சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

அப்போது நீசன் ஆண்டி உரைத்தபடி 
எப்போதும் மறவேன் இதைமறந்து வம்புசெய்தால் 
சொன்னபடி எல்லாம் தோற்று இறந்து என்உயிரும் 
வன்னரகில் போவேன் என்று ஆணை இட்டான் மாநீசன்



உரை
---------
இதைக் கேட்ட நீசன், ஆண்டி கூறியபடி கூறி "இவற்றை எப்பொழுதும் மறக்க மாட்டேன். அதற்குமாறாக ஞாபகமின்றிப் பண்டாரம் முதலியோரைத் துன்புறுத்தினால், நீ சொன்னபடி எல்லாவற்றையும் இழந்து என் உயிரும் வன்மையான நரகம் செல்லட்டும்" என்று கூறி வரங்கள் பேரிலும், தன் மனைவி பேரிலும் திருமாலுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான்.
---------------------
அய்யா உண்டு 



அப்போது பண்டாரம் அகம் மகிழ்ந்து கொண்டாடி
இப்போது நீதான் ஈசர்தமை வணங்கி
வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும் 
பெண்டு அவள் பேரதிலும் பெலமாக இப்போது
ஆண்டி பரதேசி ஆகி வந்த பேர்களையும்
வீணடி இடறு செய்யேன் எனவே நீ ஆணையிட்டு
ஆணைக்கு இடறு செய்து ஆண்டிகளைச் சில்லம் இட்டால்
வீணேபோம் என்வரங்கள் வீட்டுப் பெண்ணார்முதல்
பெண் தோற்று நானும் பெற்றவரங்கள் தோற்று
மண் தோற்று வாழ்வும் மக்கள்கிளை தோற்று
சேனைத்தளம் தோற்று சீமைஅரசும் தோற்று
ஆனை பரி தோற்று அரசுமேடை தோற்று
என்உயிரும் தோற்று என்கிளையோடே நானும்
வன்னரகில் போவோம் என்றே வாக்கு உரைத்திடு நீ




உரை
---------
அப்பொழுது மாயன் மனம் மகிழ்வுடனும், புன்சிரிப்புடனும், "நீசனே, ஆண்டிகளாகவும், பரதேசிகளாகவும் வந்தவர்களை வீணாகத் துன்புறுத்தமாட்டேன் என்றும்; அதற்குமாறாக அவர்களை நான் துன்புறுத்தினால் என்னுடைய வரங்களெல்லாம் வீணாகப் போகட்டும் என்றும்; என் மனைவி பெண் ஏவலாளர்கள்முதல் நாட்டுப் பெண்கள்வரை என்னிடமிருந்து பிரிந்து போகட்டும் என்றும்; என் சொத்துக்கள், மக்கள், சந்ததிகள், சேனைகள், இத்தேச அரசாட்சி, யானைகள், குதிரைகள் என் இனிய உயிர் ஆகியவை என்னைவிட்டு அழிந்து போகட்டும் என்றும்; நானும் என் சந்ததியரும் கொடுமையான நரகில் சென்றடைவோம் என்றும்; நீ இப்போது ஈசரை வணங்கிப் பெற்றுக் கொண்டு போகிற அதிகமான வரங்கள் பேரிலும், உன் மனைவி பேரிலும் ஆணையிட்டுக் கூறிடு" என்று கூறினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக