குழந்தைக்கு பெயரிடும் போது "அய்யா நிச்சயித்தபடி (பெயர்) என்னும் பெயர்
வைக்க வேண்டும்"என்று சொல்லிப் போதித்து ஐந்து முறை குழந்தையின் பெயரைக்
கூறிக் குழந்தையின் மேல் பதம் தெளிக்க வேண்டும்.அதுபோல குழந்தைக்கு முடி
இறக்கும் போது "அய்யா நிச்சயித்தபடி முடி இறக்க வேண்டும்" என்று சொல்லி
போதித்து ,பின் முத்திரிப் பதம் தெளித்து முடி இறக்க வேண்டும்.குழந்தைக்கு
முதலில் அன்னம் கொடுக்கும் போது ,தலைமை பதில் உள்ள நித்தியப் பால் வாங்கி
கொடுக்கலாம் முடியாதவர்கள் ,"அய்யா நிச்சயித்தபடி அன்னம் கொடுக்க
வேண்டும்"என்று கூறி போதித்து முத்திரிபதம் சிறிது வாயில் இட்டு பின்
அன்னம் கொடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக