அவன் முகத்தை நோக்கி, "உனக்கு என்ன வரங்கள் வேண்டும், கேள், தருகிறேன்" என்றார்.
அப்போது நல்ல இயல்பு இல்லாத நீசன் ஈசரை நன்றாக வணங்கி, அவருடைய பாதங்களைக் கட்டிப்பிடித்து, தனது சக்தி எல்லாம் அழிந்து போகப் போகிற கேடு கெட்ட நீசன் பதினான்கு லோகங்களும் நடுங்கும்படியான வரங்களைக் கேட்கலானான்.
1. "ஈசரே, எனக்குத் திருமாலுடைய சிறப்பான முடியும், சக்கரமும், இரதமும் தர வேண்டும்.
2. சிவனுடைய வெண்ணீறும் அந்தணர் பிறப்பும் அதிக வரம் பெற்ற சக்திக்குரிய வலக்கூறும் தர வேண்டும். ... ...
---------------------
அய்யா உண்டு
---------------------
கலியனுக்கு வரமருளல்*****
அப்போது தேவர் அமரர்களும் பார்த்து அவனை
இப்போது உன் விழிக்கு ஏற்கும் படியாகப்
பெண் படைத்துத் தந்த பெரியோனைத் தான் வணங்கி
மண் பரந்த மன்னா வரம் கேளு என்றனராம்
என்றபொழுதே இயல்பு கெட்ட மாநீசன்
அன்று அந்த ஈசர் அடிவணங்கி ஏதுசொல்வான்
என்றனக்கு ஏற்ற இளமயிலை உண்டாக்கித்
தந்து அருளிய கோவே சர்வதயாபரனே
இனி எனக்கு ஏற்ற இயல் வரங்கள் ஆனதெல்லாம்
கனி இதழும் வாயானே கையில் தரவேணும் என்றான்
அப்போது தேவர் அமரர்களும் பார்த்து அவனை
இப்போது உன் விழிக்கு ஏற்கும் படியாகப்
பெண் படைத்துத் தந்த பெரியோனைத் தான் வணங்கி
மண் பரந்த மன்னா வரம் கேளு என்றனராம்
என்றபொழுதே இயல்பு கெட்ட மாநீசன்
அன்று அந்த ஈசர் அடிவணங்கி ஏதுசொல்வான்
என்றனக்கு ஏற்ற இளமயிலை உண்டாக்கித்
தந்து அருளிய கோவே சர்வதயாபரனே
இனி எனக்கு ஏற்ற இயல் வரங்கள் ஆனதெல்லாம்
கனி இதழும் வாயானே கையில் தரவேணும் என்றான்
---------
உரை
---------
காம ஆசையில் கலியன் நிற்பதைக் கண்ட தேவர்களும், வானோர்களும் அவனைப் பார்த்து, "கலியனே, இப்பூவுலகில் ஆட்சி புரியப் போகும் மன்னனே. இப்போது உன் கண்களுக்குப் பிடித்தமான பெண்ணைப் படைத்துத் தந்த பெரியோராகிய ஈசரைச் சென்று வணங்கி, நீ அவரிடம் வேண்டிய வரங்களைக் கேள்" என்று கூறினர்.
உடனே, நல்ல இயல்பு இல்லாத மாநீசன் ஈசர் பாதத்தை வணங்கி, "என் மனதுக்கு விருப்பமான இளமை பொருந்திய பெண்ணை உருவாக்கித் தந்தருளிய ஈசரே, சர்வ உலகத்தையும் ஆளுபவனே, கனி இதழுடைய வாயோனே, இனி எனக்கு விருப்பமான வரங்களை உடனடியாகப் பலனளிக்கும்வண்ணம் தந்து அருள வேண்டும்" என்று கேட்டான்.
---------------------
அய்யா உண்டு
---------
காம ஆசையில் கலியன் நிற்பதைக் கண்ட தேவர்களும், வானோர்களும் அவனைப் பார்த்து, "கலியனே, இப்பூவுலகில் ஆட்சி புரியப் போகும் மன்னனே. இப்போது உன் கண்களுக்குப் பிடித்தமான பெண்ணைப் படைத்துத் தந்த பெரியோராகிய ஈசரைச் சென்று வணங்கி, நீ அவரிடம் வேண்டிய வரங்களைக் கேள்" என்று கூறினர்.
உடனே, நல்ல இயல்பு இல்லாத மாநீசன் ஈசர் பாதத்தை வணங்கி, "என் மனதுக்கு விருப்பமான இளமை பொருந்திய பெண்ணை உருவாக்கித் தந்தருளிய ஈசரே, சர்வ உலகத்தையும் ஆளுபவனே, கனி இதழுடைய வாயோனே, இனி எனக்கு விருப்பமான வரங்களை உடனடியாகப் பலனளிக்கும்வண்ணம் தந்து அருள வேண்டும்" என்று கேட்டான்.
---------------------
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக