*கலிச்சியைப் படைத்தல்*****
பெண்ணோடு உறவாடிப் பேதலித்து அந்நீசன்
மண்ணோடு மண்ணும் மருவுவதுபோல் மருவி
ஆசை அவள்பேரில் அங்கம் எல்லாம்தான் உருகி
நீசன் அவள் பேரில் நினைவாக நின்றதல்லால்
படைத்து அருளி வைத்த பரமனையும் எண்ணாமல்
தடதட எனப் பெண்ணைத் தான்எடுத்து முத்திடுவான்
உரை
---------
மேலும், மாநீசன் கலிச்சியிடம் மண்ணோடு மண் கலந்ததைப் போன்று, கலந்து அப்பெண்ணோடு உறவு கொண்டான். அதனால் தனது சக்தியெல்லாம் உருகிப் பாய, புத்தி பேதலித்து, அவள்மேல் ஒரே நினைவு கொண்டு நின்றானே அல்லாமல், அப்பெண்ணைப் படைத்த பரமனாகிய ஈசரை எண்ணிப் பார்க்கவில்லை.
ஈசர் நினைவின்றி அப்பெண்ணையே மீண்டும் மீண்டும் எடுத்திடுவான்; முத்தம் கொடுத்திடுவான்.
---------------------
அய்யா உண்டு
பெண்ணோடு உறவாடிப் பேதலித்து அந்நீசன்
மண்ணோடு மண்ணும் மருவுவதுபோல் மருவி
ஆசை அவள்பேரில் அங்கம் எல்லாம்தான் உருகி
நீசன் அவள் பேரில் நினைவாக நின்றதல்லால்
படைத்து அருளி வைத்த பரமனையும் எண்ணாமல்
தடதட எனப் பெண்ணைத் தான்எடுத்து முத்திடுவான்
உரை
---------
மேலும், மாநீசன் கலிச்சியிடம் மண்ணோடு மண் கலந்ததைப் போன்று, கலந்து அப்பெண்ணோடு உறவு கொண்டான். அதனால் தனது சக்தியெல்லாம் உருகிப் பாய, புத்தி பேதலித்து, அவள்மேல் ஒரே நினைவு கொண்டு நின்றானே அல்லாமல், அப்பெண்ணைப் படைத்த பரமனாகிய ஈசரை எண்ணிப் பார்க்கவில்லை.
ஈசர் நினைவின்றி அப்பெண்ணையே மீண்டும் மீண்டும் எடுத்திடுவான்; முத்தம் கொடுத்திடுவான்.
---------------------
அய்யா உண்டு
கலிச்சியைப் படைத்தல்*****
கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியென
அண்ட அவளைச் சென்று ஆவி முகத்தோடு அணைத்து
நன்றாகத் தர்மம் நாள்தோறும் செய்து குண்டம்
கண்டாரைப் போலக் கட்டினான் மங்கையரை
மங்கையரை நீசன் வாயார முத்தமிட்டுக்
கொங்கைதமைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று
எடுப்பான் அவனை இடுப்பிலே வைத்திடுவான்
படுப்பமோ என்று பாய் விரிக்க நின்றிடுவான்
கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியென
அண்ட அவளைச் சென்று ஆவி முகத்தோடு அணைத்து
நன்றாகத் தர்மம் நாள்தோறும் செய்து குண்டம்
கண்டாரைப் போலக் கட்டினான் மங்கையரை
மங்கையரை நீசன் வாயார முத்தமிட்டுக்
கொங்கைதமைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று
எடுப்பான் அவனை இடுப்பிலே வைத்திடுவான்
படுப்பமோ என்று பாய் விரிக்க நின்றிடுவான்
---------
உரை
---------
இதைக் கண்ட மாநீசன் "ஆகா, இது கண் கொள்ளாக் காட்சி" என்று மகிழ்ச்சியுற்று, அவளை அடைவதற்காக அணுகிச் சென்று முகத்தோடு முகமாக அணைத்துக் கொண்டான். நல்ல முறையில் என்றென்றும் தருமம் செய்து கடைசியில் வைகுண்டபதவி அடையும் போதுள்ள பேரின்பம்போன்று அந்தப் பெண்ணைக் கட்டி அணைத்து, அவளை வாய் சோர்வு அடையும்வரை முத்தமிட்டான். அவளது அழகான கொங்கைகளைக் கண்டு ஆசை கொண்டு ஆடிடுவான்; அவளை எடுத்திடுவான்; அவளை இடுப்பிலே தூக்கி வைத்திடுவான்; "படுத்துத் தூங்குவோமா" என்று பாய் விரிக்கச் சென்றிடுவான்
---------------------
அய்யா உண்டு
---------------------
---------
இதைக் கண்ட மாநீசன் "ஆகா, இது கண் கொள்ளாக் காட்சி" என்று மகிழ்ச்சியுற்று, அவளை அடைவதற்காக அணுகிச் சென்று முகத்தோடு முகமாக அணைத்துக் கொண்டான். நல்ல முறையில் என்றென்றும் தருமம் செய்து கடைசியில் வைகுண்டபதவி அடையும் போதுள்ள பேரின்பம்போன்று அந்தப் பெண்ணைக் கட்டி அணைத்து, அவளை வாய் சோர்வு அடையும்வரை முத்தமிட்டான். அவளது அழகான கொங்கைகளைக் கண்டு ஆசை கொண்டு ஆடிடுவான்; அவளை எடுத்திடுவான்; அவளை இடுப்பிலே தூக்கி வைத்திடுவான்; "படுத்துத் தூங்குவோமா" என்று பாய் விரிக்கச் சென்றிடுவான்
---------------------
அய்யா உண்டு
---------------------
கலிச்சியைப் படைத்தல்*****
நீசன் நினைத்த நினைவுபோல் அம்மடவை
பாசக்கலை தூவப் பகட்டி விழித்தாள் மருட்டி
மும்மடங்காய் மோகம் முருகுக் குழல் சரிய
கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள்
நீசன் நினைத்த நினைவுபோல் அம்மடவை
பாசக்கலை தூவப் பகட்டி விழித்தாள் மருட்டி
மும்மடங்காய் மோகம் முருகுக் குழல் சரிய
கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள்
---------
உரை
---------
நீசன் எப்படி நினைத்தானோ அப்படிப்பட்ட குணங்களோடு, பாசத்தை ஊட்டுகின்ற கலைகளைத் தெரிந்தவளாக, தன் கண்களை உருட்டிப் பகட்டோடு மினுக்குபவளாக, ஆசையைத் தூவி நீசனுக்கு மூன்று மடங்கு ஆசை பெருகும்படி செய்பவளாக, அழகான கூந்தல் ஒரு பக்கம் சரிய, ஆகாயத்திலும் அடக்க முடியாத காம ஆசை கரைபுரண்டோட, பெண்ணொருத்தி பிறந்தாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------
---------
நீசன் எப்படி நினைத்தானோ அப்படிப்பட்ட குணங்களோடு, பாசத்தை ஊட்டுகின்ற கலைகளைத் தெரிந்தவளாக, தன் கண்களை உருட்டிப் பகட்டோடு மினுக்குபவளாக, ஆசையைத் தூவி நீசனுக்கு மூன்று மடங்கு ஆசை பெருகும்படி செய்பவளாக, அழகான கூந்தல் ஒரு பக்கம் சரிய, ஆகாயத்திலும் அடக்க முடியாத காம ஆசை கரைபுரண்டோட, பெண்ணொருத்தி பிறந்தாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------
கலிச்சியைப் படைத்தல்*****
அன்று அந்த நீசனுட அரையில் ஓர்ஆக்கை இட்டு
இருக்கக் கீழ்க் கட்டி எழுந்திரு நீ என்றிடவே
பொதுக்கெனவே இடது புறத்தில் ஒருஎலும்பைத்
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து
வெறி கொண்ட நீசன் விலாவில் எடுத்ததனால்
நீசன் பலத்தில் நேர்பாதி ஆகும் என்று
வாச மடவாய் வரவே மதன்தனை நினைத்தார்
மதனை அரன் நினைக்க மாநீசன் தன்னெலும்பு
வதன மட மாதாய் வந்ததுவே அம்மானை
அன்று அந்த நீசனுட அரையில் ஓர்ஆக்கை இட்டு
இருக்கக் கீழ்க் கட்டி எழுந்திரு நீ என்றிடவே
பொதுக்கெனவே இடது புறத்தில் ஒருஎலும்பைத்
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து
வெறி கொண்ட நீசன் விலாவில் எடுத்ததனால்
நீசன் பலத்தில் நேர்பாதி ஆகும் என்று
வாச மடவாய் வரவே மதன்தனை நினைத்தார்
மதனை அரன் நினைக்க மாநீசன் தன்னெலும்பு
வதன மட மாதாய் வந்ததுவே அம்மானை
---------
உரை
---------
ஈசர் உடனே செயற்பட்டு நீசனுடைய அரையில் ஒரு கொடியினால் கட்டி அவன் இருப்பதற்கு கீழ்க்கட்டு ஒன்று கட்டி, திடீரென்று அவனை எழும்பச் சொன்னார், அவ்வாறு அவன் எழும்பவும், அவனது இடதுபுற விலா எலும்பு ஒன்றைத் தெறித்து வரச் செய்தார்.
அதைப் பார்த்து, "பெண் வெறி கொண்ட இந்த நீசனுடைய இடது விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்ததால் இஃது அவனுடைய பலத்தில் நேர்பாதியை ஒக்கும்" என்று எண்ணினார்.
அந்த எலும்பை வாசனை பொருந்திய பெண்ணாக உருவாக்க எண்ணி மன்மதனைத் தியானித்தார்.மன்மதனை ஈசர் தியானிக்கவே, மாநீசனுடைய இடது விலாஎலும்பு அழகு பொருந்திய பெண்ணாக உருவெடுத்து வந்தது.
---------------------
---------
ஈசர் உடனே செயற்பட்டு நீசனுடைய அரையில் ஒரு கொடியினால் கட்டி அவன் இருப்பதற்கு கீழ்க்கட்டு ஒன்று கட்டி, திடீரென்று அவனை எழும்பச் சொன்னார், அவ்வாறு அவன் எழும்பவும், அவனது இடதுபுற விலா எலும்பு ஒன்றைத் தெறித்து வரச் செய்தார்.
அதைப் பார்த்து, "பெண் வெறி கொண்ட இந்த நீசனுடைய இடது விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்ததால் இஃது அவனுடைய பலத்தில் நேர்பாதியை ஒக்கும்" என்று எண்ணினார்.
அந்த எலும்பை வாசனை பொருந்திய பெண்ணாக உருவாக்க எண்ணி மன்மதனைத் தியானித்தார்.மன்மதனை ஈசர் தியானிக்கவே, மாநீசனுடைய இடது விலாஎலும்பு அழகு பொருந்திய பெண்ணாக உருவெடுத்து வந்தது.
---------------------
கலிச்சியைப் படைத்தல்*****
கேட்ட மாநீசனுக்குக் கீர்த்தி என்ன மாமயிலே
தேட்டமுடன் இப்போது செப்பு என உரைத்தார்
அப்போது சத்தி ஆதி அடிவணங்கி
ஒப்பு ஒன்று இல்லாத உடைய பெருமானே
பாதியாய் நீசனையும் பகிர்ந்து அவன் உடலில்
வீதியாம் இடது விலாவில் ஒருஎலும்பைத்
தட்டிக் கழற்றிச் சச்சுருவம் தானாக்கித்
திட்டித்து நீசனுக்குச் சிணம் கொடுவும் ஈசுரரே
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
கேட்ட மாநீசனுக்குக் கீர்த்தி என்ன மாமயிலே
தேட்டமுடன் இப்போது செப்பு என உரைத்தார்
அப்போது சத்தி ஆதி அடிவணங்கி
ஒப்பு ஒன்று இல்லாத உடைய பெருமானே
பாதியாய் நீசனையும் பகிர்ந்து அவன் உடலில்
வீதியாம் இடது விலாவில் ஒருஎலும்பைத்
தட்டிக் கழற்றிச் சச்சுருவம் தானாக்கித்
திட்டித்து நீசனுக்குச் சிணம் கொடுவும் ஈசுரரே
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
---------
உரை
---------
"மாமயிலே, இத்தனை புகழுடன் கூடிய பெண்ணை நீசனுக்கு எப்படிக் கொடுப்பது? அதற்குரிய தகுதியான வழியை நீ கூறுவாயாக" என்று ஆலோசனை கேட்டார்.
இம்மொழியைக் கேட்ட சக்திதேவி, ஈசரின் பாதங்களை வணங்கி, "யாருக்கும் ஒப்பில்லாத பெருமாளே, ஈசுரரே, இந்த நீசனை இருபாதியாகக் கணக்கெடுத்துப் பகிர்ந்து அவன் உடலில் இருக்கின்ற விசாலமான இடது பக்க விலாவில் ஒரு எலும்பைத் தட்டிக் கழற்றி, ஒரு பெண் உருவத்தை உருவாக்கி, இந்த நீசனுக்கு உடனடியாகக் கொடுத்து விடுவீராக" என்று உமையாள் சொன்னாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------
---------
"மாமயிலே, இத்தனை புகழுடன் கூடிய பெண்ணை நீசனுக்கு எப்படிக் கொடுப்பது? அதற்குரிய தகுதியான வழியை நீ கூறுவாயாக" என்று ஆலோசனை கேட்டார்.
இம்மொழியைக் கேட்ட சக்திதேவி, ஈசரின் பாதங்களை வணங்கி, "யாருக்கும் ஒப்பில்லாத பெருமாளே, ஈசுரரே, இந்த நீசனை இருபாதியாகக் கணக்கெடுத்துப் பகிர்ந்து அவன் உடலில் இருக்கின்ற விசாலமான இடது பக்க விலாவில் ஒரு எலும்பைத் தட்டிக் கழற்றி, ஒரு பெண் உருவத்தை உருவாக்கி, இந்த நீசனுக்கு உடனடியாகக் கொடுத்து விடுவீராக" என்று உமையாள் சொன்னாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------
கலிச்சியைப் படைத்தல்*****
உடை அழகாய் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய்
அழகுக்கு ஏற்ற அத்தர் மணத்தோடும்
கழப கத்தூரி கமகம என்னும் வாசனை போல்
மூவர் தேவர்களையும் மோகமாய் மயக்கச்
சீவனது கொடுத்துத் திருட்டித்துத் தாரும் என்றான்
அப்போது ஈசுரரும் அகம் மகிழ்ந்து கொண்டாடி
இப்போது கேட்டதற்கு என்ன செய்வோம் என்று சொல்லி
அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும்
திருவுக்கு நன்றாய்ச் செப்பலுற்றார் அம்மானை
உடை அழகாய் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய்
அழகுக்கு ஏற்ற அத்தர் மணத்தோடும்
கழப கத்தூரி கமகம என்னும் வாசனை போல்
மூவர் தேவர்களையும் மோகமாய் மயக்கச்
சீவனது கொடுத்துத் திருட்டித்துத் தாரும் என்றான்
அப்போது ஈசுரரும் அகம் மகிழ்ந்து கொண்டாடி
இப்போது கேட்டதற்கு என்ன செய்வோம் என்று சொல்லி
அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும்
திருவுக்கு நன்றாய்ச் செப்பலுற்றார் அம்மானை
---------
உரை
---------
... (கலிச்சியை) உடம்பில் அழகு பொருந்திய உடைகளும், ஓங்காரம் போன்ற அழகு வடிவக் கூந்தலும் உடையவளாகவும், அவள் அழகுக்கு ஏற்ற அத்தர், களபம், கத்தூரி போன்ற 'கம்' என்னும் சிறந்த மனமுள்ளவளாகவும், மூவர்முதல் தேவர்களையும் மயக்கும் சக்தி உள்ளவளாகவும் படைத்து உயிரூட்டித் தாரும்" என்றான்.
அதைக் கேட்ட ஈசர் மனம் மகிழ்ச்சியுற்று "இந்த நீசன் கேட்டதற்கு என்ன வழி செய்வோம்?" என்று சிந்தித்து விடை காண முடியவில்லை.
எனவே, தமதருகில் இருந்த சக்தி உமையாளிடம் ...
---------------------
அய்யா உண்டு
---------
... (கலிச்சியை) உடம்பில் அழகு பொருந்திய உடைகளும், ஓங்காரம் போன்ற அழகு வடிவக் கூந்தலும் உடையவளாகவும், அவள் அழகுக்கு ஏற்ற அத்தர், களபம், கத்தூரி போன்ற 'கம்' என்னும் சிறந்த மனமுள்ளவளாகவும், மூவர்முதல் தேவர்களையும் மயக்கும் சக்தி உள்ளவளாகவும் படைத்து உயிரூட்டித் தாரும்" என்றான்.
அதைக் கேட்ட ஈசர் மனம் மகிழ்ச்சியுற்று "இந்த நீசன் கேட்டதற்கு என்ன வழி செய்வோம்?" என்று சிந்தித்து விடை காண முடியவில்லை.
எனவே, தமதருகில் இருந்த சக்தி உமையாளிடம் ...
---------------------
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக