வெள்ளி, 21 நவம்பர், 2014

அன்பு வனம்

அன்புவனத்தை நிர்வகித்து வருபவர் தலைமைப் பதியின் தர்மகர்த்தாக்களில் ஒருவரான  பாலபிரஜாபதி அடிகளார் அவர்கள். முத்திரிக் கிணற்றின் அருகே அன்புவனம் அமைந்துள்ளது. அருள்±லில் அய்யா வைகுண்டர் “ முத்திரிக் கிணற்றினருகே தர்மம் செய்ய வேண்டுமென்று கூறியுள்ளதால் அன்புவனத்தைத் தோற்றுவித்ததாகக் கூறுகின்றனர். அய்யா வைகுண்டர் தனது அன்பர்களுக்கு 32 தர்மங்களைப் போதித்தார். அதன் முதல் தொடக்கமாக அன்புவனம் அமைகிறது என்றும் கூறுகின்றனர்19
       இவ் அன்புவனத்தில் தங்கி ±ற்றுக்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இவ் அன்புவனத்தில் கோசாலை ஒன்றும் அமைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இக்குழந்தைகளை அடிகளாரின் மனைவி இரமணிபாய் அவர்கள் சிறப்பாகப் பராமரித்து வருகின்றார்கள். இம்மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க இரண்டு ஆசிரியர்களம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
     இருபது வயதானவர்களும் இவ் அன்புவனத்தில் பராமரிக்கபட்டு வருகின்றனர். அன்புவனத்தில் இருக்கும் அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கப்படுகின்றது. தங்கள் சொந்த வீடுகளில் வசிப்பது போன்றே அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் வசித்து வருகின்றனர்.
     அன்புவனத்தில் தொடர் வழிபாட்டுக் கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகின்றது. இங்கு அணையா விளக்கு ஒன்றும் ஏற்றப்பட்டுள்ளது. இவ் அணையா விளக்கை வயதானவர்கள் அணையாமல் பராமரித்து வருகின்றனர். இவர்கள் “ அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்று கூறியபடி தங்கள் தொடர் வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
     அன்புவனம் “அன்புச் சங்குஎன்னும் மாத இதழையும் நடத்தி அய்யா வைகுண்டரின் ஆன்மீக முற்போக்குக் கொள்கைகளைப் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
நித்தியப்பால்
            அய்யா வழி மரபில் நித்தியப்பால் என்பது மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஐந்து உழக்கு கைக்குத்தல் அரிசி, ஒரு உழக்கு சிறுபயறு, ஐந்து மிளகு வத்தல், ஒரு தேங்காய் போன்றவைகளைக் கொண்டு நித்தியப்பால் தயார் செய்யப்படுகின்றது.
     அய்யா வைகுண்டர் தனது காலத்தில் அன்பர்கள் அனைவருக்கும் நித்தியப்பால் கொடுத்த பின்னரே தானும் குடித்தார் எனப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அய்யா வைகுண்டர் தொடங்கி வைத்த அவ் வழக்கத்தையே பதிகளிலும் தாங்கல்களிலும் பின்பற்றுகின்றனர்.
     தலைமைப்பதியில் தினமும் காலை வேளையில் பால்மணி ஒலித்தப் பின்னர் ( அதாவது நித்தியப்பால் அளிக்கும் முன்னர் எழுப்பும் மணியோசை ) பக்தர்களுக்கு நித்தியப்பால் வழங்கப்படுகின்றது. அம்பலப்பதியிலும் தினந்தோறும் நித்தியப்பால் வழங்கப்படுகின்றது.
     முட்டப்பதி, ¯ப்பதி, தென்தாமரைகுளம் பதி ஆகிய பதிகளில் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ அன்னப்பால் என நித்தியப்பாலை வழங்குகின்றனர். இவ் அன்னப்பாலை சீவாயு மேடையில் வைத்தும் லழங்குகின்றனர்.
     சிறிது நீர் கலந்து தயார் செய்யப்படும் அன்னப்பாலினை தவணைப்பால் என்றும் கூறுகின்றனர். நித்தியப்பால், தவணைப்பால், அன்னப்பால் என மூன்றினையும் அய்யா பக்தர்கள் “ பால் என்றே அழைக்கின்றனர். பசும்பாலை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற முடியாதவாறு ஒடுக்கப்பட்ட காலத்தில் அய்யா வைகுண்டர் செய்த மாற்று ஏற்பாடாக இதனைக் கருதலாம்.
மதமாற்றத்திற்குத் தடை
    அய்யா வைகுண்டரின் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டனர். பிற பகுதிகளைக் காட்டிலும் திருவிதாங்கூர் பகுதியில்தான் கிறிஸ்தவ மதம் வேகத்துடன் பரவியது20.
     வைகுண்ட சுவாமி ஐம்பதிகளையும், பல திருநிழல்தாங்கல்களையும் ஏற்படுத்தி சாதி, இன வேறுபாடின்றி எல்லா மக்களுக்கும் புதிய வழிபாட்டு முறையை காட்டியதால் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு அது பெரும் தடையாக அமைந்தது. எனவே அய்யா வைகுண்டரின் அய்யா வழி இயக்கத்தை எதிர்த்தும், இழிவுபடுத்தியும் பேசினர்.
     அய்யா வைகுண்டர் எந்த சமயத்தையும் குறை கூறவோ, புறக்கணிக்கவோ இல்லை. மத மாற்றம் மக்களின் ஒற்றுமையை அழித்து உறவகளைப் பிரித்தன. சமுதாயக் கட்டுக்கோப்பானது பிந சமயப் போதகர்களால் அழிக்கப்பட்டதை அகிலத்திரட்டில்
     “ ஒருவேதந் தொப்பி உலகமெலாம் போடென்பான்
       மற்றொரு வேதம்சிலுவை வையமெலாம் போடென்பான்
       அத்தறுதி வேதமவன் சவுக்கம் போடென்பான்
       குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன்
    ( அகிலம். தொகுதி. 2 பக். 74 )
என்று கூறுகின்றார். இசுலாமும் கிறிஸ்தவமும் திருவிதாங்கூரில்           ( இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) தங்கள் சமயத்தைப் பரப்பியதை மேலே கண்ட அகிலத்திரட்டு வரிகள் வெளிப்படுத்துகின்றன. மதமாற்றத்தின் காரணமாக சகோதரத்துவமும் சகிப்புத்தன்மையும் சிறிதுசிறிதாக மறையத் தொடங்கியதன் விளைவாக அய்யா வைகுண்டர் மத மாற்றத்தை எதிர்த்திருக்கலாம்.
முத்துக்குட்டி சுவாமியின் “அய்யா நெறிகிறிஸ்தவத்திற்குப் பெரியதொரு சவாலாகும். விசேஷமாக நெல்லை குமரிவாழ் கிறிஸ்தவர்களுக்கு ஒரு அறை கூவலும், அபாய எச்சரிக்கையாகும் என்று வே. ஜீவராஜ் கூறுவதைக் கவனத்தில் கொள்கிறபோது அய்யா வழி இயக்கம் மத மாற்றத்திற்குப் பெரும்தடையாக விளங்கியது தெளிவாகிறது.21.
     கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை மனதில் கொள்கிறபோது அய்யா வைகுண்டர் தோன்றியிருக்கவில்லை எனில் இம்மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருப்பர் என நாம் நம்பலாம். மக்கள் பிற மதங்களுக்கு மதம் மாறுவதைத் தடை செய்ததோடு இந்து மத அடக்கு முறைகளிலிருந்தும், அடிமைத் தனத்திலிருந்தும் விடுபட அய்யா வைகுண்டர் புதியதொரு இயக்கத்தை “ அய்யா வழிஎன்னும் பெயரில் ஸ்தாபித்தார் என எண்ணலாம். ஆக அய்யா வழி இயக்கம் மத மாற்றத்திற்கு தடையாக விளங்கியதன் பின்னணியை நாம்
உணர்ந்து கொள்ளலாம்.
     இதனை இலண்டன் திருச்சபை நாகர்கோவில் மறை மாவட்டத்தின் கி.பி. 1874 ஆம் ஆண்டைய அறிக்கை தெளிவுபடுத்துகின்றது. அவ்வறிக்கை
     “ கி.பி. 1821 ஆம் ஆண்டில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவம் தழுவுவோரின் எண்ணிக்கை தாமரைகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்து இருநூற்றினை எட்டுமளவில் உயர்ந்து கொண்டே இருந்தது மொத்தக் கிராமங்களும் சிலுவையின்கீழ் வருவதாகவே தென்பட்டது. ஆனால் முத்துக்குட்டி வழியினரின் எழுச்சியினால் நம் பணிகளுக்கு ஓர் வலுவான தடை ஏற்பட்டுள்ளது என்று விவரிக்கின்றது22.
     இதே போன்று கி.பி. 1862 ஆம் ஆண்டைய ஜேம்ஸ் டவுண் மறை மாவட்ட அறிக்கையும்,
     “நாம் கண் தூங்கக்கூட நேரமில்லை. காரணம், யாதெனில் நமது பகைவன் கிறிஸ்தவ மக்களைப் போன்று சுறுசுறுப்புடன் இருப்பதுதான். மனிதாபிமான நோக்குடன் பகைவனின் செய்கை எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை என்பதை எடுத்துக் கூறினாலும் அதனை ஒப்புக் கொள்வாரில்லை. கிறிஸ்தவத்தை விடச் சுலபமாக வளர்ச்சி நடை போடுவதுடன் கிறிஸ்தவம் பரவுவதற்கு இவர் ஒரு பெரிய தடையாக இருக்கிறார்என்று கூறுகின்றது.
தலைப்பாகை
     சாதீய உணர்வுகள் தலைவிரித்தாடிய இந்திய சமூகத்தில் ஆடை அணிவது, பெயர் வைப்பது, பேசுவது என அனைத்தும் நிபந்தனைக்கும், அடக்குமுறைக்கு உட்பட்டவையாகவே இருந்தன. ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலோ, முட்டிக்குக் கீழோ ஆடை அணிய அனுமதி இன்றி வாழ்ந்தனர். இத்தகைய ஒரு சமூகச் சூழலிலேயே அய்யா வைகுண்டரின் அவதாரமும் அவரது சீர்திருத்த இயக்கமும் மக்களை நல்வழிப்படுத்த முயல்கின்றது.
     ஆதிக்கச்சாதிகளிடம் ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருந்த அச்சத்தை நீக்கி அவர்களைச் சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டுமென அய்யா வைகுண்டர் விரும்பினார். ஆகவே ஆதிக்கச்சாதிகள் போட்டிருந்த ஒவ்வொரு தடைகளாகத் தவிர்க்கத் தொடங்கினார்.
     T.K. வேலுப்பிள்ளை அவர்கள் “ பண்டு தொட்டே நாடார் சமூகத்தவர்களிடம் ஒரு பழக்கம் இருந்து வந்தது. ஒரு நாடார் சமூக இளைஞன் தனது பதினாறாவது அகவையில் தலையில் தலைப்பாகை அணிந்து பாதுகாப்பிற்காகப் பிச்சுவாக் கத்தியையும் கொண்டு விளங்குவான். இப்பழக்கத்தினை “உறுமல் கட்டுஎன்று அழைப்பர்என்று கூறுகின்றார்23.
     “மேலும் இவ்வினத்தவர்கள் இவ் உறமால் கட்டும் சடங்கினை விமரிசையாக நடத்தினர். ஆதிக்கச்சாதியாரின் அடக்குமுறையில் இப்பழக்கம் ஒடுக்கப்பட்டது. சுமைகளைத் தூக்கிச் செல்வதற்குக்கூட தலைப்பாகையை அணிய இம்மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பனை ஓலையையும் வைக்கோலையும் தலைப்பாகைக்குப் பதிலாக சும்மாடாய்ப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர் என்றும் கூறுகின்றார்24.
     இத்தகைய சூழலிலேயே அய்யா வைகுண்டர் மக்களின் தன்மான உணர்வை எழுப்பும் வண்ணம் மக்களிடம் தனது கருத்துகளைப் பரப்பத் தொடங்கினார்.
           “ கூலிக்காரர் மக்களில்லை
             கோடி வரிசை பெற்ற மக்கள்” ( அருள். பக். 71 )
என்று அம்மக்களின் பழம் பெருமையை எடுத்துரைக்கின்றார். அத்தோடு அச்சத்தோடு வாழ்ந்த மக்களுக்கு அச்சத்தைத் தவிர்த்து வீரத்தை ஊட்டினார். “ நெய்நிதிய சான்றோர்கள்என்றும், “ தெய்வச் சான்றோர்கள் என்றும்      “ திசை வென்றச் சான்றோர்கள் என்றும் நாடாரின மக்களத பழம் பெருமைகள் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கலானார்.
           “ குகையாளப் பிறந்தவனே
                என்குழந்தாய் எழுந்திருடா
             அதிகமுள்ள நீசனும்தான்
                மற்பிடித்து அடிக்கிறானே
             படையெடுக்க வாமகனே
                பாருலகம் சுட்டழிக்க
            வரிசைபெற்ற நீமகனே
                மானமறுக்கம் பொறுக்கலையோ ”             ( அருள். பக். 72 )
என வீரப் பள்ளியெழுச்சியும் பாடினார்.
     ஆதிக்கச்சாதிகளைக் கண்டு பயப்பட வேண்டாம் என்பதனை,
           “ ஒன்றுக்கு மஞ்சாதே உற்றமக்கள் சான்றோரே
             பதறாதே யென்றனுட பாலகரே என்றுசொல்லி
                                           ( அகிலம். தொகுதி. பக். 262 )
என்று போர்ப்பரணி பாடி மக்களிடையே வீர உணர்வை வளர்த்தெடுத்தார். அத்தோடு தங்கள் பாரம்பர்ய அடையாளமான தலைப்பாகையைத் தானும் கட்டிக் கொண்டதோடு தன்னைக் காணவரும் அன்பர்களையும் தலைப்பாகைக் கட்டி வரும்படிக் கூறினார்.
     ஆடை உடுத்தவே உரிமையற்றிருந்த ஒரு சமூகத்தில் மன்னர்கள் மணிமுடி தரிப்பது போன்று நாடார் இன மக்களையும் தலைப்பாகைக் கட்டச் செய்த மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார். நாடார்களாகிய  தாங்களும் மன்னர்கள்தான் என்று ஆதிக்கச் சாதிகளுக்குக் காட்டும்படி அய்யா வைகுண்டரது தலைப்பாகை புரட்சி அமைந்தது எனலாம். இது ஆதிக்கச்சாதிகளுக்கு அச்சத்தையும், ஆத்திரத்தையும் மூட்டியது என்றாலும் அய்யா வைகுண்டரின் இதுபோன்ற புரட்சிகரமான போராட்டங்கள் நாடார் இன மக்கள் மத்தியில் தன்மான உணர்வை ஏற்படுத்தியது எனலாம்.  இன்றும் தலைப்பாகை புரட்சியின் அடையாளமாகவே அய்யா வழி மக்கள் தலைப்பாகையை அணிகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக