விருத்தம் (ஆசிரியர் கூற்று)*********
இப்படித் தெய்வ இராசமெய் நீதமும்
மற்படி தேச மனுவுட நீதமும்
நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
கற்புடன் ஈசர் கண்டு மகிழ்ந்தார்.
இப்படித் தெய்வ இராசமெய் நீதமும்
மற்படி தேச மனுவுட நீதமும்
நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
கற்புடன் ஈசர் கண்டு மகிழ்ந்தார்.
---------
உரை
---------
இவ்வண்ணம் இராச நீதமும் (தருமநீதமும் - ஆண்கள் நிலைமை) தெய்வ நீதமும் (மெய்நீதம்), மனு நீதமும் (பெண்கள் வளமை) வளமை பொருந்திய தெச்சணாபூமியில் நிலவி வந்ததால் நல்ல பண்புடைய மக்கள் அத்தேசத்தில் மகிழ்வுடன் வாழ்வதை அறிந்து சிவன் மகிழ்ச்சியுற்றார்.
---------------------
உரை
---------
இவ்வண்ணம் இராச நீதமும் (தருமநீதமும் - ஆண்கள் நிலைமை) தெய்வ நீதமும் (மெய்நீதம்), மனு நீதமும் (பெண்கள் வளமை) வளமை பொருந்திய தெச்சணாபூமியில் நிலவி வந்ததால் நல்ல பண்புடைய மக்கள் அத்தேசத்தில் மகிழ்வுடன் வாழ்வதை அறிந்து சிவன் மகிழ்ச்சியுற்றார்.
---------------------
*சாதிவளமை*************
...வையம் வழக்கு வராதே இருந்தார்
அடிபணிய என்று அலைச்சல் மிகச்செய்யாமல்
குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தார் அம்மானை
சேயினுட ஆட்டு செவிகேட்டு இருப்பது அல்லால்
பேயினுட ஆட்டோர் பூதர் அறியாது இருந்தார்
இந்தப்படி மனுவோர் எல்லாம் இருந்து ஒரு
விந்துக் கொடி போல் வீற்றிருந்தார் அம்மானை.
...வையம் வழக்கு வராதே இருந்தார்
அடிபணிய என்று அலைச்சல் மிகச்செய்யாமல்
குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தார் அம்மானை
சேயினுட ஆட்டு செவிகேட்டு இருப்பது அல்லால்
பேயினுட ஆட்டோர் பூதர் அறியாது இருந்தார்
இந்தப்படி மனுவோர் எல்லாம் இருந்து ஒரு
விந்துக் கொடி போல் வீற்றிருந்தார் அம்மானை.
---------
உரை
---------
...இந்த உலகச் சம்மந்தமான வழக்குகள் அவர்களுக்குள் எழாமலேயே இருந்தன.
தம்மை நாடி வந்தவர்கள் தமக்கு அடிபணிய வேண்டும் என்று அலைச்சல் செய்யாமல் குடி மக்கள் எல்லோரும் ஒரு மனதோடு பொருந்தி வாழ்ந்து வந்தார்கள். தங்கள் குழந்தைகளின் விளையாட்டு வெற்றிகளைப் பற்றிக் கேட்டு மகிழ்ந்து இருந்தனரே அல்லாமல் பேய்ப் பிடித்து அடியவர்கள் பற்றி அம்மக்கள் அறியாது இருந்தனர். இப்படியாகத் தெச்சணாபூமியில் வாழ்ந்த மக்கள் ஒரே குடும்பத்தில் தோன்றிய மக்களைப் போன்று அமைதியாக வாழ்ந்தனர்.
---------------------
உரை
---------
...இந்த உலகச் சம்மந்தமான வழக்குகள் அவர்களுக்குள் எழாமலேயே இருந்தன.
தம்மை நாடி வந்தவர்கள் தமக்கு அடிபணிய வேண்டும் என்று அலைச்சல் செய்யாமல் குடி மக்கள் எல்லோரும் ஒரு மனதோடு பொருந்தி வாழ்ந்து வந்தார்கள். தங்கள் குழந்தைகளின் விளையாட்டு வெற்றிகளைப் பற்றிக் கேட்டு மகிழ்ந்து இருந்தனரே அல்லாமல் பேய்ப் பிடித்து அடியவர்கள் பற்றி அம்மக்கள் அறியாது இருந்தனர். இப்படியாகத் தெச்சணாபூமியில் வாழ்ந்த மக்கள் ஒரே குடும்பத்தில் தோன்றிய மக்களைப் போன்று அமைதியாக வாழ்ந்தனர்.
---------------------
**சாதிவளமை*************
சான்றோர் முதலாய்ச் சக்கிலியன் வரையும்
உண்டான சாதி ஓக்க ஓரினம்போல்
தங்கள் தங்கள் நிலைமை தப்பிப் மிகப்போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்து ஓங்கியே வாழ்ந்தார்
செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
அல்வல் தினம் செய்து அன்புற்று இருந்தனராம்
தான்பெரிது என்று தப்புமிகச் செய்யாமல்
வான்பெரிது என்று மகிழ்ந்திருந்தார் அம்மானை
ஒருவருக்கு ஒருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன்பேரில் கருத்தாய் இருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன்பேரில் அல்லாது...
சான்றோர் முதலாய்ச் சக்கிலியன் வரையும்
உண்டான சாதி ஓக்க ஓரினம்போல்
தங்கள் தங்கள் நிலைமை தப்பிப் மிகப்போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்து ஓங்கியே வாழ்ந்தார்
செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
அல்வல் தினம் செய்து அன்புற்று இருந்தனராம்
தான்பெரிது என்று தப்புமிகச் செய்யாமல்
வான்பெரிது என்று மகிழ்ந்திருந்தார் அம்மானை
ஒருவருக்கு ஒருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன்பேரில் கருத்தாய் இருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன்பேரில் அல்லாது...
---------
உரை
---------
சான்றோர் சாதிமுதல் சக்கிலியன் சாதிவரை, பதினெட்டுச் சாதி மக்களும் சேர்ந்து ஓர் இனம் போல் தங்கள் தங்கள் நிலையில் உள்ள கட்டுப்பாடுகள் தவறாமல், மாதம் மும்மாரி பொழியச் சிறந்தோங்கி வாழ்ந்தனர். செல்வம் பொங்கிப் பெருகச் சிவனைத் தொழும் நிலை மாறாமல் எல்ல வேலைகளையும் அன்றாடம் செய்து முடித்து, ஒருவரோடு ஒருவர் அன்புற்று இருந்தனர். "தாம்தாம் பெரியவர்" என்று தவறாக எண்ணாமல், மழை வளங்களே எல்லாவற்றுக்கும் பெரிது என்று மனம் மகிழ்ச்சியோடு வாழ்ந்திருந்தார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தனரே ஒழிய ஊழியங்கள் செய்வதில்லை. அவர்களின் சிந்தனை எப்போதும் எல்லாம் வல்ல சிவன் பேரிலேயே இருந்தது. அவர்களுக்குள் எழுகின்ற வழக்குச் சிவனைப் பற்றிய ஆராய்ச்சி வழக்காக இருக்குமே அல்லாது...
---------------------
உரை
---------
சான்றோர் சாதிமுதல் சக்கிலியன் சாதிவரை, பதினெட்டுச் சாதி மக்களும் சேர்ந்து ஓர் இனம் போல் தங்கள் தங்கள் நிலையில் உள்ள கட்டுப்பாடுகள் தவறாமல், மாதம் மும்மாரி பொழியச் சிறந்தோங்கி வாழ்ந்தனர். செல்வம் பொங்கிப் பெருகச் சிவனைத் தொழும் நிலை மாறாமல் எல்ல வேலைகளையும் அன்றாடம் செய்து முடித்து, ஒருவரோடு ஒருவர் அன்புற்று இருந்தனர். "தாம்தாம் பெரியவர்" என்று தவறாக எண்ணாமல், மழை வளங்களே எல்லாவற்றுக்கும் பெரிது என்று மனம் மகிழ்ச்சியோடு வாழ்ந்திருந்தார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தனரே ஒழிய ஊழியங்கள் செய்வதில்லை. அவர்களின் சிந்தனை எப்போதும் எல்லாம் வல்ல சிவன் பேரிலேயே இருந்தது. அவர்களுக்குள் எழுகின்ற வழக்குச் சிவனைப் பற்றிய ஆராய்ச்சி வழக்காக இருக்குமே அல்லாது...
---------------------
*மனுநீதம் (பெண்கள் நிலைமை)************
...தவத்துக்கு அரிய தையல் நல்லார் தங்களுட
மனுநீதம் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்கும் அந்த நாளையிலே
வணிதான சாதி வளமைகேள் அம்மானை.
...தவத்துக்கு அரிய தையல் நல்லார் தங்களுட
மனுநீதம் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்கும் அந்த நாளையிலே
வணிதான சாதி வளமைகேள் அம்மானை.
---------
உரை
---------
...தவத்தில் சிறந்த இப்பெண்களுடைய இயல்புகள் பிரித்துச் சொல்ல முடியாத அளவு பெருமை வாய்ந்தனவாம். கனிகளைப் போன்று இனிமையான கற்புநிலை மாறாத இப்பெண்கள் வாழ்ந்துவரும் நாளில், அங்கிருந்த சிறப்பான சாதி வளமை பற்றி இனிச் சொல்லுகின்றேன், இலட்சுமிதேவியே நீ கேட்பாயாக.
---------------------
உரை
---------
...தவத்தில் சிறந்த இப்பெண்களுடைய இயல்புகள் பிரித்துச் சொல்ல முடியாத அளவு பெருமை வாய்ந்தனவாம். கனிகளைப் போன்று இனிமையான கற்புநிலை மாறாத இப்பெண்கள் வாழ்ந்துவரும் நாளில், அங்கிருந்த சிறப்பான சாதி வளமை பற்றி இனிச் சொல்லுகின்றேன், இலட்சுமிதேவியே நீ கேட்பாயாக.
---------------------
*மனுநீதம் (பெண்கள் நிலைமை)*******
...முன்பான சோதி முறைபோல் உறவாடிப்
போற்றியே நித்தம் பூசித்து அவள்மனதில்
சாற்றிய சொல்லைத் தவறாமலே மொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
கரமானது தடவிக் கால் தடவி நின்றிடுவாள்
துயின்றது அறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒரு சாமம் மங்கை எழுந்திருந்து
முகத்தில் நீரிட்டு நான்முகத் தோனையும் தொழுது
அகத்துத் தெருமுற்றம் அலங்காரமாய்ப் பெருக்கி
பகுத்துவமாக பாரிப்பார் பெண்ணார் ...
...முன்பான சோதி முறைபோல் உறவாடிப்
போற்றியே நித்தம் பூசித்து அவள்மனதில்
சாற்றிய சொல்லைத் தவறாமலே மொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
கரமானது தடவிக் கால் தடவி நின்றிடுவாள்
துயின்றது அறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒரு சாமம் மங்கை எழுந்திருந்து
முகத்தில் நீரிட்டு நான்முகத் தோனையும் தொழுது
அகத்துத் தெருமுற்றம் அலங்காரமாய்ப் பெருக்கி
பகுத்துவமாக பாரிப்பார் பெண்ணார் ...
---------
உரை
---------
...ஏற்கனவே சொல்லப்பட்ட தரும நீதியோடு உறவு கொண்டாடி துதித்து, தினந்தோறும் அவர்களைப் பூசித்து வருவார். அவர்கள் தாங்கள் இளமையில் கற்று மனதில் பதித்து வைத்திருந்த வேதங்களின் உயர்ந்த மொழிகளை ஓதி வருவார்கள். அவர்கள், தம் கணவர் அமைதியாகத் தூங்குவதற்காகத் தாலாட்டி, கைகளையும், கால்களையும் கலைப்புத் தீரத் தடவிக் கொடுத்து, அன்பு பெருக்கெடுக்க நின்றிடுவர்; கணவனின் ஆழ்ந்த தூக்கத்தை அறிந்த பின்னர், தாமும் தூங்கச் செல்வர்; அவர்கள் விடிவதற்கு ஒரு சாமநேரம் முன்னரே விழித்தெழுந்து, தங்கள் முகத்தை நன்றாக நீர்விட்டுக் கழுவி, கணவரையும், நான்முகத்தோனையும் தொழுவர்; பிறகு, இப்பெண்கள் வீட்டின் உள்ளும், தெரு முற்றத்தையும், அழகாகச் சுத்தம் செய்து, ஒவ்வொரு வேலையாகப் பகுத்து முடித்து, தினந்தோறும் தன்னையும் சுற்றத்தாரையும் பாதுகாத்து வரும் குண இயல்பு உடையவர்கள்; ...
---------------------
உரை
---------
...ஏற்கனவே சொல்லப்பட்ட தரும நீதியோடு உறவு கொண்டாடி துதித்து, தினந்தோறும் அவர்களைப் பூசித்து வருவார். அவர்கள் தாங்கள் இளமையில் கற்று மனதில் பதித்து வைத்திருந்த வேதங்களின் உயர்ந்த மொழிகளை ஓதி வருவார்கள். அவர்கள், தம் கணவர் அமைதியாகத் தூங்குவதற்காகத் தாலாட்டி, கைகளையும், கால்களையும் கலைப்புத் தீரத் தடவிக் கொடுத்து, அன்பு பெருக்கெடுக்க நின்றிடுவர்; கணவனின் ஆழ்ந்த தூக்கத்தை அறிந்த பின்னர், தாமும் தூங்கச் செல்வர்; அவர்கள் விடிவதற்கு ஒரு சாமநேரம் முன்னரே விழித்தெழுந்து, தங்கள் முகத்தை நன்றாக நீர்விட்டுக் கழுவி, கணவரையும், நான்முகத்தோனையும் தொழுவர்; பிறகு, இப்பெண்கள் வீட்டின் உள்ளும், தெரு முற்றத்தையும், அழகாகச் சுத்தம் செய்து, ஒவ்வொரு வேலையாகப் பகுத்து முடித்து, தினந்தோறும் தன்னையும் சுற்றத்தாரையும் பாதுகாத்து வரும் குண இயல்பு உடையவர்கள்; ...
---------------------
*மனுநீதம் (பெண்கள் நிலைமை)************
தெய்வ நிலைமை செப்பிய பின் தேசமதில்
நெய்நீதப் பெண்கள் நிலைமை கேள் அம்மானை
கணவன் மொழியக் கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவேன் அம்மானை
கற்கதவு போலக் கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத் திறவுகோல் அம்மனை
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவாதுக்கும்...
தெய்வ நிலைமை செப்பிய பின் தேசமதில்
நெய்நீதப் பெண்கள் நிலைமை கேள் அம்மானை
கணவன் மொழியக் கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவேன் அம்மானை
கற்கதவு போலக் கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத் திறவுகோல் அம்மனை
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவாதுக்கும்...
---------
உரை
---------
தெய்வ நிலைமையை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனி, தெச்சணாபூமியில் நோய் இல்லாமல் நீதியுடன் வாழும் பெண்களின் நிலைமையையும், கணவன் மொழிக்கு எதிர் மொழி பேசாத நல்ல மனைவியின் நிலைமையையும் நான் சொல்லுகிறேன். கல்லால் ஆன கதவுகளைப் போன்று யாரும் புக முடியாத அளவு உறுதி படைத்த மனக்கதவைக் கொண்டு பெண்கள் தம் கற்பினைக் காத்து வந்தனர். அத்தகைய பழமையான பாரம்பரியம் பெற்ற அக்கதவுக்குத் திறவு கோலாக இருப்பது ஞானமே ஆகும்.
அங்குள்ள பெண்கள் அன்பாகத் தம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரிடம்...
---------------------
உரை
---------
தெய்வ நிலைமையை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனி, தெச்சணாபூமியில் நோய் இல்லாமல் நீதியுடன் வாழும் பெண்களின் நிலைமையையும், கணவன் மொழிக்கு எதிர் மொழி பேசாத நல்ல மனைவியின் நிலைமையையும் நான் சொல்லுகிறேன். கல்லால் ஆன கதவுகளைப் போன்று யாரும் புக முடியாத அளவு உறுதி படைத்த மனக்கதவைக் கொண்டு பெண்கள் தம் கற்பினைக் காத்து வந்தனர். அத்தகைய பழமையான பாரம்பரியம் பெற்ற அக்கதவுக்குத் திறவு கோலாக இருப்பது ஞானமே ஆகும்.
அங்குள்ள பெண்கள் அன்பாகத் தம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரிடம்...
---------------------
விருத்தம்(ஆசிரியர் கூற்று)************
இப்படித் தெய்வ நீதம் ஈசுரர் இதுவே கூற
செப்படி மறவா வண்ணம் திருமருக்கோணும் செய்தார்
அப்படித் தவறா நீதம் அம்புவிதனிலே வாழ
மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே.
இப்படித் தெய்வ நீதம் ஈசுரர் இதுவே கூற
செப்படி மறவா வண்ணம் திருமருக்கோணும் செய்தார்
அப்படித் தவறா நீதம் அம்புவிதனிலே வாழ
மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே.
---------
உரை
---------
இப்படியாகத் தெய்வநீதம் பற்றி ஈசர் கூறவும், அவர் கூறிய சொல் மறவாதபடி பின்பற்றி நாராயணரும் செய்து முடித்தார். அப்படி உயர்ந்த தெய்வநீதி தவறாத வகையில் தெச்சணாபூமி இருந்தது. சிறப்பு ஆபரணங்களையும், கூந்தலையுமுடைய, பெண்களின் வழக்கை நெறியினை இனி அவர் கூறுவார்.
உரை
---------
இப்படியாகத் தெய்வநீதம் பற்றி ஈசர் கூறவும், அவர் கூறிய சொல் மறவாதபடி பின்பற்றி நாராயணரும் செய்து முடித்தார். அப்படி உயர்ந்த தெய்வநீதி தவறாத வகையில் தெச்சணாபூமி இருந்தது. சிறப்பு ஆபரணங்களையும், கூந்தலையுமுடைய, பெண்களின் வழக்கை நெறியினை இனி அவர் கூறுவார்.
---------------------
அய்யா உண்டு
---------------------
அய்யா உண்டு
---------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக