அகத்தீசரைப் படைத்து நீசனுக்குக் கற்பித்தல்*****
இந்நீசன் லோகமதில் இருந்து ஆளும் நாளையிலே
அன்னீதம் அல்லாமல் அறம் அறிய மாட்டானே
செய்வது எல்லாம் பாவச் சிந்தனையே அல்லாது
மெய்வரம்பு சற்றும் மிகஅறிய மாட்டானே
அல்லாமல் பின்னும் அச்சுதனார் சக்கரமும்
பொல்லாதான் கொண்டு போறான் மால் கிரீடமும்
இவ்வரிசை இரண்டும் இவனிடத்திலே இருந்தால்
எவ்வொருத்தரால் வதைக்க ஏலாது நீசனையும்
என்று அகத்தீசர் இப்படியே தாம்கூற
இந்நீசன் லோகமதில் இருந்து ஆளும் நாளையிலே
அன்னீதம் அல்லாமல் அறம் அறிய மாட்டானே
செய்வது எல்லாம் பாவச் சிந்தனையே அல்லாது
மெய்வரம்பு சற்றும் மிகஅறிய மாட்டானே
அல்லாமல் பின்னும் அச்சுதனார் சக்கரமும்
பொல்லாதான் கொண்டு போறான் மால் கிரீடமும்
இவ்வரிசை இரண்டும் இவனிடத்திலே இருந்தால்
எவ்வொருத்தரால் வதைக்க ஏலாது நீசனையும்
என்று அகத்தீசர் இப்படியே தாம்கூற
---------
உரை
---------
காளை வாகனத்தில் ஏறுகின்ற ஈசரே, இந்த நீசன் பூலோகத்தில் ஆண்டு வரும் சமயத்தில் தீமையான நீதியைத்தவிர எந்தவித தரும நீதிகளையும் பரிபாலிக்க மாட்டானே? அவன் சிந்தையில் பாவ எண்ணத்தைத் தவிர உண்மை நிலையைப் பற்றிச் சிறிதுகூட எண்ண மாட்டானே? மேலும், திருமாலின் வலிமையான சக்கர ஆயுதத்தையும், கிரீடத்தையும் அந்தப் பொல்லாதவன் தன்னோடு எடுத்துச் செல்லப் போகின்றான். இவை இரண்டும் அவனிடத்தில் இருந்தால் எவராலும் அவனை அழிக்க முடியாது" என்று அகத்தீச மாமுனி ஈசரிடம் கூறி விடை பெற்றார்.
---------------------
அய்யா உண்டு
---------
காளை வாகனத்தில் ஏறுகின்ற ஈசரே, இந்த நீசன் பூலோகத்தில் ஆண்டு வரும் சமயத்தில் தீமையான நீதியைத்தவிர எந்தவித தரும நீதிகளையும் பரிபாலிக்க மாட்டானே? அவன் சிந்தையில் பாவ எண்ணத்தைத் தவிர உண்மை நிலையைப் பற்றிச் சிறிதுகூட எண்ண மாட்டானே? மேலும், திருமாலின் வலிமையான சக்கர ஆயுதத்தையும், கிரீடத்தையும் அந்தப் பொல்லாதவன் தன்னோடு எடுத்துச் செல்லப் போகின்றான். இவை இரண்டும் அவனிடத்தில் இருந்தால் எவராலும் அவனை அழிக்க முடியாது" என்று அகத்தீச மாமுனி ஈசரிடம் கூறி விடை பெற்றார்.
---------------------
அய்யா உண்டு
அகத்தீசரைப் படைத்து நீசனுக்குக் கற்பித்தல்*****
கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி
நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும்
அக்கறுகு சூடும் ஆதிமுதல் அந்தம்வரை
வசமாக்கும் வித்தை எல்லாம் நீசனுக்கே கொடுத்தோம்
நிசமான வித்தை மரணம் வரா வித்தைகளும்
கொல்லவே மெத்த கோபத்தால் நீசனையும்
வெல்ல வகை இல்லையல்லோ விடைஏறும் ஈசுரரே
கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி
நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும்
அக்கறுகு சூடும் ஆதிமுதல் அந்தம்வரை
வசமாக்கும் வித்தை எல்லாம் நீசனுக்கே கொடுத்தோம்
நிசமான வித்தை மரணம் வரா வித்தைகளும்
கொல்லவே மெத்த கோபத்தால் நீசனையும்
வெல்ல வகை இல்லையல்லோ விடைஏறும் ஈசுரரே
உரை
---------
பிறகு நீசனிடம் அகத்தீசர், "நீசனே, உனக்குக் கற்பித்துத் தரவேண்டியதும் நீ ஈசரிடம் கேட்ட எல்லாவற்றையும் கற்றுத்தந்து விட்டேன்" என்று கூறினார்.
மிகவும் கொடுமை பொருந்திய நீசன் அவற்றைப் பயன்படுத்துகின்ற வகையில் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டான்.
பின்பு, ஈசரிடம் விடை பெற வந்த அகத்தீசர் ஈசரை நோக்கி, "உத்திராட்ச மாலையும், அறுகன் புல்லும் சூடுகின்ற ஈசரே, தங்கள் உத்தரவுப்படி ஆதிமுதல் அந்தம்வரை உள்ள எல்லா உலகத்தையும் தமது வசமாக்கும் வித்தைகளையும், மரணம் வராமல் ஆக்குகின்ற வித்தைகளையும், அவனது பொய்யான செய்கைகளை உண்மையாக்கும் வித்தைகளையும் நீசனுக்குக் கற்றுக் கொடுத்து விட்டேன். எனவே, ஈசரே அதிகமான கோபத்தால் கூட இந்த நீசனைக் கொன்று வெற்றி கொள்வதற்கு ஒரு வழியும் இல்லையே?
---------------------
அய்யா உண்டு
---------
பிறகு நீசனிடம் அகத்தீசர், "நீசனே, உனக்குக் கற்பித்துத் தரவேண்டியதும் நீ ஈசரிடம் கேட்ட எல்லாவற்றையும் கற்றுத்தந்து விட்டேன்" என்று கூறினார்.
மிகவும் கொடுமை பொருந்திய நீசன் அவற்றைப் பயன்படுத்துகின்ற வகையில் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டான்.
பின்பு, ஈசரிடம் விடை பெற வந்த அகத்தீசர் ஈசரை நோக்கி, "உத்திராட்ச மாலையும், அறுகன் புல்லும் சூடுகின்ற ஈசரே, தங்கள் உத்தரவுப்படி ஆதிமுதல் அந்தம்வரை உள்ள எல்லா உலகத்தையும் தமது வசமாக்கும் வித்தைகளையும், மரணம் வராமல் ஆக்குகின்ற வித்தைகளையும், அவனது பொய்யான செய்கைகளை உண்மையாக்கும் வித்தைகளையும் நீசனுக்குக் கற்றுக் கொடுத்து விட்டேன். எனவே, ஈசரே அதிகமான கோபத்தால் கூட இந்த நீசனைக் கொன்று வெற்றி கொள்வதற்கு ஒரு வழியும் இல்லையே?
---------------------
அய்யா உண்டு
அகத்தீசரைப் படைத்து நீசனுக்குக் கற்பித்தல்*****
நல்லது என்று ஈசர் நன்முனியைத் தான் நோக்கி
வல்ல கவியோடு வந்து உதித்த சாத்திரியே
என்னஎன்ன சாத்திரங்கள் ஏதுஏதுக்கு ஆனாலும்
இன்னா நிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவும் என்றார்
அப்போது அகத்தீசர் ஆதி மறைமுதலாய்
மைபோடும் வித்தை மாஞால அச்சரமும்
கொடுத்தோம் எனவே கூறினார் மாமுனியும்
நல்லது என்று ஈசர் நன்முனியைத் தான் நோக்கி
வல்ல கவியோடு வந்து உதித்த சாத்திரியே
என்னஎன்ன சாத்திரங்கள் ஏதுஏதுக்கு ஆனாலும்
இன்னா நிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவும் என்றார்
அப்போது அகத்தீசர் ஆதி மறைமுதலாய்
மைபோடும் வித்தை மாஞால அச்சரமும்
கொடுத்தோம் எனவே கூறினார் மாமுனியும்
---------
உரை
---------
ஈசர் மாமுனியை நோக்கி, "சக்தி வாய்ந்த கவியோடு இந்த உலகினில் தோன்றிய சாத்திரம் கற்றவனே, என்ன என்ன சாத்திரங்கள் எதற்கு எதற்கு ஆனாலும் அவற்றை இதோ நிற்கின்ற நீசனுக்குக் கற்றுக் கொடுப்பீராக" என்று கூறினார். உடனே, அகத்தீசர் நீசனைத் தனியாக அழைத்துச் சென்று, ஆதி வேதங்கள்முதல் மையைப்போட்டு மயக்குகின்ற வித்தைகள்வரையும், இவ்வுலகத்தில் பெரிய அற்புதங்களைச் செய்யும் மந்திர அச்சரங்களையும் கற்ப்பித்துக் கொடுத்தார்.
---------------------
அய்யா உண்டு
---------
ஈசர் மாமுனியை நோக்கி, "சக்தி வாய்ந்த கவியோடு இந்த உலகினில் தோன்றிய சாத்திரம் கற்றவனே, என்ன என்ன சாத்திரங்கள் எதற்கு எதற்கு ஆனாலும் அவற்றை இதோ நிற்கின்ற நீசனுக்குக் கற்றுக் கொடுப்பீராக" என்று கூறினார். உடனே, அகத்தீசர் நீசனைத் தனியாக அழைத்துச் சென்று, ஆதி வேதங்கள்முதல் மையைப்போட்டு மயக்குகின்ற வித்தைகள்வரையும், இவ்வுலகத்தில் பெரிய அற்புதங்களைச் செய்யும் மந்திர அச்சரங்களையும் கற்ப்பித்துக் கொடுத்தார்.
---------------------
அய்யா உண்டு
அகத்தீசரைப் படைத்து நீசனுக்குக் கற்பித்தல்*****
உடனேதான் ஈசர் உள்ளம் களிகூர்ந்து
திடமாய்தான் ஈசர் சிந்தைதனில் உத்தரித்து
அகத்தீசன் என்று ஆதி மனதுள்ளிருந்து
செகத்தோர்கள் காணச் சித்தாதி தானாகி
சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே
சூத்திரச் சித்தாதி தோன்றினார்காண் அம்மானை
எல்லோரும் கண்டு இவர் ஆகும் என்று சொல்லி
அல்லோரும் மெச்சி அகம் மகிழ்ந்து கொண்டாடி
உடனேதான் ஈசர் உள்ளம் களிகூர்ந்து
திடமாய்தான் ஈசர் சிந்தைதனில் உத்தரித்து
அகத்தீசன் என்று ஆதி மனதுள்ளிருந்து
செகத்தோர்கள் காணச் சித்தாதி தானாகி
சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே
சூத்திரச் சித்தாதி தோன்றினார்காண் அம்மானை
எல்லோரும் கண்டு இவர் ஆகும் என்று சொல்லி
அல்லோரும் மெச்சி அகம் மகிழ்ந்து கொண்டாடி
---------
உரை
---------
உடனே, ஈசர் மனம் மகிழ்ச்சியுற்று மனத்தைத் திடமாக ஒருங்குபடுத்தி மனத்திலேயே ஒருவனை உருவாக்கினார். அவன் அகத்தீசன் என்னும் பெயருடன் இவ்வுலக மக்கள் காணும்படியாக ஈசர் மனதினுள்ளிருந்து, சித்து முதலியவற்றை தானே அறிந்தவனாய், சகல சாத்திரங்களையும், வித்தைகளையும், சமூலக் கருவையும், தெரிந்தவனாய், சூத்திரச் சித்தனாக வெளியே தோன்றினான். அங்கிருந்த எல்லாரும் அதைக் கண்டு "கழியனுக்குக் கற்பிக்க இந்த முனிவன்போதும்" என்று கூறி மகிழ்ச்சி கொண்டு ஆடினர்.
---------------------
அய்யா உண்டு
---------
உடனே, ஈசர் மனம் மகிழ்ச்சியுற்று மனத்தைத் திடமாக ஒருங்குபடுத்தி மனத்திலேயே ஒருவனை உருவாக்கினார். அவன் அகத்தீசன் என்னும் பெயருடன் இவ்வுலக மக்கள் காணும்படியாக ஈசர் மனதினுள்ளிருந்து, சித்து முதலியவற்றை தானே அறிந்தவனாய், சகல சாத்திரங்களையும், வித்தைகளையும், சமூலக் கருவையும், தெரிந்தவனாய், சூத்திரச் சித்தனாக வெளியே தோன்றினான். அங்கிருந்த எல்லாரும் அதைக் கண்டு "கழியனுக்குக் கற்பிக்க இந்த முனிவன்போதும்" என்று கூறி மகிழ்ச்சி கொண்டு ஆடினர்.
---------------------
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக