வியாழன், 16 ஏப்ரல், 2015

உலகம் தோன்றியது எப்படி? அகிலத்திரட்டு என்ன சொல்கிறது?

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தால் உலகத்தை பிரம்மன் படைத்ததாக இந்து மதம் கூறுகிறது. பிரம்மன் தான் படைப்புக்கு அதிபதி என்றும் கூறுகிறது. அந்த பிரம்மன் மஹா விஷ்ணுவின் உந்தித் தாமரையில் இருந்து உதித்தார் என்றும் இந்து சமயம் சொல்கிறது.
ஆதியில் வார்த்தை இருந்தது .அது தேவனாய் இருந்தது. தேவன் வார்த்தையாய் இருந்தார் என்று கிறிஸ்தவர்களின் பைபிள் சொல்கிறது. ஏழு நாள்களில் இறைவன் உலகத்தை படைத்தார் என்றும் பைபிள் சொல்கிறது. உலகின் பெரும்பான்மையான மக்களால் போற்றி படிக்கப்படும் பைபிள் கூட Genesis என்ற பகுதியில் இந்த உண்மையை சரியாக வெளிப்படுத்தவில்லை.
ஏகம் ஒரு பரமானது. இம்ம் என்றொரு வாயுவில் சக்தி விளைந்தது. சக்தியிலிருந்து சிவம் வந்தது. சிவத்திலிருந்து மீண்டும் சக்தி வந்தது. சக்தியில் இருந்து நாதமும் , நாதத்திலிருந்து விஷ்ணு பிறந்தது. பின் ருத்திரர், மயேசுரர் தோன்றினர். பின்னால் உலகம், அண்டபிண்டங்களும் தோற்றுவிக்கப்பட்டன என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்கிறது.
அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்பு கீழ் கண்டவாறு தொகுக்கப்பட்டுள்ளது.
The first step in the emergence of life may have been chemical reactions that produced many of the simpler organic compounds, including nucleobases and amino acids, that are the building blocks of life. An experiment in 1953 by Stanley Miller and Harold Urey showed that such molecules could form in an atmosphere of water, methane, ammonia and hydrogen with the aid of sparks to mimic the effect of lightning.Although the atmospheric composition was probably different from the composition used by Miller and Urey, later experiments with more realistic compositions also managed to synthesize organic molecules.Recent computer simulations have even shown that extraterrestrial organic molecules could have formed in the protoplanetary disk before the formation of the Earth.The next stage of complexity could have been reached from at least three possible starting points: self-replication, an organism's ability to produce offspring that are very similar to itself; metabolism, its ability to feed and repair itself; and external cell membranes, which allow food to enter and waste products to leave, but exclude unwanted substances.
வாயுவிலிருந்து தான் உயிர் வந்தது என்பதை அறிவியல் நோக்கில் சொல்லி இருக்கிறார்கள் .
கீழ்காணும் உலக தோற்றம் பற்றிய உண்மையும் அறிவியல் அறிஞர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்
கோடி கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நெபுலா என்றொரு நெருப்புகோளம் சுழன்று கொண்டிருந்தது. காலப் போக்கில் அதிலிருந்து பிரிந்து வந்த சிறிய நெருப்பு கோளங்களில் ஓன்று தான் இன்று நாம் காணும் சூரியனும் அதன் துணை கோள்களுமாகும்.அந்த துணை கோள்களில் ஒன்றான பூமியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தன்னாலே தான் முளைத்த சற்கணையின் தண் வாங்கி
பின்னாலே ஓர் கணையை பீறி - பின்னால்
பீறும் கணையதனால் பெரும்புவி எல்லாம் தோன்றி
சீரும் கலியதனாற்சென்றுதோ
- அகிலத்திரட்டு அம்மானை
தன்னாலே தான் முளைத்த சற்கணை - நெபுலா
பின்னாலே ஓர் கணையை பீறி - சூரிய மண்டலம்
பீறும் கணையதனால் பெரும்புவி - பூமி
இவ்வாறாக தோன்றிய பூமியின் சீரும் சிறப்பும் நீசக்கலியினால் குன்றிவிட்டது.
இதுவரை உலகில் தோன்றிய எந்த வேதமும், இந்த உண்மையை சொல்லவே இல்லை. அகிலத்திரட்டு தெள்ளத்தெளிவாக பாமரனும் அறியும் விதத்தில் சொல்லி இருக்கிறது. அகிலத்திரட்டு தான் உலக பொது வேதமாகும். அகிலத்திரட்டு அம்மானையை தினந்தோறும் படிப்போம். அறியாமையை அகற்றுவோம். ஞானம் பெறுவோம். அகிலத்தில் மறைந்து கிடக்கும் அளப்பரிய விஞ்ஞானத்தை உலகறிய சொல்லுவோம்.
அய்யா உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக