வகுத்த பிரம்மனுக்கும் மாதா பிதாவதுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரந் தோத்திரமே
தோத்திர மென்று சுவாமி தனைத்தொழுது
ராத்திரி தூக்கம் நான்வைத் திருக்கையிலே
ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தியிரு பத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே
சுகுதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்
நாதனென் னருகில் நலமாக வந்திருந்து
சீதமுட னெழுப்பிச் செப்பினார் காரணத்தை
காப்பி லொருசீரு கனிவாய் மிகத்திறந்து
தொகுத்த குருவதுக்கும் தோத்திரந் தோத்திரமே
தோத்திர மென்று சுவாமி தனைத்தொழுது
ராத்திரி தூக்கம் நான்வைத் திருக்கையிலே
ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தியிரு பத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே
சுகுதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்
நாதனென் னருகில் நலமாக வந்திருந்து
சீதமுட னெழுப்பிச் செப்பினார் காரணத்தை
காப்பி லொருசீரு கனிவாய் மிகத்திறந்து
தாப்பிரிய மாகச் சாற்றினா ரெம்பெருமாள்
மகனேயிவ் வாய்மொழியை வகுக்குங் காண்டமதுக்கு
உகமோ ரறிய உரைநீ முதற்காப்பாய்
அதின்மேல் நடப்புன் உள்ளே யகமிருந்து
சரிசமனாய் நான்வகுப்பேன் தானெழுது காண்டமதை
நானுரைக்க நீயெழுதி நாடுபதி னாலறிய
யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள்முன்னே
மகனேயிவ் வாய்மொழியை வகுக்குங் காண்டமதுக்கு
உகமோ ரறிய உரைநீ முதற்காப்பாய்
அதின்மேல் நடப்புன் உள்ளே யகமிருந்து
சரிசமனாய் நான்வகுப்பேன் தானெழுது காண்டமதை
நானுரைக்க நீயெழுதி நாடுபதி னாலறிய
யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள்முன்னே
வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா
பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரி யாய்ப்பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்
மலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடிளகி
தலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில்
என்னாணை பார்வதியாள் எகாபரத்தின் தன்னாணை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா
குட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பீரால்
திட்டமது சொன்னோம் தீருந் திருவாணை
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா
பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரி யாய்ப்பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்
மலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடிளகி
தலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில்
என்னாணை பார்வதியாள் எகாபரத்தின் தன்னாணை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா
குட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பீரால்
திட்டமது சொன்னோம் தீருந் திருவாணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக