தேவலோகத்தார் மனுப்பிறப்பு
அப்போது பாரளந்த அய்யாநா ராயணரும்
முப்பொருளு மொன்றாய் ஒத்திருந் தேதுசொல்வார்
தேவரையுந் தான்வருத்திச் செப்புவா ரையாவும்
பாவலரே நீரும் பார்த்துணர்ந் தோராமல்
மாலிங்கே யில்லையென்று மாறாட்டஞ் சொன்னதற்கு
சூலின் கருத்திரண்டு தொல்புவியி லேபிறக்கும்
உங்களி னமாக ஒருபிள்ளை பெற்றதுண்டு
அங்குபோய்ச் சாணாராய் அதில்பிறக்கப் போவுமென்று
சொல்லவே தேவரெல்லாம் சிரித்துமனங் கூடி
.................................................................................
................................................................................
முப்பொருளு மொன்றாய் ஒத்திருந் தேதுசொல்வார்
தேவரையுந் தான்வருத்திச் செப்புவா ரையாவும்
பாவலரே நீரும் பார்த்துணர்ந் தோராமல்
மாலிங்கே யில்லையென்று மாறாட்டஞ் சொன்னதற்கு
சூலின் கருத்திரண்டு தொல்புவியி லேபிறக்கும்
உங்களி னமாக ஒருபிள்ளை பெற்றதுண்டு
அங்குபோய்ச் சாணாராய் அதில்பிறக்கப் போவுமென்று
சொல்லவே தேவரெல்லாம் சிரித்துமனங் கூடி
.................................................................................
................................................................................
தவறு- 1
போகும் பொழுதில் பொன்னுலகத் தேவர்தன்னில்
தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன்
பரதே வதையான பார்மறலி தன்னுகத்தில்
உரமான தேவியவள் உடையமன்ன னைநீக்கித்
தெய்வச்சம் பூரணனும் சேர்ந்தவளோ டேநடப்பாய்
மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே
நான்பிறக்கப் போணுமென்றால் நன்னுதலை யென்னோடு
தான்பிறக்கச் சொல்லித் தாரம்போ லாக்குவீரால்
நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது
தான்பிறக்கப் போவதற்குச் சங்கடங்க ளுண்டுமையா
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று தேவாநீ நாணமென்ன பேசுகிறாய்
உன்பிறப்பு உயர்பிறப்பு ஓவியத்தின் தன்பிறப்பு
பின்பிறப்பு ஏமன் பூமிப் பிறப்பல்லவோ
அப்பிறவிக் கிப்பிறவி அடுக்குமோ தேவாநீ
இப்பிறவி ஞாயம் ஏனுரைத்தாய் மாதேவா
ஆனையொடு பூனை அணைந்துநலஞ் செய்திடுமோ
பூனையொடு ஆனை புல்குமோ மாதேவா
தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன்
பரதே வதையான பார்மறலி தன்னுகத்தில்
உரமான தேவியவள் உடையமன்ன னைநீக்கித்
தெய்வச்சம் பூரணனும் சேர்ந்தவளோ டேநடப்பாய்
மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே
நான்பிறக்கப் போணுமென்றால் நன்னுதலை யென்னோடு
தான்பிறக்கச் சொல்லித் தாரம்போ லாக்குவீரால்
நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது
தான்பிறக்கப் போவதற்குச் சங்கடங்க ளுண்டுமையா
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று தேவாநீ நாணமென்ன பேசுகிறாய்
உன்பிறப்பு உயர்பிறப்பு ஓவியத்தின் தன்பிறப்பு
பின்பிறப்பு ஏமன் பூமிப் பிறப்பல்லவோ
அப்பிறவிக் கிப்பிறவி அடுக்குமோ தேவாநீ
இப்பிறவி ஞாயம் ஏனுரைத்தாய் மாதேவா
ஆனையொடு பூனை அணைந்துநலஞ் செய்திடுமோ
பூனையொடு ஆனை புல்குமோ மாதேவா
ஆனை மதமா யடர்ந்து மிகத்தேவா
பூனை யொடுவந்து புல்குமோ - பூனை
நாயோடு புல்குமோ நல்லறிவில் லாத்தேவா
ஈயோடு சேர்மோ இசல்
பூனை யொடுவந்து புல்குமோ - பூனை
நாயோடு புல்குமோ நல்லறிவில் லாத்தேவா
ஈயோடு சேர்மோ இசல்
ஏனடா தேவாநீ இந்தமுறை சொன்னதென்ன
வீணடா இவ்வாசை விட்டுவிடு நீதேவா
கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில்
ஓரிக்குச் சிங்கம் ஒக்குமோ மாதேவா
இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி
எப்படியும் புத்தி இசையாம லேயுரைப்பான்
காவலரே மாமோகம் கண்டஇட மன்றல்லவோ
ஆவலது கொண்டஇடம் அச்சுதரே சம்மதங்காண்
எந்தவித மாகிடினும் எனக்கந்தப் பெண்கொடியைத்
தொந்தமா யென்றனக்குத் தொலையாத ஆசையதும்
தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு
என்றன் பிரானே இனிமாற்றிச் சொல்லவேண்டாம்
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே
கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு
காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல்
தவசு இருபேரும் தாற்பரிய மாகநின்று
சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல்
நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம்
அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று
சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான்
பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி
விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து
நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று
நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும்
நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார்
வீணடா இவ்வாசை விட்டுவிடு நீதேவா
கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில்
ஓரிக்குச் சிங்கம் ஒக்குமோ மாதேவா
இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி
எப்படியும் புத்தி இசையாம லேயுரைப்பான்
காவலரே மாமோகம் கண்டஇட மன்றல்லவோ
ஆவலது கொண்டஇடம் அச்சுதரே சம்மதங்காண்
எந்தவித மாகிடினும் எனக்கந்தப் பெண்கொடியைத்
தொந்தமா யென்றனக்குத் தொலையாத ஆசையதும்
தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு
என்றன் பிரானே இனிமாற்றிச் சொல்லவேண்டாம்
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே
கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு
காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல்
தவசு இருபேரும் தாற்பரிய மாகநின்று
சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல்
நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம்
அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று
சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான்
பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி
விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து
நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று
நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும்
நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார்
சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு
அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு
நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில்
வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில்
பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய்
மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க
உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே
ஆனதா லவரை அவனிதனி லேபிறவி
ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால்
நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ
என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே
அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும்
இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே
தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும்
மூவர் நடுவன் முத்தனரி நாரணரின்
சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால்
எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச்
சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று
நாடி யகமகிழ்ந்து நாரா யணருடனே
சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே
சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு
நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில்
வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில்
பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய்
மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க
உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே
ஆனதா லவரை அவனிதனி லேபிறவி
ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால்
நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ
என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே
அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும்
இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே
தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும்
மூவர் நடுவன் முத்தனரி நாரணரின்
சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால்
எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச்
சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று
நாடி யகமகிழ்ந்து நாரா யணருடனே
சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே
தவறு-2
கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்
மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள்
வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால்
எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன்
வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ
என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும்
நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண்
அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால்
இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ
என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும்
அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான்
.....................................................................
...................................................................
கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்
மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள்
வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால்
எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன்
வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ
என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும்
நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண்
அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால்
இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ
என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும்
அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான்
.....................................................................
...................................................................
மாய பரனும் மனமகிழ்ந்து கொண்டாடி
ஆயனைப் பார்த்து அருளுவா ராதியுமே
மாயவரே கேட்டீரோ வாய்த்தஇத் தேவனுந்தான்
தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தா னில்லையிவன்
முற்றுந் தவமும் முழுதும்நிறை வேறுகையில்
சிற்றின்ப மாகித் திருமுடிமே லிச்சைகொண்டு
வாடி யயர்ந்தான் மங்கையருந் தேவனுமே
நாடி யிவன்தனக்கு நல்வளமை யேதுசொல்வீர்
அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடிச்
செப்புகிறா ரந்தச் சிவனோடு எம்பெருமாள்
ஏது விதமாய் இருந்ததவ மேகுறைய
தீதுவந்த ஞாயம் செப்பிடீ ரென்றுரைத்தார்
......................................................................
.....................................................................
ஆயனைப் பார்த்து அருளுவா ராதியுமே
மாயவரே கேட்டீரோ வாய்த்தஇத் தேவனுந்தான்
தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தா னில்லையிவன்
முற்றுந் தவமும் முழுதும்நிறை வேறுகையில்
சிற்றின்ப மாகித் திருமுடிமே லிச்சைகொண்டு
வாடி யயர்ந்தான் மங்கையருந் தேவனுமே
நாடி யிவன்தனக்கு நல்வளமை யேதுசொல்வீர்
அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடிச்
செப்புகிறா ரந்தச் சிவனோடு எம்பெருமாள்
ஏது விதமாய் இருந்ததவ மேகுறைய
தீதுவந்த ஞாயம் செப்பிடீ ரென்றுரைத்தார்
......................................................................
.....................................................................
பரிகாரம்-1
கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து
மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு
உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில்
இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால்
அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை
இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும்
நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால்
பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில்
எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க
அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே
இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து
முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து
அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து
குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று
எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி
மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில்
கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும்
கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால்
கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப்
பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு
இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து
குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து
தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து
வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து
சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து
சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று
முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து
இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக்
கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக்
கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து
மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும்
கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து
உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த்
தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால்
வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய்
நாட்டை யரசாண்டு நாச்சியார் போலிருப்பாய்
என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து
அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார்
அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க
எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம்
..............................................................................
.............................................................
மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு
உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில்
இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால்
அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை
இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும்
நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால்
பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில்
எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க
அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே
இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து
முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து
அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து
குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று
எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி
மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில்
கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும்
கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால்
கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப்
பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு
இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து
குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து
தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து
வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து
சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து
சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று
முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து
இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக்
கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக்
கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து
மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும்
கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து
உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த்
தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால்
வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய்
நாட்டை யரசாண்டு நாச்சியார் போலிருப்பாய்
என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து
அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார்
அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க
எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம்
..............................................................................
.............................................................
பரிகாரம்- 2
அப்போது நாரா யணரு மகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று தேவனுக்கங் கேதுரைப்பார்
கேளாய்நீ தேவா கீழான மங்கையரைத்
தாழாத மேல்வகையில் சரியாக்க வேணுமென்று
நின்றாய் தவத்தில் நினைவொன்றைத் தானாட்டி
சண்டாளா நீநினைத்த நினைவுதவத் தொத்திடுமோ
சூழ வினையறுத்துச் சுருதிநே ருள்ளாக்கி
நீளநூ லிட்டு நீதவசு நிற்கையிலே
ஆசை நினைவாமோ அறிவுகெட்ட மாதேவா
பாச மறுத்தல்லவோ பரகெதியைக் காணுவது
ஏதுகா ணுன்றனக்கு இந்நினைவு வந்ததினால்
மாது பிறந்ததுபோல் வையகத்தில் நீபிறந்து
இந்த நினைவதற்கு இனிப்பிறந்து நீசிலநாள்
தொந்துயர மெல்லாம் தொல்புவியி லேதொலைத்துக்
கண்டந்த மங்கையரைக் கருவால் வசமாக்கிக்
கொண்டு திரிந்து கோதையரின் தன்னாலே
நஞ்சுதின் றானாலும் நாண்டுகொண் டானாலும்
உன்சீவன் மாய்க்க உனக்கு மனதாகிப்
பின்னுஞ்சில நாள்கழித்துப் பெண்ணோ டுறவாடித்
தன்னோவியம் போல் தானிருக்கும் நாளையிலே
உன்துயரந் தீர்த்து உன்னையெடுத் தென்மகவாய்
என்துயர மெல்லாம் யானேநீ மாற்றல்செய்து
என்வரிசை தானம் எல்லாமுனக் களித்துப்
பொன்னரசு தந்து புவியாள வைத்திடுவேன்
என்றுமா கிருஷ்ணர் இப்படியே சொல்லிடவே
செப்புகிறோ மென்று தேவனுக்கங் கேதுரைப்பார்
கேளாய்நீ தேவா கீழான மங்கையரைத்
தாழாத மேல்வகையில் சரியாக்க வேணுமென்று
நின்றாய் தவத்தில் நினைவொன்றைத் தானாட்டி
சண்டாளா நீநினைத்த நினைவுதவத் தொத்திடுமோ
சூழ வினையறுத்துச் சுருதிநே ருள்ளாக்கி
நீளநூ லிட்டு நீதவசு நிற்கையிலே
ஆசை நினைவாமோ அறிவுகெட்ட மாதேவா
பாச மறுத்தல்லவோ பரகெதியைக் காணுவது
ஏதுகா ணுன்றனக்கு இந்நினைவு வந்ததினால்
மாது பிறந்ததுபோல் வையகத்தில் நீபிறந்து
இந்த நினைவதற்கு இனிப்பிறந்து நீசிலநாள்
தொந்துயர மெல்லாம் தொல்புவியி லேதொலைத்துக்
கண்டந்த மங்கையரைக் கருவால் வசமாக்கிக்
கொண்டு திரிந்து கோதையரின் தன்னாலே
நஞ்சுதின் றானாலும் நாண்டுகொண் டானாலும்
உன்சீவன் மாய்க்க உனக்கு மனதாகிப்
பின்னுஞ்சில நாள்கழித்துப் பெண்ணோ டுறவாடித்
தன்னோவியம் போல் தானிருக்கும் நாளையிலே
உன்துயரந் தீர்த்து உன்னையெடுத் தென்மகவாய்
என்துயர மெல்லாம் யானேநீ மாற்றல்செய்து
என்வரிசை தானம் எல்லாமுனக் களித்துப்
பொன்னரசு தந்து புவியாள வைத்திடுவேன்
என்றுமா கிருஷ்ணர் இப்படியே சொல்லிடவே
இந்த நிகழ்வுகள் யாவும் மானிடர்களாகிய நமக்கு இவை திடீர் திருப்பங்களாக தெரிந்தாலும் இவை அனைத்தும் இறைவன் எழுதிவைத்த விதிப்படியே நடக்கின்றன.
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக