தர்மத்தின் சமுதாய விளக்கம் எளியோரை மேலாக்குவது எனப்படுகிறது. அகிலம் இதை
"தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்." என்கிறது. சமுதாயத்தில் நிலவும்
எளியோர்-வலியோர், உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஆகிய வேற்றுமைகள் இதனிமித்தம்
களையப்பட வேண்டுமென்கிறது அகிலம். அதன் முதல் மற்றும் மேலான நிலையாக அன்ன
தர்மம் கருதப்படுகிறது. "பயந்து தர்மமிட்டந்த பரம்பொருளைத் தேடிடுங்கோ."
என்கிறது அருள் நூல். இதன் மூலம் ஒருவரிடமும் வேறுபாடில்லாமல்
தான-தருமங்களை செய்ய சமுதாயம் அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் பிரபல
இந்தியத் துறவியான சுவாமி விவேகானந்தர் சமுதாய அறத்தையே முதன்மை தர்மமாக
சித்தரிப்பது அய்யாவழியில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார் என்னும் கருத்தை
உறுதி செய்வதாக அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக