திருமால் சக்கராயுதத்தைப் பணமாக்கிக் கொடுத்தல்*****
நல்லதுதான் என்று நாட்ட முற்றுச் சன்னாசி
வல்ல பெலமுள்ள மாநீசா நீ கேளு
மந்திரங்களாலே மகாகோடி ஆயுதங்கள்
தந்திரங்களாலே தான்வருத்தல் ஆகிடுமே
அப்படியே ஒத்த அச்சரங்கள்தாம் இருக்க
இப்படியே ஆயுதத்தை எடுத்துச் சுமப்பதென்ன
நீ கேட்ட சக்கரத்தை நிமலன் அவர் தராமல்
தொனி கெட்ட வெற்று இரும்பைச் சும என்று தந்தார்காண்
இரும்பைச் சுமந்தால் இல்லைகாண் ஒன்றும் பயன்
தரும் பொருள்போல் உள்ள சம்பாத்தியம் தாறேன்
மண்டலங்கள் தேசவாழ்வு உண்டாவதற்கும்
கண்டார்கள் மெய்க்கக் கனக திரவியம் போல்
தருகிறேன் உன்றனுக்குத்தான் வேண்டு நீ எனவே
பருமுறுக்காய் ஆண்டி பகர்ந்தாரே நீசனுக்கு
உரை
---------
இதைக் கேட்ட திருமால் மிகவும் நிறைவு அடைந்து, "மிகுந்த சக்திகளைப் பெற்ற நீசனே, நான் இன்னும் ஒன்று கூறுகிறேன். கவனமாகக் கேள். நீ பெற்ற மந்திர தந்திரங்களாலே பலகோடி ஆயுதங்கள் வருத்திக் கொள்ளலாமே. அதற்குரிய மந்திர அச்சரங்கள் நீ தெரிந்து கொண்டிருக்க, இப்படிப்பட்ட தேவையற்ற ஆயுதங்களை சுமந்து கொண்டிருப்பதன் காரணம் என்ன?
நீ கேட்ட சக்கராயுதத்தை ஈசர் தராமல் கணீர் என்னும் தொனி இல்லாது துரு ஏறிய வெறும் இரும்பைச் சுமந்து செல்லென்று தந்து விட்டாரே? இந்த இரும்பைச் சுமந்தால் ஏதாவது பயன் உண்டோ? இல்லை அல்லவா? எனவே, இரும்பு சக்கராயுதத்தை, இந்த உலக மக்கள் வியக்கும்வண்ணம் தேசமெல்லாம் வாழ்வு உண்டாவதற்குரிய பெருமதிப்புள்ள திரவியத்தைப் போன்று சேமித்து வைக்கும் பொருளான பணமாக மாற்றித் தருகிறேன்" என்று கூறினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------
நல்லதுதான் என்று நாட்ட முற்றுச் சன்னாசி
வல்ல பெலமுள்ள மாநீசா நீ கேளு
மந்திரங்களாலே மகாகோடி ஆயுதங்கள்
தந்திரங்களாலே தான்வருத்தல் ஆகிடுமே
அப்படியே ஒத்த அச்சரங்கள்தாம் இருக்க
இப்படியே ஆயுதத்தை எடுத்துச் சுமப்பதென்ன
நீ கேட்ட சக்கரத்தை நிமலன் அவர் தராமல்
தொனி கெட்ட வெற்று இரும்பைச் சும என்று தந்தார்காண்
இரும்பைச் சுமந்தால் இல்லைகாண் ஒன்றும் பயன்
தரும் பொருள்போல் உள்ள சம்பாத்தியம் தாறேன்
மண்டலங்கள் தேசவாழ்வு உண்டாவதற்கும்
கண்டார்கள் மெய்க்கக் கனக திரவியம் போல்
தருகிறேன் உன்றனுக்குத்தான் வேண்டு நீ எனவே
பருமுறுக்காய் ஆண்டி பகர்ந்தாரே நீசனுக்கு
உரை
---------
இதைக் கேட்ட திருமால் மிகவும் நிறைவு அடைந்து, "மிகுந்த சக்திகளைப் பெற்ற நீசனே, நான் இன்னும் ஒன்று கூறுகிறேன். கவனமாகக் கேள். நீ பெற்ற மந்திர தந்திரங்களாலே பலகோடி ஆயுதங்கள் வருத்திக் கொள்ளலாமே. அதற்குரிய மந்திர அச்சரங்கள் நீ தெரிந்து கொண்டிருக்க, இப்படிப்பட்ட தேவையற்ற ஆயுதங்களை சுமந்து கொண்டிருப்பதன் காரணம் என்ன?
நீ கேட்ட சக்கராயுதத்தை ஈசர் தராமல் கணீர் என்னும் தொனி இல்லாது துரு ஏறிய வெறும் இரும்பைச் சுமந்து செல்லென்று தந்து விட்டாரே? இந்த இரும்பைச் சுமந்தால் ஏதாவது பயன் உண்டோ? இல்லை அல்லவா? எனவே, இரும்பு சக்கராயுதத்தை, இந்த உலக மக்கள் வியக்கும்வண்ணம் தேசமெல்லாம் வாழ்வு உண்டாவதற்குரிய பெருமதிப்புள்ள திரவியத்தைப் போன்று சேமித்து வைக்கும் பொருளான பணமாக மாற்றித் தருகிறேன்" என்று கூறினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக