சமயப்
பார்வையில் திருப்புகையில் தர்மம் என்பது அறிவுக்கு அப்பாலான "முழுமுதல்
உண்மை" என சித்தரிக்கப்படுகிறது. மேலும் வைகுண்டரின் முக்கிய அவதார நோக்கம்
கலி என்னும் மாயையை அழித்து உலகில் தர்மம் என்னும் மெய் இயல்பை
உருவாக்குவதேயாம். ஆக அய்யாவழி சமய தர்மம் என்பது இயற்கையோடியைந்து காலம்
இடம் என்னும் வரையறைக்கப்பாலான 'இருப்பதனைத்தும் ஒன்று' என்னும் மெய்
நிலையேயாகும். ஏகம் என்னும் பதத்தின் பயன்பாடு துவக்கம் முதலே அகிலத்தில்
அதிகமாக காணப்படுவது இதனை உறுதி செய்கிறது. அவ்வாறான மெய்யுலகு வைகுண்டரால்
ஆளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வருணாசிரம தர்மத்தை இவ்யுகத்துக்கு
பொருந்தாதது என நிராகரிக்கிறது. இதனை அகிலம், கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
"சாதி பதினெட்டையும் தலையாட்டிப்பெய்களையும்
வாரிமலை வன்னியில் தள்ளி அழித்துவிடு."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக