*தெய்வ நீதம்***************
வாரமது இல்லாமல் மன்னன் அதிசோழன்
நீதமாய்ப் பூமி நிறுத்தி அரசு ஆளுகையில்
கண்டு வேதாவும் கமலத் திருமகளும்
நன்று தெய்வாரும் நாராயணரும் மெச்சி
அன்று அந்த மாமுனிவர் எல்லோரும் தாம்கூடிச்
சென்று சிவனார் திருப்பாதம் தெண்டனிட்டு
சாகாது இருக்கும் சமூலத் திருப்பொருளே
ஏகாபரனே எங்கும் நிறைந்தோனே
மூலப்பொருளே முதற்பொருளே காரணரே
சாலபொருளே தவத்தோர் அரும்பொருளே...
வாரமது இல்லாமல் மன்னன் அதிசோழன்
நீதமாய்ப் பூமி நிறுத்தி அரசு ஆளுகையில்
கண்டு வேதாவும் கமலத் திருமகளும்
நன்று தெய்வாரும் நாராயணரும் மெச்சி
அன்று அந்த மாமுனிவர் எல்லோரும் தாம்கூடிச்
சென்று சிவனார் திருப்பாதம் தெண்டனிட்டு
சாகாது இருக்கும் சமூலத் திருப்பொருளே
ஏகாபரனே எங்கும் நிறைந்தோனே
மூலப்பொருளே முதற்பொருளே காரணரே
சாலபொருளே தவத்தோர் அரும்பொருளே...
---------
உரை
---------
அதிசோழன் எவ்வித ஓரவஞ்சக நியாயமும் இல்லாமல் நடுநிலைமையாய் நீதியை நிலை நாட்டித் தெச்சணாபூமியை அரசாண்டு வந்தான்.
இதைக் கண்டு பிரம்மனும், தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமிதேவியும், நல்ல தேவர்களும், நாராயணரும், அங்கிருந்த மாமுனிவர்களும் சோழநாட்டின் தருமநீதியைப் புகழ்ந்து, எல்லாரும் கூடிச் சிவனிடம் சென்றனர்.
சிவனிடம் திருப்பாதங்களை வணங்கி, "சாகாநிலையில் இருக்கும் சகலவற்றுக்கும் மூலத திருப்பொருளே, யாரும் அடைய முடியாத பரம்பொருளே, எங்கும் நிறைந்திருப்பவரே, எல்லாவற்றிற்கும் மூலப் பொருளாகவும் உயர்வான பொருளாகவும் இருப்பவரே, எல்லா வழியாகவும் இருப்பவரே, தவசிகளுக்கு அருமையானவரே...
---------------------
உரை
---------
அதிசோழன் எவ்வித ஓரவஞ்சக நியாயமும் இல்லாமல் நடுநிலைமையாய் நீதியை நிலை நாட்டித் தெச்சணாபூமியை அரசாண்டு வந்தான்.
இதைக் கண்டு பிரம்மனும், தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமிதேவியும், நல்ல தேவர்களும், நாராயணரும், அங்கிருந்த மாமுனிவர்களும் சோழநாட்டின் தருமநீதியைப் புகழ்ந்து, எல்லாரும் கூடிச் சிவனிடம் சென்றனர்.
சிவனிடம் திருப்பாதங்களை வணங்கி, "சாகாநிலையில் இருக்கும் சகலவற்றுக்கும் மூலத திருப்பொருளே, யாரும் அடைய முடியாத பரம்பொருளே, எங்கும் நிறைந்திருப்பவரே, எல்லாவற்றிற்கும் மூலப் பொருளாகவும் உயர்வான பொருளாகவும் இருப்பவரே, எல்லா வழியாகவும் இருப்பவரே, தவசிகளுக்கு அருமையானவரே...
---------------------
பன்னிரண்டு ஆண்டு பரிவாய் இறை இறுத்தால்
பின்இரண்டு ஆண்டு பொறுத்து இறைதாரும் என்பான்
இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை ஆண்டிருந்தான்
அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே
மெய்யறிவு கொண்ட மேலாம் பதத்தெளிவோன்
தெய்வத் திருநிலைமை செப்புவேன் அம்மானை.
பின்இரண்டு ஆண்டு பொறுத்து இறைதாரும் என்பான்
இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை ஆண்டிருந்தான்
அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே
மெய்யறிவு கொண்ட மேலாம் பதத்தெளிவோன்
தெய்வத் திருநிலைமை செப்புவேன் அம்மானை.
***************விருத்தம்(ஆசிரியர் கூற்று)***************
இவ்வகையாகச் சோழன் இருந்து இராச்சியத்தை ஆள
கவ்வைகள் இல்லாவண்ணம் கலியுகம் வாழும் நாளில்
செவ்வகைத் திருவேயான திருவுளக் கிருபை கூர்ந்து
தெய்வ மெய்ந்நீதம் வந்த செய்தியைச் செலுத்துவாரே.
இவ்வகையாகச் சோழன் இருந்து இராச்சியத்தை ஆள
கவ்வைகள் இல்லாவண்ணம் கலியுகம் வாழும் நாளில்
செவ்வகைத் திருவேயான திருவுளக் கிருபை கூர்ந்து
தெய்வ மெய்ந்நீதம் வந்த செய்தியைச் செலுத்துவாரே.
---------
உரை
---------
பன்னிரண்டு வருடங்கள் ஒழுங்காக வரி கொடுத்திருந்தால், இரண்டு ஆண்டுகள் வரியைத் தவிர்த்து, மீண்டும் வரி தரக் கூறிடுவான். இப்படியாகச் சோழன் இராச்சியத்தைத் ஆண்டு வந்தான். இவ்வாறு ஆண்டு வந்த வேளையில், மெய்யறிவு பெற்று மேலான இறைபதத்தைத் தெளிந்து வாழ்ந்து வந்தவர்களின் தெய்வ நிலையினைப் பற்றி இனிச் சொல்லப் போகின்றேன். இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.
உரை
---------
பன்னிரண்டு வருடங்கள் ஒழுங்காக வரி கொடுத்திருந்தால், இரண்டு ஆண்டுகள் வரியைத் தவிர்த்து, மீண்டும் வரி தரக் கூறிடுவான். இப்படியாகச் சோழன் இராச்சியத்தைத் ஆண்டு வந்தான். இவ்வாறு ஆண்டு வந்த வேளையில், மெய்யறிவு பெற்று மேலான இறைபதத்தைத் தெளிந்து வாழ்ந்து வந்தவர்களின் தெய்வ நிலையினைப் பற்றி இனிச் சொல்லப் போகின்றேன். இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.
***********ஆசிரியர் கூற்று***********
சோழமன்னன் இந்த வகையில் எந்தவிதப் பழிச் சொல்லும் இல்லாமல் இராச்சியத்தை ஆண்டு இக்கலியுகத்தில் வாழ்ந்து வருகின்ற நாளையில், செம்மை பொருந்திய இலட்சுமியின் திரு உள்ளத்தின் கருணையினால் சோழ நாட்டுக்குத் தெய்வநீதி வந்த செய்தியினை நாராயணர் இனிச் சொல்லுவார்.
---------------------
சோழமன்னன் இந்த வகையில் எந்தவிதப் பழிச் சொல்லும் இல்லாமல் இராச்சியத்தை ஆண்டு இக்கலியுகத்தில் வாழ்ந்து வருகின்ற நாளையில், செம்மை பொருந்திய இலட்சுமியின் திரு உள்ளத்தின் கருணையினால் சோழ நாட்டுக்குத் தெய்வநீதி வந்த செய்தியினை நாராயணர் இனிச் சொல்லுவார்.
---------------------
அன்னமடம் வைத்து அகம் களிகூர
எநேரம் பிச்சை இடுவார் எளியோர்க்கும்
பந்தல் இட்டுத் தண்ணீர் பக்தர்க்கு அளிப்பாரும்
எந்த இரவும் இருந்து பிச்சை ஈவாரும்
ஆறில் ஒருகடமை அசையாமல்தான் வேண்டித்
தேறியே சோழன் சீமை அரசாண்டிருந்தான்
சிவாயநம என்னும் சிவவேதம் அல்லாது
கவாமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள்
ஆறில் ஒரு கடமையது தரவே மாட்டோம் என்று
மாறு ஒருவர் சொன்னால் மன்னன் மறுத்தே கேளான்...
எநேரம் பிச்சை இடுவார் எளியோர்க்கும்
பந்தல் இட்டுத் தண்ணீர் பக்தர்க்கு அளிப்பாரும்
எந்த இரவும் இருந்து பிச்சை ஈவாரும்
ஆறில் ஒருகடமை அசையாமல்தான் வேண்டித்
தேறியே சோழன் சீமை அரசாண்டிருந்தான்
சிவாயநம என்னும் சிவவேதம் அல்லாது
கவாமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள்
ஆறில் ஒரு கடமையது தரவே மாட்டோம் என்று
மாறு ஒருவர் சொன்னால் மன்னன் மறுத்தே கேளான்...
---------
உரை
---------
....உண்பதற்கு அன்னமடம் வைத்து எப்பொழுதும் ஏழைகளுக்கு மனம் மகிழ்ச்சி பெறும் அளவில் அன்னப் பிச்சை இடுவர். இறை பக்தர்களுக்குத் தண்ணீர்ப்பந்தல் அமைத்துத் தண்ணீர் கொடுப்பாரும், இரவு நேரத்தில்கூட எலியாருக்குப் பிச்சை அளிப்பவர்களும் ஆகிய தருமநீதி செய்பவர்கள் அங்கு உள்ளனர்.
வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை மட்டும் வாரியாகப் பெற்றுக் கொண்டு திடமாகச் சோழ மன்னன் அரசு செலுத்தினான். அங்குள்ள மக்கள் "சிவாய நம" என்னும் சிவமந்திரத்தைத் தவிர வேறு மந்திரச் சொல்லை அறியாதவர்களாக வாழ்ந்தார்கள். "வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைக்கூட வாரியாகத் தர மாட்டோம்" என்று யாராவது கூறினால் சோழ மன்னன் அவ்வரியை வற்புறுத்திக் கேட்கமாட்டான்.
---------------------
உரை
---------
....உண்பதற்கு அன்னமடம் வைத்து எப்பொழுதும் ஏழைகளுக்கு மனம் மகிழ்ச்சி பெறும் அளவில் அன்னப் பிச்சை இடுவர். இறை பக்தர்களுக்குத் தண்ணீர்ப்பந்தல் அமைத்துத் தண்ணீர் கொடுப்பாரும், இரவு நேரத்தில்கூட எலியாருக்குப் பிச்சை அளிப்பவர்களும் ஆகிய தருமநீதி செய்பவர்கள் அங்கு உள்ளனர்.
வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை மட்டும் வாரியாகப் பெற்றுக் கொண்டு திடமாகச் சோழ மன்னன் அரசு செலுத்தினான். அங்குள்ள மக்கள் "சிவாய நம" என்னும் சிவமந்திரத்தைத் தவிர வேறு மந்திரச் சொல்லை அறியாதவர்களாக வாழ்ந்தார்கள். "வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைக்கூட வாரியாகத் தர மாட்டோம்" என்று யாராவது கூறினால் சோழ மன்னன் அவ்வரியை வற்புறுத்திக் கேட்கமாட்டான்.
---------------------
தருமநீதம் (இராசநீதம்)***************
ஆதிபொருளை அனுதினமும் தான்ஓதிச்
சோதியுட நீதம் சொல்லுவேன் அம்மானை
தெய்வ மனுநீதம் தேச ராசநீதம்
மெய்யறிந்த நீதம் விளம்புவேன் அம்மானை
ஆயிரத்தெட்டு ஆன திருப்பதிக்கும்
வாயிதமாய்ப் பூசை வகுப்பும் முடங்காது
கோயில் கிணறு குளங்கரைகள் ஆனதையும்
தேய்வு வராதே சேரும் மதில் கட்டிடுவார்
எளியோர் வலியோர் என்று எண்ணி மிகப்பாராமல்
களிகூர நன்றாய்க் கண்ட வழக்கே உரைப்பார்....
ஆதிபொருளை அனுதினமும் தான்ஓதிச்
சோதியுட நீதம் சொல்லுவேன் அம்மானை
தெய்வ மனுநீதம் தேச ராசநீதம்
மெய்யறிந்த நீதம் விளம்புவேன் அம்மானை
ஆயிரத்தெட்டு ஆன திருப்பதிக்கும்
வாயிதமாய்ப் பூசை வகுப்பும் முடங்காது
கோயில் கிணறு குளங்கரைகள் ஆனதையும்
தேய்வு வராதே சேரும் மதில் கட்டிடுவார்
எளியோர் வலியோர் என்று எண்ணி மிகப்பாராமல்
களிகூர நன்றாய்க் கண்ட வழக்கே உரைப்பார்....
---------
உரை
---------
ஆதிபொருளின் திருநாமத்தைத் தினந்தோறும் சொல்லிவரும் நான், முதலில் அரச நீதியாகிய தேச ராசநீதம் (ஆண்கள் நிலைமை) பற்றிச் சொல்லப் போகின்றேன். அதற்கு அடுத்ததாக, உண்மையாகவே நான் அறிந்த தெய்வநீதம் பற்றியும், மனுநீதம் பற்றியும் விளக்கமாகச் சொல்லுவேன்.
1008 திருக்கோவில்களின் வாயில்களில் அதற்குத் தேவையான பூசை முறைகள் தடைபடாது நடந்துவரும். கோவில்கள், கிணறுகள், குளத்தின் கரைகள், ஆகியவை சேதமுறாவண்ணம் அரசன் மதில்கள் அமைத்திடுவான். மக்கள் "இவர் எளியவர்" என்றும், "இவர் வலியவர்" என்றும் பிரித்துப் பார்க்காமல் உண்மையான நீதியினையே மகிழ்ச்சியுடன் எடுத்துரைப்பர்.....
---------------------
உரை
---------
ஆதிபொருளின் திருநாமத்தைத் தினந்தோறும் சொல்லிவரும் நான், முதலில் அரச நீதியாகிய தேச ராசநீதம் (ஆண்கள் நிலைமை) பற்றிச் சொல்லப் போகின்றேன். அதற்கு அடுத்ததாக, உண்மையாகவே நான் அறிந்த தெய்வநீதம் பற்றியும், மனுநீதம் பற்றியும் விளக்கமாகச் சொல்லுவேன்.
1008 திருக்கோவில்களின் வாயில்களில் அதற்குத் தேவையான பூசை முறைகள் தடைபடாது நடந்துவரும். கோவில்கள், கிணறுகள், குளத்தின் கரைகள், ஆகியவை சேதமுறாவண்ணம் அரசன் மதில்கள் அமைத்திடுவான். மக்கள் "இவர் எளியவர்" என்றும், "இவர் வலியவர்" என்றும் பிரித்துப் பார்க்காமல் உண்மையான நீதியினையே மகிழ்ச்சியுடன் எடுத்துரைப்பர்.....
---------------------
மாரி பொழியும் மாதம் ஒன்று மூன்று தரம்
ஏரி பெருகி ஏரடிக்க மள்ளர் எல்லாம்
நாத்து நடும் புரசி நளினம் மிகுசொல் ஒலியும்
கூத்து ஒலியும் குருபூசைகள் ஒலியும்
எப்பார் எல்லாம் புகழும் ஏகாபதி அதுபோல்
தப்பாத தெச்சணத்தின் தன்மை ஈது அம்மானை.
ஏரி பெருகி ஏரடிக்க மள்ளர் எல்லாம்
நாத்து நடும் புரசி நளினம் மிகுசொல் ஒலியும்
கூத்து ஒலியும் குருபூசைகள் ஒலியும்
எப்பார் எல்லாம் புகழும் ஏகாபதி அதுபோல்
தப்பாத தெச்சணத்தின் தன்மை ஈது அம்மானை.
***************விருத்தம்***************
காமனை எரித்த ஈசன் கழலிணை மறவாவண்ணம்
பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரியான
சீமையின் குணமும் சொல்லிச் சிறந்திடும் பூமிதன்னில்
நேமம் அவர் தர்மஞாய நிலைதனை நிகழ்த்துவாரே.
காமனை எரித்த ஈசன் கழலிணை மறவாவண்ணம்
பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரியான
சீமையின் குணமும் சொல்லிச் சிறந்திடும் பூமிதன்னில்
நேமம் அவர் தர்மஞாய நிலைதனை நிகழ்த்துவாரே.
---------
உரை
---------
...மழை ஒவ்வொரு மாதமும் மூண்டு தடவை பொழிந்து வரும், ஏறி எப்பொழுதும் பெருகி இருக்கும். நாற்றுப் பயிர்களை நட்டுக் கொண்டிருக்கும் உழவர்களின் நளினம் இழைந்தோடும் பேச்சு ஒலியும், எல்லா உலகத்தாரும் புகழுகின்ற வர்ணிக்க முடியாத தருமபதியைப் போன்று, தெச்சனாபூமியைத் தோன்ற வைத்தன. எந்தத் தவறும் நடக்காத தெச்சணாபூமியின் தன்மைகள் இவையாம்.
உரை
---------
...மழை ஒவ்வொரு மாதமும் மூண்டு தடவை பொழிந்து வரும், ஏறி எப்பொழுதும் பெருகி இருக்கும். நாற்றுப் பயிர்களை நட்டுக் கொண்டிருக்கும் உழவர்களின் நளினம் இழைந்தோடும் பேச்சு ஒலியும், எல்லா உலகத்தாரும் புகழுகின்ற வர்ணிக்க முடியாத தருமபதியைப் போன்று, தெச்சனாபூமியைத் தோன்ற வைத்தன. எந்தத் தவறும் நடக்காத தெச்சணாபூமியின் தன்மைகள் இவையாம்.
*******************ஆசிரியர் கூற்று*******************
தம்மை ஆசை உண்டாக்க வந்த காமனை எரித்த ஈசரின் கழல் அணிந்த பாதத்தினை மறவாதவாறு, பூவின் இனிய வாசம் பொருந்திய கூந்தலையுடைய கன்னி பக்கவதியாள் அமர்ந்திருக்கும் இத்சதெச்சணாபூமியின் இயற்கை வளத்தை நாராயணர் சொன்னார். இனிச் சிறந்து விளங்குகின்ற இத்தெச்சணா பூமியில் அன்புடன் வாழ்ந்து வருகின்ற மக்களின் இராசநீதி பற்றி சொல்லுவார்.
---------------------
அய்யா உண்டு
---------------------
தம்மை ஆசை உண்டாக்க வந்த காமனை எரித்த ஈசரின் கழல் அணிந்த பாதத்தினை மறவாதவாறு, பூவின் இனிய வாசம் பொருந்திய கூந்தலையுடைய கன்னி பக்கவதியாள் அமர்ந்திருக்கும் இத்சதெச்சணாபூமியின் இயற்கை வளத்தை நாராயணர் சொன்னார். இனிச் சிறந்து விளங்குகின்ற இத்தெச்சணா பூமியில் அன்புடன் வாழ்ந்து வருகின்ற மக்களின் இராசநீதி பற்றி சொல்லுவார்.
---------------------
அய்யா உண்டு
---------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக