வெள்ளி, 21 நவம்பர், 2014

"அன்பு மலரெடுத்து அனுதினமும் பூசை செய்தால் அய்யா நான் வருவேன்"

"பக்தி மறவாமல் பதறாமல் நீயிருந்தால் 
புத்தி சொல்ல நான்வருவேன் புலம்புவேன் என்மகனே!"
என்கிறார்,
           உண்மையான பக்தியுடன் எந்த தீய சக்திகளுக்கும் பயப்படாமல் வைகுண்டமே துணை என்ற ஒருமனதோடு இருக்க வேண்டும் என்கிறார்,அவ்வாறு இருந்தால் பல புத்திமதிகளை கூறி ஆபத்திலிருந்து காக்க நான் வருவேன் என்மகனே என்கிறார்.
ஆனால் இன்றைய காலத்தில் சிலர் பகலில் கடவுளிடம் பிரச்சினைகளை கூறி இறைவா  என்னை கப்பாட்ட்று என முறையிடுவார்கள்.அவர்களே பொழுது சாய்ந்ததும் இறைவனை மறந்து மந்திரவாதிகளிடம் சென்று முறையிட்டு அழுவார்கள்.இதற்கு ஏன் இறைவனை வணங்க வேண்டும்.செய்வினைகாரனையே வணங்கலாமே! 
               மக்களை காப்பதற்கு மக்களுள் ஒருவராகவே தோன்றி மக்களுக்காய் அடிகள் பட்டு,பல சோதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி தாழ்ந்து கிடந்த மக்களையெல்லாம் இன்று நல்ல நிலைமைக்கு உயர செய்து கலியின் கொடுமைகளையெல்லாம் விவரித்து,அதிலிருந்து தப்பும் வழிகளையும் கூறிய    உண்மையான இறைவனை விட்டு கலியை நிலை என்று நம்பி செல்லும் மக்களை வைகுண்டர்தான் நல்லபுத்தி ஈந்து காக்க வேண்டும்.
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக