முன்னின்று கொல்ல மூவராலும் அரிது
பின்னின்று அவனவனால் பேசாது மாள வைப்பேன்.
பின்னின்று அவனவனால் பேசாது மாள வைப்பேன்.
என்று சொல்லும் இறைவன் போரிட்டு கலியை அழிக்கவில்லை நம்மையும் போரிட்டு கலியழிக்க புத்தி சொல்லவில்லை. அவர் நம்மோடு இருந்து கொண்டு, புத்தி மதிகளையும், விஞ்சைகளையும் சொல்லி கொடுப்பதன் மூலம் அஹிம்சா வழியில் அன்பு வழியில் அடங்கா கலியை அழிக்க உதவுகிறார்.
தர்ம யுகமாக்கித் தாரணியை யாளுதற்குக்
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகா திருக்கும் தர்மஅன் புள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகா திருக்கும் தர்மஅன் புள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்
அகிலத்திரட்டின் மூலமாக நம்மிடம் இறைவன் தினமும் பேசுகிறார். தினம் ஒரு மணி நேரமாவது அகிலதிரட்டை படித்தால் / கேட்டால் ஊழ் வினைகளும் தீரும். செய்த பாவங்களும் கரைந்து போகும்.நமக்கு இனிவரும் காலங்களில் பாவங்கள் / தவறுகள் / குற்றங்கள் செய்ய நினையாத மன நிலை வளரும். தர்ம வழியில் வாழும் உறுதி கிடைக்கும்.
"எல்லாஞ் சான்றோர் கையாலே
எள்ளும் நீரும் கலிக்கிறைத்து
பொல்லாக் கலியை நரகமதில்
புக்க அடித்துப் பேயோடு
கொல்ல விடைகள் கொடுப்பேனான்
கூண்ட சான்றோர் கையதிலே"
எள்ளும் நீரும் கலிக்கிறைத்து
பொல்லாக் கலியை நரகமதில்
புக்க அடித்துப் பேயோடு
கொல்ல விடைகள் கொடுப்பேனான்
கூண்ட சான்றோர் கையதிலே"
சப்தகன்னியரின் பிள்ளைகளாக வளர்ந்து வாழ்ந்து வரும் திருமால் பெற்ற சான்றோரை நீசமுற்ற கலியிடமிருந்து காக்கவே அய்யா நாராயணர் தனக்கு தானே மகனாக ( வைகுண்டராக முப்பொருளும் ஒரு பொருளாக ) அவதரித்தார். கலியை நரகத்திற்கு அனுப்பி கண்ணு மக்களாகிய சான்றோரை தர்மயுகதிற்க்கு அழைக்கவே இந்த வைகுண்ட அவதாரம்.
வல்லோர் புகழுந் தேவர்களே
மனமே சடைக்க வேண்டாமே
வேண்டா மெனவே தேவருக்கு
விடைகள் கொடுத்து வைகுண்டரும்
கூண்டாங் கடலின் கரைதாண்டி
குதித்தே கரையி லோடிவந்து
தாண்டாய் முன்னே பெற்றதொரு
தாய்க்கோர் சடல வுருக்காட்டி
ஆண்டா ராணை யொருவருக்கும்
அகலா தெனவே யாணைகொண்டார்"
மனமே சடைக்க வேண்டாமே
வேண்டா மெனவே தேவருக்கு
விடைகள் கொடுத்து வைகுண்டரும்
கூண்டாங் கடலின் கரைதாண்டி
குதித்தே கரையி லோடிவந்து
தாண்டாய் முன்னே பெற்றதொரு
தாய்க்கோர் சடல வுருக்காட்டி
ஆண்டா ராணை யொருவருக்கும்
அகலா தெனவே யாணைகொண்டார்"
திருச்செந்தூர் கடலில் மகரத்துள் விஞ்சை பெற்ற அய்யா வைகுண்டர் அரூபியாகவே வெளியில் வந்தார். கடலுக்குள் போன மகன் ( முத்துக்குட்டி) இன்னும் வர காணோம் என்று கதறி அழுது கொண்டிருந்த அன்னை வெயிலாள் காணும்படியாக சடல வுருவை காட்டினார்.
தெச்சணத்துக் கேகவென்று திருச்சம் பதியிருந்து
உச்சமது கொண்டு உகச்சாப முங்கூறி
நடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக்
கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம்
சங்கீதங் கூறித் தாமே யவர்வரவே
மங்கள நாதன் மனுச்சொரூப மேயெடுத்து
நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார்
உச்சமது கொண்டு உகச்சாப முங்கூறி
நடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக்
கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம்
சங்கீதங் கூறித் தாமே யவர்வரவே
மங்கள நாதன் மனுச்சொரூப மேயெடுத்து
நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார்
திருசெந்தூர் கடலில் இருந்து அரூபியாகவே வந்த இறைவன் தெட்சணம் செல்லும் முன் தருவை இடத்தில் மனு சொரூபம் எடுத்து மனிதர்கள் காணும் படியாக தோன்றினார். தான் பெற்ற விஞ்சைகளின் படி தனது பிள்ளைகளான சான்றோர்களுக்கு வாழ்ந்து கலியை அழிக்கும் யுக்தியை காட்டுவதற்காக மனித ரூபம் கொண்டார்.
வைகுண்ட அவதாரத்தின் பொது பல இகனைகளுக்காக பல்வேறு உருவங்களை அய்யா வைகுண்டர் தரித்திருந்தாலும் உருவமின்மை தான் இறைவனின் உண்மையான நிலை. அதன் மூலம் தான் அவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்பதை நாம் அறிய வேண்டும்.
இறைவன் வரைமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், கற்பனைக்கும் எட்டாதவன், அடங்காதவன்.
வார்த்தைகளால் எழுதப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை என்னும் வேதத்தை மனப்பாடம் செய்த ஒரு பக்தனுக்கு அதனை மனதிற்குள் ஓயாமல் ஓதும் போது எழுத்து வடிவங்கள் தேவை இல்லை ஒலி
வடிவமும் தேவை இல்லை. ஆனால் அப்படி ஓதும் போது எல்லையில்லா இன்பம் நமக்குள் பெருகுவதை உண்மையாகவே உணரலாம்.அது போல உருவமிலா இறைவனை உள்ளத்துள் உணரும் உண்மையான பக்தனுக்கு இறைவனின் உருவம் தேவை இல்லை. அந்த பக்திக்கு தடையின்றி இறைவனின் அருள் கிடைக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
வடிவமும் தேவை இல்லை. ஆனால் அப்படி ஓதும் போது எல்லையில்லா இன்பம் நமக்குள் பெருகுவதை உண்மையாகவே உணரலாம்.அது போல உருவமிலா இறைவனை உள்ளத்துள் உணரும் உண்மையான பக்தனுக்கு இறைவனின் உருவம் தேவை இல்லை. அந்த பக்திக்கு தடையின்றி இறைவனின் அருள் கிடைக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அய்யா வைகுண்டர் வாழ்ந்து காட்டிய வழியில் வாழ்வது தான் கலியை அழிக்கும் ஒரே வழி அதுவே உண்மையான அய்யா வழி.
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக