முதன்முதலில் அப்பன் நாராயணன் தான்
பெற்ற பிள்ளைகளுக்கு சிவனிடம் நாமமிட்டு தருமாறு வேண்டினார்.நாரயணனின்
வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் மகிழ்ந்து,'சாணார்' என நாமமிட்டார்.இதனை
அகிலத்திரட்டு பின்வருமாறு கூறுகிறது,
" தோணாப் பொருளைத் துடர்ந்துகண்ட மன்னவருக்கு
சாணாரென நாமஞ் சாற்றினார் ஈசுரரும்"
- சான்றோர்
அதன்பின்னர் பிரம்ம தேவர்
மகிழ்ந்து நாராயணர் பெற்ற பிள்ளைகளுக்கு 'சான்றோர்' என நாமம் சூட்டி
மகிழ்ந்தார்.இதனை அகிலத்திரட்டு பின்வருமாறு கூறுகிறது,
" மதமான விந்து மாயமுனி சேயதற்க்கு
சான்றோரென நாமஞ் சாற்றினார் வேதாவும்"
- நாடாள்வார்
அதன்பின்னர் நாராயணர்
தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு மகிழ்ந்து நாமமிட்டார்.அவ்வாறு நாராயணர்
இட்ட பெயர்தான் 'நாடாள்வார்' என்பதாகும். இது அகிலத்திரட்டில் பின்வறுமாறு
கூறபடுகிறது,
"நாடாள்வா ரென்று நாமமிட்டார் பாலருக்கு"
- சங்கு மன்னர்
அதன் பின்னர் சக்தி உமை சான்றோருக்கு இட்ட பெயர்தான் 'சங்கு மன்னர்' என்பதாகும்.இதனை அகிலத்திரட்டு
"சங்கு மன்னரென்று தானுரைத்தாள் சக்தியுமை"
என உரைக்கிறது.
- பொர்ப்பமுடி மன்னர்
அதன் பிறகு பார்வதி,
பிள்ளைகளுக்கு "சென்ற இடமெல்லாம் வென்று சீமைகட்டி ஆளும் 'பொர்ப்பமுடி
மன்னர்'" என மகிழ்ந்து பெயரிட்டாள்.இதனை அகில்திரட்டு
பின்வருமாறு கூறுகிறது,
" பொர்ப்பமுடி மன்னரென பேரிட்டாள் பார்வதியும்"
- வெள்ளானை வேந்தர்
சரஸ்வதி தேவி 'வெள்ளானை வேந்தர்' என நாராயணர் பெற்ற பிள்ளைகளுக்கு நாமமிட்டாள் இதனை அகிலத்திரட்டு பின்வருமாறு கூறுகிறது,
" வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரையா உரைத்தாள்"
- வீர நகுல வேந்தர்
வீர நகுல வேந்தர் என்பது பிள்ளையார் சான்றோருக்கு இட்ட பெயராகும், அகிலத்திரட்டு இதனை பின்வறுமாறு கூறுகிறது,
" நன்றான வீர நகுல வேந்தரெனவே
அன்றானை முகத்தோன் அருளினர் காணம்மானை"
- தவலோக மன்னர்
சண்முகர் மனமகிழ்ந்து சான்றோருக்கு இட்ட பெயரே 'தவலோக மன்னர்' என்பதாகும்,இதனை அகிலத்திரட்டு
" சண்முகனுந்தான் மகிழ்ந்து தவலோக மன்னரென்று
விண்ணகமும் மெய்க்க விளம்பினர் காணம்மானை"
என உரைக்கிறது.
- தர்மகுல மன்னர்
வானோர்கள் மாமுனிவர்கள் சான்றோர்களுக்கு 'தர்மகுல மன்னர்' என நாமமிட்டு மகிழ்ந்தனர்.இதனை அகிலத்திரட்டு
" வானோர்கள் வேத மாமுனியோர் தான்மகிழ்ந்து
தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்கு
தர்மகுல மன்னரென்று சாத்தினா ரம்மாணை"
என உரைக்கிறது.
- தெய்வகுல மன்னர்
'தெய்வகுல மன்னர்' என்பது கர்மமில்லாத தேவர்கள் சான்றோர்களுக்கு இட்ட நாமமாகும்.இதனை அகிலத்திரட்டு
"கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு
மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க
தெய்வகுல மன்னரென்று திருநாம மிட்டனரே"
என கூறுகிறது.
- சூரியகுல வேந்தர்
சூரிய பகவான் அகமகிழ்ந்து சான்றோருக்கு 'சூரியகுல வேந்தர்' என நாமமிட்டார்.இது அகிலத்திரட்டில் பின்வறுமாறு கூறபடுகிறது.
"வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்குச்
சூரியகுல வேந்தரென்று சொன்னார் காணம்மாணை"
- வீச விசய வேந்தர்
இந்திரன் சான்றோருக்கு வைத்த பெயர் 'வீச விசய வேந்தர்' என்பதாகும் இதனை அகிலத்திரட்டு
"வாசவனுந்தான் மகிழ்ந்து மாயனுட பாலருக்கு
வீச விசய வேந்தரென்று நாமமிட்டார்"
என்கிறது.
- காட்டு ராசன்
கற்புடைய சன்னாசியான
நாரதமுனிவர் நாராயணர் பெற்ற மக்களுக்கு இட்ட பெயர்தான் 'காட்டு ராசன்'
என்பதாகும்.இதனை அகிலத்திரட்டு பின்வருமாறு கூறுகிறது,
"கற்புடைய சன்னாசி கருத்தாகவே உரைப்பார்
நாட்டுக் குடைய நாதனுட கண்மணிக்குக்
காட்டு ராசனெனவே கருத்தாக நாமமிட்டார்"
இவ்வாறாக பல தெய்வங்களும், தேவர்களும் நாராயணர் பெற்றெடுத்த மக்களுக்கு பல்வேறு பெயர்களை சூட்டி மகிழ்ந்தனர்.
அய்யா உண்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக