வெள்ளி, 21 நவம்பர், 2014

உருவ அமைப்பு

நீடிய யுகம் தோன்றிய உடன் இவ்வுகத்துக்கு யாரை உலகில் இருத்துவோம் என மும்மூர்த்திகளும் அலோசித்தனர். ஆலோசித்து தில்லையில் ஈசன் ஒரு வேள்வி வளத்தினார். இவ்வேள்வியில் மலையைப் போன்ற பெரிய உருவம் உடையவனாய் குறோணி பிறந்தான். அவன் அறத்தை அறியாதவனாகவும், உடம்பில் சதை நிறைந்து அண்டத்தைப் போன்று பெரியவனாகவும் இருந்தான். அவன் முகம், கண்கள் எல்லாம் முதுகு புறத்தின் மேல் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு கோடி கைகள், மற்றும் ஒருகோடி கால்களை உடைய அவனின் உயரம் நான்கு கோடி முழங்களாகளாகும். அவன் நடக்கும் போது கால் மாறி வைக்க, கயிலை கிடுகிடென ஆடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக