அய்யாவழி
சட்டங்களில் நீதம் முதன்மை இடம் வகிக்கிறது. எட்டு யுகச்செய்திளை தொகுத்து
விளக்குமிடத்து பழங்காலத்தில் நீதம் எவ்வாறு மக்களால் கடைபிடிக்கப்பட்டது
என்பது விளக்கப்படுகிறது. அன்றைய சமுதாயம், அதனை ஆண்ட மன்னன் ஆகியவர்கள்,
தங்கள் செயல்களில், தங்களுக்கப்பாலுள்ள இறைவனை நிலைநிறுத்தி
இயற்கையோடியைந்த நிலையில் வாழ்ந்த விதம் இந்நூலில் சிறப்பாக
விளக்கப்படுகிறது. நீதம் மூன்றாக பகுக்கப்பட்டுள்ளது.
மனு நீதம் - சமுதாயத்தில் தனிமனிதனின் கடமைகள்.
ராச நீதம் - ஆட்சி புரியும் மன்னனுக்கான கடமைகள்.
தெய்வ நீதம் - இறையியல் சட்டங்கள் மற்றும் கடமைகள்.
அக்காலத்து
இந்த சிறப்பு நிகழ்வுகள் உவமையாக கூறப்பட்டு அதை சட்டவடிவாக கொண்டு
வாழ்வியல் கோட்பாடாக இன்று இக்கலியுகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என
கூறப்படுகிறது. கலியுகத்தின் துவக்கத்திலும் வைகுண்ட அவதார துவக்கத்திலும்
பொது நிலைமாற்றங்கள் நிகழ்வதால் அவற்றிலிருந்து சில கோட்பாடுகள் மாற்றம்
பெருகின்றன. அவ்வாறு நிகழும் மாற்றங்கள் பின்னர் அவதாரத்தின் போது
வைகுண்டரால் போதிக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக