சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
தாண்மை மொழி பேசாதே தலைவிரித்த பேயா நீ 
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் 
தேவரையும் வேலை கொள்ள சிவமூலம் பெற்றிருக்க
ஒன்றும் இல்லாப் பேயனொடு யுத்தமிட்டால் என்றனையும்
நன்று இனிய பெண்கள் நகைப்பார் நீ அப்புறம் போ
என்று அந்த நீசன் இயம்பத் திருமாலும்



உரை
---------
... எனவே என்னைத் தாழ்த்திப் பேசாதே, தலைவிரித்துப் போட்டிருக்கும் பேயனே, மூவர்முதல் முப்பத்து முக்கோடி தேவர்களை எல்லாரையும் வேலை வாங்கச் சக்தியுள்ள சிவ மூலஇரகசியம் எனக்குத் தெரியும். என் நிலை இவ்வாறிருக்க, ஒரு சக்தியும் இல்லாத இந்தப் பேயனோடு போர் புரிந்தால் சாதாரண பெண்கள்கூட என்னைப் பார்த்துச் சிரிப்பார்களே? பைத்தியக்காரனே நீ நகர்ந்து போடா" என்று அந்த நீசன் சீறி விழுந்து பேசினான்.
---------------------
அய்யா உண்டு
---------------------



திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
குன்று கரத்தெடுத்த கோபாலரோடு உரைப்பான்
ஆள்படைகள் இல்லை ஆயுதங்கள் தாமும் இல்லை 
வேழ்ப்படைகள் இல்லை வெட்ட வாளும் இல்லை
தடிஇல்லை சக்கரமும்தான் இல்லை உன்கையிலே
முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோடு யுத்தம் இட்டால்
ஆண்மை இல்லை என்றனக்கு ஆயிழைமார் ஏசுவரே





உரை
---------
திருமால் உத்தமிட அழைப்பதை கேட்ட மாநீசன் குன்றெடுத்த திருமாலிடம் "ஏய் பண்டாரம், ஆள் படைகளோ, ஆயுதங்களோ, யானைப் படைகளோ, என்னை வெட்டித் தள்ள வாளா, தண்டாயுதமோ, சக்கராயுதமோ உன் கைவசம் இல்லையே?
அப்படி இருக்க, முடியை விரித்துக் கந்தைத் துணி உடுத்திய இந்தப் பிச்சைக்காரனோடு போர் புரிந்தால் எனக்கு வீரம் இல்லை என்று என் மனைவியும் ஏனைய பெண்டிரும் பேசுவார்களே? ...
---------------------
அய்யா உண்டு 




திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
அன்று பரதேசி அவனோடு அங்கு ஏதுரைப்பார்
பிச்சைக்காரன் தனக்குப் பெலம் இல்லை என்றோ நீ 
அச்சம் அது இல்லாமல் அடமாய் இது உரைத்தாய்
பண்டாரந்தன் பெலமும் பழி நீசா உன்பெலமும்
சண்டை இட்டுப் பார்த்தால்தான் தெரியும் மாநீசா
என்று பண்டாரம் ஈதுரைக்க அந்நீசன்

---------


உரை
---------
நீசனின் கீழான பேச்சைக் கேட்ட பரதேசியாகிய திருமால், "டேய், இந்தப் பிச்சைக்காரனுக்குப் பலம் இல்லை என்னும் காரணத்தால் தானே நீ சிறிதும் பயமின்றித் திமிராகப் பேசுகின்றாய். இந்தப் பிச்சைக்காரப் பண்டாரத்தின் பலமும், பழித்தன்மையுடைய நீசா, உன் பலமும் நமக்குள் சண்டையிட்டுப் பார்த்தால்தானே புரியும். எனவே சண்டைக்கு வா" என்று திருமால் யுத்தமிட அழைத்தார்.
---------------------
அய்யா உண்டு
---------------------


திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
அப்போது நீசன் ஆண்டிதனைப் பார்த்து
இப்போது போடா இரப்பனோடு ஏது சண்டை 
மாயன் வரவேணும் வலுபார்த்து விட்டிடுவேன்
பேயனுடன் எனக்குப் பேச்சு என்ன நீ போடா
என்று அந்த நீசன் இவ்வளமை கூறிடவே
---------



உரை
---------
அப்போது, நீசன் ஆண்டியைப் பார்த்து, "போடா, இந்த இரப்பனோடு சண்டை ஏன்? இப்போது மாயன் இங்கு வர வேண்டும். அப்படி அவன் இங்கு வந்தால் அவனது பலத்தை முறியடித்து விடுவேன். அத்தகைய எனக்கு இந்தப் பேய் தோற்றத்தையுடைய உன்னிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? நீ போடா" என்று நீசன் தன் கீழான மன நிலைமையைக் கூறினான்.
---------------------
அய்யா உண்டு
---------------------


திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
ஈசரிடத்தில் இறைஞ்சி வரம் பெற்றதிலே
தேச இரப்பனுக்குச் சிறிது ஈ என்றுரைத்தார் 
தாராதே போனால் சாபம் இடுவேன் உனக்கு
பாராய் நீ என்று பகட்டினார் எம்பெருமாள்
---------


உரை
---------
"நீசனே, நீ ஈசரிடத்தில் பெற்ற வரங்கள் ஏராளம் உண்டல்லவா? அவற்றில் சிறிதளவு எனக்குக் கொடு. அப்படி நீ எனக்குத் தராவிட்டால் நான் உன்னைச் சாபமிடுவேன். இதை நீ அறிந்து கொள்வாயாக" என்று ஆண்டியாக வந்த திருமால் உருட்டல் பேசி நடித்தார்.
---------------------
அய்யா உண்டு 


திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
அன்று ஸ்ரீரங்கர் ஆண்டிஉரு தாமாகித்
தலைவிரித்துக் கந்தை சற்றே கலைபூண்டு 
சிலை இல்லா வெறும் கையால் சென்றாரே நீசனிடம்
நீசனிடத்தில் நெடுமால்தாம் முன்ஏகி
வாசமுடன் வார்த்தை வழுத்தினார் அம்மானை


உரை
---------
அச்சமயம், ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருந்த திருமால், ஓர் ஆண்டியைப் போலவும், தலைமுடியை விரித்துப் போட்டுக் கந்தைத் துணி உடுத்த கோலத்தோடும், ஆயுதம் இல்லாத வெறுங்கையோடும், ஈசரிடம் விடை பெறுவதற்காக வந்து கொண்டிருந்த நீசன் முன்னால் சென்றார்.
அவனிடம் திருமால், இனிமையான சில வார்த்தைகளைக் கூறலானார். ...
---------------------
அய்யா உண்டு
----------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக