சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

திருமால் சக்கராயுதத்தைப் பணமாக்கிக் கொடுத்தல்*****
வலியான சக்கரமும் வாய்த்த பணம் ஆகியதே 
பணமாகிக் கீழே குதித்திடவே 
இணமான நீசன் எட்டியே தான் பிடித்துக்
கண்ணில் மிகஒற்றிக் காரிகையாளோடு உரைப்பான்
பெண்அணங்கே நமக்குப் பெலங்கள் வந்து வாய்த்ததடி



உரை
---------
... ... வலியுடைய சக்கரமும் பணமாக மாறிக் குதித்து விழுந்தது. இதைப் பார்த்த தீய குணத்தையுடைய நீசன் அப்பணத்தை எட்டிப் பிடித்துத் தனது கண்களில் ஒற்றி விட்டு, தனது மனைவியின் கையில் கொடுத்து, "பெண்ணே, நமக்கு எல்லாப் பலங்களும் தாமே வந்து வாய்ந்தன பார்த்தாயா?" என்று மகிழ்வுடன் கூறி, ஈசரிடம் விடை பெறச் செல்லலானான்.
---------------------
அய்யா உண்டு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக