சனி, 28 ஏப்ரல், 2018

அய்யாவகுத்த 32 அறங்கள்

1.வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.

2.கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.

3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.

4.பசுவுக்கு புல்லும்,வைக்கோலும் கொடுப்பது.

5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.


6.வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.


7.திண்பண்டம் நல்கல்.


8.அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.


9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.


10.அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.


11.தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.


12.வாசனைப் பொருட்களை கொடுப்பது.


13.நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.


14.துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.


15.நாவிதர்களுக்கு உதவி செய்வது.


16.ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.


17.ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.


18.தலைக்கு எண்ணெய் கொடுப்பது.


19.திருமணம் ஆகாத ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பது.


20.பிறர் துன்பம் தீர்ப்பது.


21.தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.


22.மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.


23.சாலைகள் அமைத்து கொடுப்பது.


24.சோலைகளை உண்டாக்கி வைப்பது.


25.பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.


26.மிருகங்களுக்கு உணவளிப்பது.


27.சுமைதாங்கி நிறுவுதல்.


28.விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.


29.கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.


30.குழந்தைகளுக்கு பால் வழங்குதல்.


31.பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.


32.வஸ்த்திர தானம் செய்தல்.


இவைகளே அய்யாவைகுண்டர் வகுத்த 32 அறங்கள் ஆகும்.இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடித்து மகிழ்வோம்.
அய்யா உண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக