கன்னியர்:
=========
கண்டுஇந்த நீசர்குலம்-சுவாமி
களிப்புச்சொல்லி யேசணுமே
பெண்டுகட்கு விங்கியென்று-சுவாமி
பொல்லாப்பய லேசணுமே
=========
கண்டுஇந்த நீசர்குலம்-சுவாமி
களிப்புச்சொல்லி யேசணுமே
பெண்டுகட்கு விங்கியென்று-சுவாமி
பொல்லாப்பய லேசணுமே
விளக்கம்
=========
சுவாமி நாம் இணைந்து இனிமையாய் வாழ்வதைப் பார்த்து கலி நீசக் குலங்கள் இவன் பெண்களுக்காக எப்பொழுதும் ஏங்கி திரிபவன் என்று சிரித்துக் கைக் கொட்டி மகிழ வேண்டும்.
=========
சுவாமி நாம் இணைந்து இனிமையாய் வாழ்வதைப் பார்த்து கலி நீசக் குலங்கள் இவன் பெண்களுக்காக எப்பொழுதும் ஏங்கி திரிபவன் என்று சிரித்துக் கைக் கொட்டி மகிழ வேண்டும்.
அகிலம்
=========
வைகுண்டர்:
============
காரணத்தை யறியாமலே-பெண்ணே
கலிப்பயல்கள் தானகைத்தால்
மாரணத்தின் தீர்வைதன்னில்-பெண்ணே
மடுநரகம் பூத்திடுவேன்
=========
வைகுண்டர்:
============
காரணத்தை யறியாமலே-பெண்ணே
கலிப்பயல்கள் தானகைத்தால்
மாரணத்தின் தீர்வைதன்னில்-பெண்ணே
மடுநரகம் பூத்திடுவேன்
விளக்கம்
=========
பெண்களே, அதன் உண்மைக் காரணங்களை அறிந்து கொள்ள முடியாமல் கலி பிடித்த நீசர்கள் நகைத்தால் அவர்களின் மரணத்தின் முடிவில் அவர்களைக் கடுமையான நரகத்தில் புகுத்தி விடுவேன்.
=========
பெண்களே, அதன் உண்மைக் காரணங்களை அறிந்து கொள்ள முடியாமல் கலி பிடித்த நீசர்கள் நகைத்தால் அவர்களின் மரணத்தின் முடிவில் அவர்களைக் கடுமையான நரகத்தில் புகுத்தி விடுவேன்.
அகிலம்
=========
கன்னியர்
=========
செம்பவள நற்பதியின்-சுவாமி
தெருவலங்கள் சுற்றிவந்தோம்
பொன்பதிக்குள் நாமள்புக்கி-மறு
பொழுதுவந்தால் வருவோமையா
=========
கன்னியர்
=========
செம்பவள நற்பதியின்-சுவாமி
தெருவலங்கள் சுற்றிவந்தோம்
பொன்பதிக்குள் நாமள்புக்கி-மறு
பொழுதுவந்தால் வருவோமையா
விளக்கம்
=========
சுவாமி, செம்பவளங்கள் பொருந்திய பொன்னம்பதியின் தெருவை இருவரை நாம் சுற்றி வலம் வந்தோம். இனி நாம் பொன்னம்பதிக்குள் சென்று விடியும்பொழுது வெளியே வந்திடுவோம்.
=========
சுவாமி, செம்பவளங்கள் பொருந்திய பொன்னம்பதியின் தெருவை இருவரை நாம் சுற்றி வலம் வந்தோம். இனி நாம் பொன்னம்பதிக்குள் சென்று விடியும்பொழுது வெளியே வந்திடுவோம்.
அகிலம்
========
வாழ்த்து
=========
சோபனம்
=========
========
வாழ்த்து
=========
சோபனம்
=========
சோபனமே சோபனமே-சுவாமி திருநடன சோபனமே
தேவர்குரு நாரணர்க்கும்-அவர் தேவியர்க்கும் சோபனமே
பூமலர்ந்த ஈசுரர்க்கும்-அவர் பொன்தேவி மாமதுமைக்கும்
காமனந்த நாரணர்க்கும்-தெய்வக் கன்னியர்க்கும் சோபனமே
தேவர்குரு நாரணர்க்கும்-அவர் தேவியர்க்கும் சோபனமே
பூமலர்ந்த ஈசுரர்க்கும்-அவர் பொன்தேவி மாமதுமைக்கும்
காமனந்த நாரணர்க்கும்-தெய்வக் கன்னியர்க்கும் சோபனமே
விளக்கம்
========
வாழ்த்துவோம், வாழ்த்துவோம், சுவாமி கன்னியரோடு ஆடும் திரு நடனத்தை வாழ்த்துவோம். தேவர்களுடைய குருவாகிய நாராயணருக்கும் சுவாமியின் தேவிகளுக்கும் வாழ்த்துக்கள். சகஸ்ரார தளத்தில் பள்ளி கொண்டு இருக்கும் ஈசருக்கும் அவருடைய அழகு பொருநத்திய உமையம்மைக்கும் வாழ்த்துகள். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆனந்த சயனம் கொண்டிருக்கின்ற நாராயணருக்கும்
தெய்வக் குலக் கன்னிகளுக்கும் வாழ்த்துக்கள்.
========
வாழ்த்துவோம், வாழ்த்துவோம், சுவாமி கன்னியரோடு ஆடும் திரு நடனத்தை வாழ்த்துவோம். தேவர்களுடைய குருவாகிய நாராயணருக்கும் சுவாமியின் தேவிகளுக்கும் வாழ்த்துக்கள். சகஸ்ரார தளத்தில் பள்ளி கொண்டு இருக்கும் ஈசருக்கும் அவருடைய அழகு பொருநத்திய உமையம்மைக்கும் வாழ்த்துகள். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆனந்த சயனம் கொண்டிருக்கின்ற நாராயணருக்கும்
தெய்வக் குலக் கன்னிகளுக்கும் வாழ்த்துக்கள்.
அகிலம்
========
பூமடந்தை நாயகிக்கும்-நல்ல பொன்னுமண்டைக் காட்டாளுக்கும்
பார்மடந்தை நாயகிக்கும்-சிவ பகவதிக்குஞ் சோபனமே
தெய்வானை நாயகிக்கும்-நல்ல சிறந்தவள்ளி மடந்தையர்க்கும்
அய்வர்குல நாரணர்க்கும்-கன்னி அரிவையர்க்குஞ் சோபனமே
========
பூமடந்தை நாயகிக்கும்-நல்ல பொன்னுமண்டைக் காட்டாளுக்கும்
பார்மடந்தை நாயகிக்கும்-சிவ பகவதிக்குஞ் சோபனமே
தெய்வானை நாயகிக்கும்-நல்ல சிறந்தவள்ளி மடந்தையர்க்கும்
அய்வர்குல நாரணர்க்கும்-கன்னி அரிவையர்க்குஞ் சோபனமே
விளக்கம்
=========
சுவாமி செய்யப் போகின்ற பூமடந்தை நாயகிக்கும் நல்ல பொன்னு மண்டைக் காட்டாளுக்கும், பார் மடந்தை ஆகிய இலட்சுமிக்கும் சில சக்தியின் வடிவாகிய பகவதிக்கும் வாழ்த்துக்கள். தெய்வானை நாயகிக்கும், நல்ல சிறப்பு பொருந்திய வள்ளிதேவிக்கும், பஞ்சபாண்டவர் குடும்பத்தைக் காத்த நாராயணருக்கும், கன்னிப் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.
=========
சுவாமி செய்யப் போகின்ற பூமடந்தை நாயகிக்கும் நல்ல பொன்னு மண்டைக் காட்டாளுக்கும், பார் மடந்தை ஆகிய இலட்சுமிக்கும் சில சக்தியின் வடிவாகிய பகவதிக்கும் வாழ்த்துக்கள். தெய்வானை நாயகிக்கும், நல்ல சிறப்பு பொருந்திய வள்ளிதேவிக்கும், பஞ்சபாண்டவர் குடும்பத்தைக் காத்த நாராயணருக்கும், கன்னிப் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.
அகிலம்
=========
துடியிடைக் கன்னி மாரைத் திருமணந் திருமால் செய்து
குடிபுகழ்ச் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத் தோடு
திடிரெனத் தெருக்கள் சுற்றித் தேவியு மன்ன ராகப்
படிமிசைப் பதியி னுள்ளே பதிந்துவந் திருந்தா ரன்றே
=========
துடியிடைக் கன்னி மாரைத் திருமணந் திருமால் செய்து
குடிபுகழ்ச் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத் தோடு
திடிரெனத் தெருக்கள் சுற்றித் தேவியு மன்ன ராகப்
படிமிசைப் பதியி னுள்ளே பதிந்துவந் திருந்தா ரன்றே
விளக்கம்:
=========
துடிக்கின்ற இடைகளையுடைய ஏழு கன்னிப் பெண்களும், திருமாலும் (வைகுண்டர்) நியாய முறையாகத் திருமணம் முடித்து அவர் குலத்தில் உள்ள புகழ் பெற்ற சான்றோர்கள் குரவை இடும் ஒலியோடும், சிறந்த மேள முழக்கத்தோடும் விரைவாகப் பொன்னம்பதி தெருக்களில் எலலாம் சுற்றி விட்டு படியின் மேல் ஏறிப் பொன்னம்பதியினுள் சென்றனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இயைந்து மகிழ்வுடன் அங்கே வாழ்ந்து வந்தனர்.
=========
துடிக்கின்ற இடைகளையுடைய ஏழு கன்னிப் பெண்களும், திருமாலும் (வைகுண்டர்) நியாய முறையாகத் திருமணம் முடித்து அவர் குலத்தில் உள்ள புகழ் பெற்ற சான்றோர்கள் குரவை இடும் ஒலியோடும், சிறந்த மேள முழக்கத்தோடும் விரைவாகப் பொன்னம்பதி தெருக்களில் எலலாம் சுற்றி விட்டு படியின் மேல் ஏறிப் பொன்னம்பதியினுள் சென்றனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இயைந்து மகிழ்வுடன் அங்கே வாழ்ந்து வந்தனர்.
அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக