வியாழன், 16 ஏப்ரல், 2015

சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:

என்னை யறிந்தவர்க்கு ஈசன்வழி சொல்லுகிறேன்
உங்களுக்குமண்ணில் மூவாசையதுமாற்றானாய் இருக்குதடா
என்னைக் கண்ணாலே கண்டதுண்டால் கலிதீரும் என்மகனே
வட்டக்கோட்டைக்க காட்டுக்குள்ளே நட்டுவனார்கொட்டுகிறார்
விளக்கம்:
=========
என்னை அறிந்தவருக்கு ஈசனாகிய நான் அவ்விறைவனை அறியும் வழியைச் சொல்லித் தருவேன். உங்களுக்கு இந்தப் பூமியில் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகிய மூவாசைகளும் எதிரிகளாக உள்ளன. என்னை உன் மனக்கண்ணால் கண்டால் கலித்தன்மை தானே அழிந்துவிடும். உன்னுள் இருக்கும் வட்டக்கோட்டை கட்டு என்னும் சகசுராரத்துள்ளே உன்னை நாட்டியம் ஆடச் செய்கின்ற நட்டுவனார் இருந்து செயல்படுத்துகிறார்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
=========================
சொன்னேன் என்று எண்ணாதே என் சொரூபம் அறிவாயோ
சூத்திரக்கணக்கென்று சொல்லுகிறேன் கேள்மகனே
பஞ்சவர்ணக்கிளி கிளியொன்றிருந்தது பறந்துபோகக் கண்டேனடா
ஏழுபெண்கள்கதையை எடுத்துச்சொல்ல நாளாச்சே
விளக்கம்:
========
இவற்றை நான் சொல்லுகின்றேன் என்று குழப்பமாக எண்ணாதே, எனது உண்மை உருவத்தை நீ அறிந்து கொள். இன்னும் ஒர் இரகசிய வழியினைச் சொல்லுகிறேன். பிதுர்கள், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் ஆகிய ஐந்து சிறப்புகளைச் செய்ய வேண்டிய இல்லற வாழ்வு மக்களிடம் இருந்து பறந்து போக்க் கண்டேன். ஏழு பெண்கள் (கன்னியர்) தமது பழைய கதையை வைகுண்டரிடம் சொல்லுகின்ற கலி அழியும் நாள் வந்து விட்டது.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
=========================
பப்புச்செடிக்குள்ளிருந்த பாம்பு படம்விரித்து ஆடுதடா
ஈரேழுஉலகமுண்டு இதையெடுத்துச்சொல்வார் யார்மகனே
சாதியான கொடியபாம்பு சதிசெய்யும் பாம்பதுதான்
முப்பூவை தானெடுத்து அதைமுத்திசெய்தால் சக்தியுண்டு
விளக்கம்:
========
பரந்த செடியாகிய மூலாதாரத்திலிருந்து பாம்பாகிய காம இச்சை படம் விரித்து ஆடுகின்றது. பதினான்கு உலகங்களும் உன்னுள்ளே அமைந்து இருக்கின்றன. இத்தத்துவத்தை எடுத்துச் சொல்லுகிறவர்கள் யாரும் இலர் மகனே. மிகவும் உயர்ந்த வகைப் பாம்பாகிய காம இச்சை உன்னுள்ளே அமைந்துள்ளது. அது உனக்கு எதிராகச் சதி செய்து விடும். அகரத்தையும்(வடகலை) உகரத்தையும்(இடகலை) இணைத்துக் கிடைக்கும் முப்பூவை நீங்கள் எடுத்து பேறு பெற்றால் உங்களுக்கு மிகுந்த சக்தி உருவாகும்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
=========================
குருபுத்தி யார்க்கும் உள்ளதைநான் சொல்வேன் கேள்மகனே
அப்பூவைத்தானெடுத்து அணிந்திடுங்கோ கண்ணுமக்காள்
மூன்றுநாமம் ஒன்றுபாம்பு அதுமூன்றும் ஆடுதப்பா
கொத்தினால் திரும்பாதப்பா அதுகுடிகெடுத்தப் பாம்புவிசம்
விளக்கம்:
========
இது குருநாதர் கூறும் உபதேசம் ஆகும். என்னிடம் யார் வந்தாலும் அவர்களுக்கு உண்மையாக உள்ளதை வெளிப்படையாகச் சொல்லுவேன். முப்பூவின் நிலையிலே எப்பொழுதும் இருங்கள். காம இச்சை, பொன்னாசை, மண்ணாசை ஆகிய மூன்று பாம்புகளும் உங்களுக்குள்ளே ஆடிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் மிகவும் கொடிய பாம்பு காமஇச்சை ஆகிய பாம்பு. இது மிகவும் பொல்லாத பாம்பு ஆகும். அது உங்களைத் தீண்டினால் தனது விஷத்தினால் உங்கள் குடியைக் கெடுக்காமல் திரும்பாது.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
=========================
தலைமன்னர் மீதிருந்து பலசாஸ்திரங்கள் சொல்லுதப்பா
சங்குக்குள்ளிருந்து வந்தேன் வையகத்தில்
கும்பக்கோணப்பாதையாக குறிகள்சொல்லி வந்தேனப்பா
விள்ளுர் தனிலிருந்து விரைத்துவந்தேன் வையகத்தில்
விளக்கம்:
========
இப்பாம்பு சிவனுடைய தலை மீது இருந்து, காம இச்சையை அடக்கியவன் என்றும், குண்டலினி சக்தியை ஏற்றியவன் என்றும் பல தத்துவ சாத்திரங்கள் மூலம் தன்னைப் பற்றி எடுத்துக் கூறும். சங்கு ஆகிய சகசுராரத்திலிருந்து நான் இவ்வையகத்தில் வந்து உதித்தேன். கும்பம் கோணம் என்னும் ஆக்ஞா வழியாக வந்து அதிசயமான பல குறிகளை உங்களிடம் நான் சொல்லி வந்தேனப்பா. இவ்வாறாகச் சகசுராரத்திலிருந்து இறங்கி மிகவும் விரைவாக இவ்வையகம் வந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக