இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி கடற்கரையில் நின்று கொண்டு கடலை நோக்கினால் ஒருகடல் தான் தெரியும். அது இந்தியபெருங்கடல்,வங்காள விரிகுடா, அரபிக்கடல் என மூன்று கடல்களின் சங்கமம் என்றும் சொல்கிறார்கள். ஒரு கடல், ஓரே நிறம், ஒரே சுவை ஆனால் மூன்று பெயர்கள் . பிரித்து கொண்டது மனிதன் தான். தனது வசதிக்காக த்தான் அவ்வாறு செய்துள்ளான். ஆனால் கடல் ஒன்றே. மனிதன் அதற்க்கு பெயர் சூட்டுமுன்னும் , பெயர் சூட்டிய பின்னும் கடலின் நிலையில், தன்மையில் மாற்றங்கள் இல்லை. மனிதன் ஒன்றை மூன்றாக பிரித்து பார்க்கிறான். அவை மூன்றும் ஒன்றாக இணைவதாகநினைத்து மகிழ்வதும் அவனே.
இறைவனையும் அவ்வாறே இறைவனின் மூன்று நிரந்தர தொழில்களை ( படைத்தல், காத்தல், அழித்தல் ) ஆதாரமாக கொண்டு மூன்று மூர்த்திகளாக ( பிரம்மா, விஷ்ணு, சிவன்) பிரித்தான். இது மனிதனின் சுபாவத்தை காட்டுகிறது.வர்ணாசிரம தர்மங்களையும், செய்யும் தொழிலுக்கேற்ப சாதிகளையும், பிரித்த மனிதன், சாதிகளுக்கேற்ப இறைவனையும் பங்கு வைத்து கொண்டான். வேதம் கற்றவன் அதனை கல்லாதவனை கீழானவனாக பார்த்தான். கீழாக்கி வைத்தான். அவனுக்கும் வேதங்களை கற்றுகொடுத்து மேலானவனாவனாக மாற்ற முயற்சி செய்யவில்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரிவினை ஏற்பட்டது. தாழ்ந்தவன் ஒருகட்டத்தில் இறைவனை ஆலயத்திற்குள் சென்று வணங்கும் உரிமையும் மறுக்கப்பட்டு தன விருப்பம்போல் வரையறைகள் ஏதும் இல்லாமல் இறைவனை தானே படைத்து தானே வணங்கி தன்னை சமாதான படுத்தி, சந்தோசப்படுத்திகொண்டான் .
பணத்தை நேர்வழியிலும் குறுக்கு வழியிலும் சம்பாதித்து செல்வந்தர் ஆனவர்கள், வறியவர்களையும் எளியவர்களையும் கருணையின்றி நடத்தினர். பணம் பணக்காரர்களை நோக்கியே பயணித்தது. ஏழைகள் பணத்தை தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கிறார்கள் . இலக்கும் விரைந்து ஓடிகொண்டிருப்பதால் பயணம் முடிவின்றி தொடர்கிறது. பணக்காரன் ஏழையை இன்னும் ஏழையாக்கி பணத்தை பாவமாக்கி மூட்டையாக கட்டிகொண்டிருக்கிறான்.பணம் தான் வாழ்க்கை என்று சிலர் அவசர முடிவுக்கு வந்து வழி தவறி தவறான வழிகளில் பணம் ஈட்ட முற்பட்டதால் தர்மம் நிலை தவறுகிறது. அதர்மம் தலை தூக்குகிறது.
நேர்மையானவர்களின் தாழ்வுநிலை அவர்களுக்கு இறைவன் தந்த சோதனைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. காலப்போக்கில் பணத்தாலும், இனத்தாலும் ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் யாரென்றால் சான்றோர்கள் தான். பிழைக்க தெரியாதவர்கள் என்று சிலர் அவர்களுக்கு பட்டமும் கட்டினர். நேர்மையானவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் , தவறான வழியில் முன்னேறு வோர்க்கு கிடைக்கும் மரியாதைகள், சுகங்கள்,வசதிகள் சாதாரண மனிதனின் மனதை மாற்றி,வாழ்க்கைபாதையை திசை திருப்புகின்றன. நீதி நூல்களும், வேதங்களும் , புராண இதிகாசங்களும், நநூல்களும், சாத்திர , சம்பிரதாயங்களும் சொல்லும் வாழு நெறியை மீறி அன்பு, தர்மம், நீதி, நேர்மை, ஒழுக்கம், உழைப்பு, இவை எதுவும் இன்றி வாழமுடியும் என்று நம்பும் மனிதன் தான் வாழ பிறரை கெடுக்க நினைக்கிறான். மனிதனின் தோல்விக்கு காரணங்களாக பல கற்பனையான விஷயங்கள் கற்பிக்க படுகின்றன. அவற்றிலிருந்து விடுபட பரிகாரங்கள் என்ற பெயரில் பல்வேறு மூட நம்பிக்கைகள் விதைக்கப்படுகின்றன. இறை நம்பிக்கையை இழந்து மனிதன் உண்மை பொய் எது என்றறியாமல் திக்கு திசை தெரியாது திரிகின்றான். மனக்கட்டுப்பாடு இழந்த மனிதன் காட்டு மிருகங்களிலும் கேடாக வாழ்கிறான். கலியுகம் இவ்வாறே தொடங்கி தொடர்கிறது.
இப்படியாக வளர்ந்த கலியினை அழிக்க , மனிதனை மீண்டும் மனிதனாக்க, இறைவன் அவதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காரணம் தான் பெற்ற பிள்ளைகள், ஞானக்கண் கட்டுண்டு, தட்டுண்டு தடுமாறி , தடமாறி கலியில் ( மாயைகையான நினைவுகளில் ) உழல்வதை இறைவனால் பொறுத்துக்கொண்டு சகித்து கொண்டு இருக்க முடியவில்லை.
கலியை அழிக்க அய்யா நாராயணர் வைகுண்டராக அவதரிக்கின்றார். கலியின் பிறப்பிற்கு காரணமாகிய இறைபாகுபட்டினை களைய நினைத்த அய்யா முப்பொருளும் ஒருபொருளாக அவதரிக்கின்றார்.
உலகில் சமநிலையை கொண்டு வர நினைக்கும் அய்யா உயர்ந்த நிலையில் இருப்போரை கீழிறங்கி வரசொல்லவில்லை. மாறாக தாழ்ந்தவரை உயர்நிலைக்கு கொண்டு வர அறிவுறுத்துகிறார். கலி மாய நினைவுகள் நீங்குவதற்காக அகிலத்திரட்டு அம்மானை என்னும் புதிய வேதத்தை தந்து அதில் விஞ்சை என்னும் வாழும் வழியை உலகில் வாழும் மனிதர்க்கு அருளுகிறார்.
உலகில் சமநிலையை கொண்டு வர நினைக்கும் அய்யா உயர்ந்த நிலையில் இருப்போரை கீழிறங்கி வரசொல்லவில்லை. மாறாக தாழ்ந்தவரை உயர்நிலைக்கு கொண்டு வர அறிவுறுத்துகிறார். கலி மாய நினைவுகள் நீங்குவதற்காக அகிலத்திரட்டு அம்மானை என்னும் புதிய வேதத்தை தந்து அதில் விஞ்சை என்னும் வாழும் வழியை உலகில் வாழும் மனிதர்க்கு அருளுகிறார்.
நாரணர் வைகுண்ட மாகி நாட்டினில் வந்த அன்றே
காரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சு
பூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள்
சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே
காரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சு
பூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள்
சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக